search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rameswaram temple"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நான்கு ரத வீதிகளிலும் ஆடி, அசைந்து வந்த தேரை பக்தி பரவசத்துடன் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, சுவாமி, அம்பாள் வீதி உலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    திருவிழாவின் 8-வது நாள் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு காலை 9 மணிக்கு நடராஜர் கேடயத்தில் புறப்பாடாகி வீதி உலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இரவு 9 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி தேரில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. மேலும் சிவராத்திரியை முன்னிட்டு விடிய விடிய கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இதனைதொடர்ந்து, இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாள் எழுந்த ருளினர். கிழக்கு ராஜ கோபுரம் பகுதியில் இருந்து தேரோட்டம் நடந்தது. சிவ கோஷத்துடன் பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளிலும் ஆடி, அசைந்து வந்த தேரை பக்தி பரவசத்துடன் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தேரோட்டத்தை முன்னி ட்டு கோவில் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. நான்கு ரத வீதிகளிலும் இன்று காலை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கடற்கரையில் தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
    • ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று 22 தீர்த்த கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

    இந்த நிலையில், இன்று சர்வ அமாவாசையை முன்னிட்டு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்துக்கு கார், பஸ், வேன், ரெயில்கள் மூலம் குவிந்தனர்.

    அவர்கள் அதிகாலையில் இருந்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர். பின்னர் கடற்கரையில் தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    பின்னர் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று 22 தீர்த்த கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்ததால் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மைப்பணி மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்திருந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலுக்குள் வரும் பக்தர்கள் இடையூறு இன்றி நீராடுவது, தரிசனம் செய்வது உள்ளிட்ட வசதிகளை செய்திருந்தனர். 

    • வடமாநிலத்தை சேர்ந்த யாத்ரீகர்களும் ராமேசுவரத்தில் குவிவார்கள்.
    • விற்பனையும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலையுடன் கூறினர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவிலுக்கு ஆண்டின் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் வருகை தந்து புனித நீராடி சுவாமியை வழிபட்டு செல்வது வழக்கம்.

    அதேபோல் தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட இடங்களுக்கும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஏராளமாகவும், இதர நாட்களில் வடமாநிலத்தை சேர்ந்த யாத்ரீகர்களும் ராமேசுவரத்தில் குவிவார்கள்.

    அந்த வகையில், ராமேசுவரத்திற்கு விடுமுறை நாட்களில் குறைந்தது 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை இருக்கும். இதனால் வியாபாரம் அதிகளவில் காணப்படும். கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருக்கும்.

    இந்நிலையில், தமிழகத்தில் காலாண்டு தேர்வு வருகிற 17-ந்தேதி தொடங்கப்பட உள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து மாணவ, மாணவிகள் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இதன் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் மிகுவும் குறைந்தே காணப்பட்டது.

    அக்னி தீர்த்த கடல், கோவிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடல், தரிசனம் செய்ய நீண்ட வரிசை என்று எதுவும் இல்லாமல் காணப்பட்டது. அதிலும் இன்று வந்த அதிக அளவிலான பக்தர்கள் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், காலாண்டு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் வருகை குறைந்துள்ளதாகவும், தேர்வு முடிந்த பின்னரே பக்தர்கள் வருகை அதிகளவில் காணப்படும் என தெரிவித்தார். மேலும் பூஜை பொருட்கள், கலைப்பொருட்கள் விற்பனையும் பெரிதும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலையுடன் கூறினர்.

    • ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • அப்துல்கலாம் நினைவு மணிமண்ட பத்தையும் ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

    ராமேசுவரம்

    உலக பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். குறிப்பாக இங்குள்ள அக்னீதீர்த்த கடலில் பக்தர்கள் நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் செய்வது இந்துக்களின் முக்கிய கடமையாக கருதப்படுகிறது.

    இதன் காரணமாக விசேஷ, விடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். அதன்படி விடுமுறை நாளான இன்று அதிகாலையில் அக்னிதீர்த்த கடலில் குவிந்த பக்தர்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். பின்னர் ராமநாதசுவாமி-பர்வத வர்தினி அம்பாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    ராமேசுவரத்தில் கோவில், ரத வீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை ஆகிய பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ராமேசுவரத்திற்கு சிறப்பு பஸ்கள் விடப்பட்டிருந்தன. கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள் தனுஷ்கோடி சென்று உற்சாகமாக கடற்கரையில் பொழுதை கழித்தனர்.

    மேலும் பேக்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவு மணிமண்ட பத்தையும் ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

    • ராமேசுவரம் கோவிலில் புகுந்த மழைநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • ராமேசுவரத்தில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது.

    ராமேசுவரம்

    ராமேசுவரத்தில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. மழை நீண்ட நேரம் பெய்ததால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள்ளும் மழை நீர் புகுந்து விட்டது. குளம் போல் மழை நீர் தேங்கியதால் அதனை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவில் பணியாளர்கள் விரைந்து வந்து மழைநீரை வெளியேற்றினர். ராமேசுவரத்தில் அதிகளவு மழை பெய்யும் போது கோவிலுக்குள் தண்ணீர் குளம் போல் தேங்குவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய சிரமம் ஏற்படுகிறது. எனவே கோவிலுக்குள் மழைநீர் தேங்காமல் இருக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொங்கல் விடுமுறை, சபரிமலை சீசன் முடிந்ததை முன்னிட்டு திரளான பக்தர்கள் ராமேசுவரம் கோவிலில் வழிபாடு செய்தனர்.
    • அக்னி தீர்த்க்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜை கொடுத்தனர்.

    ராமேசுவரம்

    பொங்கல் தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் அய்யப்பன் கோவிலில் மகரஜோதி முடிந்து ராமேசுவரத்திற்கு இன்று காலை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வாகனம் மற்றும் பஸ்கள் மூலம் வந்தனர். அவர்கள் அக்னி தீர்த்க்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜை கொடுத்தனர்.

    அய்யப்ப பக்தர்கள் அக்கினி தீர்த்த கடலில் புனித நீராடி, பின்னர் அனைத்து பக்தர்களும் கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களுடன் நீராடினர். தொடர்ந்து ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி உள்பட அனைத்து சன்னதியிலும் பல மணி நேரம் காத்திருந்து வழிபாடு செய்தனர். அதிகளவில் வந்த பக்தர்கள் கூட்டத்தால் ராமேசுவரம் பகுதியில் திருவிழா கோலம் போல் காட்சியளித்தது. 

    • ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து அமைச்சர் சேகர்பாபு விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
    • கழிவு நீர் கடலில் கலக்கும் முகத்துவாரத்தின் கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகளை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.

    ராமேஸ்வரம்:

    ராமேசுவரம், ராமநாத சுவாமி கோவிலில் இன்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் வகையில் 22 புனித தீர்த்த கிணறுகள், பக்தர்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய வரிசை முறை, பிரகாரங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்பு வசதிகள், கழிவு நீர் கடலில் கலக்கும் முகத்துவாரத்தின் கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகளையும் வழங்கினார்.

    பின்னர், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்துவது குறித்தும், ஒருங்கிணைந்த பெருந்திட்டப்பணிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் அமைச்சர் சேகர்பாபு விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

    இலங்கை குண்டு வெடிப்பை தொடர்ந்து ராமேசுவரம் கோவில், தனுஷ்கோடி பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #SriLankablast #Rameswaramtemple
    ராமேசுவரம்:

    இலங்கையில் தேவாலயங்களை குறி வைத்து நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாத அமைப்பு குறித்து இலங்கை அரசு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. மேலும் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இலங்கை முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



    இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக தமிழக கடற்கரை பகுதியில் இந்திய கடற்படை பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது.

    குறிப்பாக இலங்கையில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் உள்ள ராமேசுவரம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் இந்திய கடற்படை, கடலோர காவல்படையினர் 24 மணி நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இலங்கையில் இருந்து பயங்கரவாதிகள் பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவாமல் தடுப்பதற்காக இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட், கப்பல் மற்றும் சிட்டா ஹெலிகாப்டரிலும் வீரர்கள் ரோந்து சுற்றி வருகின்றனர்.

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடமைகள் தீவிர சோதனை செய்யப்படுகிறது.

    மேலும் கோவிலுக்குள்ளும் அவ்வப்போது மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ராமேசுவரம் ரெயில் நிலையம், பஸ் நிலையம் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். #SriLankablast #Rameswaramtemple
    ராமேசுவரம் பகுதியில் 62 தீர்த்தங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் 30 தீர்த்தங்கள் கடந்த சில ஆண்டுகளாக புனரமைப்பு செய்யப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் வைபவம் இன்று நடைபெற்றது.
    புனித தலமான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்ய நாடு முழுவதும் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    தென்னகத்து காசி என்று அழைக்கப்படும் ராமேசுவரம் கோவிலில் 22 புனித தீர்த்தங்கள் உள்ளன. இங்கு வரும் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு அதன் பின்னர் கோவிலுக்குள் உள்ள புனித தீர்த்த கிணறுகளில் நீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த நிலையில் ராமேசுவரத்தில் இன்னும் பல தீர்த்தங்கள் இருந்ததாக வரலாறுகள் உள்ளன. இதன் அடிப்படையில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரம் ஆராய்ச்சியில் இறங்கியது.

    இதில் 1964-ம் ஆண்டு 62 தீர்த்தங்கள் ராமேசுவரம் பகுதியில் இருந்ததாக தகவல்கள் கிடைத்தன. அதில் 30 தீர்த்தங்கள் ஜடாமகுட தீர்த்தம், தங்கச்சிமடம், மண்டபம், உப்பூர், வடகார் உள்பட பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டன.

    இந்த 30 தீர்த்தங்களும் கடந்த சில ஆண்டுகளாக புனரமைப்பு செய்யப்பட்டு வந்தன. இந்த பணிகள் சமீபத்தில் முடிவடைந்தன. இதனை தொடர்ந்து 30 தீர்த்தங்களும் பக்தர்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் வைபவம் இன்று நடைபெற்றது. தங்கச்சி மடம் அருகே உள்ள மங்கள தீர்த்தம் பகுதியில் இதற்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    கவர்னர் பன்வாரிலால் புரோகித் இதில் பங்கேற்றார். 30 தீர்த்தங்களும் தனித்தனி குடங்களில் வைக்கப்பட்டு இருந்தன. மற்றொரு குடத்தில் 30 தீர்த்தங்களும் சேர்த்து வைக்கப்பட்டு இருந்தன. இந்த குடங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து காலை 8.10 மணிக்கு 30 தீர்த்தங்கள் அடங்கிய குடத்தின் நீரை மங்கள தீர்த்த தெப்பத்தில் கவர்னர் ஊற்றினார்.
    ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த மழையையொட்டி ராமேசுவரம் கோவிலுக்குள் மழைநீருடன் கழிவுநீரும் புகுந்தது.
    ராமநாதபுரம்:

    அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து மாவட்டங்களிலும் மழை நீடித்து வருகிறது.

    தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது. இருப்பினும் அந்த மாவட்டங்களில் நேற்று மழை நீடித்தது.

    ராமேசுவரத்தில் நேற்று இரவு 8 மணிக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    ராமநாதசுவாமி கோவில் அருகே உள்ள வடக்கு மற்றும் கிழக்கு வீதிகளில் தண்ணீருடன் சேர்ந்த கழிவுநீர் கோபுரவாசல் வழியாக கோவிலுக்குள் புகுந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து தெரிந்ததும் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு மழைநீரை அகற்றினர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை 7 மணி வரை 457.80 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது.
    ரமேசுவரம் கோவிலில் பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று காலை குடும்பத்துடன் சென்று ராமநாத சுவாமியை தரிசித்தார். #hraja #bjp

    ராமேசுவரம்:

    பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று காலை குடும்பத்துடன் ராமேசுவரம் வந்தார். அக்னி தீர்த்த கடலில் நீராடிய அவர் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடினார்.

    பின்னர் அவர் குடும்பத்தினருடன் ராமநாத சுவாமியை தரிசித்தார். முன்னதாக எச்.ராஜா தனது தந்தைக்கு தர்ப்பணம் கொடுத்தார். #hraja #bjp

    நாளை ஆடி அமாவாசை என்பதால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ராமேசுவரம் கோவிலில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாவில் ஒன்றான ஆடித்திருக்கல்யாண திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று 6-ம் நாள் திரு விழாவில் இரவு 8 மணிக்கு சாமி, அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) 7-ம் நாள் திருவிழாவில் சாமி, அம்பாள் காலை 9 மணிக்கு தங்கப் பல்லக்கிலும், மாலை 4.30 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்திலும் புறப்பாடாகி மண்டகப்படிக்கு சென்று, இரவு 8 மணிக்கு கோவிலை வந்தடைகின்றனர். நாளை (சனிக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 8.50 மணிக்கு தங்கப்பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், 11 மணிக்கு தங்கக் கருட வாகனத்தில் ஸ்ரீராமர் அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளை ராமேசுவரம் கோவிலில் புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கூட்ட நெரிசலை தடுப்பதற்காக பிரசித்தி பெற்ற 3-ம் பிரகாரத்தில் பக்தர்கள் வரிசையாக செல்ல தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இரவு 8 மணிக்கு மின் அலங்காரத்தில் வெள்ளி ரதத்தில் சாமி, அம்பாள் எழுந்தருளு கின்றனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் ராமேசுவரத்திற்கு வருகை தந்து அக்னி தீர்த்தக் கடற்கரையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். இதற்காக பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    இதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வர இருப்பதால் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர்கள் பிரபு, திலகராணி உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஆடி அமாவாசை, திருக்கல்யாண திருவிழா ஏற்பாடுகளை தக்கார் குமரன் சேதுபதி, கோவில் இணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் உள்பட கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
    ×