என் மலர்
நீங்கள் தேடியது "வெயில்"
- தூத்துக்குடி , திருத்தணி, திருச்சி ஆகிய இடங்களில் 103 டிகிரி அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்து உள்ளது.
- வலுவான மேற்கு காற்றின் ஊடுருவல் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பகல் நேர வெப்பநிலை உயர்ந்து வருகிறது.
சென்னை:
தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. சென்னையிலும் வெயில் அதிகரித்துள்ள நிலையில் இரவு நேரங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளரான டெல்டா ஹேமச்சந்திரன் கூறியிருப்பதாவது:-
மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரியும் சென்னை மீனம்பாக்கம், ஈரோடு, மதுரை நகரம் ஆகிய இடங்களில் 103 டிகிரியும் வெயில் பதிவாகி உள்ளது.
தூத்துக்குடி , திருத்தணி, திருச்சி ஆகிய இடங்களில் 103 டிகிரி அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்து உள்ளது.
இன்று காலை 8.30 மணி நிலவரப்படி துரைப்பாக்கம், பள்ளிக்கரணையில் தலா 5 செ.மீ, கண்ணகி நகர், மேடவாக்கம், மடிப்பாக்கம், மணலியில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
வலுவான மேற்கு காற்றின் ஊடுருவல் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பகல் நேர வெப்பநிலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடல் காற்று உள் நுழைவதில் ஏற்படும் தடை மற்றும் தாமதம் காரணமாக கடலோர மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகரித்து காணப்படுகிறது.
தமிழகத்தில் பகல் நேரத்தில் வெப்பமான சூழலே நிலவும், கடலோர மாவட்டங்களில் பகல்நேர வெப்ப நிலை 100 டிகிரி அளவுக்கு பதிவாக வாய்ப்பு உள்ளது.
சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்றும் நாளையும் பரவலாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- சென்னையில் கடந்த 2 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது.
- மதுரையில் இயல்பைவிட 3 டிகிரி வரையில் வெப்பம் உயர்ந்து காணப்பட்டது.
சென்னை:
தமிழ்நாட்டில் இனி வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதிலும் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி வரை வெயிலின் தாக்கம் உயரும் என சொல்லப்பட்டது.
அதன்படி, மதுரை விமான நிலையம் 104.36 டிகிரி (40.2 செல்சியஸ்), மதுரை நகரம் 102.92 டிகிரி (39.4 செல்சியஸ்), கடலூர் 100.93 டிகிரி (38.3 செல்சியஸ்), பரங்கிப்பேட்டை 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்), திருச்சி 100.58 டிகிரி (38.1 செல்சியஸ்), சென்னை மீனம்பாக்கம் 100.22 டிகிரி (37.9 செல்சியஸ்), ஈரோடு 100.04 டிகிரி (37.8 செல்சியஸ்) ஆகிய 7 இடங்களில் வெயில் சதம் அடித்து இருந்தது. இதில் மதுரையில் இயல்பைவிட 3 டிகிரி வரையில் வெப்பம் உயர்ந்து காணப்பட்டது.
சென்னையில் கடந்த 2 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது. கடல் காற்று நிலப்பகுதிக்குள் வராத காரணத்தினால் இந்த நிலை இருந்தது. ஆனால் நேற்று கடல் காற்று ஓரளவுக்கு வந்ததால், வெப்பம் சற்று குறைந்ததை உணர முடிந்தது.
வருகிற 25-ந்தேதி வரை இதே நிலைதான் நீடிக்கும் என்றும், அதன் பிறகு பகலில் வெப்பமும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மழையையும் தமிழ்நாட்டில் சில இடங்களில் எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
- மேற்கு காற்று வலுவடைந்திருப்பதால், கடல் காற்று உள்ளே நுழைவதில் தாமதம் ஏற்படுகிறது.
- நேற்று சென்னை மீனம்பாக்கம், மதுரை விமான நிலையத்தில் 101.84 டிகிரி வெயில் பதிவானது.
சென்னை:
தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், தற்போது பருவமழை குஜராத் உள்ளிட்ட சில பகுதிகளில் தீவிரம் அடைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு இருந்தாலும், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இனி வரும் நாட்களில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேற்கு காற்று வலுவடைந்திருப்பதால், கடல் காற்று உள்ளே நுழைவதில் தாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அதிலும் இன்று (வியாழக்கிழமை) இயல்பைவிட 2 டிகிரி வரை வெப்பம் உயரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் நேற்று சென்னை மீனம்பாக்கம், மதுரை விமான நிலையத்தில் 101.84 டிகிரி (38.8 செல்சியஸ்) வெயில் பதிவானது.
இதன் தொடர்ச்சியாக வரும் நாட்களிலும் பகலில் வெயில், மாலை அல்லது இரவு நேரங்களில் வெப்பச்சலனத்தால் மழை என்ற சூழ்நிலையே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இம்மாதம் நிறைவு பெறும் வரையில் இதே வானிலை தான் நிகழக்கூடும்.
- மக்கள் வெயிலின் தாக்கத்தால் கடும் தவிப்புக்கு ஆளானார்கள்.
- சென்னையில் இன்று வெயிலின் தாக்கம் 100 டிகிரியை கூட தொடவில்லை.
சென்னை:
சென்னையில் இன்று கடுமையான வெயில் கொளுத்தியது. மக்கள் வெயிலின் தாக்கத்தால் கடும் தவிப்புக்கு ஆளானார்கள். இது தொடர்பாக வானிலை மையத்திடம் கேட்டபோது கூறியதாவது:-
வெயிலின் தாக்கம் அதிகமாகத்தான் இருக்கும். அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இன்று சென்னையில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை கூட தொடவில்லை. ஆனாலும் மக்கள் உஷ்ணத்தை அதிகமாக உணர்வதற்கு காற்றில் ஈரப்பதம் மிகவும் குறைவாக உள்ளதுதான் காரணம் ஆகும்.
இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- ஈரோடு மாவட்டத்திலும் கடந்த மார்ச் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
- வீடுகளில் புழுக்கம் நிலவுவதால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
ஈரோடு:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சர்வ சாதாரணமாக 100 டிகிரி வெயில் பதிவானது. இதனால் மக்கள் அவதி அடைந்து வந்தனர்.
ஈரோடு மாவட்டத்திலும் கடந்த மார்ச் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் அவதி அடைந்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் கொளுத்தியது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை நீடிக்கிறது. அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி வருகின்றனர். வீடுகளில் புழுக்கம் நிலவுவதால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மதிய நேரங்களில் எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, மேட்டூர் ரோடு, ஆர்.கே.வி. ரோடு ஆகியவை மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வெளியே செல்லும் பெண்கள் குடையை கொண்டு செல்கின்றனர். இன்னும் சிலர் முகத்தில் துணியை மறைத்து செல்கின்றனர்.
வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க குளிர்பானங்களை அதிக அளவில் பருகி வருகின்றனர். தற்போது மாவட்டத்தில் முலாம்பழம், நுங்கு, கரும்பு பால், இளநீர் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் இனி வரக்கூடிய நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மக்கள் திணறி வருகின்றனர். மதியம் 12 மணி முதல் 3 மணி வரை குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
- தமிழ் சினிமாவில் பா. ரஞ்சித் வருகைக்கு முன்பு சாதி, தலித் மக்களை பற்றிய பார்வை வேறாக இருந்தது.
- வெயில் திரைப்படத்தின் வாயிலாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன், ஜெயில் போன்ற படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் வசந்த பாலன்.
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வசந்தபாலன், "தமிழ் சினிமாவில் பா. ரஞ்சித் வருகைக்கு முன்பு சாதி, தலித் மக்களை பற்றிய பார்வை வேறாக இருந்தது. வெயில் படத்தில் பன்றி மேய்ப்பவரை வில்லனாக காட்டியதற்கு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கிறேன். சிறுபான்மையினரை, மூன்றாம் பாலினத்தவரை நாம் தவறாக காட்டிவிட கூடாது என்று பா. ரஞ்சித் அவரது படங்களின் வாயிலாக நமக்கு கடத்தியுள்ளார்" என்று தெரிவித்தார்.
- சேலத்தில் தொடர் வெயில் மற்றும் அனல் காற்று காரணமாக மதிய நேரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
- வெப்பம் அதிகமாக இருந்ததால் சாலைகளில் சென்ற மக்கள் தவித்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. மார்ச் மாத தொடக்கத்தில் 100 டிகிரி வெயில் பதிவான நிலையில் பின்னர் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது.
இந்தநிலையில் மீண்டும் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 101.1 டிகிரி வெயில் பதிவான நிலையில் நேற்று வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து 103.3 டிகிரி பதிவானது. இது நடப்பாண்டில் உச்ச பச்ச வெயில் பதிவாகும். இதனால் வெப்பம் அதிகமாக இருந்ததால் சாலைகளில் சென்ற மக்கள் தவித்தனர்.
அதன் தொடர்ச்சியாக இன்றும் வெயிலின் தாக்கம் காலை முதலே அதிக அளவில் இருந்தது. சேலத்தில் தொடர் வெயில் மற்றும் அனல் காற்று காரணமாக மதிய நேரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தொப்பி அணிந்த படியும், குடைகள் பிடித்த படியும் பொதுமக்கள் சாலைகளில் சென்றனர். மேலும் தாகத்தை தணிக்க இயற்கை மற்றும் செயற்கை குளிர்பான கடைகளில் மக்கள் அதிக அளவில் குவிந்தனர்.
இந்த நிலையில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
- மழை, வெயில், பனி பொழிவு என மாறி வருவதால் நெற்பயிரில் நோய் தாக்குதல் காணப்படுகிறது.
- இதனால் வேளாண் துறை சார்பில் விதை பண்ணைகள், வயல்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி, தடப்பள்ளி- – அரக்கன்கோட்டை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் நெல் பயிர் சாகுபடி செய்துள்ளனர். சில மாதமாக மழை, வெயில், பனி பொழிவு என மாறி வருவதால் நெற்பயிரில் நோய் தாக்குதல் காணப்படுகிறது.
இதனால் வேளாண் துறை சார்பில் விதை பண்ணைகள், வயல்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மோகனசுந்தரம் கூறியதாவது:
ஈரோடு மாவட்ட பாசன பகுதிகளில் ஏ.எஸ்.டி.16, டி.பி.எஸ்.5, மேம்படு த்தப்பட்ட வெள்ளை பொன்னி, ஐ.ஆர்.20, ஏ.டி.டி.38, கோ– 51, பி.பி.டி.5204, ஆர்.என்.ஆர்.15048 ஆகிய நெல் ரகங்களில் விதை பண்ணைகள் அமைத்துள்ள னர்.
விதை பண்ணையில் அதிக நீர் தேங்காமல் வடிகால் வசதி ஏற்படுத்த வும், அதிக தழைச்சத்து அளிக்கக்கூடி உரங்களை குறைந்த அளவில் பயன்படுத்தவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் பருவ நிலை மாற்றத்தால் மஞ்சள் கரிப்பூட்டை நோய் பரவ சாதகமாக உள்ளது. இந்நோயால் ஒவ்வொரு தானியமும் மஞ்சள் நிறமாக மாற்றம் அடைந்து நெற்பழம் உருண்டைகளாக மாறிவிடும். இதனால் விதை உற்பத்தி பாதிக்கும். தானிய விற்பனையின்போது விலை இழப்பு ஏற்படும்.
எனவே இந்நோயை கட்டுப்படுத்த நெல் பஞ்சுபுடை பருவத்தில் காப்பர் ைஹட்ராக்ைஸடு மருந்து ஒரு லிட்டருக்கு 2.5 கிராம் என்ற அளவில் தெளிப்பதுடன் மகரந்த சேர்க்கை முடிந்ததும் மீண்டும் ஒரு முறை தெளித்து தரமான விதை உற்பத்தி செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது ஈரோடு விதைச்சான்று அலுவலர் ஹேமாவதி, உதவி விதைச்சான்று அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
- டெல்டா மாவட்டங்களில் இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
- வெயிலின் தாக்கம் குறைந்து மிதமான குளிர்ந்த காற்று வீசியது.
தஞ்சாவூர்:
கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கும் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காட்சியளித்தது.
திடீரென பகல் 12 மணியளவில் தஞ்சையில் மிதமான சாரல் மழை ெபய்தது.
இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து மிதமான குளிர்ந்த காற்று வீசியது. இந்த மழை சுமார் அரை மணி நேரம் நீடித்தது.
- கோடைகாலம் தொடங்கும் முன்னரே தற்போது பழனியில் வெயில் வாட்டி வதைக்கிறது.
- பழனி மலைக்கோவிலில் தரிசனத்திற்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது.
பழனி:
பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவிலுக்கு விடுமுறை நாட்கள் மட்டுமின்றி திருவிழா காலங்களிலும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவிலான பக்தர்கள் வருகின்றனர். கோடைகாலம் தொடங்கும் முன்னரே தற்போது பழனியில் வெயில் வாட்டி வதைக்கிறது.
இதனால் பழனி மலைக்கோவிலில் தரிசனத்திற்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. வெளிப்பிரகாரத்தை சுற்றிவரும் பக்தர்களும் சிரமப்படுகின்றனர். எனவே பக்தர்களை வெயிலில் இருந்து காக்கவும், நிழலில் இளைப்பாற வசதியாகவும் மலைக்கோவில் அலுவலகத்தை ஒட்டியுள்ள பகுதியில் தகரத்தில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தரிசனம் முடிந்து வெளிப்பிரகாரத்தை சுற்றி வரும் பக்தர்கள் பாதத்தில் சூடு ஏற்படுவதை தவிர்க்கவும், தேங்காய் நாரினால் தயாரிக்கப்பட்ட தரைவிரிப்பு விரிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது இந்த தரைவிரிப்பில் கோவில் பணியாளர்கள் தண்ணீர் தெளிப்பதால் பிரகாரத்தை சிரமமின்றி பக்தர்கள் சுற்றி வருகின்றனர்.
இருப்பினும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தண்ணீர் தெளித்த சிறிதுநேரத்திலேயே ஆவியாகி விடுகிறது. இதனால் வெளிப்பிரகாரத்தை சுற்றிலும் கூலிங்பெயிண்ட் அடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. படிப்பாதை, யானைப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வெயில் தெரியாமல் இருக்க வடக்கு கிரிவீதியில் 500 மீ நீளத்திற்கு தற்காலிக நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
- சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை அதிகாலையில் குளிர், சூரிய உதயத்திற்கு பிறகு கடும் வெயில் என்று மாறுபட்ட சீதோஷ்ணம் நிலவி வருகிறது.
- இந்நிலையில் நேற்று 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
சேலம்:
சேலம், நாமக்கல்லில் கடந்த 2 நாட்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்கள் முழுமையான கோடை காலமாக இருக்கும். ஆனால் நடப்பாண்டில் ஏப்ரல் துவங்கும் முன்பே, கடும் வெயில் கொளுத்தி வருகிறது.
இதில் சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை அதிகாலையில் குளிர், சூரிய உதயத்திற்கு பிறகு கடும் வெயில் என்று மாறுபட்ட சீதோஷ்ணம் நிலவி வருகிறது.
இந்நிலையில் நேற்று 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்தில் 98 டிகிரி பதிவான நிலையில், நேற்று 100.6 டிகிரி வெயில் பதிவானது. அதே நேரத்தில் நாமக்கல்லில் நேற்று முன்தினம் 100.4 டிகிரி வெயில் பதிவான நிலையில், நேற்று 98.6 வெயில் பதிவானது.
கடந்த 2 நாட்களில் 2 மாவட்டங்களிலும் வெயில் உச்சம் தொட்டுள்ளது. இந்த வெயிலால் வாகன ஓட்டிகள், தள்ளு வண்டி கடை உரிமையாளர்கள், சாலையோர வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் இளநீர், கூல்டிரிங் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று இரவு வீடுகளில் புழுக்கம் அதிகமாக காணப்பட்டது.
- ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
- வீடுகளிலும் இரவு நேரங்களில் வெப்ப காற்று வீசி வருவதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை தொடர்கிறது. குறிப்பாக 12 மணி முதல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது.
வெயிலுடன் அனல் காற்று வீசி வருவதால் வாகன ஓட்டிகள் குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
வீடுகளிலும் இரவு நேரங்களில் வெப்ப காற்று வீசி வருவதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இப்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது இனி மே மாதம் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலின் தாக்கம் இன்னும் கடுமையாக இருக்கும் என மக்கள் இப்பவே அச்சப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி 100 டிகிரி வரை வாட்டி வதைத்து வருகிறது. புழுக்கத்தால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் புறநகர் பகுதியில் லேசாக மழை பெய்து வருகிறது.
எனினும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் கரும்பு பால், இளநீர், தர்பூசணி பழம் ஆகியவற்றை விரும்பி பருகி வருகின்றனர்.






