search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RahulGandhi"

    கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமாரை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, வெறுப்பு அரசியலால் தமிழக மக்களை வழிநடத்த இயலாது என கூறினார். #LokSabhaElections2019 #RahulGandhi
    கிருஷ்ணகிரி:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கிருஷ்ணகிரியில்  நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, பாராளுமன்ற தேர்தலின் காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமாரை  ஆதரித்து  பேசியதாவது:

    இங்கு வந்திருக்கக்கூடிய தொண்டர்கள், மக்களுக்கு மனமார வணக்கம் தெரிவிக்கிறேன். இந்தியா எனும் ஒரு நாட்டிற்கு பல்வேறு வித்தியாசங்கள் உள்ளன. அனைத்தும் தனித்தன்மை வாய்ந்தது. இந்த வித்தியாசங்கள், நாகரீகம் , பண்பாடு,  வரலாறு, மொழி, ஆகியவற்றை நாம் அதிகம் மதிக்கின்றோம்.

    நாட்டில் ஒவ்வொருவருக்கும் தனி அடையாளம் உண்டு. திமுக, காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சிகள் கூட்டணி, பாஜகவை எதிர்க்கின்றது. அவரது ஒரு சிந்தனை மக்களை வழிநடத்தும் என பிரதமர் மோடி நினைக்கிறார். இந்த நாட்டில் கோடிக்கணக்கான மக்களுக்கு தனிப்பட்ட சிந்தனை இருப்பதை மறந்துவிடுகிறார்.



    தமிழக மக்கள் நினைத்தால் மத்தியிலும் ஆட்சியை மாற்ற இயலும். தமிழ் மக்களின் கலாச்சாரம், தமிழ் மீதான பற்று ஆகியவற்றை மற்றவர்களால் கட்டுப்படுத்த முடியாது. தமிழர்களால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். தமிழக மக்களை அவமதிப்பதால் பாஜக, அதிமுக ஆகியன எப்போதும் ஆட்சி நடத்த இயலாது. அன்பு செலுத்தினால் மட்டுமே ஆட்சி செய்ய இயலும். நான் அதை நன்கு புரிந்திருக்கிறேன். வெறுப்பு அரசியலால் தமிழக மக்களை வழிநடத்த இயலாது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு என தெரியும்.

    மக்களுக்கு செல்ல வேண்டிய பணம் அனைத்தும் பாஜகவைச் சேர்ந்த 15 பேருக்கு மட்டுமே செல்கிறது. தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திய போது பிரதமர் மோடி பார்க்கக்கூட இல்லை. இளைஞர்களுக்கு எங்கும் வேலையும்  கிடைக்கவில்லை. எனவே தான் நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும்  நியாயம் கிடைக்கவே காங்கிரஸ் கட்சியினர்  போராடி வருகிறோம்.

    ஜிஎஸ்டி வரி வணிகத்தை அழித்திருக்கிறது. திருப்பூர் வேலைக்கொடுக்கக்கூடிய நகரம், அது இந்த ஆட்சியில் அழிக்கப்பட்டுள்ளது. இந்த கபர்சிங் வரியால் மக்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டனர். சரியான நேரத்தில் நியாய் திட்டத்தின் மூலம் ரூ.72 ஆயிரம் பணம் நாட்டில் வாழும் 20% ஏழை மக்களுக்கு அளிக்கப்படும்.

    ஏழைகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்த பின்னர் தான் பணம் வங்கிக்கணக்கில் போடப்படும். ஏழைக் குடும்பங்கள் இதனால் பலன் பெறும்.   மேலும் தமிழகத்தில் தமிழனான ஸ்டாலின் முதல்வராக வேண்டும்.

    வறுமைக்கு எதிராக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், உங்கள் குழந்தைகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். காஞ்சிபுரம், திருப்பூர் மீண்டும் புத்துயிர் பெறும். காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்படும்.  நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் விவசாயிகளுக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். அரசு எப்போதும் விவசாயிகளுடன் இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் ஆட்சி நடத்துவோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #RahulGandhi


    அமேதி தொகுதிக்கு எதுவுமே செய்யாததால் மக்களுக்கு பதில் சொல்ல முடியாத ராகுல் காந்தி இந்தமுறை வயநாட்டுக்கு ஓட்டம்பிடிப்பதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். #RahulGandhi #Wayanadpolls #Amethipolls #LSpolls #Amit Shah
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11-ம் தேதி முதல்கட்ட பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில் பாஜக தலைவர் அமித் ஷா இன்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

    அம்மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள பிஜ்னோர் பகுதியில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, சம்ஜூதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளான லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளை விடுதலை செய்துவிட்டு இந்துக்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதற்காக காங்கிரஸ் அரசு அசிமானந்தாவை சிறைக்கு அனுப்பியது என்று குற்றம்சாட்டினார்.



    இந்த மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அவர்களுக்கு பதில் சொல்ல முடியாத ராகுல் காந்தி தற்போது கேரளாவில் உள்ள வயநாடு தொகுதிக்கு ஒட்டம் பிடித்திருக்கிறார் எனவும் அமித் ஷா குறிப்பிட்டார். #RahulGandhi #Wayanadpolls #Amethipolls #LSpolls #Amit Shah
    ராகுல்காந்தியை விமர்சிக்க தமிழிசைக்கு தகுதி இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கையில் தெரிவித்துள்ளார். #KSAzhagiri #RahulGandhi

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பங்கேற்போடு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைந்தது முதற்கொண்டு பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளிடையே மிகப்பெரிய கலக்கத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க.வினர் புலம்பிக் கொண்டிருப்பதை நம்மாலே புரிந்து கொள்ள முடிகிறது.

    மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு எதிராக அமைந்துள்ள கூட்டணி நாம் அமைத்ததைப் போல கொள்கைக் கூட்டணி அல்ல. நமது கூட்டணியைப் பற்றி விமர்சனம் செய்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக கேள்விகளை தொடுத்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க.வில் இணைந்த அவருக்கு அரசியல் வரலாற்றை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

    இலங்கை தமிழர் பிரச்சினையைப் பற்றி தமிழிசை நீலிக் கண்ணீர் வடிக்கிறார். இலங்கை தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி செயல்பட்டதை எவரும் மறந்திருக்க முடியாது. ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் தான் இன்றைக்கும் இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருப்பதை தமிழிசையால் மறுக்க முடியுமா ?

    தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க ஒப்பந்தம் போட்ட காரணத்தினாலே இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர் ராஜீவ்காந்தி பங்கரவாத அமைப்பால் படுகொலை செய்யப்பட்டார். இத்தகைய உயிர் தியாகத்தைச் செய்த காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கிற ராகுல்காந்தியை விமர்சிக்க தமிழிசைக்கு என்ன தகுதி இருக்கிறது ? இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்து அவர் முன்னிலையில் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடியின் துரோகத்தை தமிழக மக்கள் எவரும் மறக்க மாட்டார்கள்.

    1966-ம் ஆண்டில் தலைநகர் தில்லியில் காமராஜர் குடியிருந்த வீட்டின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சங்பரிவார் கும்பலின் வாரிசாக விளங்கி வருகிற பா.ஜ.க.வினர் அவரது பெயரை உச்சரிக்க கூட தகுதியற்றவர்கள். இவர்களுக்கு எங்களது தலைவர்கள் பெயரை குறிப்பிட்டு பேச என்ன உரிமை இருக்கிறது?

    தமிழகத்தில் தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 2004 பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றியைப் போல நாற்பதும் நமதே என்ற இலக்கை நோக்கி பயணித்து வருகிறது. தமிழகம் இந்தியாவுக்கு வழிகாட்ட போகிறது. இந்தியாவின் எதிர்கால பிரதமராக ராகுல்காந்தியும், தமிழகத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலினும் பதவியேற்கிற காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை தமிழிசை புரிந்து கொள்ள வேண்டும். ஆயிரம் தமிழிசைகள் ஒன்று சேர்ந்தாலும் எந்த சக்தியாலும் இதை தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #KSAzhagiri #RahulGandhi

    சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இப்போது இருதரப்பு கருத்திலும் நியாயம் இருப்பதாக தெரிவித்துள்ளார். #Sabarimala #RahulGandhi

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை தரிசனத்திற்கு அனுமதிப்பதில்லை.

    இளம்பெண்களை தரிசனத்திற்கு அனுமதிக்காமல் இருப்பது கோவில் ஆச்சாரம். அதை மீறக்கூடாது என்று ஐயப்ப பக்தர்களும், பந்தளம் ராஜகுடும்பம், கோவில் தந்திரிகளும் கூறி வந்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வரவேற்பு தெரிவித்தார். அதே நேரம் கேரள மாநில காங்கிரசார் இத்தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இத்தீர்ப்பு தொடர்பாக கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் நடத்தி வந்த போராட்டத்திலும் பங்கேற்றனர். கேரள முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன்சாண்டி, மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.அந்தோணி ஆகியோரும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் ராகுல் காந்தி கடந்த 2 நாட்களாக துபாய் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு வாழும் கேரள மக்களை சந்தித்து கலந்துரையாடினார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு ஆதரவான கருத்தையும், எதிர்ப்பான கருத்தையும் அறிந்து கொண்டேன். இரு தரப்பினரும் கூறுவதில் நியாயம் இருக்கிறது.

    ஒரு பிரிவினர் கோவிலின் ஆச்சாரத்தை ஒரு போதும் மீறக்கூடாது என்கிறார்கள். இன்னொரு பிரிவினர் அனைத்து வயது பெண்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள்.

    பெண்களுக்கு சமத்துவமும், சம உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரம் கோவிலின் ஆச்சாரங்களை மீறக்கூடாது என்பதிலும் நியாயம் இருக் கிறது.

    எனவே இந்த விவகாரத்தில் இன்னும் குழப்பமான சூழ்நிலையே நிலவுகிறது. என்ன நேர்ந்தாலும் காங்கிரஸ் கட்சி கேரள மக்களின் உணர்வுகளுக்கு, விருப்பத்திற்கு மாறாக செயல்படாது. மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதன்படி தான் செயல்பட வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன். அதே நேரம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து கருத்து எதுவும் கூற விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Sabarimala #RahulGandhi

    சென்னையில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி பெயரை முன்மொழிந்ததது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். #DMK #MKStalin #Congress #RahulGandhi
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    எப்போது எதைச் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து அப்போது அதனைக் கச்சிதமாகச் செய்வதில் இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் தலைவர் கலைஞர்.

    அவர் சிலையாக மட்டுமல்ல, நம் சிந்தனையிலும் நிறைந்திருப்பதால்தான், உங்களில் ஒருவனான நான் அந்த சிலை திறப்பு விழாவின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது, “மத்தியிலே நடைபெறும் “சேடிஸ்ட் மோடி” தலைமையிலான பாசிச-நாசிச ஆட்சியை வீழ்த்தி ராகுல்காந்தியை முன்னிறுத்தி, அவரது கரங்களை வலுப்படுத்துவோம் என்பதை பிரகடனப்படுத்தினேன்.

    இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைத்து- மத நல்லிணக்கத்தைச் சிதைத்து- பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் தகர்த்துக் கொண்டிருப்பதுடன், தமிழ்நாட்டை ஒட்டு மொத்தமாக வஞ்சிக்கும் மோடி அரசை வீழ்த்திட வேண்டுமென்றால் அதற்குரிய வலிமை கொண்ட வரும், பா.ஜ.க.வின் கோட்டையாக இருந்த மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமையக் காரணமாக அமைந்தவருமான ராகுல் காந்தியை முன்னிறுத்துவது தான் மதசார்பற்ற சக்திகளின் ஒருங்கிணைப்புக்கு ஏற்றதாக இருக்கும் என்ற அடிப்படையிலே உரக்கச் சொன்னேன்.

    தலைவர் கலைஞர் காட்டிய வழி, நேரு குடும்பத்தில் இந்திராவால் தொடங்கி இன்றுவரை நல்ல நட்பினைக் கொண்டுள்ளது. தி.மு.க. ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அதில் உறுதியாக நின்றுள்ளது. அந்த ஆதரவும் எதிர்ப்பும் நாட்டின் நலன் கருதியே எடுக்கப்பட்டவை.

    இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வங்கிகள் நாட்டுடைமை, மன்னர் மானியம் ஒழிப்பு போன்ற முற்போக்கான திட்டங்கள் கொண்டு வரப்பட்டபோது, அவர்கள் பக்கம் இருந்த பழமைவாதிகளே அதனை எதிர்த்த நிலையில், அவை நிறைவேற துணை நின்ற இயக்கம்தான் தி.மு.க.,

    அதுபோலவே 1980-ம் ஆண்டு இந்தியாவில் நிலையான ஆட்சி அமைவதற்கு காங்கிரசால்தான் முடியும் என்றபோது, அதற்கு முந்தைய தேர்தலில் பெருந்தோல்வி அடைந்து இருந்த இந்திராகாந்தி அரசியல் களத்தில் மீண்டு வருவாரா? என்ற கேள்வி எழுந்த சூழலில், “நேருவின் மகளே வருக... நிலையான ஆட்சி தருக...” என முழங்கி அது வெற்றிகரமாக நிறைவேற துணை நின்றவர் தலைவர் கருணாநிதி.


    2004-ம் ஆண்டு மதசார்பற்ற ஜனநாயக ஆட்சி அமைந்திட வேண்டும் என்ற நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் தலைமையை ஏற்பது குறித்து அரசியல் அரங்கில் விவாதங்கள் நடந்தபோது, “இந்திராவின் மருமகளே வருக... இந்தியாவின் திருமகளே வெல்க..” என முதன் முதலாக அவர் பக்கம் நின்று முழங்கியவர் தலைவர் கருணாநிதி.

    அதன் பின்னர்தான், அகில இந்திய கட்சிகள் பலவும் அணிவகுத்தன. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

    தயக்கத்தை உடைத்து, மயக்கத்தைத் தெளிவித்து, மதவெறியின் பிடியிலிருந்து நாடு விடுபட்டு ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட வேண்டுமென்றால் இன்றைய நிலையில் இந்திய தேசிய காங்கிரசின் இளந்தலைவர் ராகுல்காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டி உள்ளது. பாசிசத்தை எதிர்த்து நிற்கும் ஜனநாயகப் படையினை ஒருங்கிணைத்து நெறிப்படுத்த வலுவான தலைமை என்ற அடிப்படையில்தான் ராகுல்காந்தியை முன்மொழிந்து உள்ளேன்.

    மதவெறியை வீழ்த்த வேண்டும் என்ற உணர்வு கொண்ட தோழமை சக்திகள் இதனைப் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தற்போதைய சூழலில் இதுகுறித்து தோழமைக் கட்சிகளுக்குள் விவாதங்கள் ஏற்படலாம். ஜனநாயகத்தில் விவாதங்கள் வழியேதான் விடிவுகள் பிறந்து உள்ளன.

    மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் இருண்டு கொண்டிருக்கும் இந்தியா விடிவு பெற இந்த விவாதங்கள் கூட நல்ல விளைவுகளை உண்டாக்கும். ஜனநாயகம் காத்திட ராகுலின் கரத்தை வலுப்படுத்துவோம். நாசக் கரத்தை வீழ்த்திட நேசக் கரங்களாய் இணைவோம்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். #DMK #MKStalin #Congress #RahulGandhi
    ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் 120 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்பில் கூறப்பட்டள்ளது. #RajasthanElections #Congress

    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது வசுந்தரராஜே சிந்தியா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.

    கடந்த 2013-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது பா.ஜ.க. 163 தொகுதிகளில் வெற்றி பெற்று இமாலய பலத்துடன் ஆட்சி அமைத்தது. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 21 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.

    இந்த நிலையில் ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு டிசம்பர் மாதம் 7-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் இந்த தடவையும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. - காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

    பா.ஜ.க., காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ராஜஸ்தானில் முற்றுகையிட்டு தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அங்கு பா.ஜ.க.வுக்கு எதிராக கடும் அதிருப்தி அலை வீசுகிறது. இதனால் இந்த தடவை காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் என்று பல்வேறு கருத்து கணிப்புகள் மூலம் தெரிய வந்தது.


    பா.ஜ.க., காங்கிரஸ் இரு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் “டைம்ஸ் நவ்”- சி.என்.எஸ். ஆகியவை இணைந்து புதிய கருத்துக் கணிப்பை நடத்தின. அந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

    அதில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 110 முதல் 120 இடங்கள் வரை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு 70 முதல் 80 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு 3 இடங்களும் மற்ற கட்சிகள், சுயேட்சைகளுக்கு 9 இடங்களும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்பில் கூறப்பட்டள்ளது.

    முதல்-மந்திரி பதவிக்கு வர தகுதியானவர் யார்? என்ற கேள்விக்கு 32 சதவீதம் பேர் காங்கிரஸ் இளம் தலைவர் சச்சின் பைலட்டுக்கு ஆதரவளித்துள்ளனர். பா.ஜ.க. தலைவர் வசுந்தராவுக்கு 31 சதவீதம் பேர் ஆதரவளித்துள்ளனர்.

    காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான அசோக் ஹெலாட்டை 16 சதவீதம் பேர் ஆதரித்துள்ளனர். வசுந்தராவின் கடந்த 5 அண்டகால ஆட்சி எப்படி இருந்தது? என்ற கேள்விக்கு 48 சதவீதம் பேர் மோசம் என்றும் 35 சதவீதம் பேர் நன்றாக இருந்தது என்றும் கூறியுள்ளனர். #RajasthanElections #Congress

    மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி இன்று உஜ்ஜைன் மகா காளீஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார். #MadhyaPradeshElections #MahakaleshwarTemple #RahulGandhi
    உஜ்ஜைன்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 28-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக முதல்-மந்திரி சவுகான் தலைமையில் மத்தியப் பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சியில் இருந்து வருகிறது. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனன.


    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய பிரதேசத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று காலை உஜ்ஜைன் நகருக்கு வந்த ராகுல் காந்தி, புகழ்பெற்ற மகா காளீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் மாநில காங்கிரஸ் தலைவர் கமல் நாத், ஜோதிராத்தியா சிந்தியா ஆகியோரும் உடன் சென்றனர்.


    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று உஜ்ஜைன் மற்றும் தாபுவா பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். பிரச்சார பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.

    தேர்தல் நெருங்கும் சமயத்தில் பிரதமர் மோடி, மத்திய பிரதேசத்தில் பிரச்சாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. #MadhyaPradeshElections #MahakaleshwarTemple #RahulGandhi
    வங்கி மோசடி குற்றவாளியிடம் அருண்ஜெட்லி மகள் லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். #RahulGandhi #BJP #Congress

    ராய்ப்பூர்:

    90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்கர் மாநிலத்துக்கு இரண்டு கட்டமாக நவம்பர் 12 மற்றும் 20-ந் தேதிகளில் சட்டசபைத் தேர்தல் நடக்கிறது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அங்கு தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அங்குள்ள தனியார் கல்லூரியில் விவசாயிகள் மாநாடு நேற்று நடந்தது.

    இதில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

    நீரவ் மோடி, மெகுல் சோக்ஷி ஆகியோர் பற்றி நீங்கள் கண்டிப்பாக கேள்விப்பட்டு இருப்பீர்கள். இருவரும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் மோசடி செய்தவர்கள். ரூ.35 ஆயிரம் கோடியை திருடியவர்கள்.

     


    இதில் மொகுல்சோக்ஷி மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லியின் மகளின் வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் பணம் டெபாசிட் செய்து உள்ளார். அவரிடம் இருந்து ஜெட்லி மகள் பணம் பெற்றுள்ளார். ஊடகங்கள் மிரட்டி ஒடுக்கப்படுவதால் இதுகுறித்த செய்தியை வெளியிட தயங்குகின்றன.

    இதன் காரணமாகவே மெகுல் சோக்ஷி மீது அருண்ஜெட்லி எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் அவர் எளிதில் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

    இதே விவகாரம் குறித்து சத்தீஷ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வங்கி கடன் மோசடியாளர்கள் நீரவ் மோடி, மெகுல் சோக்ஷி நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக அருண்ஜெட்லிமகள் சோனாலி, மருமகன் ஜெயேஷ் பக்ஷி ஆகியோர் இருந்தனர். இதற்காக ரூ.24 லட்சம் கட்டணமாக பெற்றுள்ளனர்.

    நீரவ் மோடி வெளிநாட்டில் தலைமறைவான பிறகு சி.பி.ஐ.யும், அமலாக்கத் துறையும் பலரிடம் விசாரணை செய்தது. ஆனால் அருண்ஜெட்லியின் மகள், மருமகனிடம் மட்டும் விசாரணை நடைபெற வில்லை. இதற்கு அருண் ஜெட்லியின் தலையீடே காரணம்.

    வங்கி கடன் வழக்கில் இருந்து அவர் தனது மகளையும், மருமகளையும் காப்பாற்றினார். இதன்மூலம் தனது நிதி மந்திரி பதவியை அவர் தவறாக பயன்படுத்தி உள்ளார். எனவே அருண்ஜெட்லியை மத்திய மந்திரி பதவிவியில் இருந்து நீக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுளார். #RahulGandhi #BJP #Congress

    சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாட்கள் ராஜஸ்தானில் பிரசாரம் செய்கிறார். #RajasthanAssemblyElection #RahulGandhi

    ஜெய்ப்பூர்:

    பா.ஜனதா ஆட்சி நடை பெறும் ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு வருகிற டிசம்பர் மாதம் 7-ந்தேதி தேர்தல் நடை பெறுகிறது. ஒரே நாளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஏற்கனவே அங்கு முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டார். அடுத்த கட்டமாக வருகிற 24-ந்தேதி மீண்டும் ராஜஸ்தான் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    2 நாட்கள் அவர் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார். ஜாலாவார் என்ற இடத்தில் பிரமாண்ட பிரசார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் கலந்து கொண்டு பேசுகிறார். தொடர்ந்து ‘ரோடு ஷோ’ செல்லும் ராகுல்காந்தி கோதா என்ற இடத்தில் திறந்த ஜீப்பில் சென்று வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.


    மறுநாள் (25-ந்தேதி) சிகார் என்ற இடத்தில் பொதுமக்களை சந்திக்கிறார். அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். ராகுல் காந்தி கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்து 4-வது முறையாக ராஜஸ்தான் வருகிறார். இந்த மாதத்தில் மட்டும் 2-வது முறையாக வருவது குறிப்பிடத்தக்கது.

    ராகுல்காந்தி பிரசாரம் செய்யும் கோதா மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதிகளும், ஜாலாவார் மாவட்டத்தில் 4 தொகுதிகளும் அடங்கியுள்ளன.

    சிகார் மாவட்டத்தில் ராகுல்காந்தி கடந்த 5-ந்தேதி பிரசாரம் செய்தார். 25-ந் தேதி அவர் மீண்டும் பிரசாரம் செய்கிறார். #RajasthanAssemblyElection #RahulGandhi

    என் வாழ்வில் நான் நிரவ் மோடியை பார்த்ததே இல்லை. அவரை நான் சந்தித்ததாக ராகுல் காந்தி கூறி இருப்பது கற்பனை என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறி உள்ளார். #ArunJaitley #NiravModi #RahulGandhi
    புதுடெல்லி:

    பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு, வெளிநாட்டுக்கு தப்பி விட்ட மும்பை வைர வியாபாரி நிரவ் மோடியை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி சந்தித்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

    மேலும் பொதுத்துறை வங்கிகளிடம் பல்லாயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு லண்டனுக்கு தப்பி விட்ட தொழில் அதிபர் விஜய் மல்லையாவையும் அருண் ஜெட்லி, நாடாளுமன்றத்தில் சந்தித்ததாகவும் அவர் புகார் கூறி உள்ளார்.

    இவற்றுக்கு அருண் ஜெட்லி விளக்கம் அளித்து, தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் எழுதி இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-



    மத்திய பிரதேசத்தில் 2 வெவ்வேறு நிகழ்ச்சிகளில் திங்கட்கிழமை (நேற்று முன்தினம்) பேசிய ராகுல் காந்தி என்னைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

    முதல் பேச்சில் விஜய் மல்லையாவை நான் நாடாளுமன்றத்தில் சந்தித்ததாக ஒப்புக்கொண்டுள்ளேன் என்று கூறி இருக்கிறார். மேலும், அவர் லண்டனுக்கு தப்பி விடப்போகிறேன் என என்னிடம் கூறியதாகவும், நான் அவருக்கு அதற்கு உதவினேன் என்று ஒப்புக்கொண்டுள்ளேன் என்றும் கூறி இருக்கிறார்.

    இரண்டாவது பேச்சில், நிரவ் மோடியையும் நான் நாடாளுமன்றத்தில் சந்தித்தை ஒப்புக்கொண்டுள்ளேன் என்று கூறி இருக்கிறார். அவர் (நிரவ் மோடி) என்னை சந்தித்து, தான் நாட்டை விட்டு தப்பிச்செல்வதாக கூறியதாகவும், நான் அதற்கு உதவியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளேன் என்று சொல்லி இருக்கிறார்.

    இதில் உண்மை என்னவென்றால், என் வாழ்வில் நிரவ் மோடியை நான் பார்த்ததாகவே நினைவில் இல்லை. அப்படி இருக்கையில், நாடாளுமன்றத்தில் நான் அவரை சந்தித்தேனா என்ற கேள்விக்கே இடம் இல்லை.

    ராகுல்காந்தி கூறியபடி அவர் நாடாளுமன்றத்துக்கு வந்திருந்தால், அதை அங்குள்ள வரவேற்பு ஆவணங்கள் காட்டுமே.

    பின் நான் எங்கே ஒப்புக்கொண்டேன், ராகுல் காந்தி அவர்களே?

    நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் விஜய் மல்லையா ஒரு முறை நாடாளுமன்ற தாழ்வாரத்தில் என்னை துரத்தி வந்து பேசினார். நான் அவர் பேசியதை காது கொடுத்து கேட்கவில்லை.

    உங்கள் திட்டத்தை நீங்கள் வங்கிகளிடம் போய் பேசுங்கள் என்று கூறி விட்டேன்.

    இதைத்தான் அவர் நான் மல்லையாவை சந்தித்ததாகவும், அவர் லண்டனுக்கு தப்பப்போவதாக கூறியதாகவும், நான் உதவியதாகவும் கூறி உள்ளார்.

    இது முழுக்க முழுக்க பொய். இப்படிப்பட்ட பொய்யை அவர் எப்படி கற்பனை செய்கிறார்?

    இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.  #ArunJaitley #NiravModi #RahulGandhi
    இந்தியாவின் பிரதமர் ஒரு ஊழல்வாதி என இந்த நாட்டின் இளைஞர்களுக்கு நான் தெளிவாக சொல்ல விரும்புகிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். #RafaleDeal #RahulGandhi
    புதுடெல்லி :

    இந்திய விமானப்படையை வலுப்படுத்தும் நோக்கத்தில் பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் போட்டது.

    இந்த பேரத்தில் ரபேல் போர் விமானங்களுக்கு விலையை நிர்ணயம் செய்ததிலும், விமானங்களை தயாரித்து வழங்குவதில் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம், இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்தை கூட்டாளியாக சேர்த்ததிலும் ஊழல் நடந்துள்ளது என்பது காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டுகளை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

    இதற்கிடையில்,  பிரான்ஸ் நாட்டின் புலனாய்வு செய்தி நிறுவனமான மீடியாபார்ட்  பத்திரிகை டசால்ட் நிறுவனத்துடன் இந்திய அரசு மேற்கொண்ட ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில் இந்திய பங்குதாரராக ரிலையன்ஸ் நிறுவனம் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது டசால்ட் நிறுவன ஆவணங்களில் இந்த தகவல் உள்ளதாக என மீடியாபார்ட் கூறியுள்ளது.

    ஏற்கனவே பிரான்ஸ் முன்னாள் அதிபர் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையாகி இருந்த நிலையில் பிரான்ஸ் புலனாய்வு பத்திரிகை செய்தியால் இவ்விவகாரம் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான விமர்சனங்களுக்கு மேலும் தீனி போட்டது.

    இந்நிலையில் மீடியா பார்ட் பத்திரிக்கை வெளியிட்ட தகவலுக்கு டசால்ட் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முன்னதாக  பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி, இந்திய பிரதமரிடம் ரிலையன்ஸ் ஒரு ஒப்பந்தம் செய்ய  வேண்டும் என்று கூறி உள்ளார். அதையே ரஃபேல் மூத்த அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.  இது இந்த ஊழலில் ஒரு  தெளிவு ஆகும்.

    திடீரென்று பாதுகாப்பு அமைச்சர் பிரான்சிற்கு பயணம் மேற்கொண்டது ஏன்? அதற்கு என்ன இப்போது அவசரம்? இந்தியாவின் பிரதமர் ஒரு ஊழல்வாதி என இந்த நாட்டின் இளைஞர்களுக்கு நான் தெளிவாக சொல்ல விரும்புகிறேன்.

    டசால்ட் பெரிய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய அரசாங்கம் என்ன சொல்ல வேண்டுமென்று விரும்புகிறார்களோ அதைத்தான் டசால்ட் கூறுகிறது. பிரதமர் இந்த இழப்பீடு இல்லாமல் ஒப்பந்தம் செய்யப்படமாட்டார் என்று அவர்களின் உள் ஆவணம் தெளிவாகக் கூறுகிறது என அவர் தெரிவித்துள்ளார். #RafaleDeal #RahulGandhi
    ராகுல்காந்தி பிரதமராக வாய்ப்புள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #Kamalhaasan #Rahulgandhi

    புதுடெல்லி:

    டெல்லியில் ஒரு ஆங்கில பத்திரிகை சார்பில் தலைமைக்கான கருத்தரங்கு நடந்தது. முக்கிய கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு, தங்களது இலக்குகள் குறித்து பதில் அளித்தனர்.

    இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். கருத்தரங்கில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- பா.ஜ.க. வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புகள் உண்டா?

    பதில்:- அரசியலில் யாருமே தீண்டத்தகாதவர் இல்லை. எதிர்காலத்தில் அவசியம் ஏற்பட்டால் பா.ஜ.க. வுடனும் கூட்டணி சேரலாம். ஆனால் பா.ஜ.க. தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை மரபணு மூலக்கூறு எண்ணங்களையும் மனநிலையையும் புரிந்து கொள்ள வேண்டும்.


    கே:- சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை நீங்கள் வரவேற்றது ஏன்?

    ப:- அது எனது சொந்தக்கருத்து மட்டுமே. கட்சியின் கருத்தோ கொள்கையோ அல்ல.

    கே:- ராகுல் காந்தி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    ப:- நாட்டு மக்களின் சாத்தியப்படும் நபராக அவர் திகழ்கிறார். என்னை எப்படி தமிழ்நாட்டு அரசியலில் ஒரு வாய்ப்புள்ளவராக பார்க்கிறீர்களோ அதேபோல் நானும் அவரை நாட்டின் சாத்தியமாக பார்க்கிறேன். அவர் பிரதமர் ஆவதற்கான தகுதியும் வாய்ப்பும் உள்ளது.

    கே :- காவி அரசியல் பற்றி?

    ப :- அரசியல் என்பதே மக்களுக்கானது. அவர்கள் கடைபிடிக்கும் மதத்துக்கு உரிய மதிப்பையும் மரியாதையும் கொடுத்து கொடியில் இடம் கொடுத்திருக்கிறோம். மூன்று நிறங்கள் கொண்ட கொடியில் மூன்றுக்குமே சமமான முக்கியத்துவம் உண்டு. எந்த ஒரு நிறமும் மற்றவர்களை ஆக்கிரமித்துக்கொள்வதை நான் விரும்பமாட்டேன். 70 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட கொடி அது.

    கே:- கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பீர்களா?

    ப:- எங்களுடைய அடிப்படை கொள்கைகள் எல்லோருக்கும் தெரியும். மக்கள் நீதி மய்யம் என்பது எங்கள் கொள்கைகள் தான். எங்கள் கொள்கைகளை வைத்து மக்கள் எங்களை சுத்தமானவர்களாக, நேர்மையானவர்களாக பார்க்கிறார்கள்.

    ஊழலுக்கு எதிராக நாங்கள் போராடுவோம் என்று நம்புகிறார்கள். கறை படிந்த ஊழல் கட்சிகளுடன் நாங்கள் கைகுலுக்கினால் அந்த நம்பிக்கையை சிதைப்பது போல் ஆகிவிடும். எனவே கூட்டணி அமைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஊழல்வாதிகள் யாருடனும் நாங்கள் கூட்டாளியாக இருக்க மாட்டோம்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். #Kamalhaasan #Rahulgandhi

    ×