search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajapaksa"

    ராஜபக்சேவுக்கு எதிரான 2-வது நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியை அதிபர் சிறிசேனா ஏற்கவில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது. #SriLankanparliament #noconfidencemotion #SriLankagovernment

    கொழும்பு:

    இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரணில் விக்ரம சிங்கேவுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டது. இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டார். புதிய பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டார்.

    ஆனால் அவரால் பாராளுமன்றத்தில் பெரும் பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதையடுத்து பாராளுமன்றம் கலைக்கப் படுவதாகவும், ஜனவரி மாதம் தேர்தல் நடத்தப்படும் என்றும் அதிபர் சிறிசேனா அறிவித்தார். ஆனால் அதற்கு இலங்கை சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.

    இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி ராஜபக்சே அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் கரு.ஜெயசூரியா அறிவித்து நிறைவேற்றினார். அதை ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் ஏற்காமல் ரகளையில் ஈடுபட்டனர். சபாநாயகரை முற்றுகையிட்டு கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

    ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை அதிபர் சிறிசேனாவும் ஏற்கவில்லை. இதனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவா? அல்லது ராஜபக்சேவா? என்ற குழப்பம் நீடித்தது.

     


    இதற்கிடையே பாராளுமன்றத்தில் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அதிபர் சிறிசேனா சம்மதித்தார். இதையடுத்து நேற்று பாராளுமன்றம் கூடியது. அப்போதும் ராஜபக்சேவின் ஆதரவு எம்.பி.க்கள் கோ‌ஷங்களை எழுப்பி ரகளையில் ஈடுபட்டனர். மிளகாய் பொடி தூவியும், நாற்காலிகளை வீசியும் ரகளையில் ஈடுபட்டனர்.

    ஆனாலும் கடும் அமளிக்கு இடையே சபையை நடத்திய சபாநாயகர் கரு.ஜெயசூரியா, ராஜபக்சே அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை குரல் வாக்கெடுப்பாக நடத்தினார். இதில் 2-வது நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

    இதற்கிடையே 2-வது நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியையும் அதிபர் சிறிசேனா ஏற்கவில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதுதொடர்பாக சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியை சேர்ந்த லட்சுமண்யபா அபய் வர்தனே கூறும்போது, “அதிபர் சிறிசேனா 2-வது நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்கவில்லை. அதை அவர் நிராகரித்து உள்ளார்” என்றார். ஆனால் இது தொடர்பாக சிறிசேனா அலுவலகத்தில் இருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

    ரணில் விக்ரமசிங்கே கூறும்போது, “எங்களிடம் மெஜாரிட்டி உள்ளது. எங்களது அரசை நாங்கள் அமைப்போம். சட்டப்படி நாங்கள் செயல்படுவோம்” என்றார்.

    இதனால் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. #SriLankanparliament #noconfidencemotion #SriLankagovernment

    இலங்கை பாராளுமன்றத்தில் ராஜபக்சே அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார். #SriLankaParliament #RajapaksaWalkout
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை அப்பதவியில் நியமித்ததில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. அத்துடன் பாராளுமன்றத்தையும் முடக்கிய அவர், பின்னர் பல்வேறு தரப்பினரின் வலியுறுத்தலை தொடர்ந்து நவம்பர் 14-ம்தேதி பாராளுமன்றத்தை கூட்டுவதாக அறிவித்தார்.  

    இதற்கிடையே, பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை. எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந் தேதி பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. அத்துடன், அதிபரின் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்தது.



    இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி இலங்கை பாராளுமன்றம் இன்று காலை கூடியது. அவை நடவடிக்கை தொடங்கியதும், அதிபரால் நியமிக்கப்பட்ட ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த ராஜபக்சே வெளிநடப்பு செய்தார்.

    அதன்பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக பெரும்பாலான எம்பிக்கள் வாக்களித்தனர். இதையடுத்து ராஜபக்சே அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்றும் ராஜபக்சே அரசுக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றதாகவும் சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார். #SriLankaParliament #RajapaksaWalkout
    இலங்கை பாராளுமன்றம் இன்று கூடியவுடன் ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதால், அவர் வெளிநடப்பு செய்தார். #SriLankaParliament #RajapaksaWalkout
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை அப்பதவியில் நியமித்ததில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. அத்துடன் பாராளுமன்றத்தையும் முடக்கிய அவர், பின்னர் பல்வேறு தரப்பினரின் வலியுறுத்தலை தொடர்ந்து நவம்பர் 14-ம்தேதி பாராளுமன்றத்தை கூட்டுவதாக அறிவித்தார்.  

    இதற்கிடையே, பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை. எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந் தேதி பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    இதனை எதிர்த்து அந்நாட்டின் பெரும்பான்மை பலமிக்க மூன்று பிரதான எதிர்க்கட்சிகள் இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தன. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பாராளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்று கூறி அதிபரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.



    இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி இலங்கை பாராளுமன்றம் இன்று காலை கூடியது. அப்போது ரணில் கட்சி எம்பிக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து அவைக்கு வந்திருந்தனர். அவை நடவடிக்கை தொடங்கியதும், அதிபரால் நியமிக்கப்பட்ட ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த ராஜபக்சே வெளிநடப்பு செய்தார்.

    அதேசமயம் ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. #SriLankaParliament #RajapaksaWalkout
    இலங்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை சட்டவிரோதமாக அறிவிக்கக் கோரி மூன்று பிரதான கட்சிகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. #SriLanka #SriLankaParliament
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர்  சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை நியமித்ததில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை.  எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. அத்துடன் ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து மூன்று பிரதான கட்சிகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. பாராளுமன்றத்தில் இந்த கட்சிகள் பெரும்பான்மை பெற்றுள்ளன.


    அதிபர் சிறிசேனாவின் பாராளுமன்ற கலைப்பு நடவடிக்கை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்றும், மீண்டும் பாராளுமன்றம் செயல்படுவதற்கு உத்தரவிடவேண்டும் என்றும் இந்த கட்சிகள் தங்கள் மனுவில் கூறியுள்ளன.  #SriLanka #SriLankaParliament
    இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது. எந்தவிதமான நன்மையும் கிடைக்கப்போவது இல்லை என்று புதுக்கோட்டையில் நடந்த திருமண விழாவில் வைகோ பேசினார். #vaiko #SriLanka #rajapaksa

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்றார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது. எந்தவிதமான நன்மையும் கிடைக்கப்போவது இல்லை. ஒருவேளை ராஜபக்சே வெற்றி பெற்றால் இலங்கை அரசின் சட்டத்தை திருத்தி அதிபர் பதவியில் இருந்து சிறிசேனாவை கழற்றி விட்டு அவர் அதிபராக வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதை அவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் தமிழர்களின் பண் பாட்டு தலங்கள் அழிக்கப்படும் அபாயமும் உள்ளது


    இலங்கைப் பிரச்சினையை பொறுத்தவரை தமிழ் மாகாண சபை தலைவர் விக்னேஸ்வரன் கொண்டு வந்த தீர்மானம் மட்டுமே ஒரே தீர்வாக இருக்கும். தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்கள் நலனுக்காக செயல்பட வில்லை. அவர்கள் முழுவதுமாக சிங்களர் சார்ந்த வி‌ஷயங்களில் கவனம் செலுத்தி அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள் .

    இலங்கை அரசு கலைக்கப்பட்டதை கண்டித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக அங்குள்ள தமிழ் அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன. ஒரு வேளை வழக்கு தொடரப்பட்டால் இலங்கை அரசு கலைக்கப்பட்டது செல்லாது என்று அறிவிப்பு வரலாம். ஏனென்றால் இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைப்பதற்கு நான்கு ஆண்டு காலம் முடிய வேண்டும் என்று சட்ட விதி உள்ளது. ஆனால் அந்த சட்டத்தை மீறி தான் தற்போது நாடாளு மன்றம் கலைக்கப்பட்டு உள்ளது.

    தமிழக மீனவர் நலன் குறித்து மத்திய அரசுக்கு அக்கறை கிடையாது. இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட படகுகள் மற்றும் மீனவர்களை விடுதலை செய்வதற்கு அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதை கண்டிப்பதற்கும் அந்த சட்டத்தை விளக்குவதற்கும் நானே நேரில் பிரதமரை சந்தித்து, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை முடித்து வைக்குமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் இருந்து தமிழக மீனவர்கள் மீது மோடிக்கு அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது. 

    இவ்வாறு அவர் கூறினார்.  #vaiko #SriLanka #rajapaksa

    இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி இன்று பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார். #MahindhaRajapaksha #Rajapakshajoins
    கொழும்பு:

    ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்த மகிந்த ராஜபக்சே தற்போது அக்கட்சியின் ஆலோசகராக மட்டும் இருந்து வருகிறார்.

    அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவால் சமீபத்தில் அந்நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சேவால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் பாராளுமன்றத்தை கலைத்து மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவிட்டார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், ராஜபக்சே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி இன்று பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார். அவருடன் சுதந்திரக் கட்சியை சேர்ந்த சுமார் 50 முன்னாள் எம்.பி.க்களும் பொதுஜன முன்னணியில் இணைந்ததாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    ராஜபக்சேவின் இந்த முடிவு அதிபர் மைத்ரிபாலாவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிகிறது. #MahindhaRajapaksha #Rajapakshajoins 
    இலங்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளது. #SriLankaParliament #Ranil #UNP
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர்  சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை நியமித்ததில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை.  எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் நேற்று இரவு பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. அத்துடன் ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    சிறிசேனாவின் நடவடிக்கைகளை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்த சபாநாயகர் கரு.ஜெயசூர்யா, தற்போதைய பாராளுமன்ற கலைப்பு நடவடிக்கையையும் ஏற்கவில்லை. 

    இந்நிலையில், பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர ரணில் விக்ரமசிங்கே முடிவு செய்துள்ளார். அவர் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி சார்பில் வழக்கு தொடரப்படுகிறது.

    நீதிமன்றம்  தலையிட்டு சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யவும், சர்வாதிகார நடவடிக்கைகளில் இருந்து ஜனநாயகத்தை பாதுகாக்கவும் வழக்கு தொடரப்படும் என ஐக்கிய தேசிய கட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

    சிறிசேனாவின் கொடுங்கோன்மை இனி நீதிமன்றங்கள், பாராளுமன்றம் மற்றும் தேர்தலில் போராட வேண்டும் என முன்னாள் நிதி மந்திரி மங்கள சமரவீரா தெரிவித்தார். #SriLankaParliament #Ranil #UNP
    பாராளுமன்றத்தில் ரனில் விக்ரமசிங்கேவுக்கு அதிக மெஜாரிட்டி இருந்தாலும் கூட மீண்டும் ரனில் விக்ரமசிங்கேவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று சிறிசேனா தெரிவித்துள்ளார். #RanilWickremesinghe #Rajapaksa
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா பிரதமராக நியமித்தார்.

    ஆனால் இந்த நியமனத்தை ரனில் விக்ரமசிங்கே ஏற்கவில்லை. நான் தான் தொடர்ந்து பிரதமராக இருக்கிறேன் என்று கூறி வருகிறார்.

    இதற்கிடையே ராஜபக்சே தனது மெஜாரிட்டியை நிரூபித்தால் தான் அவரை பிரதமராக ஏற்க முடியும் என்று சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்துள்ளார். இதற்காக வருகிற 14-ந்தேதி பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது.

    ஆனால் ராஜபக்சேவுக்கு போதிய ஆதரவு இல்லை. எனவே எதிர்க்கட்சியில் உள்ள எம்.பி.க்களையும், ரனில் விக்ரமசிங்கே கட்சியில் உள்ள எம்.பி.க்களையும் இழுப்பதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.

    எதிரணியில் இருந்து ஒன்றிரண்டு பேர் ராஜபக்சே அணிக்கு தாவிவிட்டாலும் கூட இன்னும் மெஜாரிட்டியை நிரூபிக்கும் அளவுக்கு போதிய பலம் வரவில்லை.

    எனவே ஓட்டெடுப்பு நடந்தால் ராஜபக்சே தோல்வி அடைந்து பிரதமர் பதவியை இழக்கும் நிலை ஏற்படலாம்.


    இந்த நிலையில் 16 உறுப்பினர்களை கொண்ட தமிழ்தேசிய கூட்டணி எம்.பி.க்களை இழுப்பதற்கு அதிபர் சிறிசேனா தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர்கள் ராஜபக்சேவை ஆதரிக்க மாட்டோம் என்று அறிவித்து உள்ளனர். ஆனாலும் சிறிசேனா தனது முயற்சியை கைவிடவில்லை.

    இதற்கிடையே தமிழ் தேசிய கூட்டணி கட்சி பிரதிநிதிகள் அதிபர் சிறிசேனாவை சந்தித்து பேசினார்கள். அப்போது ஒருவேளை பாராளுமன்றத்தில் ரனில் விக்ரமசிங்கேவுக்கு அதிக மெஜாரிட்டி இருந்தாலும் கூட மீண்டும் ரனில் விக்ரமசிங்கேவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளிடம் சிறிசேனா கூறியிருக்கிறார்.

    பாராளுமன்ற ஓட்டெடுப்பு நடக்கும்போது தமிழ்தேசிய கூட்டணி சபை நடவடிக்கைகளில் பங்கேற்காமல் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு அவர்கள் உடன்படவில்லை.

    சிறிசேனா தனது கட்சி எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது எப்படியாவது மெஜாரிட்டியை நிரூபித்து நிலையான அரசை ஏற்படுத்துவேன். எனவே கட்சியினர் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று கூறினார். #RanilWickremesinghe #Rajapaksa
    இலங்கை அரசியலமைப்பு சட்டப்படி பாராளுமன்றத்தை அதிபரால் கலைக்க முடியாது என்று கூறப்படுகிறது. எனவே இப்போதைக்கு பாராளுமன்றம் கலைப்பு இல்லை என சிறிசேனா தெரிவித்துள்ளார். #SriLankanParliament
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேயை கடந்த மாதம் 26-ந்தேதி திடீரென நீக்கிய அதிபர் சிறிசேனா, அன்றிரவு ராஜபக்சேயை அழைத்து பிரதமராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    கடந்த 3 ஆண்டுகளாக எதிரிகளாக இருந்த சிறிசேனாவும், ராஜபக்சேயும் திடீரென கைகோர்த்ததால் இலங்கையில் கடும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.

    225 எம்.பி.க்களைக் கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாகவும், எனவே பிரதமர் பதவியில் நீடிப்பதாகவும் ரனில் விக்ரமசிங்கே அறிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறிசேனாவும் ராஜபக்சேவும் கடந்த மாதம் 28-ந்தேதி இலங்கை பாராளுமன்றத்தை நவம்பர் 16-ந்தேதி வரை முடக்கி அறிவித்தனர். அதன் பிறகு அவர்கள் எம்.பி.க்களை விலைபேசி வளைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

    ஆனால் அவர்களது முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. 113 எம்.பி.க்கள் இருந்தால்தான் பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியும் என்ற நிலையில் சுமார் 100 எம்.பி.க்களே ராஜபக்சேக்கு ஆதரவாக உள்ளனர். மேலும் 13 எம்.பி.க்கள் தேவைப்படும் நிலையில், சிறிசேனா- ராஜபக்சே கூட்டணிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

    இந்த நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் எழுந்துள்ள அழுத்தம் காரணமாக இலங்கை பாராளுமன்றத்தை வரும் 14-ந்தேதி கூட்டப் போவதாக சிறிசேனாவும், ராஜபக்சேயும் அறிவித்துள்ளனர். ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும், தமிழர்களின் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்தும் 13 எம்.பி.க்களை பேரம் பேசி இழுத்து விட முடியும் என்று அவர்கள் நம்பினார்கள்.

    கடந்த இரு தினங்களாக தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர்கள், எம்.பி.க்களுடன் சிறிசேனாவும், ராஜபக்சேயும் மீண்டும் பேச்சு நடத்தினார்கள். தங்களுக்கு ஆதரவு தராவிட்டாலும் பரவாயில்லை, ஓட்டெடுப்பின் போது நடுநிலை வகிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் இதை ஏற்க தமிழ் எம்.பி.க்கள் மறுத்து விட்டனர்.

    இது சிறிசேனாவுக்கும் ராஜபக்சேக்கும் கடும் அதிர்ச்சியை அளித்தது. இந்த நிலையில் துணை மந்திரியாக இருந்த மனுஷா நானயக்காரா என்பவர் ராஜபக்சே அணியில் இருந்து விலகி ரனில் பக்கம் சாய்ந்து விட்டார். இதுவும் ராஜ பக்சேக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    இதற்கிடையே 14-ந்தேதி பாராளுமன்றம் கூடும்போது, பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்ட ரனில் விக்ரமசிங்கே, ராஜபக்சே இருவருக்கும் உத்தரவிடுவேன் என்று சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்துள்ளார்.

    இதனால் இன்னும் 5 நாட்களுக்குள் பெரும்பான்மை பலத்துக்கு ஏற்ப எம்.பி.க்களை திரட்ட வேண்டிய நிர்ப்பந்தமான சூழ்நிலை சிறிசேனாவுக்கும், ராஜபக்சேக்கும் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மனுஷா நானயக்காரா போன்று மேலும் சில எம்.பி.க்கள் ரனில் பக்கம் ஓடி விடக் கூடாது என்ற பயம் ராஜபக்சேக்கு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று அவர் மேலும் 3 பேருக்கு மந்திரி பதவி அளித்தார்.

    அதன்படி ராஜபக்சேயின் சகோதரர் சமல் சுகாதார மந்திரியாகவும், எஸ்.பி. திச நாயக்க நெடுஞ்சாலைகள் துறை மந்திரியாகவும், பவித்ரா வன்னியராச்சி பெட்ரோலியம் வள மந்திரியாகவும் பதவி ஏற்றனர். இதன் தொடர்ச்சியாக சில உத்தரவுகளை சிறிசேனா வெளியிட்டார். பெரும்பாலான அதிகாரங்களை தன் வசம், தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வகையில் சிறிசேனா உத்தரவிட்டிருப்பதால் இலங்கையில் உள்ள அனைத்து கட்சி எம்.பி.க்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    கடந்த ஒரு வாரமாக மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்துள்ளதால் சிறிசேனா விரக்தி அடைந்துள்ளார். எனவே அவர் பாராளுமன்றத்தை கலைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. பாராளுமன்றம் 14-ந்தேதி கூட்டப்படுவதற்கு முன்பே அவர் அதை கலைத்து விடுவார் என்று கொழும்பில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    இதற்கு பிரதமராக பதவி ஏற்ற ராஜபக்சே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பாராளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது என்று அவர் நேற்றிரவு திட்டவட்டமாக அறிவித்தார். இதனால் வேறு வழி தெரியாத சிறிசேனாவும் பாராளுமன்றத்தை கலைக்க மாட்டேன் என்று இன்று காலை அறிவித்தார்.

    சிறிசேனாவும் ராஜபக்சேயும் பாராளுமன்றத்தை கலைக்க மாட்டோம் என்று கூறி இருப்பதால், அவர்களால் பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


    அதிபர் சிறிசேனா, பிரதமராக பதவியேற்ற ராஜபக்சே, சபாநாயகர் ஜெயசூர்யா மூவரும் தினம், தினம் புதிய அறிவிப்புகளை வெளியிடுவது இலங்கையில் அரசியல் நெருக்கடிகளை அதிகரிக்க செய்துள்ளது. 14-ந்தேதி பாராளுமன்றத்தில் ரனில் விக்ரமசிங்கே மெஜாரிட்டியை நிரூபித்து காட்டினாலும் அவருக்கு பிரதமர் பதவியை வழங்க இயலாது என்று சிறிசேனா மிரட்டல் விடுத்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) கொழும்பில் ரனில் ஆதரவாளர்கள் பிரமாண்ட பேரணி நடத்தினார்கள். இது கொழும்பில் அரசியல் குழப்பத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

    இலங்கை அரசியலமைப்பு சட்டப்படி பாராளுமன்றத்தை அதிபரால் கலைக்க முடியாது என்று கூறப்படுகிறது. அதுபோல பிரதமராக இருப்பவர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து காட்ட வேண்டும் என்று சட்டத்தில் கூறப்படவில்லையாம்.

    இதை காரணம் காட்டி ராஜபக்சே பதவியை காப்பாற்ற முயற்சி நடக்கிறது. இதனால் இலங்கை அரசியலில் நாளுக்கு நாள் புதிய குழப்பங்களும் நெருக்கடியும் அதிகரித்தப்படி உள்ளது. #SriLankanParliament #Rajapaksa #Sirisena #Rajapaksa #RanilWickremesinghe
    ஓட்டெடுப்பில் வெற்றி கிடைக்காவிட்டால் தேர்தலை நடத்த ராஜபக்சே திட்டமிட்டிருப்பதால் அவரது ஆதரவாளர்கள் கொழும்பில் குவிய தொடங்கி உள்ளனர். இதனால் கொழும்பில் மீண்டும் பதட்டம் உருவாகி உள்ளது. #Rajapaksa #ranilwickramasinghe #sirisena

    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த ரணில் விக்ரமசிங்கேயை கடந்த மாதம் 26-ந்தேதி திடீரென அதிபர் சிறிசேனா நீக்கினார். பிறகு தனது சுதந்திரா கட்சியில் தனி அணியாக செயல்பட்டு வந்தவரும், கடந்த 3 வருடங்களாக எதிரியாக இருந்தவருமான ராஜ்பக்சேவை அழைத்து பிரதமராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    இதன் காரணமாக இலங்கையில் பிரதமர் யார் என்ற குழப்பம் ஏற்பட்டது. இந்த குழப்பத்தை தீர்க்க வேண்டுமானால் பாராளுமன்றத்தை கூட்டி இருவரையும் பெரும்பான்மை நிரூபிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை சர்வதேச அளவில் எழுந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிறிசேனாவும், ராஜபக்சேவும் பாராளுமன்றத்தை 16-ந்தேதி வரை முடக்கி அறிவித்தனர். இதை கண்டித்து ரணில் விக்ரமசிங்கே ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக பாராளு மன்றத்தை கூட்ட சிறிசேனா முன் வந்தார். முதலில் 5-ந்தேதி பாராளுமன்ற கூடும் என்று தகவல் வெளியானது. பிறகு 7-ந்தேதி கூடும் என்று கூறப்பட்டது.

    இந்த நிலையில் வருகிற 14-ந்தேதி பாராளுமன்றம் கூட்டப்படும் என்றும் அன்றே பெரும்பான்மையை நிரூபிக்க ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்று சிறிசேனா நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இலங்கை அரசிதழில் இது வெளியிடப்பட்டுள்ளது.

    இலங்கை பாராளுமன்றம் கூடுவதற்கு இன்னும் 8 தினங்களே உள்ள நிலையில் தனக்கு பெரும்பான்மை பலத்தை உருவாக்க ராஜபக்சே போராடிய படி உள்ளார். 225 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 113 எம்.பி.க்கள் ஆதரவு தேவை.

    சிறிசேனா-ராஜபக்சே அணியினருக்கு 96 எம்.பி.க்கள் ஆதரவே உள்ளது. 4 எம்.பி.க்கள் மாற்று கட்சிகளில் இருந்து வந்திருப்பதால் அவர்களது பலம் 100 ஆக உள்ளது. இன்னும் 13 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

    இந்த நிலையில் 16 எம்.பி.க்களை வைத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களின் ஆதரவை பெற ராஜபக்சே முயற்சி செய்தார். ஆனால் ஒரு தமிழ் எம்.பி.யை சுமார் ரூ.30 கோடி மற்றும் மந்திரி பதவி கொடுத்து இழுத்து விட்டதால் ராஜபக்சே மீது தமிழ் எம்.பி.க்களின் கோபம் மீண்டும் அதிகரித்துள்ளது.

    இதையடுத்து ராஜபக்சேவுக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம் என்று தமிழ் தேசிய எம்.பி.க்கள் அறிவித்துள்ளனர். மேலும் ரணில் விக்ரமசிங்கேவை ஆதரிக்கப் போவதாக கூறி உள்ளனர்.


    ஏற்கனவே பாராளுமன்றத்தில் ரணில் விக்ரம சிங்கேவுக்கு 103 எம்.பி.க்கள் ஆதரவு இருக்கிறது. தமிழ் தேசிய எம்.பி.க்கள் 15 பேர் ஆதரவு அவருக்கு கிடைத்தால் ரனில் விக்ரம சிங்கேயால் பெரும்பான்மை பலத்தை எளிதாக நிரூபித்து காட்ட முடியும்.

    மெஜாரிட்டி பலம் இல்லாத காரணத்தால் ராஜபக்சேவும், அவரது ஆதரவாளர்களும் எந்த எல்லைக்கும் செல்ல தீவிரமாக உள்ளனர். தமிழ் தேசிய எம்.பி.க்களின் ஆதரவை பெறுவதற்காக இலங்கை உள்நாட்டு போரின்போது கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ள பல்லாயிரக்கணக்கான தமிழர்களை விடுதலை செய்யவும் ராஜபக்சே தயாராகி வருகிறார்.

    இது தவிர பணம் மற்றும் பதவிகளை அள்ளித்தரவும் மாற்றுக்கட்சி எம்.பி.க்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறப்பட்டு வருகிறது. தற்போது தங்கள் பக்கம் வரும் எம்.பி.க்களுக்கு ரூ.50 கோடி வரை கொட்டிக் கொடுக்க ராஜபக்சே பேரம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    ராஜபக்சேயின் பணம் இலங்கை எம்.பி.க்களின் கைகளில் வெள்ளமாக போய் சேர தொடங்கி உள்ளது. இதனால் ரணில் ஆதரவாளர்களாக உள்ள 4 எம்.பி.க்கள் ராஜபக்சே பக்கம் தாவ தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இலங்கையில் உள்ள 2 பெரிய முஸ்லிம் தலைவர்கள் இதுவரை ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக இருந்தனர். தற்போது அவர்கள் ராஜபக்சே பக்கம் சாய பேரம் பேசி வருவதாக கூறப்படுகிறது.

    இன்னும் ஒரு வாரத்துக்குள் பெரும்பான்மை பலத்துக்கு தேவையான எம்.பி.க்களை விலைக்கொடுத்து வாங்கி விட வேண்டும் என்பதில் ராஜபக்சேவும், அவரது மகன் நமலும் தீவிரமாக உள்ளனர்.

    இதற்கிடையே ராஜபக்சே தனக்கு இருக்கும் செல்வாக்கை நிரூபித்து காட்ட இலங்கையில் மிகப்பெரிய ஊர்வலத்துக்கு ஏற்பாடுகள் செய்து வருகிறார். இலங்கை முழுவதிலும் இருந்து ராஜபக்சே ஆதரவாளர்கள் இந்த ஊர்வலத்துக்காக கொழும்பில் குவிய தொடங்கி உள்ளனர். இதனால் கொழும்பில் மீண்டும் பதட்டம் உருவாகி உள்ளது.

    கடந்த மாதம் இறுதியில் கொழும்பில் ராஜபக்சே ஆதரவாளர்கள் பேரணி நடத்தியபோது பயங்கர கலவரம் வெடித்தது. பொதுமக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. மீண்டும் ராஜபக்சே ஆதரவாளர்கள் பேரணிக்கு வருவதால் முன்புபோல கலவரம் வெடிக்குமோ என்ற பயம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஒரு வாரத்துக்குள் பெரும்பான்மைக்கு தேவையான எம்.பி.க் களை விலை கொடுத்து வாங்க முடியாவிட்டால் அடுத்தக்கட்டமாக என்ன செய்யலாம்என்று ராஜபக்சே ஆலோசனை நடத்தி வருகிறார்.

    பாராளுமன்றத்தை கலைக்க அவர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சிறிசேனா மட்டும் சற்று தயங்கிய நிலையில் இருப்பதால் ராஜபக்சே ஆலோசித்து வருகிறார்.

    என்றாலும் பாராளுமன்றத்தில் தோல்வி ஏற்பட்டால் தேர்தலை சந்திக்க ராஜபக்சே அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் நடத்துவதற்கு தயாராக இருப்பதாக இலங்கை தேர்தல் அதிகாரி அறிவித்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #Rajapaksa #ranilwickramasinghe #sirisena

    இலங்கையில் அதிபரால் நியமிக்கப்பட்ட பிரதமர் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை அவரை பிரதமராக ஏற்க முடியாது என சபாநாயகர் தெரிவித்துள்ளார். #SriLankaSpeaker #KaruJayasuriya
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரம சிங்கேவை அதிபர் சிறிசேனா கடந்த மாதம் அதிரடியாக நீக்கிவிட்டு, ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். அத்துடன் பாராளுமன்றத்தையும் வருகிற 16-ந் தேதி வரை முடக்கி வைத்து உத்தரவிட்டார்.

    அதிபரின் இந்த முடிவுக்கு ரணில் விக்கிரம சிங்கே மற்றும் சபாநாயகர் கரு.ஜெயசூர்யா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், இலங்கை பாராளுமன்றம் 14-ம் தேதி கூடும் என அதிபர் சிறிசேனா அறிவித்தார். அப்போது ராஜபச்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.



    இந்நிலையில், அதிபர் சிறிசேனாவுக்கு சபாநாயகர் கரு ஜெயசூர்யா இன்று கடிதம் எழுதி உள்ளார். அதில், பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது என்றும், அதுவரை ரணில் தான் பிரதமர் என்றும் கூறியுள்ளார்.

    பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தின்படி ராஜபக்சே நியமனம் சட்டவிரோதம் என்பதை ஏற்கிறேன். 7ம் தேதி பாராளுமன்றத்தை கூட்டுவதாக தெரிவித்துவிட்டு இப்போது தாமதிப்பது ஏன்? என்றும் சபாநாயகர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    பாராளுமன்றத்தை கூட்டுவதில் தாமதிப்பது ஜனநாயகத்தை சவப்பெட்டிக்குள் அடைப்பததற்கு சமம் என ரணில் விக்ரமசிங்கே விமர்சித்துள்ளார். #SriLankaSpeaker #KaruJayasuriya

    தமிழின மக்களின் நீண்டகால கோரிக்கையான இலங்கை சிறையில் இருக்கும் தமிழ் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வதன் மூலம் தமிழ் எம்.பி.க்கள் ஆதரவைபெற ராஜபக்சே திட்டமிட்டுள்ளார். #Tamilprisoners #SrilankaTamilprisoners #Rajapaksa
    கொழும்பு:

    இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்து, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்தது செல்லாது. நாட்டின் பிரதமராக நான் தொடர்ந்து நீடிக்கிறேன் என  விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். தன்னை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    மேலும், பிரதமர் மாற்றம் தொடர்பாக விவாதிப்பதற்காக அவசரமாக பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என சபாநாயகர் கரு ஜெயசூர்யாவுக்கு விக்கிரமசிங்கே கடிதம் அனுப்பினார்.

    பாராளுமன்றம் அவசரமாக கூட்டப்பட்டால் அங்கு அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர விக்கிரமசிங்கே திட்டமிட்டிருந்த நிலையில், நவம்பர் 16-ம் தேதிவரை பாராளுமன்றத்தை முடக்கம் செய்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவு பிறப்பித்தார்.

    இலங்கை பாராளுமன்றத்தில் மொத்தம் 225 எம்.பி.க்கள் உள்ளனர். பிரதமர் பதவியில் நீடிப்பதற்கான மெஜாரிட்டியை நிரூபிக்க 113 எம்.பி.க்களின் ஆதரவு வேண்டும். ராஜபக்சே - ரணில் விக்ரமசிங்கே இருவருமே தங்களுக்கு போதுமான பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக கூறி வருகிறார்கள்.

    ராஜபக்சே-சிறிசேனா அணியினருக்கு 96 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களுக்கு மெஜாரிட்டியை பெற மேலும் 18 எம்.பி.க்கள் ஆதரவு தேவைப்படுகிறது. ரணில் விக்ரமசிங்கேவுக்கு 115 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் 5 பேரை ராஜபக்சே வளைத்து விட்டதாகவும் இதன் மூலம் அவருக்கு 101 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக தெரிகிறது.

    இதற்கிடையில், வரும் 7-ம் தேதி பாராளுமன்றத்தை கூட்ட அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா ஒப்புதல் அளித்துள்ளார். அப்போது ராஜபக்சே அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் தீர்மானத்தை ஆதரித்தும், ராஜபக்சேவுக்கு எதிராகவும் வாக்களிக்கப் போவதாக தமிழ் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் உள்பட 21 எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், தமிழ் எம்.பி.க்களின் மனப்போக்கை மாற்றி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிப்பதற்காக ராஜபக்சே காய்நகர்த்தி வருகிறார்.

    இதில் ஒருகட்டமாக தமிழின மக்களின் நீண்டகால கோரிக்கையான இலங்கை சிறையில் இருக்கும் தமிழ் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வதன் மூலம் தமிழ் எம்.பி.க்கள் ஆதரவைபெற ராஜபக்சே திட்டமிட்டுள்ளார்.


    இந்த தகவலை ராஜபக்சேவின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    தமிழ் மக்களின் அடிப்படை சிக்கல்களை தீர்க்கும் வகையில் பெறுமதியான கலந்துரையாடல்களை உருவாக்க எமது தரப்பு தயாராக உள்ளது. நீண்ட நாள் கைதிகளாக உள்ள முன்னாள் போராளிகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபாலா சிறிசேனா மற்றும் பிரதமர் ராஜபக்சே ஆகியோர் தொடர்ந்து கவனம் செலுத்தி விரைவில் தகுந்த முடிவை அறிவிப்பர் என  நாமல் ராஜபக்சே பதிவிட்டுள்ளார்.

    கடந்த 2009-ம் ஆண்டில் இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான உச்சகட்ட போர் முடிவடைந்த பின்னர் சரணடைந்த பல்லாயிரம் தமிழர்களையும், பின்னர் அரசின் தேடுதல் வேட்டையில் பிடிபட்ட பலரையும் நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளில் ராஜபக்சே அரசு முன்னர் அடைத்து வைத்தது.

    எவ்வித விசாரணையுமின்றி இப்படி பல ஆண்டுகாலமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை முந்தைய ராஜபக்சே அரசும், பின்னர் வந்த மைத்ரிபாலா சிறிசேனா தலைமையிலான அரசும் நிராகரித்து வந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.  #Tamilprisoners #SrilankaTamilprisoners #Rajapaksa
    ×