search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரபேல்"

    இந்தியாவின் பிரதமர் ஒரு ஊழல்வாதி என இந்த நாட்டின் இளைஞர்களுக்கு நான் தெளிவாக சொல்ல விரும்புகிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். #RafaleDeal #RahulGandhi
    புதுடெல்லி :

    இந்திய விமானப்படையை வலுப்படுத்தும் நோக்கத்தில் பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் போட்டது.

    இந்த பேரத்தில் ரபேல் போர் விமானங்களுக்கு விலையை நிர்ணயம் செய்ததிலும், விமானங்களை தயாரித்து வழங்குவதில் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம், இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்தை கூட்டாளியாக சேர்த்ததிலும் ஊழல் நடந்துள்ளது என்பது காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டுகளை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

    இதற்கிடையில்,  பிரான்ஸ் நாட்டின் புலனாய்வு செய்தி நிறுவனமான மீடியாபார்ட்  பத்திரிகை டசால்ட் நிறுவனத்துடன் இந்திய அரசு மேற்கொண்ட ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில் இந்திய பங்குதாரராக ரிலையன்ஸ் நிறுவனம் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது டசால்ட் நிறுவன ஆவணங்களில் இந்த தகவல் உள்ளதாக என மீடியாபார்ட் கூறியுள்ளது.

    ஏற்கனவே பிரான்ஸ் முன்னாள் அதிபர் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையாகி இருந்த நிலையில் பிரான்ஸ் புலனாய்வு பத்திரிகை செய்தியால் இவ்விவகாரம் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான விமர்சனங்களுக்கு மேலும் தீனி போட்டது.

    இந்நிலையில் மீடியா பார்ட் பத்திரிக்கை வெளியிட்ட தகவலுக்கு டசால்ட் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முன்னதாக  பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி, இந்திய பிரதமரிடம் ரிலையன்ஸ் ஒரு ஒப்பந்தம் செய்ய  வேண்டும் என்று கூறி உள்ளார். அதையே ரஃபேல் மூத்த அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.  இது இந்த ஊழலில் ஒரு  தெளிவு ஆகும்.

    திடீரென்று பாதுகாப்பு அமைச்சர் பிரான்சிற்கு பயணம் மேற்கொண்டது ஏன்? அதற்கு என்ன இப்போது அவசரம்? இந்தியாவின் பிரதமர் ஒரு ஊழல்வாதி என இந்த நாட்டின் இளைஞர்களுக்கு நான் தெளிவாக சொல்ல விரும்புகிறேன்.

    டசால்ட் பெரிய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய அரசாங்கம் என்ன சொல்ல வேண்டுமென்று விரும்புகிறார்களோ அதைத்தான் டசால்ட் கூறுகிறது. பிரதமர் இந்த இழப்பீடு இல்லாமல் ஒப்பந்தம் செய்யப்படமாட்டார் என்று அவர்களின் உள் ஆவணம் தெளிவாகக் கூறுகிறது என அவர் தெரிவித்துள்ளார். #RafaleDeal #RahulGandhi
    ரபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கூறிய கருத்து தவறானது என்று ராணுவ அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. #RafaleDeal #HindustanAeronauticsLimited #MinistryofDefence
    புதுடெல்லி :

    பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக மத்திய அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் - பா.ஜனதா இடையே நீண்ட வாக்குவாதம் நீடித்து வருகிறது.

    சமீபத்தில் ஊடகங்களிடம் பேசிய மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், ரபேல் போர் விமானத்தை தயாரிக்கிற தகுதித்திறனை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் பெற்றிருக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவன முன்னாள் தலைவர் சுவர்ணா ராஜு அளித்த பேட்டியில், ‘நான்காம் தலைமுறை போர் விமானமான, 25 டன் எடையுள்ள சுகோய்–30 ரக போர் விமானங்களையே இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் தயாரிக்கும்போது, ரபேல் விமானங்களை எளிதாக தயாரித்து இருக்க முடியும்’ என்று கூறினார்.

    இதையடுத்து, இவ்விவகாரத்தில் பொய் கூறிய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

    இந்நிலையில், சுவர்ண ராஜு கூறியதை ராணுவ அமைச்சகம் நிராகரித்துள்ளது. இதுகுறித்து ராணுவ அமைச்சகம் குறிப்பிட்டுள்ளதாவது, ‘இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கும், பிரான்ஸ் நிறுவனமான டசால்ட் ஏவியேசன் நிறுவனத்துக்கும் பல்வேறு முரண்கள் இருந்தன.

    இதுபற்றி 2012–ம் ஆண்டு அக்டோபர் 11–ந் தேதி, ராணுவ அமைச்சகத்துக்கு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் கடிதம் எழுதியது. இன்னும் தீர்க்க முடியாத பிரச்சினைகள் இருப்பதாக 2014–ம் ஆண்டும் கூறியது. இந்த முரண்பாடுகளால்தான், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே, சுவர்ண ராஜு கூறுவது தவறானது’ என்று தெரிவித்துள்ளது. #RafaleDeal #HindustanAeronauticsLimited #MinistryofDefence
    ரபேல் விமானம் கொள்முதல் செய்வதில் உள்ள முறைகேடுகள் தொடர்பாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் நீதி விசாரணை மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆன்ந்த் சர்மா தெரிவித்துள்ளார். #RafaleDeal
    புதுடெல்லி:

    இந்திய விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 32 ரபேல் ரக விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.59 ஆயிரம் கோடிக்கு இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன.

    ரபேல் விமானங்களை வாங்க காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் அந்த ஒப்பந்த்தை மாற்றி அமைத்து புதிய ஒப்பந்தத்தை பாரதிய ஜனதா ஆட்சியில் ஏற்படுத்தினார்கள்.

    அதில் ஒரு ரபேல் போர் விமானம் ரூ.520 கோடி கொடுத்து விமானத்தை வாங்க காங்கிரஸ் ஆட்சியில் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், ஆனால் அதற்கு பதிலாக ரூ.1600 கோடி கொடுத்து விமானத்தை வாங்க பாரதிய ஜனதா அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

    இந்நிலையில், இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, அவர்களிடம் கூறுகையில், அதிக விலை கொடுத்து ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதில் உள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    மேலும், ரபேல் விமான கொள்முதலில் முறைகேடுகள் நடைபெறவில்லை எனில் நாடாளுமன்ற கூட்டுக் குழு மூலம் விசாரணை நடத்த அரசு பயப்படுவது ஏன்? என கேள்வி எழுப்பிய அவர், ரபேல் ஒப்பந்தம் இந்த நூற்றாண்டில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல் ஆகும்.

    இந்த விவகாரத்தில் சரியான விசாரணை மேற்கொள்ளாத பட்சத்தில், அடுத்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் ரபேல் விமான ஊழல் தொடர்பாக நீதி விசாரணை அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார். #RafaleDeal
    ரபேல் போர் விமான விவகாரத்தில், ரூ.5 ஆயிரம் கோடி நஷ்டஈடு கேட்டு ரிலையன்ஸ் நிறுவனம் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.
    அகமதாபாத் :

    வெளிநாட்டில் இருந்து ரபேல் போர் விமானங்களை இந்திய ராணுவத்துக்கு வாங்குவது தொடர்பாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சி ஏற்கனவே குற்றம்சாட்டி உள்ளது.

    ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான நே‌ஷனல் ஹெரால்டு பத்திரிகையில் வெளியான கட்டுரை தொடர்பாக, அந்த பத்திரிகையின் பதிப்பாளரான அசோசியேட்டர் ஜர்னல் லிமிடெட் நிறுவனத்தின் மீது, ‘ரிலையன்ஸ் பாதுகாப்பு, இன்ப்ராட்ஸ்ரக்சர், ஏரோஸ்ட்ரக்சர்’ நிறுவனத்தின் சார்பில் குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் உள்ள சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அந்த பத்திரிகையில் வெளியான கட்டுரை தங்கள் நிறுவனத்துக்கு களங்கமும் அவதூறும் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், எனவே ரூ.5 ஆயிரம் கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக அடுத்த மாதம் (செப்டம்பர்) 7–ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு கோரி நே‌ஷனல் ஹெரால்டு பத்திரிகை நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி பி.ஜே.தமகுவாலா உத்தரவிட்டார்.
    ரபேல் போர் விமான முறைகேடு ஊழல் தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியதற்கு மறுப்பு தெரிவித்து ராகுல் காந்திக்கு அனில் அம்பானி கடிதம் எழுதியுள்ளார். #RafaleDeal #AnilAmbani #RahulGandhi
    மும்பை:

    இந்திய விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 36 ரபேல் ரக விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.59 ஆயிரம் கோடிக்கு இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன.

    ரபேல் விமானங்களை வாங்க காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் அந்த ஒப்பந்தத்தை மாற்றி அமைத்து புதிய ஒப்பந்தத்தை பாரதிய ஜனதா ஆட்சியில் ஏற்படுத்தினார்கள். அதில் அதிக தொகை கொடுத்து விமானத்தை வாங்க ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், இதில் ஊழல் நடந்திருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி இருக்கிறது.

    ரபேல் விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்யும் பிரான்ஸ் நிறுவனமான டஸ்சால்ட் நிறுவனத்துடன் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து கூட்டாக பாதுகாப்பு தளவாடங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது.

    எனவே, அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு சாதகமாக மத்திய அரசு ரபேல் ஒப்பந்தத்தை மாற்றி அமைத்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.



    இந்நிலையில், தன் மீதான ராகுல் கந்தியின் குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு தெரிவித்து தொழிலதிபர் அனில் அம்பானி அவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :-

    ராகுல் காந்தி, என்னை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியிருப்பது வருத்தம் அளிக்கிறது.  ரபேல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரம் அற்றதாகும்.

    தீங்கு இழைக்கும் நோக்கத்தில் கார்பரேட் நிறுவன போட்டியாளர்கள் சிலர் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு, தவறான தகவல்களை அளித்து, தவறாக இயக்கி, தவறான பாதையில் அழைத்து செல்கிறார்கள். ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும், இந்திய பாதுகாப்புத்துறைக்கும் இடையே ரபேல் விமான தயாரிப்பு தொடர்பாக எவ்வித ஒப்பந்தமும் ஏற்படுத்தப்படவில்லை.

    ரபேல் விமானத்தில் இருக்கும் ஒரே ஒரு பாகம் கூட டஸ்சால்ட் - ரிலையன்ஸ் கூட்டு தயாரிப்பு கிடையாது. ஒப்பந்தத்தில் உள்ள 36 ரபேல் போர் விமானங்களின் 100 சதவிகத பாகங்கள் அனைத்தும் பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

    எனவே, ரபேல் விமான ஊழல் தொடர்பாக தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்புவதை காங்கிரஸ் கட்சி நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அனில் அம்பானி தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நேரத்தில் பாரதிய ஜனதா அரசு மீது ரபேல் விமான ஊழல் விவகாரத்தை பெரிய அளவில் கிளப்ப காங்கிரஸ் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. #RafaleDeal #AnilAmbani #RahulGandhi
    ×