search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சித்ரா பவுர்ணமி கிரிவல ஏற்பாடுகள் தீவிரம்
    X

    சித்ரா பவுர்ணமி கிரிவல ஏற்பாடுகள் தீவிரம்

    • 1600 சிறப்பு பஸ்கள்-4 நாட்கள் அமர்வு தரிசனம் ரத்து
    • 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த வருடம் சித்ரா பவுர்ணமி வருகிற 4-ந்தேதி இரவு தொடங்கி 5-ந்தேதி இரவு நிறைவடைகிறது.

    சுமார் 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீரமாக நடந்து வருகிறது. பக்தர்கள் தொடர்ந்து தரிசனம் செய்ய வசதியாக கட்டணமில்லா தரிசன சேவை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சிறப்பு வழி தரிசனம் செய்ய விரும்புவோர் நலன்கருதி, ரூ.50-க்கான கட்டண சேவை வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வழக்கம் போல் கிழக்கு ராஜ கோபுரத்தின் உள்ளே அனுமதிக்கப்படுவர், இந்த ஆண்டு முதல் கிழக்கு ராஜ கோபுரத்தில் வலது உட்புறம் வழியே அனுமதிக்கப்பட்டு, 1000 கால் மண்டபத்தில் பக்தர்களை அமர வைத்து ஒருவர் பின் ஒருவராக வள்ளால மகாராஜா கோபுரத்தின் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

    கிரிவலப்பாதையில் பக்தர்களின் வசதிக்காக 3 இடங்களில் இளைப்பாறும் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இளைப்பாறும் கூடங்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் கட்டணமில்லாத சேவையாக பயன்படுத்தும் வகையில் தனித்தனியே குளியல் அறைகள் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு கருதி பக்தர்கள் வரிசையில் வந்து தரிசனம் செய்யும் வகையில், திருமஞ்சன கோபுரம். பே கோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் ஆகிய இடங்களில் மேற்கூரையுடன் கூடிய நகரும் இரும்பு தடுப்பான்கள் மூலம் தகுந்த கியூலைன் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    14 கி.மீ தூரம் உள்ள கிரிவலப்பாதை சுற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கோவிலின் உள்ளே பக்தர்கள் சென்று தரிசனம் செய்துவிட்டு வருவதற்காக வசதியாக வரிசையை முறை படுத்த வேண்டும்.

    சித்ரா பவுர்ணமி அன்று கிரிவல பாதையில் தீயணைப்பு துறையினர் தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். கிரிவலம் வரும் பக்தர்கள் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழியை தவிர்த்து துணிப்பையை எடுத்து வர வேண்டும்.

    பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, சுற்றுச்சூழலை காத்திட முழு ஒத்துழைப்பு வழங்கி பிளாஸ்டிக் மாசில்லா திருவண்ணாமலை மாவட்டத்தை உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கோவிலில் சித்ரா பவுர்ணமி தினத்தன்று 4 நாட்கள் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகின்றன.

    தமிழகம் முழுவதும் இருந்து 1600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    பக்தர்களின் பாதுகாப்புக்காக 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உள்ளனர்.

    Next Story
    ×