search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்
    X

    திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

    • இன்று இரவு 10.41 மணிக்கு தொடங்கி, மறுநாள் நள்ளிரவு 12.48 மணி வரை உள்ளது
    • அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உள்ள பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பவுர்ணமி நாளில் கிரிவலம் சென்றால் கூடுதல் சிறப்பு என்பதால், அன்றைய நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அதன்படி, தை மாத பவுர்ணமியான இன்று (4-ம் தேதி) இரவு 10.41 மணிக்கு தொடங்கி, மறுநாள் (5-ம் தேதி) நள்ளிரவு 12.48 மணி வரை பவுர்ணமி உள்ளது.

    இந்த நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவிலில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பவுர்ணமி கிரி வலத்தை யொட்டி, வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

    Next Story
    ×