search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rajasthan assembly election"

    • தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க. தீவிரமாக களம் இறங்கியுள்ளன
    • காங்கிரசார் ஏதோ மன வியாதியில் உள்ளனர் என பிரதமர் மோடி விமர்சித்தார்

    ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் கெலாட் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நவம்பர் 25 அன்று அம்மாநில சட்டசபையில் உள்ள 200 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.

    இத்தேர்தலில் வெற்றி பெற தேசிய கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.க.வும் தீவிரமாக களமிறங்கி உள்ளன.

    முன்னதாக, மத்திய பிரதேசத்தில் ஒரு பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி, மக்கள் அனைவரும் சீனாவில் தயாரிக்கப்படும் மொபைல்களையே பயன்படுத்துகின்றனர் என்றும் இதனை மாற்றி மத்திய பிரதேசத்திலேயே மொபைல் தயாரிப்பை ஊக்குவித்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிப்பதையே காங்கிரஸ் விரும்புகிறது என்றும் அறிவித்திருந்தார்.

    நேற்று இது குறித்து தனது பிரசாரத்தில் பிரதமர் மோடி பதிலளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    ஒரு காங்கிரஸ் தலைவர் (ராகுல் காந்தி) சீனாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை மட்டுமே மக்கள் வைத்துள்ளதாக கூறுகிறார். அட அறிவில்லாதவர்களின் தலைவரே, எந்த உலகில் இருக்கிறீர்கள்? இந்தியாவின் வளர்ச்சியை மறைக்கும் அளவு எந்த வெளிநாட்டு கண்ணாடியை அணிந்து கொண்டு நிலைமையை பார்க்கிறீர்கள்? இந்தியாவின் சாதனைகளை புறக்கணிக்கும் அளவிற்கு ஏதோ மன வியாதியில் காங்கிரசார் உள்ளனர்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மறைமுகமாக "அறிவில்லாதவர்களின் தலைவன்" என விமர்சித்திருப்பதற்கு ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் கருத்து தெரிவித்தார்.

    அவர் இது குறித்து தெரிவித்ததாவது:

    "இது வருந்தத்தக்க செயல். பிரதமர் பதவிக்கு என்று ஒரு மரியாதை (dignity) உள்ளது. பிரதமரை அதிகம் விமர்சிக்கும் போது, அப்பதவிக்கான மரியாதை குறைந்து விடும். ஆனால், அத்தகைய ஒரு மரியாதைக்குரிய பதவியை வகிக்கும் ஒருவரே (மோடி) இவ்வாறு பேச தொடங்கினால், அவரிடமிருந்து வேறு எதனை எதிர்பார்க்க முடியும்?"

    இவ்வாறு அசோக் கெலாட் கருத்து தெரிவித்தார்.

    சில தினங்களுக்கு முன் மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சியான சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) தலைவர் சஞ்சய் ராவத், "அடுத்த வருட பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமர் ஆக போவது உறுதி என்பதால் மோடி ராகுலை கண்டு அஞ்சுகிறார்" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியை அகற்ற பா.ஜனதா தீவிரம்.
    • பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரேநாளில் ராஜஸ்தானில் பிரசாரம்.

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. மிசோரமில் தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. சத்தீஸ்கரில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 17-ந்தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது. ராஜஸ்தானில் வருகிற 25-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலை கணக்கில் வைத்து பிரதமர் மோடி தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இன்று சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பிரசாரம் செய்தார்.

    இந்த நிலையில் வருகிற 15-ந்தேதி மற்றும் 18-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் ராஜஸ்தானில் பிரசாரம் செய்ய இருக்கிறார். 15-ந்தேதி பார்மெர் மாவட்டத்தில் உள்ள பெய்டூ என்ற இடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 18-ந்தேதி பாரத்புர் மற்றும் நகாயுர் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேச இருக்கிறார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, 16-ந்தேதி டோங்க் மாவட்டத்தில் உள்ள தியோலியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், ராஜ்சாமண்ட் மாவட்டத்தில் உள்ள கும்பல்கார்ஹக், பிம் ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.

    நவம்பர் 18-ந்தேதி அஜ்மிர் மாவட்டத்தில் நடைபெறும் மூன்று பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். அதன்பின் நடைபெறும் ரோடுஷோவிலும் கலந்து கொள்கிறார்.

    இருவரையும் தவிர்த்து ஜெய்ப்பூரில் நாளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கட்சி தொண்டர்களை சந்தித்து பேச இருக்கிறார். அத்துடன் பத்திரிகையாளர்களை சந்திக்கவும் இருக்கிறார்.

    • ராஜஸ்தானில் ஐந்து ஆண்டுகளை வீணடித்து விட்டது.
    • தலித், ஏழை மக்கள் பாதுகாப்பான நிலையில் இல்லை.

    இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து, அனைத்து கட்சியினரும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில், பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேச மாநிலத்தை தொடர்ந்து இன்று (நவம்பர் 9) மாலை ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய அவர், "ராஜஸ்தானில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் அரசு தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. முதலமைச்சர் அசோக் கெலோட் தலைமையிலான அரசு ராஜஸ்தான் மாநிலத்தை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்கள் பட்டியலின் முதலிடத்திற்கு கொண்டுவந்துள்ளது."

    "ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தலித் மற்றும் ஏழை மக்கள் பாதுகாப்பான நிலையில் இல்லை. முதல்வர் இருக்கையில் யாரை அமர வைப்பது என்பதை முடிவு செய்வதிலேயே காங்கிரஸ் அரசாங்கம், ராஜஸ்தானில் ஐந்து ஆண்டுகளை வீணடித்து விட்டது."

    "நவம்பர் 25-ம் தேதி நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால் ராஜஸ்தானில் உள்ள குண்டர்கள் ராஜ்ஜியத்தை அடியோடு ஒழிப்போம்," என்று தெரிவித்தார்.

    • ராஜஸ்தானில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ்- பா.ஜனதா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

    200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது ஆட்சி செய்து வரும் காங்கிரஸ், ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பல்வேறு நலத்திட்டங்களை செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளது. அதேவேளையில், பா.ஜனதா ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது.

    இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் கஜானா திவாலாகுவதற்கான உத்தரவாதத்தை காங்கிரஸ் கொடுத்துள்ளதாக பா.ஜனதாவின் செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பூனவாலா கூறியிருப்பதாவது:-

    இமாச்சல பிரதேசத்தில் 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என காங்கிரஸ் வாக்குறுதி கொடுத்தது. பிரியங்கா காந்தி பணவீக்கத்தை கட்டுப்படுத்த மின்சார கட்டணம் குறையும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால், அவர்கள் ஆட்சிக்கு வந்தபிறகு டீசல் விலை 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் வளர்ச்சி திட்டங்களுக்கு பணம் இல்லை என காங்கிரஸ் சொல்கிறது.

    ராஜஸ்தான் மாநிலத்தை திவலாக்குவதற்கான உத்தரவாதத்தை காங்கிரஸ் கொடுத்துள்ளது. ராஜஸ்தான் கருவூலம் காலியாக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம், பென்சன் வழங்க மாநில அரசால் முடியவில்லை.

    அதேவேளையில் பா.ஜனதா வளர்ச்சி, நல்லாட்சி, கட்டமைப்பு, சட்டம்-ஒழுங்கு முன்னேற்றம் ஆகியவை குறித்து உத்தரவாதம் அளித்துள்ளது.

    இவ்வாறு பூனவாலா தெரிவித்துள்ளார்.

    • பா.ஜனதா முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தாமல் தேர்தலை எதிர்கொள்கிறது.
    • எங்களது முகம் பிரதமர் மோடி, தாமரை என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.

    200 தொகுதிளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு அடைகிறது. இதனால் பா.ஜனதா கடைசி கட்டமாக 18 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. கிரிராஜ் சிங் நேற்று பா.ஜனதாவில் இணைந்தார். உடனே அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    பொதுவாக பா.ஜனதா கட்சி மாநிலத் தேர்தல்களில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பதில்லை. இந்த நடைமுறையைத்தான் ராஜஸ்தானிலும் கடைபிடிக்கிறது. ஏற்கனவே முதல்வராக இருந்த வசுந்தரா ராஜே சந்தியா ஓரங்கப்படுவதாக தெரிகிறது. இதனால் வேறு நபர்தான் முதல்வராக வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில் முதல்வர் வேட்பாளர் குறித்து மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் கூறுகையில் ''தற்போது பிரதமர் மோடி மற்றும் தாமரைதான் எங்கள் முகம் (தேர்தலில் முன்னிறுத்துவது). பின்னர் எம்.எல்.ஏ.-க்கள், கட்சியின் பாராளுமன்ற குழுவில் இடம் பிடித்துள்ளவர்கள் முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வார்கள். முதலமைச்சர் தேர்வு செய்யப்படும் நபர் யாராக இருந்தாலும் அவருடைய பதிக்காலம் முழுமை அடைவதை உறுதி செய்வோம்'' என்றார்.

    • 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல்
    • நேற்று கடைசி கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜனதா

    200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை தோற்கடிக்கும் வகையில் பா.ஜனதா வியூகம் அமைத்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறது.

    இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஆனால், நேற்று மதியம் வரை 18 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயரை பா.ஜனதா அறிவிக்காமல் இருந்தது. இந்த நிலையில், நேற்று மாலை கடைசி கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    உதைப்பூரில் உள்ள மாவ்லி தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ.-வுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் கோபால் சர்மா, தொழில் அதிபர் ரவி நய்யார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியது.

    கடந்த 2-ந்தேதி 3-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் முன்னாள் மந்திரி தவ் சிங் பாதியின் மறுமகள் பூனம் கன்வார் பாதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது அவருக்குப் பதிலாக அவரது, மகன் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.-வாக இருக்கும்  கிரிராஜ் மலிங்கா பா.ஜனதா கட்சிக்கு தாவியுள்ளார். நேற்று கட்சியில் இணைந்த நிலையில், பா.ஜனதா அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது.

    • ராஜஸ்தானில் நவம்பர் 25-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

    ஜெய்ப்பூர்:

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது.

    அதன்படி, ராஜஸ்தானில் நவம்பர் 25-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது.

    இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது.

    அதன்படி, ராஜஸ்தான் தேர்தலுக்கு முதல் கட்டமாக 41 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பா.ஜ.க. அறிவித்துள்ளது. இதில் 7 எம்.பி.க்கள் பெயரும் இடம்பெற்றது.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 89 பேர் அடங்கிய 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.

    அதில் முன்னாள் முதல் மந்திரி வசுந்தர ராஜே ஜலர்பதான் தொகுதியிலும், சதீஷ் புனியா ஆம்பர் தொகுதியிலும், ராஜேந்திர ரதோட் தாராநகர் தொகுதியிலும், ஜோதி மிர்தா நகவ்ர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

    • டேனிஷ் அலியை மத ரீதியாக ரமேஷ் பிதுரி தாக்கி பேசினார்
    • டோங்க் மாவட்டத்தில் 30 சதவீதம் இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர்

    இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18 தொடங்கி 21 வரை நடைபெற்றது.

    இத்தொடரில் 21 அன்று, பா.ஜ.க.வை சேர்ந்த தெற்கு டெல்லி பாராளுமன்ற உறுப்பினரான ரமேஷ் பிதுரி (62) அவையில் நடந்த விவாதத்தின் போது பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த அம்ரோகா தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான கன்வர் டேனிஷ் அலி (48) என்பவரை மத ரீதியாக தாக்கி பேசினார். அனைத்து கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ரமேஷ் பிதுரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    ஆளும் பா.ஜ.க., ரமேஷிடம் இந்த நிகழ்ச்சி குறித்து விளக்கம் கோரும் கடிதம் அனுப்பியிருந்தது; ஆனால், கட்சியை விட்டு நீக்கவில்லை.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால், அங்குள்ள டோங்க் மாவட்டத்திற்கு பா.ஜ.க. சார்பில் தேர்தல் பொறுப்பாளராக ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து எதிர்கட்சியினர் கடும் விமர்சனம் வைத்துள்ளனர்.

    சமாஜ்வாதி கட்சியின் ஆதரவில் மாநிலங்களவை உறுப்பினரான மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யுமான கபில் சிபல், தனது எக்ஸ் கணக்கில் தெரிவித்திருப்பதாவது:

    பா.ஜ.க. வெறுப்பு பேச்சிற்கு வெகுமானம் அளிக்கிறது. ரமேஷ், வெளியில் கூற முடியாத வார்த்தைகளால், டேனிஷ் அலியை மத ரீதியாக மக்களவையிலேயே தாக்கி பேசினார். அவருக்கு தேர்தல் பொறுப்பாளர் பதவி வழங்கியுள்ளார்கள். டோங்க் பகுதியில் இஸ்லாமிய மக்கள் தொகை சுமார் 30 சதவீதமாகும். இது அரசியல் ஆதாயத்திற்காக வெறுப்புணர்ச்சியை தூண்டும் செயலைத்தான் குறிக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொயித்ரா, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரும் ரமேஷின் நியமனத்தை விமர்சித்துள்ளனர்.

    காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்ற 3 மாநிலத்திலும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதை ராகுல்காந்தி பாராட்டியுள்ளார். #RahulGandhi #Congress
    ஜெய்ப்பூர்:

    5 மாநில சட்டசபை தேர்தல்களில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகியவற்றில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

    15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்த மத்திய பிரதேசத்திலும், சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் அரசு விவசாய கடன்களை ரத்து செய்தன.

    மத்தியபிரதேசத்தில் விவசாயிகளுக்கு தலா ரூ.2 லட்சம் வரையிலான கடனையும், சத்தீஸ்கரில் ரூ.6,100 கோடி வரையிலான விவசாய கடனையும் ரத்து செய்து அம்மாநில புதிய முதல்-மந்திரிகள் கமல்நாத், பூபேஷ் பாதேல் ஆகியோர் பதவி ஏற்றவுடன் உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் ராஜஸ்தானிலும் விவசாய கடனை தள்ளுபடி செய்து காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.

    ராஜஸ்தானில் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக விவசாய கடன் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது.

    அதன்படி பதவியேற்ற 2 தினத்தில் ரூ.18 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்து அம்மாநில புதிய முதல்-மந்திரியான அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.

    விவசாயிகள் வாங்கிய ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன் ரத்தாகி உள்ளது. இதனால் அரசுக்கு ரூ.18 ஆயிரம் கோடி கூடுதல் செலவாகும்.


    காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்ற 3 மாநிலத்திலும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்திஸ்கர் மாநிலங்களில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது சிறப்பானது. நாங்கள் 10 நாட்கள் கேட்டோம். ஆனால் 2 நாட்களிலேயே செய்து முடித்து விட்டோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    காங்கிரசுக்கு போட்டியாக அசாமில் ரூ.600 கோடி விவசாய கடனும், குஜராத்தில் ரூ.625 கோடி மின் கட்டணமும் தள்ளுபடி செய்து அம்மாநில பா.ஜனதா அரசுகள் உத்தரவிட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. #RahulGandhi #Congress
    ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநில முதல்-மந்திரிகளை தேர்வு செய்வதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். #RahulGandhi #congress
    புதுடெல்லி:

    5 மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜனதா வசம் இருந்த ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது.

    இதையடுத்து 3 மாநிலங்களிலும் முதல்-மந்திரிகளை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளது.

    ராஜஸ்தானில் முதல்- மந்திரி பதவிக்கு முன்னாள் முதல்-மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவரும் ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான சச்சின் பைலட் ஆகிய இருவரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் மத்திய பிரதேசத்தில் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கமல் நாத், மூத்த தலைவர்கள் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, திக்விஜய்சிங் ஆகியோர் பெயர்கள் அடிபடுகிறது. திக்விஜய்சிங், கமல்நாத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். இதனால் கமல்நாத் - ஜோதிர் ஆதித்ய சிந்தியா இடையே போட்டி நிலவுகிறது.

    சத்தீஷ்கர் மாநிலத்தில் பிரபலமான காங்கிரஸ் தலைவர்கள் யாரும் இல்லாததால் எம்.பி.யான தாம்ரத்வாஜ் தேர்தலில் களம் இறக்கப்பட்டார். அவருடன் மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ்பாகேல், மூத்த தலைவர் டி.எஸ்.சிங்தேவ் பெயர்களும் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் உள்ளது.

    நேற்று 3 மாநிலங்களிலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அந்தந்த மாநில தலைநகரங்களில் நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியால் நியமிக்கப்பட்ட மேலிட பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் முதல்- மந்திரியை ஒருமனதாக தேர்வு செய்ய முடியாததால் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்யும் அதிகாரம் ராகுல் காந்திக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதனால் ராகுல்காந்தி இதில் முடிவு எடுத்து முதல்- மந்திரியை அறிவிப்பார். இந்த வி‌ஷயத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கருத்து ஒருபுறம் இருக்க, மாநில காங்கிரஸ் தொண்டர்கள் கருத்தை கேட்க ராகுல்காந்தி முடிவு செய்துள்ளார்.


    இந்த 3 மாநிலங்களில் 7 லட்சம் காங்கிரஸ் தொண்டர்கள் உள்ளனர். அவர்களிடம் ராகுல்காந்தி ‘செல்போன் ஆப்’ மூலம் கருத்து கேட்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கனவே ‘சக்தி’ என்ற பெயரில் ‘செல்போன் ஆப்’ செயல்படுகிறது.

    இதன் மூலம் நாடு முழுவதும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறார்கள். இதை ராகுல்காந்தி 3 மாநில முதல்- மந்திரியை தேர்வு செய்வதற்கு பயன்படுத்துகிறார்.

    இந்த ‘ஆப்’க்குள் சென்றதும் முதலில் ராகுல்காந்தி உரை இடம் பெறுகிறது. அவர் முதல்-மந்திரியாக யாரை தேர்வு செய்யலாம் என்று தொண்டர்களிடம் கருத்து கூறுமாறு வேண்டுகோள் விடுத்து பேசுகிறார்.

    யாரை தொண்டர்கள் விரும்புகிறார்களோ அவரது பெயரை ‘டிக்’ செய்தால் போதும். இதில் மெஜாரிட்டி அடிப்படையில் முதல்- மந்திரி தேர்வு செய்யப்படுவார். முடிவை ராகுல் காந்தி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். இன்று மாலைக்குள் அறிவிப்பு வெளியாகி விரைவில் முதல்-மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என்று தெரிகிறது.

    இதற்கிடையே மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மாநிலங்களில் முதல்- மந்திரி தேர்வில் உடன்பாடு ஏற்பட்டதாகவும், ராஜஸ்தானில் மட்டும் போட்டி நிலவுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    அதன்படி மத்தியப்பிரதேசத்தில் கமல்நாத் முதல்- மந்திரியாக தேர்வு செய்யப்படுகிறார். ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு துணை முதல்- மந்திரி பதவி வழங்கப்படலாம் என்று முடிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

    ராஜஸ்தானில் முதல்- மந்திரியை தேர்வு செய்வது தொடர்பாக நேற்று ஜெய்ப்பூரில் எம்.எல்.ஏ.க்களுடன் 6 மணி நேரம் ஆலோசனை நீடித்தது. இதில் இறுதி முடிவு எட்டப்படாததால் அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோரை டெல்லி வருமாறு மேலிடம் அழைத்தது. அதை ஏற்று இருவரும் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

    இருவரும் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசியதாகவும் இதில் முடிவு எட்டப்பட்டதாகவும் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தெரிவித்தனர். #RahulGandhi #congress
    மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. 5 மாநிலங்களிலும் நாளை காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. #AssemblyElections
    புதுடெல்லி:

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்தது.

    முதலில் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு கடந்த மாதம் 12, 20-ந்தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. சராசரியாக 74 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    மத்திய பிரதேசம், மிசோரம் மாநிலங்களுக்கு கடந்த மாதம் 28-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. மத்திய பிரதேச மாநிலத்தில் 75 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மிசோரம் மாநிலத்தில் 80 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    இதைத் தொடர்ந்து ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களுக்கு கடந்த 7-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. ராஜஸ்தானில் 74 சதவீத வாக்குகள் பதிவானது. தெலுங்கானாவில் 73.2 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

    5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. 5 மாநிலங்களிலும் நாளை காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது.

    ஓட்டு எண்ணிக்கையை சுமூகமாக நடத்துவதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 2 லட்சம் ஊழியர்கள் ஓட்டு எண்ணும் பணி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


    சத்தீஸ்கர் மாநிலத்தில் 27 மாவட்டங்களிலும் ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் 306 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. தெலுங்கானாவில் 43 இடங்களில் ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மிசோரம் மாநிலத்தில் 13 மையங்களில் உருவாக்கப்பட்டுள்ள 40 மையங்களில் வாக்குகள் எண்ணப்படும். 5 மாநிலங்களிலும் ஓட்டு எண்ணிக்கையை முழுமையாக வீடியோவில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். 8.30 மணியில் இருந்து மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். 10 மணிக்கு ஓரளவு முன்னிலை நிலவரம் தெரிந்து விடும். ஒவ்வொரு சுற்று ஓட்டு எண்ணிக்கையையும் உடனுக்குடன் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    11 மணி அளவில் 5 மாநிலங்களிலும் ஆட்சியை பிடிப்பது யார் என்பது உறுதியாகி விடும். 5 மாநில தேர்தல் பாராளுமன்ற தேர்தலுக்கான அரை இறுதி போட்டி போல கருதப்படுவதால் தேர்தல் முடிவுகள் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

    5 மாநில தேர்தலுக்கு முன்பும், ஓட்டுப்பதிவுக்கு பிறகும் பல்வேறு கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஓட்டுப்பதிவுக்கு முந்தைய கருத்து ஒரு மாதிரியாகவும் பிந்தைய கருத்து கணிப்பு வேறு மாதிரியாகவும் அமைந்துள்ளன.

    என்றாலும் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ்தான் ஆட்சியை பிடிக்கும் என்று அனைத்து கருத்து கணிப்புகளும் ஒருமித்த குரலில் கூறி உள்ளன. மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கு இடையே கடும் இழுபறி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கானாவில் சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறி உள்ளன.

    மிசோரம் மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சியான தேசிய முன்னணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்து கணிப்புகளில் கூறப்பட்டு உள்ளது.

    5 மாநில தேர்தல் நடந்தாலும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் 3 மாநில தேர்தல் முடிவுகள் தான் மிக ஆவலை ஏற்படுத்தி உள்ளன. இந்த 3 மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.

    இந்த 3 மாநிலங்களிலும் சுமார் 65 பாராளுமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த 3 மாநிலங்களிலும் பா.ஜ.க. - காங்கிரசுக்கு கிடைக்கும் வாக்கு சதவீதம் பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். #AssemblyElections
    ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரம் சாலையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #RajasthanElections #BallotUnit
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் ஒரு தொகுதி தவிர மீதமுள்ள 199 தொகுதிகளிலும் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் 72.7 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



    வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

    இந்நிலையில், பரன் மாவட்டம் கிஷன்கஞ்ச் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஷகாபாத் பகுதியில் ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சாலையில் கேட்பாரற்றுக் கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு சென்று அந்த வாக்கு எந்திரத்தை கைப்பற்றி, பாதுகாப்பாக அறையில் வைத்துள்ளனர்.

    வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லும்போது அஜாக்கிரதையாக இந்த எந்திரத்தை தவறவிட்டிருக்கலாம் என தெரிகிறது. அலட்சியமாக செயல்பட்டதாக 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். #RajasthanElections #BallotUnit
    ×