search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pournami Krivalam"

    • பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர்.
    • அமர்வு தரிசனம், சிறப்புதரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதன்படி, மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 23-ந்தேதி மாலை 4.22 மணிக்கு தொடங்கி, 24-ந் தேதி மாலை 6.18 மணிக்கு நிறைவடைகிறது.

    எனவே, 23-ந்தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்தது என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித் துள்ளது. இதையொட்டி, கோவிலில் பக்தர்கள் விரை வாக தரிசனம் செய்வதற்கு வசதியாக, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    அமர்வு தரிசனம், சிறப்புதரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்கம் போல, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    • பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.
    • தை மாத பவுர்ணமி நாளை.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அங்குள்ள மகா தீபமலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.

    ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி தை மாத பவுர்ணமி நாளை (புதன்கிழமை) மாலை 10.06 மணிக்கு தொடங்கி மறுநாள் விழாயக்கிழமை மாலை 11.22 மணிக்கு நிறைவடைகிறது. இது கிரிவலம் செல்ல உகந்த நேரம். வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
    • பொது மற்றும் கட்டண தரிசனம் ரத்து

    வேங்கிக்கால்:

    அதிகாலை முதல் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் கிரிவலம் சென்ற பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். அதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்கள் என்பதால், கடந்த 3 நாட்களாக அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    அதன்படி, அதிகாலை கோவிலில் நடை திறக்கும்போதே, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தரிசனத்துக்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். தரிசன வரிசை ராஜகோபுரத்தையும் கடந்து மாட வீதி வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை நீண்டிருந்தது.

    நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பெண்கள், முதியவர்கள் கடும் அவதிப்பட்டனர். குறிப்பாக, சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், மேல்மருவத்தூர் செல்லும் செவ்வாடை பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    அதேபோல், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருந்து வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்ததால் திருவண்ணாமலை நகருக்குள் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கோவிலுக்குள் பொது மற்றும் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள் 6 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்க கோவில்கள் உள்ளன.
    • கார்த்திகை மாத சிவராத்திரியன்று குபேரன் அருணாசலேஸ்வரரை கிரிவலம் வருகிறார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலப்பாதை அமைந்து உள்ளது. 14 கிலோ மீட்டர் தொலைவு உடைய கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்க கோவில்கள் உள்ளன. இந்த பாதையில் பவுர்ணமி உள்ளிட்ட விஷேச நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் என்ற வழக்கம் ஏற்பட்டுள்ளது.

    கார்த்திகை மாதம் சிவராத்திரி நாளன்று குபேரன் பூமிக்கு வந்து அருணாசலேஸ்வரரை வணங்கி கிரிவலம் வருகிறார் என்று கூறப்படுகிறது. அதனால் அன்றைய தினத்தில் கிரிவலப்பாதையில் 7-வது லிங்கமாக உள்ள குபேர லிங்கத்தை தரிசனம் செய்து கிரிவலம் சென்றால் செல்வ செழிப்புடன் வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    அதன்படி கார்த்திகை மாதம் சிவராத்திரி நாளான நாளை (திங்கள்கிழமை) குபேர கிரிவலம் நடைபெற உள்ளது. குபேர கிரிவலம் செல்ல மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உகந்த நேரம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் உள்ளூர் மட்டுமின்றி பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குபேர லிங்க கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்க கோவிலில் பக்தர்கள் வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்யும் வகையில் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் கிரிவலப்பாதையில் வேங்கிக்கால், அந்தியந்தல், அடிஅண்ணாமலை, ஆணாய்பிறந்தான் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கொண்டு தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

    • பவுர்ணமி அன்று பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.
    • கார்த்திகை மாத பவுர்ணமி நாளை மறுநாள்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அங்குள்ள மகா தீபமலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.

    நாளை மறுநாள் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சுமார் 5 லட்சம் பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதன்படி கார்த்திகை மாத பவுர்ணமி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.58 மணிக்கு தொடங்கி மறுநாள் திங்கள் கிழமை மாலை 3.08 மணிக்கு நிறைவடைகிறது. இது கிரிவலம் செல்ல உகந்த நேரம்.

    மேலும் தீபத் திருவிழாவில் பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • மாலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்
    • அன்னாபி ஷேகத்தை பார்ப்ப வர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பது ஐதீகம்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.

    ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4.01 மணிக்கு தொடங்கியது. நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.27 மணிக்கு நிறைவடைகிறது.

    இன்று காலை பவுர்ணமி தொடங்கியதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.

    இதனால் கிரிவல பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

    பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அன்னாபிஷேகம் நடைபெ றுகிறது.

    அன்னாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை பக்தர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    இறைவனுக்கு எத்தனையோ அபிஷேகம் செய்யப்பட்டாலும் அன்னாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமை யாக மூடி ஆராத னைகள் செய்வதையே அன்னா பிஷேகம் என்கிறோம்.

    இந்த அன்னாபி ஷேகத்தை பார்ப்ப வர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பது ஐதீகம் என தெரிவித்தனர்.

    • கெங்கைவராக நதீஸ்வரர் கோவிலை பக்தர்கள் 11 முறை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.
    • கிரிவல ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஆலய குருக்கள் செய்துள்ளனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் திருக்காஞ்சியில் உள்ள கெங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி விழா நடத்தப்படுகிறது.

    ஆவணி மாத பவுர்ணமியான  புதன்கிழமை மாலை 6 மணிக்கு பவுர்ணமி கிரிவலம் தொடங்குகிறது. கெங்கைவராக நதீஸ்வரர் கோவிலை பக்தர்கள் 11 முறை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.

    இரவு 8.30 மணிக்கு கோவில் மூலவர் கோபுரத்தின் அருகே பவுர்ணமி தீபம் ஏற்றப்பட்டு பக்தர்கள் தரிசனம் நடக்கிறது. கிரிவல ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஆலய குருக்கள் செய்துள்ளனர்.

    • புதன்கிழமை காலை தொடங்கி வியாழக்கிழமை காலை நிறைவடைகிறது
    • கோவில் நிர்வாகம் அறிவிப்பு

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.

    இங்கு தினமும் உள்ளூர், வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.

    மேலும் திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றியுள்ள 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த நிலையில் ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பவுர்ணமி வருகிற 30 -ந் தேதி(புதன்கிழமை) காலை 10.45 மணிக்கு தொடங்கி மறுநாள் 31-ந் தேதி(வியாழக்கிழமை)காலை 8.19 மணிக்கு நிறைவடைகிறது.

    இதனால் புதன்கிழமை இரவு கிரிவலம் செல்ல உகந்தது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • 1600 சிறப்பு பஸ்கள்-4 நாட்கள் அமர்வு தரிசனம் ரத்து
    • 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த வருடம் சித்ரா பவுர்ணமி வருகிற 4-ந்தேதி இரவு தொடங்கி 5-ந்தேதி இரவு நிறைவடைகிறது.

    சுமார் 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீரமாக நடந்து வருகிறது. பக்தர்கள் தொடர்ந்து தரிசனம் செய்ய வசதியாக கட்டணமில்லா தரிசன சேவை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சிறப்பு வழி தரிசனம் செய்ய விரும்புவோர் நலன்கருதி, ரூ.50-க்கான கட்டண சேவை வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வழக்கம் போல் கிழக்கு ராஜ கோபுரத்தின் உள்ளே அனுமதிக்கப்படுவர், இந்த ஆண்டு முதல் கிழக்கு ராஜ கோபுரத்தில் வலது உட்புறம் வழியே அனுமதிக்கப்பட்டு, 1000 கால் மண்டபத்தில் பக்தர்களை அமர வைத்து ஒருவர் பின் ஒருவராக வள்ளால மகாராஜா கோபுரத்தின் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

    கிரிவலப்பாதையில் பக்தர்களின் வசதிக்காக 3 இடங்களில் இளைப்பாறும் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இளைப்பாறும் கூடங்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் கட்டணமில்லாத சேவையாக பயன்படுத்தும் வகையில் தனித்தனியே குளியல் அறைகள் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு கருதி பக்தர்கள் வரிசையில் வந்து தரிசனம் செய்யும் வகையில், திருமஞ்சன கோபுரம். பே கோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் ஆகிய இடங்களில் மேற்கூரையுடன் கூடிய நகரும் இரும்பு தடுப்பான்கள் மூலம் தகுந்த கியூலைன் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    14 கி.மீ தூரம் உள்ள கிரிவலப்பாதை சுற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கோவிலின் உள்ளே பக்தர்கள் சென்று தரிசனம் செய்துவிட்டு வருவதற்காக வசதியாக வரிசையை முறை படுத்த வேண்டும்.

    சித்ரா பவுர்ணமி அன்று கிரிவல பாதையில் தீயணைப்பு துறையினர் தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். கிரிவலம் வரும் பக்தர்கள் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழியை தவிர்த்து துணிப்பையை எடுத்து வர வேண்டும்.

    பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, சுற்றுச்சூழலை காத்திட முழு ஒத்துழைப்பு வழங்கி பிளாஸ்டிக் மாசில்லா திருவண்ணாமலை மாவட்டத்தை உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கோவிலில் சித்ரா பவுர்ணமி தினத்தன்று 4 நாட்கள் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகின்றன.

    தமிழகம் முழுவதும் இருந்து 1600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    பக்தர்களின் பாதுகாப்புக்காக 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உள்ளனர்.

    • திருப்பரங்குன்றம் பங்குனி உத்திர விழாவில் பவுர்ணமி கிரிவலமாக வந்து திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
    • நாளை சூரசம்காரம் நடக்கிறது.



    9-ந் தேதி நடைபெறும் தேரோட்டத்தையொட்டி தயார் நிலையில் உள்ள தேர்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் பங்குனி பெரு விழா பிரசித்தி பெற்றதாகும். இந்த விழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை யொட்டி சுப்ரமணிய சுவாமி-தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க பல்லக்கிலும், மாலையில், தங்க குதிரை, வெள்ளி பூதம், அன்னம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    பங்குனி பெருவிழாவின் 9-ம் நாளான இன்று பங்குனி உத்திர திருவிழா நடந்தது. பவுர்ணமி தினமான இன்று ஏராளமான பக்தர்கள் திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள கிரிவலப்பாைதயை வலம் வந்து வழிபாடு செய்தனர்.

    சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் இரவு தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். நாளை (6-ந் தேதி) சொக்கநாதர் கோவில் வாசல் முன்பு சூரசம்கார லீலை நடைபெறுகிறது.

    இதில் சுப்பிரமணிய சுவாமி, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். வருகிற 7-ந்தேதி சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். 8-ந்தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் முன்னிலையில் சுப்பிரமணியசுவாமி- தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 9-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை எழுந்தருள பெரிய தேரோட்டம் நடைபெறும். தேரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க கிரிவலப் பாதைகளில் சுற்றி வரும்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • இன்று இரவு 10.41 மணிக்கு தொடங்கி, மறுநாள் நள்ளிரவு 12.48 மணி வரை உள்ளது
    • அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உள்ள பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பவுர்ணமி நாளில் கிரிவலம் சென்றால் கூடுதல் சிறப்பு என்பதால், அன்றைய நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அதன்படி, தை மாத பவுர்ணமியான இன்று (4-ம் தேதி) இரவு 10.41 மணிக்கு தொடங்கி, மறுநாள் (5-ம் தேதி) நள்ளிரவு 12.48 மணி வரை பவுர்ணமி உள்ளது.

    இந்த நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவிலில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பவுர்ணமி கிரி வலத்தை யொட்டி, வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

    • அதிகாலை 2.26 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு நிறைவடைகிறது
    • கோவில் நிர்வாகத்தினர் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.

    கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த நிலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.26 மணிக்கு தொடங்கி மறுநாள் 7-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 4.20 மணிக்கு நிறைவடைகின்றது.

    இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

    ×