search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறிசேனா"

    • ஈஸ்டர் தின தற்கொலைப்படை தாக்குதலில் 270-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
    • இலங்கை சுப்ரீம் கோர்ட்டு, சிறிசேனா இலங்கை மதிப்பில் ரூ.10 கோடி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    கொழும்பு :

    கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கையில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு தாக்குதலில் 270-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர்களில் 11 இந்தியர்களும் அடங்குவர்.

    அந்த தாக்குதலை தடுக்க தவறிவிட்டதாக அப்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனா மீதும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீதும் குற்றம்சாட்டப்பட்டது.

    இதுதொடர்பான வழக்கில் கடந்த 12-ந்தேதி இலங்கை சுப்ரீம் கோர்ட்டு, குண்டுவெடிப்புகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக சிறிசேனா இலங்கை மதிப்பில் ரூ.10 கோடி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இல்லாவிட்டால் அவர் சிறை செல்ல நேரிடும் என்றும் எச்சரித்தது.

    தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துவந்த சிறிசேனா, பாதுகாப்பு துறையின் கவனக்குறைவுதான் குண்டு தாக்குதலுக்கு காரணம் என்று கூறிவந்தார்.

    இந்நிலையில் கொழும்பில் நேற்று தனது சுதந்திரா கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய சிறிசேனா, 'மற்றவர்கள் செய்த ஒன்றுக்காக (குண்டு தாக்குதல்) நான் நாட்டின் கிறிஸ்தவ சமூகத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.

    கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை இலங்கை அதிபராக இருந்த மைத்ரிபால சிறிசேனா, அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    • தன் மீதான குற்றச்சாட்டுகளை சிறிசேனா திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.
    • இந்த இழப்பீட்டை 6 மாதகாலத்துக்குள் செலுத்த வேண்டும்.

    கொழும்பு :

    இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ந் தேதி ஈஸ்டர் தினத்தில் 3 கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் 3 சொகுசு ஓட்டல்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

    இலங்கை மட்டும் இன்றி ஒட்டுமொத்த உலகையும் அதிரவைத்த இந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் பலர் உள்பட 270 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதல் குறித்து இந்தியா முன்கூட்டியே உளவுத் தகவல் அளித்தும், அதை தடுக்க தவறியதாக இலங்கையின் அப்போதைய அதிபர் சிறிசேனா மற்றும் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    அதுமட்டும் இன்றி ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு குறித்து விசாரிப்பதற்காக சிறிசேனாவால் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற விசாரணைக்குழுவும் பயங்கரவாத தாக்குதலை தடுக்க சிறிசேனா தவறிவிட்டதாக குற்றம் சாட்டியது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை சிறிசேனா திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.

    எனினும் இந்த விவகாரத்தில் சிறிசேனா மற்றும் அவரது அரசில் பணியாற்றிய மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் மீது குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிலர் அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட்டின் 7 நீதிபதிகளை கொண்ட அமர்வு நேற்று முன்தினம் தனது தீர்ப்பை வழங்கியது.

    அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பயங்கரவாத தாக்குதல் குறித்து இந்தியாவிடம் இருந்து நம்பகமான தகவல் கிடைத்தும், நாட்டின் மீதான தாக்குதலை தடுப்பதில் அலட்சியமாக இருந்ததற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் அதிபர் சிறிசேனா இலங்கை பணத்தில் ரூ.10 கோடியை தனது சொந்த நிதியில் இருந்து இழப்பீடாக வழங்க வேண்டும்.

    அதேபோல் முன்னாள் தலைமை போலீஸ் அதிகாரி பூஜித் ஜெயசுந்தரா, உளவுத்துறை முன்னாள் தலைவர் நிலந்தா ஜெயவர்த்தனே ஆகியோர் தலா ரூ.7.5 கோடியும், பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் ஹெமாசிறி பெர்ணாண்டோ ரூ.5 கோடியும் இழப்பீடாக வழங்க வேண்டும்.

    இந்த இழப்பீட்டை 6 மாதகாலத்துக்குள் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×