சாமி தரிசனம் செய்வதற்காக கோவில் பிரகாரத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
சாமி தரிசனம் செய்வதற்காக கோவில் பிரகாரத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அப்துல்கலாம் நினைவு மணிமண்ட பத்தையும் ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
Published on

ராமேசுவரம்

உலக பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். குறிப்பாக இங்குள்ள அக்னீதீர்த்த கடலில் பக்தர்கள் நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் செய்வது இந்துக்களின் முக்கிய கடமையாக கருதப்படுகிறது.

இதன் காரணமாக விசேஷ, விடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். அதன்படி விடுமுறை நாளான இன்று அதிகாலையில் அக்னிதீர்த்த கடலில் குவிந்த பக்தர்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். பின்னர் ராமநாதசுவாமி-பர்வத வர்தினி அம்பாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ராமேசுவரத்தில் கோவில், ரத வீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை ஆகிய பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ராமேசுவரத்திற்கு சிறப்பு பஸ்கள் விடப்பட்டிருந்தன. கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள் தனுஷ்கோடி சென்று உற்சாகமாக கடற்கரையில் பொழுதை கழித்தனர்.

மேலும் பேக்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவு மணிமண்ட பத்தையும் ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com