search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழைநீர் அகற்றம்"

    • தாசில்தாருக்கு பொதுமக்கள் பாராட்டு
    • வாகன ஓட்டிகள் கடும் அவதி

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த அம்மணாங்கோவில் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட புதுப்பேட்டை பகுதியில் நாட்டறம்பள்ளி திருப்பத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் பெய்த மழையின் காரணமாக சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது.

    இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமையில் வருவாய் துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்தனர்.

    இடையூறாக உள்ள மேட்டுப்பகுதியில் தண்ணீர் செல்வதற்கு வழிவகை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார்.

    அதன் பிறகு உடனடியாக திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் மேற்படி பகுதியில் தேங்கிய நீரை வெளியேற்றுவதற்கு தேவையான பணிகளை மேற்கொண்டனர். குளம் போல் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    கொட்டும் மழையில் நின்று தண்ணீர் அகற்றும் பணியில் தாசில்தார் ஈடுபட்டார்.

    இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து நாட்டறம்பள்ளி தாசில்தாரை பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • ராமேசுவரம் கோவிலில் புகுந்த மழைநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • ராமேசுவரத்தில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது.

    ராமேசுவரம்

    ராமேசுவரத்தில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. மழை நீண்ட நேரம் பெய்ததால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள்ளும் மழை நீர் புகுந்து விட்டது. குளம் போல் மழை நீர் தேங்கியதால் அதனை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவில் பணியாளர்கள் விரைந்து வந்து மழைநீரை வெளியேற்றினர். ராமேசுவரத்தில் அதிகளவு மழை பெய்யும் போது கோவிலுக்குள் தண்ணீர் குளம் போல் தேங்குவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய சிரமம் ஏற்படுகிறது. எனவே கோவிலுக்குள் மழைநீர் தேங்காமல் இருக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×