search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனித தீர்த்தம்"

    • பற்பல நோய்களை நீக்கி சுகம் அளிக்கும் குணத்தையும் கொண்டது.
    • நேர்நிலையான அதிர்வலைகள் இருந்து கொண்டே இருக்கும்.

    இன்றைய தேதியிலும் எம்மில் பலர் வட இந்தியாவில் உள்ள புனித தலமான கங்கை நதியின் நீரை அஞ்சல் வழியாகவோ அல்லது நாம் பயணம் மேற்கொள்ளும் போதோ அல்லது எம்முடைய உறவினர்கள், நண்பர்கள் யாரேனும் கங்கைக்கு சென்று வழிபட்டு திரும்பும் போது புனித நீரை பரிசாக எமக்கு வழங்கி இருப்பர்.

    புனித நீர் எம்முடைய இல்லங்களில் உள்ள பூஜையறையில் இருக்கும் வரை.. பூஜையறை மட்டுமல்லாமல் எம்முடைய இல்லம் முழுவதும் நேர்நிலையான அதிர்வலைகள் இருந்து கொண்டே இருக்கும். சூழல் காரணமாகவோ அல்லது விவரிக்க இயலாத காரணத்திற்காகவோ இத்தகைய புனித நீரை நாம் பயன்படுத்தாமல் தவறவிட்டிருந்தால்.., அதற்காக வருத்தப்பட வேண்டாம். எம்முடைய ஆன்மீக பெரியோர்கள் புனித தீர்த்தத்தை எம்முடைய இல்லங்களில் நாமே தயாரிக்கும் அரிய முறை ஒன்றை சொல்லி இருக்கிறார்கள்.

    இந்த புனித தீர்த்தம் காயகற்ப சஞ்சீவியை போல் எமக்கு ஏற்படும் பற்பல நோய்களை நீக்கி சுகம் அளிக்கும் குணத்தையும் கொண்டது என்பதால், இதனை நாம் ஒரு முறை தயாரித்து அதன் பயனை உணர்வோம்.

    தேவையான பொருட்கள்

    ஏலக்காய்

    கருவாப் பட்டை

    வால் மிளகு

    ஜாதி பத்திரி

    பச்சைக் கற்பூரம்

    ஏலக்காய், கருவாப்பட்டை, வால்மிளகு, ஜாதிபத்ரி என ஒவ்வொன்றிலும் ஒரு குறிப்பிட்ட ஒரே அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றில் கால்பங்கு அளவிற்கு பச்சை கற்பூரத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இந்த பொருட்களை தேவையான அளவு எடுத்து வைத்துக்கொண்டு, அதனை உலர்த்தி இடித்து பொடியாக மாற்றி வைத்துக் கொள்ளவும். இதன் பிறகு பச்சை கற்பூரத்தை பொடியாக ஆக்கி, இதனுடன் கலந்து கொள்ளவும். இதனை ஒரு போத்தலில் பதனமிட்டு பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.

    இந்த பொடியை சிறிதளவு எடுத்து ஒரு தாமிர கோப்பையில் தண்ணீரில் கலந்து முதல் நாள் இரவு வைத்து விட வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து குளித்து முடித்து, எதையும் அருந்தாமலும், சாப்பிடாமலும் பூஜை முடிந்த உடன், இந்த புனித தீர்த்தத்தை அருந்த வேண்டும். இதனால் எம்முள் இருக்கும் சகல நோய்களும் விலகி, உடல் வலிமை பெறும்.

    சிவனை வழிபடுபவர்கள் இதனுடன் வில்வ இலையையும் இணைத்து அருந்தலாம்.

    பெருமாளை வழிபடுபவர்கள் இதனுடன் துளசி இலையையும் இணைத்து அருந்தலாம்.

    இந்த புனித தீர்த்தத்தை அருந்திய பிறகு இதயம், இரைப்பை வலிமை அடையும். கண்களைப் பற்றிய கோளாறு நீங்கும். நரம்பு தளர்ச்சி, சளி தொல்லை, சுவாசக் கோளாறு ஆகியவை நீங்கும். குருதி சுத்தமடையும். பித்தத்துடன் தொடர்புடைய குறைபாடுகள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், வாய் கசப்பு, வயிற்று வலி, நெஞ்சக வலி போன்றவை நீங்கும். இந்த மருந்து சஞ்சீவி முறையிலான மருந்தாகும். இதனை தொடர்ந்து அருந்தும் போது உங்கள் ஆரோக்கியம் மேம்படுவதை உங்களால் உணர இயலும்.

    • தமிழ்நாட்டின் பல பகுதிகளில் புனித நதிகள், புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.
    • தீர்த்தங்கள் என்பது வெறும் தண்ணீர் மட்டுமல்ல. அதில் மகத்துவம் நிறைந்துள்ளது.

    `கற்பகநாதர் குளம்' விநாயக தீர்த்தத்திற்கு `கடிக்குளம்' என்ற பெயரும் உண்டு. எனவே, இத்தலத்திற்கு `கடிக்குளம்' என்று பெயர். தீர்த்தத்தின் பெயரே ஊரின் பெயராக இருப்பது தனிச்சிறப்பாகும். கடிக்குளம் என்பதே தற்போது மக்களால், `கற்பகநாதர் குளம்'என்றும், `கற்பகனார் கோவில்' என்றும் அழைக்கப்படுகிறது.

    இத்தலத்து இறைவன் பெயர், `கற்பக நாதர், கற்பகேஸ்வரர்' என்றும், அம்பாள் பெயர், `சௌந்தரநாயகி, பால சௌந்தரி'என்றும் அழைக்கப்படுகிறது.

    மூலவர், சிறிய மூர்த்தியாக, எட்டுப் படைகளுடன், எழிலாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியது. விநாயகர் இறைவனை வழிபட்டு, மாங்கனி பெற்ற தலம், இது. இத்தலத்து சிறப்புமிக்க தீர்த்தமாகிய `விநாயக தீர்த்தம்' (கடிக்குளம்) இந்த ஆலயத்தின் வலது பக்கத்தில் உள்ளது.

    ஒருவர் தமது முன்னோரிமன் எலும்புகளை, ஒரு கலத்தினுள் வைத்து தீர்த்த யாத்திரையாக இந்த தீர்த்தத்தை வந்து அடைந்த போது, அந்தக் கலயத்தில் இருந்த எலும்புத் துண்டுகள் தாமரைப்பூவாக மலர்ந்ததாம். அப்போது தான் தெரிந்தது.

    இந்த தலமும், தீர்த்தமும் முக்தி கரும் இடம் என்று அன்று முதல் இந்த சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் இந்த தீர்த்தத்தில் நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி செய்வது வழக்கமாக உள்ளது.

    திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டிய காடு செல்லும் பேருந்தில் சென்றால், இத்தலத்தை அடையலாம்.

    புனித நீராடல், தானம், தர்ப்பணம்

    ஒவ்வொரு மாதமும் சூரியனும், சந்திரனும் ஒரே நட்சத்திரத்தில் ஒன்று கூடி இருப்பதே அமாவாசை எனப்படுகிறது.

    சந்திரனின் சொந்த வீடான கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் ஆடி மாத அமாவாசை 12 மாத அமாவாசைகளுள் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.

    பொதுவாக ஆடி அமாவாசை தினத்தன்று மூன்று விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    1. புனித நீராடல்

    2. தானம்

    3. தர்ப்பணம்

    தமிழ்நாட்டின் பல பகுதிகளில் புனித நதிகள், புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. தங்கள் சந்ததிகள் நலமுடனும், வளமுடனும் வாழ சிறப்பு மிக்க தீர்த்தங்களை நமது முன்னோர்கள் பல இடங்களில் கண்டுபிடித்து நமக்கு அளித்துள்ளார்கள்.

    இந்த தீர்த்தங்களின் சிறப்பை உணர்ந்து, நாம் அங்கு புனித நீராட வேண்டும் என்பதற்காகவே, இந்த தீர்த்தங்கள் உள்ள இடங்களில் ஆலயங்களை கட்டினார்கள். ஆலயத்தையும் தீர்த்ததையும் ஒன்றுபடுத்தியதன் பல நூற்றாண்டுகளாக தீர்த்தங்களின் புனிதம் போற்றப்பட்டு வருகிறது.

    தீர்த்தங்கள் என்பது வெறும் தண்ணீர் மட்டுமல்ல. அதில் மகத்துவம் நிறைந்துள்ளது. நமது நாகரிகத்தின் ஒட்டு மொத்த பண்பாடும் அதில் அடங்கியுள்ளது.

    பஞ்ச பூதங்களில் ஒன்றான இந்த தீர்த்தங்கள் அமாவாசை தினத்தில் இரட்டிப்பு சக்தி பெற்றதாக இருக்கும். எனவே நாளை நாம் புனித நதியிலும், புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடி இறைவழிபாடு செய்தால் அளவற்ற பலன்களை நிச்சயம் பெறலாம். இந்த தீர்த்தக்கரைகளில் பித்ருதர்ப்பணம் செய்வது மேலும் சிறப்பைத் தரும்.

    • ராமேஸ்வரம் கோவிலுக்கு எதிரே உள்ள கடலே ‘‘அக்கினி தீர்த்தம்’’ ஆகும்.
    • மண்ணால் லிங்கம் செய்து, பூஜித்து, பித்ரு தர்ப்பணம் செய்வது சிறப்பு.

    அமாவாசை திதியில் கடலில் நீராடுவது மிகவும் போற்றப்படுகிறது. இந்நாளில் கடலில் நீராடி முன்னோர்களுக்கு பிதுர் பூஜை செய்தால், குடும்பத்தில் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறுவதுடன், முன்னோர் களின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

    தீர்த்தம் என்பது நம் பாவங்களைப் போக்கி, ஆத்ம சுத்தம் தந்து, நம்மை ஆரோக்கியமுடன் வாழவைக்கும் சக்தி கொண்டது என ஞான நூல்கள் கூறுகின்றன.

    கடல் நீராடலுக்கும், பிதுர் பூஜைக்கும், தோஷ நிவர்த்திக்கும் மிகவும் புகழ் பெற்றதாக திகழ்வது ராமேஸ்வரம் தலத்தில் உள்ள அக்னி தீர்த்தக் கடலாகும். இத் தீர்த்தத்தில் ராமபிரான் நீராடி சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

    ராமேஸ்வரம் கோவிலுக்கு எதிரே உள்ள கடலே ''அக்கினி தீர்த்தம்'' ஆகும். சீதை மீது சந்தேகப்பட்ட ராமர், சீதையை தீக்குளிக்கச் சொன்ன போது, சீதை தீக்குள் இறங்கியதும், சீதையின் கற்புக்கனல் தாங்காது, அக்கினி ஓடிவந்து இந்த கடலில் குளித்துதான் குளிர்ந்தது என்று புராணங்கள் கூறுகின்றன. இதனாலேயே இந்த தீர்த்தம் ''அக்கினி தீர்த்தம்'' என்று அழைக்கப்படுகிறது.

    அக்கினி தீர்த்தம் என்ற பெயருக்கேற்ப இந்த தீர்த்தத்தில் நீராடும் போது வெதுவெதுப்பாக இருக்கிறது.

    இந்த அக்கினி தீர்த்தக் கடல் ஆழமும் இல்லை, அலையும் இல்லை. ஆனால், இந்த அக்கினி தீர்த்தத்தில் குளிக்க எந்தவித நியமமும் கிடையாது. யாரும், எந்நேரமும் அக்கினி தீர்த்தத்தில் குளிக்கலாம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    நம் நாட்டில் வேறு எங்கும் கடல் ''அக்கினி தீர்த்தத்தில்'' இருப்பது போல் அமைதியாக இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த அக்கினி தீர்த்தக் கரையில் ஆதி சங்கரர் வந்து நின்ற இடம் இருக்கிறது. இந்த அக்கினி தீர்த்தக் கடலில் குளிப்பது, கடலில் குளிப்பது போல் அல்லாமல் பெரிய ஏரியில் குளிப்பது போல் அமைதியாக குளிக்க முடியும். இந்த அக்கினி தீர்த்தக் கரையில் மண்ணால் லிங்கம் செய்து, பூஜித்து, பித்ரு தர்ப்பணம் செய்வது சிறந்த ஒரு புண்ணியம் ஆகும்.

    இந்த தீர்த்தங்கள் யாவும் இயற்கையில் காந்த சக்தி மிகுந்தவையாகவே உள்ளன. இது உடல் ஆரோக்கியத்தை வளப்படுத்தக் கூடியதாகும். உடம்பின் அணுசக்தியை வலுப்படுத்தக் கூடியதும் ஆகும்.

    இந்த தீர்த்தங்களின் மின்னோட்ட மகிமையை தங்களது ஞானத்தாலும், யோகத்தாலும் அறிந்த நமது முன்னோர்கள் இந்த தீர்த்தங்களை ஏற்படுத்தி, அதை ஆன்மிகத்தோடு இணைத்து நமக்கு வழங்கி உள்ளார்கள்.

    இத்தகைய சிறப்புமிக்க தீர்த்தங்களில் நீராடுவதால் புத்திர பாக்கியம் உண்டாகிறது. உடல் பிணி தீருகிறது. பாவங்கள் தொலைகிறது. அனைத்து நலன்களும் கிடைக்கின்றன. இந்த தீர்த்தங்களில் நீராடித்தான் நீண்ட காலம் குழந்தை இல்லாமல் இருந்த ராமகிருஷ்ண பரமஹம்சரின் பெற்றோர்களுக்கு குழந்தைகள் பிறந்தனவாம். இதனால்தான் ''ராமேஸ்வரம் போய் குளிக்காதவன் போல'' என்று ஒரு பழமொழி சொல்கிறார்கள். இப்பழமொழி, ராமேஸ்வரத்தில் தீர்த்தம் ஆடுவது எவ்வளவு சிறப்பு என்பதை எடுத்துரைக்கிறது.

    அயோத்தி சென்று முடிசூட்டிக் கொண்ட ராமர், மீண்டும் ராமேஸ்வரத்திற்கு வந்து தீர்த்தமாடியதாக ''ஆனந்த ராமாயணம்'' கூறுகிறது.

    இத்தகைய சிறப்புமிக்க தீர்த்தங்களில் ஒவ்வொருவரும் நீராடுவது அவசியம் ஆகும். இங்கு, தங்குவதில் இருந்து உணவு, போக்குவரத்து என அனைத்து வசதிகளும் உள்ளன.

    ஆலயத்தின் உள்ளே உள்ள இருபத்தி இரண்டு தீர்த்த கிணறுகளிலும் குறிப்பிட்ட காசு கொடுக்க, அங்குள்ள பையன்கள் நமக்கு தண்ணீர் இறைத்து ஊற்றுவார்கள். ஒவ்வொரு இந்துவும், ''காசி ராமேஸ்வரம்'' பயணம் மேற்கொள்வது முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.

    இதனை மேற்கொள்ளும் முறையானது, முதலில் ராமேஸ்வரம் வந்து கடலில் நீராடி, ராமநாதரை வழிபட்ட பின்பு, இங்கிருந்து மண்ணை எடுத்துக் கொண்டு காசி சென்று, கங்கையில் கரைத்து, கங்கையில் நீராடி விசுவநாதரை வழிபட்டு, பின்பு அங்கிருந்து கங்கை நீரைக் கொண்டு வந்து ராமேஸ்வரம் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வணங்கி, ''காசி ராமேஸ்வர'' பயணத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

    மேலும் ராமேஸ்வரம் தீர்த்தமாட செல்லும் முறையானது முதலில் ராமநாதபுரத்தை ஒட்டி உள்ள ''உப்பூர் விநாயகர்'' கோவில் தீர்த்தத்தில் நீராடி, விநாயகரை வணங்கி தொடங்க வேண்டும். இலங்கை செல்ல கடலைக் கடப்பதற்கு முன், ராமர் இங்கேதான் நீராடிவிட்டு, சங்கல்பம் செய்து கொண்டு சென்றார்.

    இதன்பின் தேவிபட்டினத்தில் கடலுக்குள் உள்ள நவ பாஷாண நவக்கிரகங்களை வழிபட்டு, அங்குள்ள கடலிலும், சக்கர தீர்த்தத்திலும் நீராட வேண்டும். பின்பு, திருப்புல்லாணி வந்து இங்குள்ள சக்கர தீர்த்தத்தில் நீராட வேண்டும். பின்பு, தனுஷ்கோடி வந்து சேது தீர்த்தத்தில் நீராட வேண்டும். பின்பு ஆலயத்தின் வெளியே உள்ள தீர்த்தங்களில் நீராட வேண்டும். பின்பு ஆலயத்தின் எதிரே உள்ள கடல் ஆகிய ''அக்கினி தீர்த்தத்தில்'' நீராட வேண்டும்.

    பின்பு ஆலயம் வந்து 22 தீர்த்தங்களிலும் நீராடி, இறைவனையும், அம்பாளையும் வழிபட்டு, பின்பு மீண்டும் திருப்புல்லாணி வந்து தீர்த்தமாடி, அன்னதானம் செய்துவிட்டு, ராமநாதபுரம் சென்று அங்கு அரண்மனையில் உள்ள சேதுபதி மன்னன் சிலையை தரிசிக்க வேண்டும். இதுவே ராமேஸ்வரம் தீர்த்தமாடலின் விதிமுறையாகும்.

    ராமேஸ்வரம் திருக்கோவில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையில் திறந்திருக்கும். இதில் மதியம் ஒரு மணி முதல் மூன்று மணி வரை கோவில்நடை பூட்டி இருக்கும். நாள்தோறும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. ஆடி அமாவாசை அன்று நாள் முழுவதும் பூஜையும், அர்ச்சனையும், தரிசனமும் பக்தர்களுக்கு உண்டு.

    தினமும் காலை 5 மணிக்கு நடைபெறும் ''திருவனந்தல் பூஜை''யில் முக்கிய அபிஷேகங்கள் உண்டு. இதில், ''மரகதலிங்கத்தை'' மூலவருக்கு முன்பாக வைத்து, அபிஷேகம் செய்வார்கள். இதை தரிசிப்பது மிகவும் விசேஷமானது ஆகும்.

    இத்தலத்தில் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய, கட்டணத்திற்கு கங்கை தீர்த்தம் கிடைக்கும். இதேபோல், கங்கை தீர்த்தம் கொண்டு வருபவர்கள் கட்டணம் செலுத்தியே இறைவன் அபிஷேகத்திற்குக் கொடுக்க வேண்டும்.

    இந்த தீர்த்த சொம்பு பித்தளை, வெங்கலப் பாத்திரம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

    மேலும் இந்த ராமேஸ்வர தலத்தில் பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்வது, புத்திர பாக்கியத்துக்கான பரிகாரம், பிதுர்கள் தோஷம் போக்குதல் முதலியன சிறப்பான முறையில் நடைபெறுகிறது. இத்தகைய சிறப்புமிக்க, இந்தியாவின் தலை சிறந்த தீர்த்தமாகிய ''ராமேஸ்வரம்'' பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆலய நிர்வாக அதிகாரியைத் தொடர்பு கொள்ளாலம்.

    இத்தகைய சிறப்புமிக்க ராமேஸ்வரம் தீர்த்தங்களில் ஒவ்வொரு இந்துவும் நீராட வேண்டியது முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.

    அக்னி தீர்த்தம் எல்லாக் காலங்களிலும் வெது வெதுப்பாக இருக்கும். மேலும், அலைகள் அதிக மில்லாமல் ஆபத்தின்றி நீராடவும் இந்த தீர்த்தம் அருள்புரிகிறது!

    ராமேஸ்வரம் சேதுக் கரை கடல் நீர் சுமார் இரண்டு லட்சம் மைல்கள் சுற்றிச் சுழன்று வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதனால் இக்கடல் நீரோட்டம் அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, நவமி ஆகிய நாட்களில் அதிக வேகம் பெறுவதால், கடலின் அடியிலுள்ள மூலிகைகள், சங்கு, பவளம் போன்றவற்றின் ஜீவ சத்துகள் புரட்டப் பட்டு கடலின் மேல்மட்டத்திற்கு வருகின்றன. அந்த நாட்களில் அக்னி தீர்த்தக் கடல் நீர் அமிர்தம் கலந்த நீராகவும், உடல்நலத்தைக் காக்க உதவுவதாகவும் கருதப்படுகிறது.

    கடலில் எல்லா காலத்திலும் நீராடக் கூடாது என்பது விதியாகும். ஆனால், அக்னி தீர்த்தமான இக்கடலில் எல்லா நாட்களிலும் எந்த வேளையிலும் நீராடலாம் என்று சேது மகாத்மியம் என்ற நூல் கூறுகிறது.

    இந்த தீர்த்தத்தில் நீராடினால் கங்கை நதியில் நீராடிய பலன் கிட்டும், கிரக தோஷங் கள் நீங்கும். நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு பரிகாரம் செய்து நல்ல பலன் பெறுகிறார்கள். புத்திர தோஷம், பிதுர்தோஷம் நீக்கும் தீர்த்தம் என்றும் இது போற்றப்படுகிறது.

    ஆடி அமாவாசையில் பிதுர்பூஜையை வேத விற்பன்னர் மேற்பார்வை யில் செய்வதால், முன்னோர்கள் நரகத்திலிருந்தாலும் நற்கதி அடைவார்களாம்.

    பிதுர்பூஜை செய்தபின் தானதர்மங்கள், அன்னதானம் செய்வது சிறப்பிக்கப்படுகிறது. வசதி இல்லாதவர்கள் அங்குள்ள பசுமாட்டுக்கு வாழைப் பழங்கள், அகத்திக் கீரை கொடுத்தாலும் புண்ணியம் கிட்டும்.

    ×