search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NiravModi"

    என்னை கொன்று விடுவார்கள் என்பதால் நாடு திரும்ப மாட்டேன் என்று வக்கீல் மூலம் கோர்ட்டில் வைர வியாபாரி நிரவ் மோடி தெரிவித்தார். #NiravModi #India #PNBFraud
    மும்பை:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடிய பிரபல மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி. அவர் எந்த நாட்டில் பதுங்கி உள்ளார் என்பது இதுவரை தெளிவாக தெரிய வரவில்லை.

    அவர் மீது சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளன. நிரவ் மோடி மீதான வழக்கு மும்பையில் உள்ள சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த கோர்ட்டில் அமலாக்கத்துறை அண்மையில் ஒரு மனுவை தாக்கல் செய்தது.



    அதில், தலைமறைவாக உள்ள நிரவ் மோடியை பொருளாதர குற்றவாளிகள் சட்டத்தின் கீழ், தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த மனு மீது கோர்ட்டில் விசாரணை நேற்று நடந்தது.

    அப்போது நிரவ் மோடி தரப்பில் ஆஜரான வக்கீல் விஜய் அகர்வால் கூறுகையில், தனது சொத்து விவரங்கள் குறித்த எந்த தகவலோ, புள்ளிவிவரமோ நிரவ் மோடியிடம் இல்லை என்றார்.

    அதற்கு அமலாக்கத்துறை வக்கீல்கள், நிரவ் மோடியை விசாரணைக்கு வரும்படி இதுவரை ஏராளமான இ-மெயில்கள், சம்மன்கள் அனுப்பப்பட்டு உள்ளன. அதை அவரும் பெற்றுக் கொண்டு உள்ளார். ஆனால் எங்களுடைய விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் இந்தியா திரும்புவதற்கு விரும்பவில்லை என்றனர்.

    அப்போது, நிரவ் மோடியின் வக்கீல், “எனது கட்சிக்காரரை ராவணனுடன் ஒப்பிடுகின்றனர். அவருடைய 50 அடி உயர உருவ பொம்மையை இந்தியாவில் எரித்துள்ளனர். நாடு திரும்பினால் அவரை கொன்று விடுவார்கள் என்பதற்கான ஆதாரங்களும் உள்ளன. எனவே பாதுகாப்பு காரணம் கருதி அவர் நாடு திரும்ப விரும்பவில்லை. அதேநேரம் தான் விசாரணைக்கு ஆஜராக முடியாதது பற்றி அமலாக்கத்துறை, சி.பி.ஐ.க்கு அவர் கடிதமும் எழுதி உள்ளார்” என்று வாதிட்டார்.

    அதற்கு அமலாக்கத்துறை வக்கீல்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தால் நிரவ் மோடி அதுபற்றி போலீசில் புகார் செய்திருக்கவேண்டும். ஆனால் அதைச் செய்யவில்லை என்று வாதிட்டனர்.  #NiravModi #India #PNBFraud 
    என் வாழ்வில் நான் நிரவ் மோடியை பார்த்ததே இல்லை. அவரை நான் சந்தித்ததாக ராகுல் காந்தி கூறி இருப்பது கற்பனை என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறி உள்ளார். #ArunJaitley #NiravModi #RahulGandhi
    புதுடெல்லி:

    பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு, வெளிநாட்டுக்கு தப்பி விட்ட மும்பை வைர வியாபாரி நிரவ் மோடியை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி சந்தித்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

    மேலும் பொதுத்துறை வங்கிகளிடம் பல்லாயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு லண்டனுக்கு தப்பி விட்ட தொழில் அதிபர் விஜய் மல்லையாவையும் அருண் ஜெட்லி, நாடாளுமன்றத்தில் சந்தித்ததாகவும் அவர் புகார் கூறி உள்ளார்.

    இவற்றுக்கு அருண் ஜெட்லி விளக்கம் அளித்து, தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் எழுதி இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-



    மத்திய பிரதேசத்தில் 2 வெவ்வேறு நிகழ்ச்சிகளில் திங்கட்கிழமை (நேற்று முன்தினம்) பேசிய ராகுல் காந்தி என்னைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

    முதல் பேச்சில் விஜய் மல்லையாவை நான் நாடாளுமன்றத்தில் சந்தித்ததாக ஒப்புக்கொண்டுள்ளேன் என்று கூறி இருக்கிறார். மேலும், அவர் லண்டனுக்கு தப்பி விடப்போகிறேன் என என்னிடம் கூறியதாகவும், நான் அவருக்கு அதற்கு உதவினேன் என்று ஒப்புக்கொண்டுள்ளேன் என்றும் கூறி இருக்கிறார்.

    இரண்டாவது பேச்சில், நிரவ் மோடியையும் நான் நாடாளுமன்றத்தில் சந்தித்தை ஒப்புக்கொண்டுள்ளேன் என்று கூறி இருக்கிறார். அவர் (நிரவ் மோடி) என்னை சந்தித்து, தான் நாட்டை விட்டு தப்பிச்செல்வதாக கூறியதாகவும், நான் அதற்கு உதவியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளேன் என்று சொல்லி இருக்கிறார்.

    இதில் உண்மை என்னவென்றால், என் வாழ்வில் நிரவ் மோடியை நான் பார்த்ததாகவே நினைவில் இல்லை. அப்படி இருக்கையில், நாடாளுமன்றத்தில் நான் அவரை சந்தித்தேனா என்ற கேள்விக்கே இடம் இல்லை.

    ராகுல்காந்தி கூறியபடி அவர் நாடாளுமன்றத்துக்கு வந்திருந்தால், அதை அங்குள்ள வரவேற்பு ஆவணங்கள் காட்டுமே.

    பின் நான் எங்கே ஒப்புக்கொண்டேன், ராகுல் காந்தி அவர்களே?

    நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் விஜய் மல்லையா ஒரு முறை நாடாளுமன்ற தாழ்வாரத்தில் என்னை துரத்தி வந்து பேசினார். நான் அவர் பேசியதை காது கொடுத்து கேட்கவில்லை.

    உங்கள் திட்டத்தை நீங்கள் வங்கிகளிடம் போய் பேசுங்கள் என்று கூறி விட்டேன்.

    இதைத்தான் அவர் நான் மல்லையாவை சந்தித்ததாகவும், அவர் லண்டனுக்கு தப்பப்போவதாக கூறியதாகவும், நான் உதவியதாகவும் கூறி உள்ளார்.

    இது முழுக்க முழுக்க பொய். இப்படிப்பட்ட பொய்யை அவர் எப்படி கற்பனை செய்கிறார்?

    இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.  #ArunJaitley #NiravModi #RahulGandhi
    கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நிரவ் மோடியை நாடு கடத்தக்கோரும் மத்திய அரசின் கடிதம் இங்கிலாந்திடம் ஒப்படைக்கப்பட்டது. #NiravModi
    புதுடெல்லி :

    வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ள. அவரை கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு மத்திய அரசு, இங்கிலாந்து அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

    இந்தியா - இங்கிலாந்து இடையே பரஸ்பரம் குற்றவாளிகளை நாடு கடத்துவது தொடர்பாக கடந்த 1993-ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தப்படி நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு மத்திய அரசு இங்கிலாந்து அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.

    இந்த கடிதத்தை லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அனுப்பிய மத்திய அரசு, அதை இங்கிலாந்து அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு தூதரக அதிகாரிகளை அறிவுறுத்தியது. அதன்படி மத்திய அரசின் கடிதம் முறைப்படி இங்கிலாந்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே, இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் கோர்ட்டில் விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
    பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடியில் சிக்கி வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற பிரபல வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.170 கோடி சொத்துக்களை பொருளாதார அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. #NiravModi #PNBscam #ED
    புதுடெல்லி:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 11,400 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்து விட்டு வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வரும் அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களை முடக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதில், சி.பி.ஐ., அமலாக்க பிரிவினர், வருமான வரித்துறையினர் என 3 தரப்பினரும் ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே நிரவ் மோடியின் நகை கடை மற்றும் வைர நிறுவனங்களில் இருந்து ரூ.5,714 கோடி முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் 141 வங்கி கணக்குகளை முடக்கி வைத்துள்ளனர்.



    நிரவ் மோடி நிறுவனங்களின் டெபாசிட்டுகள், பங்குச்சந்தை முதலீடுகள் உள்ளிட்டவை தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. அதன்படி முதலில் ரூ.94 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டது. 9 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

    இந்த ‘மெகா மோசடி’ தொடர்பாக நிரவ் மோடி குழுமத்துக்கு சொந்தமான 523 கோடி ரூபாய் மதிப்புடைய 21 சொத்துகளையும், ரூ.85 கோடி மதிப்பிலான 34 ஆயிரம் தங்கம், வைர நகைகளையும் அமலாக்கத்துறையினர் சமீபத்தில் பறிமுதல் செய்தனர்.

    இந்நிலையில், நிரவ் மோடிக்கு சொந்தமான சுமார் 170 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பொருளாதார அமலாக்கத்துறையினர் இன்று பறிமுதல் செய்தனர்.

    அமலாக்கத்துறையினர்  நிரவ் மோடி, முகுல் ஜோஸ்கி உள்ளிட்டோர்களுக்கு சொந்தமான  சுமார் 7 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை இதுவரை பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  #NiravModi #PNBscam #ED

    ×