search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rameswaram"

    • நள தீர்த்தம் - இறையருளைப் பெற்ற சொர்க்கத்தை அடையலாம். நீல தீர்த்தம் - யாகப் பலன் கிட்டும்.
    • சந்திர தீர்த்தம் - கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம். சூரிய தீர்த்தம் - ஞானம் பெறலாம்.

    ராமபிரான் புண்ணிய தீர்த்ததில் நீராடி, சிவலிங்க பூஜை செய்து, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்ட தலம் ராமேஸ்வரம். இங்கு தான் 22 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.

    22 புண்ணிய தீர்த்தங்களும், நீராடினால் கிடைக்கும் பலன்களும் வருமாறு:-

    மகாலட்சுமி தீர்த்தம் - சகல ஐஸ்வரியங்கள் பெருகும் சாவித்திரி, காயத்ரி, சரஸ்வதி தீர்த்தங்கள் - சடங்குகளைச் செய்யாதவர்களும், சந்ததி இல்லாதவர்களும் நற்கதி பெறலாம்.

    சங்கு தீர்த்தம் - நன்றி மறந்த பாவம் நீங்கும்.

    சக்கர தீர்த்தம் - தீராதி நோயும் தீரும்.

    சேது மாதவ தீர்த்தம் - செல்வம் கொழிக்கும்.

    நள தீர்த்தம் - இறையருளைப் பெற்ற சொர்க்கத்தை அடையலாம்.

    நீல தீர்த்தம் - யாகப் பலன் கிட்டும்.

    கவாய தீர்த்தம் - மனவலிமை பெறலாம்.

    கவாட்ச தீர்த்தம் - தேக ஆரோக்கியம் உண்டாகும்.

    கந்தமான தீர்த்த - தரித்திரம் நீங்கும்

    பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம் - பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்; பில்லி சூனியப் பிரச்சனைகள் விலகும்.

    சந்திர தீர்த்தம் - கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

    சூரிய தீர்த்தம் - ஞானம் பெறலாம்.

    சாத்யாம்ருத தீர்த்தம் - தேவதைகளில் கோபத்தில் இருந்து விடுபடலாம்.

    சிவ தீர்த்தம் - சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம்.

    சர்வ தீர்த்தம் - அனைத்து யோகங்களும் கைகூடும்

    கயா, யமுனா மற்றும் கங்கா தீர்த்தங்கள் - பிறவிப்பயனை அடையலாம்.

    கோடி தீர்த்தம் - ஸ்ரீராமர், சிவலிங்க அபிஷேகத்துக்குப் பயன்படுத்திய தீர்த்தம் இது.

    சிவனாரின் அருளையும் ஸ்ரீராமரின் அருளையும் பெற்று பெருவாழ்வு வாழவைக்கும் மகா தீர்த்தம் இது. இந்த 22 தீர்த்தங்களையும் தவிர, கடலிலேயே கலந்திருக்கிறது அக்னி தீர்த்தம். இதில் நீராடிவிட்டே ஆலய தரிசனத்துக்கு செல்ல வேண்டும்.

    • ராமேஸ்வரம் கோவிலுக்கு எதிரே உள்ள கடலே ‘‘அக்கினி தீர்த்தம்’’ ஆகும்.
    • மண்ணால் லிங்கம் செய்து, பூஜித்து, பித்ரு தர்ப்பணம் செய்வது சிறப்பு.

    அமாவாசை திதியில் கடலில் நீராடுவது மிகவும் போற்றப்படுகிறது. இந்நாளில் கடலில் நீராடி முன்னோர்களுக்கு பிதுர் பூஜை செய்தால், குடும்பத்தில் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறுவதுடன், முன்னோர் களின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

    தீர்த்தம் என்பது நம் பாவங்களைப் போக்கி, ஆத்ம சுத்தம் தந்து, நம்மை ஆரோக்கியமுடன் வாழவைக்கும் சக்தி கொண்டது என ஞான நூல்கள் கூறுகின்றன.

    கடல் நீராடலுக்கும், பிதுர் பூஜைக்கும், தோஷ நிவர்த்திக்கும் மிகவும் புகழ் பெற்றதாக திகழ்வது ராமேஸ்வரம் தலத்தில் உள்ள அக்னி தீர்த்தக் கடலாகும். இத் தீர்த்தத்தில் ராமபிரான் நீராடி சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

    ராமேஸ்வரம் கோவிலுக்கு எதிரே உள்ள கடலே ''அக்கினி தீர்த்தம்'' ஆகும். சீதை மீது சந்தேகப்பட்ட ராமர், சீதையை தீக்குளிக்கச் சொன்ன போது, சீதை தீக்குள் இறங்கியதும், சீதையின் கற்புக்கனல் தாங்காது, அக்கினி ஓடிவந்து இந்த கடலில் குளித்துதான் குளிர்ந்தது என்று புராணங்கள் கூறுகின்றன. இதனாலேயே இந்த தீர்த்தம் ''அக்கினி தீர்த்தம்'' என்று அழைக்கப்படுகிறது.

    அக்கினி தீர்த்தம் என்ற பெயருக்கேற்ப இந்த தீர்த்தத்தில் நீராடும் போது வெதுவெதுப்பாக இருக்கிறது.

    இந்த அக்கினி தீர்த்தக் கடல் ஆழமும் இல்லை, அலையும் இல்லை. ஆனால், இந்த அக்கினி தீர்த்தத்தில் குளிக்க எந்தவித நியமமும் கிடையாது. யாரும், எந்நேரமும் அக்கினி தீர்த்தத்தில் குளிக்கலாம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    நம் நாட்டில் வேறு எங்கும் கடல் ''அக்கினி தீர்த்தத்தில்'' இருப்பது போல் அமைதியாக இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த அக்கினி தீர்த்தக் கரையில் ஆதி சங்கரர் வந்து நின்ற இடம் இருக்கிறது. இந்த அக்கினி தீர்த்தக் கடலில் குளிப்பது, கடலில் குளிப்பது போல் அல்லாமல் பெரிய ஏரியில் குளிப்பது போல் அமைதியாக குளிக்க முடியும். இந்த அக்கினி தீர்த்தக் கரையில் மண்ணால் லிங்கம் செய்து, பூஜித்து, பித்ரு தர்ப்பணம் செய்வது சிறந்த ஒரு புண்ணியம் ஆகும்.

    இந்த தீர்த்தங்கள் யாவும் இயற்கையில் காந்த சக்தி மிகுந்தவையாகவே உள்ளன. இது உடல் ஆரோக்கியத்தை வளப்படுத்தக் கூடியதாகும். உடம்பின் அணுசக்தியை வலுப்படுத்தக் கூடியதும் ஆகும்.

    இந்த தீர்த்தங்களின் மின்னோட்ட மகிமையை தங்களது ஞானத்தாலும், யோகத்தாலும் அறிந்த நமது முன்னோர்கள் இந்த தீர்த்தங்களை ஏற்படுத்தி, அதை ஆன்மிகத்தோடு இணைத்து நமக்கு வழங்கி உள்ளார்கள்.

    இத்தகைய சிறப்புமிக்க தீர்த்தங்களில் நீராடுவதால் புத்திர பாக்கியம் உண்டாகிறது. உடல் பிணி தீருகிறது. பாவங்கள் தொலைகிறது. அனைத்து நலன்களும் கிடைக்கின்றன. இந்த தீர்த்தங்களில் நீராடித்தான் நீண்ட காலம் குழந்தை இல்லாமல் இருந்த ராமகிருஷ்ண பரமஹம்சரின் பெற்றோர்களுக்கு குழந்தைகள் பிறந்தனவாம். இதனால்தான் ''ராமேஸ்வரம் போய் குளிக்காதவன் போல'' என்று ஒரு பழமொழி சொல்கிறார்கள். இப்பழமொழி, ராமேஸ்வரத்தில் தீர்த்தம் ஆடுவது எவ்வளவு சிறப்பு என்பதை எடுத்துரைக்கிறது.

    அயோத்தி சென்று முடிசூட்டிக் கொண்ட ராமர், மீண்டும் ராமேஸ்வரத்திற்கு வந்து தீர்த்தமாடியதாக ''ஆனந்த ராமாயணம்'' கூறுகிறது.

    இத்தகைய சிறப்புமிக்க தீர்த்தங்களில் ஒவ்வொருவரும் நீராடுவது அவசியம் ஆகும். இங்கு, தங்குவதில் இருந்து உணவு, போக்குவரத்து என அனைத்து வசதிகளும் உள்ளன.

    ஆலயத்தின் உள்ளே உள்ள இருபத்தி இரண்டு தீர்த்த கிணறுகளிலும் குறிப்பிட்ட காசு கொடுக்க, அங்குள்ள பையன்கள் நமக்கு தண்ணீர் இறைத்து ஊற்றுவார்கள். ஒவ்வொரு இந்துவும், ''காசி ராமேஸ்வரம்'' பயணம் மேற்கொள்வது முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.

    இதனை மேற்கொள்ளும் முறையானது, முதலில் ராமேஸ்வரம் வந்து கடலில் நீராடி, ராமநாதரை வழிபட்ட பின்பு, இங்கிருந்து மண்ணை எடுத்துக் கொண்டு காசி சென்று, கங்கையில் கரைத்து, கங்கையில் நீராடி விசுவநாதரை வழிபட்டு, பின்பு அங்கிருந்து கங்கை நீரைக் கொண்டு வந்து ராமேஸ்வரம் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வணங்கி, ''காசி ராமேஸ்வர'' பயணத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

    மேலும் ராமேஸ்வரம் தீர்த்தமாட செல்லும் முறையானது முதலில் ராமநாதபுரத்தை ஒட்டி உள்ள ''உப்பூர் விநாயகர்'' கோவில் தீர்த்தத்தில் நீராடி, விநாயகரை வணங்கி தொடங்க வேண்டும். இலங்கை செல்ல கடலைக் கடப்பதற்கு முன், ராமர் இங்கேதான் நீராடிவிட்டு, சங்கல்பம் செய்து கொண்டு சென்றார்.

    இதன்பின் தேவிபட்டினத்தில் கடலுக்குள் உள்ள நவ பாஷாண நவக்கிரகங்களை வழிபட்டு, அங்குள்ள கடலிலும், சக்கர தீர்த்தத்திலும் நீராட வேண்டும். பின்பு, திருப்புல்லாணி வந்து இங்குள்ள சக்கர தீர்த்தத்தில் நீராட வேண்டும். பின்பு, தனுஷ்கோடி வந்து சேது தீர்த்தத்தில் நீராட வேண்டும். பின்பு ஆலயத்தின் வெளியே உள்ள தீர்த்தங்களில் நீராட வேண்டும். பின்பு ஆலயத்தின் எதிரே உள்ள கடல் ஆகிய ''அக்கினி தீர்த்தத்தில்'' நீராட வேண்டும்.

    பின்பு ஆலயம் வந்து 22 தீர்த்தங்களிலும் நீராடி, இறைவனையும், அம்பாளையும் வழிபட்டு, பின்பு மீண்டும் திருப்புல்லாணி வந்து தீர்த்தமாடி, அன்னதானம் செய்துவிட்டு, ராமநாதபுரம் சென்று அங்கு அரண்மனையில் உள்ள சேதுபதி மன்னன் சிலையை தரிசிக்க வேண்டும். இதுவே ராமேஸ்வரம் தீர்த்தமாடலின் விதிமுறையாகும்.

    ராமேஸ்வரம் திருக்கோவில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையில் திறந்திருக்கும். இதில் மதியம் ஒரு மணி முதல் மூன்று மணி வரை கோவில்நடை பூட்டி இருக்கும். நாள்தோறும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. ஆடி அமாவாசை அன்று நாள் முழுவதும் பூஜையும், அர்ச்சனையும், தரிசனமும் பக்தர்களுக்கு உண்டு.

    தினமும் காலை 5 மணிக்கு நடைபெறும் ''திருவனந்தல் பூஜை''யில் முக்கிய அபிஷேகங்கள் உண்டு. இதில், ''மரகதலிங்கத்தை'' மூலவருக்கு முன்பாக வைத்து, அபிஷேகம் செய்வார்கள். இதை தரிசிப்பது மிகவும் விசேஷமானது ஆகும்.

    இத்தலத்தில் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய, கட்டணத்திற்கு கங்கை தீர்த்தம் கிடைக்கும். இதேபோல், கங்கை தீர்த்தம் கொண்டு வருபவர்கள் கட்டணம் செலுத்தியே இறைவன் அபிஷேகத்திற்குக் கொடுக்க வேண்டும்.

    இந்த தீர்த்த சொம்பு பித்தளை, வெங்கலப் பாத்திரம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

    மேலும் இந்த ராமேஸ்வர தலத்தில் பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்வது, புத்திர பாக்கியத்துக்கான பரிகாரம், பிதுர்கள் தோஷம் போக்குதல் முதலியன சிறப்பான முறையில் நடைபெறுகிறது. இத்தகைய சிறப்புமிக்க, இந்தியாவின் தலை சிறந்த தீர்த்தமாகிய ''ராமேஸ்வரம்'' பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆலய நிர்வாக அதிகாரியைத் தொடர்பு கொள்ளாலம்.

    இத்தகைய சிறப்புமிக்க ராமேஸ்வரம் தீர்த்தங்களில் ஒவ்வொரு இந்துவும் நீராட வேண்டியது முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.

    அக்னி தீர்த்தம் எல்லாக் காலங்களிலும் வெது வெதுப்பாக இருக்கும். மேலும், அலைகள் அதிக மில்லாமல் ஆபத்தின்றி நீராடவும் இந்த தீர்த்தம் அருள்புரிகிறது!

    ராமேஸ்வரம் சேதுக் கரை கடல் நீர் சுமார் இரண்டு லட்சம் மைல்கள் சுற்றிச் சுழன்று வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதனால் இக்கடல் நீரோட்டம் அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, நவமி ஆகிய நாட்களில் அதிக வேகம் பெறுவதால், கடலின் அடியிலுள்ள மூலிகைகள், சங்கு, பவளம் போன்றவற்றின் ஜீவ சத்துகள் புரட்டப் பட்டு கடலின் மேல்மட்டத்திற்கு வருகின்றன. அந்த நாட்களில் அக்னி தீர்த்தக் கடல் நீர் அமிர்தம் கலந்த நீராகவும், உடல்நலத்தைக் காக்க உதவுவதாகவும் கருதப்படுகிறது.

    கடலில் எல்லா காலத்திலும் நீராடக் கூடாது என்பது விதியாகும். ஆனால், அக்னி தீர்த்தமான இக்கடலில் எல்லா நாட்களிலும் எந்த வேளையிலும் நீராடலாம் என்று சேது மகாத்மியம் என்ற நூல் கூறுகிறது.

    இந்த தீர்த்தத்தில் நீராடினால் கங்கை நதியில் நீராடிய பலன் கிட்டும், கிரக தோஷங் கள் நீங்கும். நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு பரிகாரம் செய்து நல்ல பலன் பெறுகிறார்கள். புத்திர தோஷம், பிதுர்தோஷம் நீக்கும் தீர்த்தம் என்றும் இது போற்றப்படுகிறது.

    ஆடி அமாவாசையில் பிதுர்பூஜையை வேத விற்பன்னர் மேற்பார்வை யில் செய்வதால், முன்னோர்கள் நரகத்திலிருந்தாலும் நற்கதி அடைவார்களாம்.

    பிதுர்பூஜை செய்தபின் தானதர்மங்கள், அன்னதானம் செய்வது சிறப்பிக்கப்படுகிறது. வசதி இல்லாதவர்கள் அங்குள்ள பசுமாட்டுக்கு வாழைப் பழங்கள், அகத்திக் கீரை கொடுத்தாலும் புண்ணியம் கிட்டும்.

    • ராமேசுவரம் பகுதியில் 2 நாட்கள் மின்தடை ஏற்படும்.
    • மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட மின்வாரியம் தெரிவித்துள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் துணை மின் நிலையத்தில் அரியமான் முதல் ராமேசுவரம் வரை சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை (7-ந்தேதி) மற்றும் மறுநாள் (8-ந்தேதி) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்காணும் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

    மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் வருமாறு:-

    அரியமான், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்கா யர் பட்டினம், மண்டபம், பாம்பன், அக்காள்மடம், ராமேஸ்வரம் பேருந்து நிலையம் , நீதிமன்றம், திட்டக்குடி, கோவில், வேர்க்கோடு, புதுரோடு தங்கச்சிமடம், ஆத்திக்காடு, சத்யா நகர், செம்ம மடம், மெய்யம்புளி.

    பொந்தபுளி, ராமர் தீர்த்தம் வடக்கு மற்றும் தெற்கு, மார்க்கெட் தெரு, பருவதம், பாரதி நகர், முருங்கை வாடி, எம் ஆர் டி நகர், கரையூர், மல்லிகை நகர், ெரயில்வே பீடர் ரோடு, பேக்கரும்பு , அரி யான் குண்டு, பகுதி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.

    இதேபோல் பட்டினம் காத்தன் துணை மின் நிலையத்தில் உள்ள ராமநாதபுரம் உயர் மின் அழுத்த பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுவதால் நாளை (7-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காவனூர் சுற்றியுள்ள பகுதிகள், தொருவளூர், வயலூர், பனையூர், குளத்தூர், தேர்த்தாங்கல், கிளியூர், முதலூர், கடம்பூர், இல்லுமுள்ளி, வைரவ னேந்தல், வீரவனூர், பாப்பாகுடி, வண்ணிவயல், கவரங்குளம். தேவிபட்டினம் சுற்றியுள்ள பகுதிகள், கழனிக்குடி, சித்தார்கோட்டை, பெருவயல் ,சிறுவயல் , நரியனேந்தல்,மரப்பாலம், இலந்தை கூட்டம்.

    திருப்பாலைக்குடி சுற்றியுள்ள பகுதிகள், பொட்டகவயல், கருப்பூர், சம்பை,வெண்ணத்தூர், வைகை, பத்தனேந்தல், மாதவனூர், பாப்பனேந்தல், பூத்தோண்டி, அரசனூர், நாரணமங்கலம், எருமைப்பட்டி, வளமானூர், சோழந்தூர். காட்டூரணி சுற்றியுள்ள பகுதிகள், ஆர்.கே. நகர், எம்.ஜி.ஆர் நகர், ரமலான் நகர், மேலக்கோட்டை, மாடக் கோட்டான், இளமனூர், பேராவூர்.

    தில்லைநாயகி புரம், பழங்குளம், திருப்புல்லானி, அம்மன் கோவில், தெற்கு தரவ, கருங்குளம், மஞ்சன மாரியம்மன் கோவில், லாந்தை, புத்தனேந்தல், தெற்குதரவை, பசும்பொன் நகர், கூரியூர், பொக்க னேந்தல், பால்கரை, நாக நாதபுரம், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட மின்வாரியம் தெரிவித்துள்ளது.

    • தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளதாக ராமேசுவரம் கூட்டத்தில் அமித்ஷா கூறியுள்ளார்.
    • உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் விரும்புகிறார்.

    ராமேசுவரம்

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தை ராமேசுவரத்தில் நேற்று தொடங்கினார். இதன் தொடக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தின் பாரம்பரி யத்தையும், பெருமையையும் பதிய வைக்கும் பயணமாக அண்ணாமலையின் நடைபயணம் அமையும். இது வெறும் அரசியல் சார்ந்த பயணம் அல்ல. தமிழகத்தில் குடும்ப ஆட்சியை ஒழிக்கும் பயணமாக இருக்கும்.

    ஏழைகளில் நலன் கருதி முன்னாள் முதல்- அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி உள்ளது. அதனை மீண்டும் செயல்படுத்த இந்த நடைபயணம் வழிவகுக்கும். தமிழ் மொழியின் பெருமை யை பிரதமர் மோடி உலகெங்கும் பறை சாற்றி வருகிறார்.

    ஐக்கிய நாடுகள் சபை, ஜி20 மாநாடு என உலக ளவிலான நிகழ்வுகளில் தமிழ் மொழி பெருமை குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார். தமிழர்களின் பாரம்பரி யத்தை பாதுகாக்க இலங்கை யில் ரூ.120 கோடி மதிப்பில் கலாச்சார மையம் அமைக் கப்பட்டுள்ளது.

    பாரதியாரின் பிறந்தநாள் இந்திய தேசிய மொழிகள் தினமாக அறிவிக்கப் பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழகத்தின் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது என எண்ணற்ற தமிழ் பணிகளை பிரதமர் மோடி செய்துள்ளார்.

    நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசாக தமிழகத்தின் தி.மு.க. அரசு உள்ளது. தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. அமலாக்கத் துறையால் ஊழல் வழக்கில் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்ப டுகிறார். அவரை பதவியில் இருந்து நீக்காமல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மவுனம் சாதிக்கிறார். அதற்கு அவர் வெட்கப்பட வேண்டும்.

    மத்தியில் 10 ஆண்டுகளாக கூட்டணி ஆட்சி செய்த காங்கிரஸ் மற்றும் தி.மு.க. மக்களிடம் வாக்கு கேட்க செல்லும் போது 2ஜி, காமன்வெல்த், ஹெலிகாப்டர், இஸ்ரோவில் செய்த ஊழல்கள் தான் நினைவுக்கு வரும். இலங்கை தமிழர்களை அழிக்க கார ணமாக இருந்தது தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி.

    உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் விரும்புகிறார். அவரை போல் அவரது கூட்டணி தலைவர்களும் தங்களது குடும்ப உறுப்பினர்களை முன்னிலைப் படுத்து கின்றனர். அண்ணா மலையின் இந்த நடை பயணம் முடியும் போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்கும். வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் அதிக எம்.பிக்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் ஆர். சி. பால் கனகராஜ், வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் வி. வணங்காமுடி, மாநிலத் துணைத் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் ராமசாமி, மற்றும் மாநில செயலாளர்கள், ஆர். பரமசிவம், பா. வஜ்ரவேலு, எஸ். திவாகர், ஆர். சி. கார்த்திகேயன், சி. எம். சஜு,

    ராமநாதபுரம் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தரணி ஆர்.முருகேஷன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.பி.எஸ். நாகேந்திரன், ஓ.பி.சி அணி மாநில செயலாளர் கவுன்சிலர் முருகன், பட்டியணி முன்னாள் மாவட்ட தலைவர் ரமேஷ் கண்ணன், உள்ளபட பலர்.

    முதுகுளத்தூர் அ.தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் செந்தில்குமார், மாநில இளைஞர் அணி செயலாளர் டாக்டர் ராம்குமார், பா.ஜ.க. மாநில ராணுவ அணி செயலாளர் எம்.சி. ரமேஷ்,

    மாநில பொதுச் செய லாளர் ராம.சீனிவாசன், மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் மகா.சுசீந்திரன், மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர்கள் சுப்பா நாகலு, ஓம்சக்தி தனலட்சுமி, கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் காந்திகுமாரி, மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் சரவணகுமார், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மதுரை காளவாசல் மண்டல பொதுச்செயலாளர் ஸ்ரீராம், ஊடக பிரிவு மாவட்டத்தலைவர் ரவிச்சந்திரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பாதயாத்திரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29-ந் தேதி தொடங்கியது.
    • 4,000 கிலோ மீட்டர் தெர்மாகோல் மூலம் நமஸ்காரம் செய்து கொண்டே யாத்திரை செல்கிறோம்.

    வந்தவாசி:

    மத்திய பிரதேச மாநிலத்தில் கங்காப்பூர் என்ற இடத்தில் கோலோ கோதாம் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது.

    கொரோனா தாக்கத்திலிருந்து விடுபடவும் இது போன்ற கொடிய நோய் மீண்டும் உலகம் சந்திக்க கூடாது என்ற நோக்கத்திலும் ஆசிரமத்தில் உள்ள சீடர்கள் 3 பேர் சாலையில் ஊர்ந்தப்படி ராமேஸ்வரம் வரை யாத்திரை செல்ல முடிவு செய்தனர்.

    அதன்படி அவர்களுடைய பாதயாத்திரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29-ந் தேதி தொடங்கியது.

    சீடர்கள் 3 பேரும் சாலையில் தெர்மாகோல் சீட் மீது படுத்து ஊர்ந்த படி ராமேஸ்வரம் நோக்கி பாதரையாத்திரையாக செல்கின்றனர்.

    இவர்கள் நேற்று திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் ஊர்ந்தபடி யாத்திரை சென்றனர். இதனை கண்ட பொதுமக்கள் அவர்களை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    உலக நன்மைக்காகவும் கொரோனா போன்ற கொடிய நோய் மீண்டும் பரவக்கூடாது என்ற நோக்கத்திலும் உத்தரகாண்டில் இருந்து ராமேஸ்வரம் வரை 4,000 கிலோ மீட்டர் தெர்மாகோல் மூலம் நமஸ்காரம் செய்து கொண்டே யாத்திரை செல்கிறோம்.

    தினமும் 10 கிலோமீட்டர் வரை செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

    • ராமேசுவரத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடித்தேரோட்டம் நடந்தது.
    • பர்வதவர்தினி அம்பாள் வெள்ளி ரதத்தில் வீதிஉலா வந்தார்.

    ராமேசுவரம்

    ராமேசுவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவிலில் கடந்த 13-ந் தேதி ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 17 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, இரவில் சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளித்து வருகின்றனர்.

    கடந்த 17-ந் தேதி ஆடி அமாசாசையன்று ராமர் தங்ககருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடலில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. 19-ந் தேதி பர்வதவர்தினி அம்பாள் வெள்ளி ரதத்தில் வீதிஉலா வந்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சி யான ஆடித்தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) விமரிசையாக நடந்தது. முன்னதாக ராமநாத சுவாமி-பர்வதவர்தினிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கா ரங்கள் நடைபெற்றன. காலை 9.30 மணியளவில் அம்பாள் திருத்தேரில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்த பின் தேரோட்டம் தொடங்கியது. பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    • தொடர் விடுமுறையையொட்டி ராமேசுவரத்தில் இன்று குவிந்த சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    • புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    ராமேசுவரம்

    ெதன்தமிழகத்தின் பிர சித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமாக விளங்கும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்ேதாறும் ஆயி ரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இங்குள்ள அக்னி தீர்த்தகடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது.

    இதன் காரணமாக ராமே சுவரத்தில் நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் காணப் படும். குறிப்பாக அமா வாசை, விடுமுறை நாட்களில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகரித்து காணப்படும்.

    இந்த நிலையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமையான இன்று வழக்கத்தைவிட பக்தர்கள், சுற்றுலா பயணி களின் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

    அதிகாலை முதலே அக்னி தீர்த்தகடலில் பெண்கள் உள்பட ஏராள மானோர் புனித நீராடி பின்னர் கோவிலில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    அதேபோல் ராமேசு வரத்தில் உள்ள தனுஷ் கோடி, அரிச்சல் முனை, அப்துல்கலாம் நினைவு மண்டபம் போன்ற பகுதி களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராமேசுவரத்துக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
    • சொந்த ஊருக்கு வந்து செல்லும் வகையிலும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் எம்.பி.யும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான கே.நவாஸ்கனி தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்கள் பலரும் வெளிமாநிலங்களிலும், வெளியூர்களிலும் பணிபுரிந்து வருகின்றனர்.

    அவர்கள் தீபாவளி பண்டிகைக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்து செல்ல ஏதுவாக சிறப்பு ரெயில்கள் இயக்க தெற்கு ரெயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் எளிதில் சொந்த ஊருக்கு வந்து செல்லும் வகையிலும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் கீழ்க்கண்ட ரெயில்களை சிறப்பு ரெயிலாக இயக்குவதத்திற்கு ரெயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும்.

    சென்னையிலிருந்து -ராமேசுவரம், கோவையிலிருந்து பழனி, திண்டுக்கல் வழியாக ராமேசுவரம், பெங்களுருவிலிருந்து கோவை, நாமக்கல், கருர், திண்டுக்கல் வழியாக ராமேசுவரம், கன்னியாகுமரியிலிருந்து ராமேசுவரம், பாலக்காட்டிலிருந்து ராமேசுவரம், சேலத்தி லிருந்து ஈரோடு, திருப்பூர், கோவை, பழனி, திண்டுக்கல், மதுரை வழியாக ராமேசுவரம், ஐதராபாத்- ராமேசுவரம் உள்ளிட்ட வழித்தடங்களில் இரு மார்க்கங்களிலும் சிறப்பு ரெயில்கள் இயக்கிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
    • பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாகவே காணப்படுகிறது.

    வங்கக் கடலில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இதனையடுத்து பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாகவே காணப்படுகிறது. 


    ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, ஏர்வாடி, வாலிநோக்கம், தொண்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் 7-வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் கரையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.

    • ராமேசுவரம் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசலுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும்.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக கூறி கைது செய்யும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

    இதேபோல் கடந்த 20-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். சில மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்தனர்.

    அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அங்கு மீன் பிடித்து கொண்டிருந்த ராமேசுவரத்ைத சேர்ந்த அந்தோணி, மடகு பிச்சை, பாலமுருகன், தங்க பாண்டி, அர்ஜூனன், ராஜா ஆகிய 6 மீனவர்களையும், அவர்கள் சென்ற விசைப்படகையும் சிறைபிடித்தனர்.எல்லை தாண்டி மீன்பிடித்த தாக கூறி கைது செய்யப்பட்ட மீனவர்கள் 6 பேரும், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அந்த மீனவர்கள் 6 பேரையும், அவர்களது விசைப்படகையும் விடுவிக்கக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர்.

    இதை தொடர்ந்து இன்று ராமேசுவரம் பஸ் நிலையம் முன்பு மீனவர் சங்கங்கள் சார்பில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரையும் உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கைது செய்யப்பட்ட 6 மீன வர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மீனவர் சங்க தலைவர் சகாயம் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டு இலங்கை கடற்படையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர் சங்கத்தினர் கூறும்போது, இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இலங்ைக கடற்படை பறிமுதல் செய்த விசைப்படகுகளையும் மீட்டு தர வேண்டும்,

    இலங்கை கடற்படை தாக்குதலில் சேதமான படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசலுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • ராமநாதபுரம் நகா் பகுதியில் நேற்று திடீரென சாரல் மழை பெய்தது.
    • கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

    கடந்த சில நாள்களாக மாவட்டத்தில் சாரல் மழை அவ்வப்போது மழை பெய்து வந்து, வெப்பம் தணிந்த நிலையில் நேற்று ராமநாதபுரம் நகா் பகுதியில் திடீரென சாரல் மழை பெய்தது.

    இரவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதே போல் பனைக்குளம், வழுதூா் உள்பட பல்வேறு பகுதிகளில் நீண்டநேரம் மழை பெய்தது. மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.

    பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இந்த நிலையில் இன்று காலை வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    • ராமேசுவரம் - செகந்திராபாத் ரெயில் சேவை அடுத்த மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

    மதுரை

    ராமேசுவரம் - செகந்திராபாத் சிறப்பு ரெயில் ஜூலை மாதம் வரை இயக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அதன் சேவை ஆகஸ்டு மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி ராமேசுவரத்தில் இருந்து அடுத்த மாதம் 4, 11, 18 ஆகிய தேதிகளில் இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரெயில், சனிக்கிழமை காலை 7.10 மணிக்கு செகந்திராபாத் செல்லும்.

    மறுமார்க்கத்தில் செகந்திராபாத்தில் இருந்து அடுத்த மாதம் 2, 9, 16 ஆகிய நாட்களில் இரவு 9.25 மணிக்கு புறப்படும் ரெயில், வியாழக்கிழமை அதிகாலை 3.10 மணிக்கு ராமேசுவரம் வந்து சேரும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

    ×