search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Crowd of devotees"

    • விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.
    • கோவில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். திருச்செந்தூர் கோவிலுக்கு அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வாரவிடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே காணப்படும். அதே போல இன்று வாரவிடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர்.

     இதற்காக பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. அதிகாலை முதலே பக்தர்கள் கடலில் புனித நீராடி இலவச பொது தரிசனம், ரூ.100 சிறப்பு கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் வழி என அனைத்திலும் வரிசையில் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    • பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • அலகு குத்தியும், கிரி வீதிகளில் நடனமாடியும் வந்தனர்.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். முக்கிய விழாவான தைப்பூச திருவிழா கடந்த 25-ந் தேதி நடைபெற்றது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பறவைக்காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்தும் அலகு குத்தியும், கிரி வீதிகளில் நடனமாடியும் வந்தனர்.

    தற்போது தைப்பூச திருவிழா முடிந்தபின்னரும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் இருந்து குறவர் இன மக்கள் சீர்வரிசை பொருட்களுடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் பாரம்பரிய நடனமாடி பல்வேறு வேடம் அணிந்து வந்தனர். இன்றும் விடுமுறை தினம் என்பதால் கிரி வீதி, அடிவாரம், யானைப்பாதை, படிப்பாதை, ரோப்கார் நிலையம், மின் இழுவை நிலையம் ஆகியவற்றில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மலைக்கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம்.
    • பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. கோவில் நடை திறக்கப்பட்டு சம்பந்த விநாயகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.

    உற்சவ மூர்த்திக்கு வெள்ளி கவசம் அணிவிக்க பட்டிருந்தது. அதிகாலை கோவிலில் நடை திறக்கும் போதே, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தரிசனத்துக்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

     தரிசன வரிசை ராஜகோபுரத்தையும் கடந்து மாட வீதி வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை நீண்டிருந்தது. நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பெண்கள், முதியவர்கள் கடும் அவதிப்பட்டனர். குறிப்பாக, சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள், மேல்மருவத்தூர் செல்லும் செவ்வாடை பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    கோவிலுக்குள் சிறப்பு மற்றும் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இன்று காலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பக்தர்கள் 6 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இன்று சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு நாள் முழுவதும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
    • பொது மற்றும் கட்டண தரிசனம் ரத்து

    வேங்கிக்கால்:

    அதிகாலை முதல் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் கிரிவலம் சென்ற பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். அதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்கள் என்பதால், கடந்த 3 நாட்களாக அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    அதன்படி, அதிகாலை கோவிலில் நடை திறக்கும்போதே, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தரிசனத்துக்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். தரிசன வரிசை ராஜகோபுரத்தையும் கடந்து மாட வீதி வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை நீண்டிருந்தது.

    நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பெண்கள், முதியவர்கள் கடும் அவதிப்பட்டனர். குறிப்பாக, சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், மேல்மருவத்தூர் செல்லும் செவ்வாடை பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    அதேபோல், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருந்து வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்ததால் திருவண்ணாமலை நகருக்குள் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கோவிலுக்குள் பொது மற்றும் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள் 6 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • அப்துல்கலாம் நினைவு மணிமண்ட பத்தையும் ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

    ராமேசுவரம்

    உலக பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். குறிப்பாக இங்குள்ள அக்னீதீர்த்த கடலில் பக்தர்கள் நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் செய்வது இந்துக்களின் முக்கிய கடமையாக கருதப்படுகிறது.

    இதன் காரணமாக விசேஷ, விடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். அதன்படி விடுமுறை நாளான இன்று அதிகாலையில் அக்னிதீர்த்த கடலில் குவிந்த பக்தர்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். பின்னர் ராமநாதசுவாமி-பர்வத வர்தினி அம்பாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    ராமேசுவரத்தில் கோவில், ரத வீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை ஆகிய பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ராமேசுவரத்திற்கு சிறப்பு பஸ்கள் விடப்பட்டிருந்தன. கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள் தனுஷ்கோடி சென்று உற்சாகமாக கடற்கரையில் பொழுதை கழித்தனர்.

    மேலும் பேக்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவு மணிமண்ட பத்தையும் ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

    • கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என பக்தி முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
    • போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கியது.

    வடவள்ளி,

    கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தைப்பூச தேரோட்ட திருவிழா நேற்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

    தைப்பூசத்தையொட்டி நேற்று காலை சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. அதனை தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற்து.

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர். இதுதவிர காவடி ஆட்டம், பால்குட ஊர்வலமும் நடந்தது.

    நேற்றே மருதலையில் தைப்பூச தேரோட்ட திருவிழா முடிந்தாலும், இன்று தைப்பூச தினம் என்பதால், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக மருதமலை முருகன் கோவிலுக்கு வந்தனர்.

    மருதமலை செல்லும் சாலையில் ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக நடந்து சென்றனர்.

    அதிகாலை 3 மணி முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. பாத யாத்தி ரையாக வந்த முருக பக்தர்கள், மற்றும் பொதுமக்கள் மலைப்படிக்கட்டுகள் வழியாக, மலைகோவிலுக்கு சென்று, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதுதவிர பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குட ஊர்வலமாகவும் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷம் விண்ணதிரச் செய்தது.

    நேற்றை விட இன்று அதிகமான கூட்டம் காணப்பட்டது. மலைப்ப டிக்கட்டுகளிலும், மலைப்பா தையிலும் பக்தர்களாகவே காணப்பட்டனர். மலையடி வாரப்பகுதியிலும் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. இதன்காரணமாக அங்குள்ள கடைகளிலும் வியாபாரம் களைகட்டி உள்ளது.

    அன்னூர் குமரன்குன்று சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை 10 மணிக்கு சுவாமி கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து அம்மன் அழைத்தலும், கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு ஆடை மற்றும் மாலை வழங்குதல், அபிஷேக பூஜையும் நடந்தது.

    இன்று காலை சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காலை 7.30 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளினார். மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் மடாதிபதிகள் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

    கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவிலில் இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 27-ந் தேதி கொடி

    யேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை வள்ளியம்மை திருக்கல்யாணமும், இரவில் யானை வாகன காட்சி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது.

    இன்று காலை சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. மாலை 4 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. நாளை பரி வேட்டை நிகழ்ச்சியும், நாளை மறுநாள் ஒயிலாட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம்
    • வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாமல் பக்தர்கள் அவதி

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கி நேற்று முன்தினம் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவடைந்தது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் கடந்த 6-ந் தேதி கோவிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் 11 நாட்கள் மலையின் உச்சியில் காட்சி அளிக்கும். அதன்படி நேற்று 6-வது நாளாக மலையில் உச்சியில் மகா தீபம் காட்சி அளித்தது.

    இந்த நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது வந்து சாமி தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலும் ஏராளமானோர் வருகை தந்தனர். இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வருகை தந்தனர். இதனால் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    பொது தரிசனம் மட்டுமின்றி கட்டண தரிசன வழியிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் பொது தரிசனம் வழியில் சுமார் 2.30 மணி நேரத்திற்கு மேலும், கட்டண தரிசன வழியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலும் பக்தர்களுக்கு காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் நேற்று கோவில் பரபரப்பான காணப்பட்டது.

    மேலும் கோவிலும் சாமி தரிசனம் செய்ய கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்த பக்தர்கள் தங்கள் நிறுத்த போதிய இடம் இல்லாமல் தவித்தனர். இதனால் கோவிலை சுற்றியுள்ள மாட வீதி, செங்கம் சாலை, சின்னக்கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் அவ்வபோது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் உடனுக்குடன் போக்குவரத்தை சீர் செய்தனர்.

    ×