search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Punjab national bank"

    லண்டனில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் நிரவ் மோடியின் நீதிமன்றக் காவல் ஜூன் 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    லண்டன்:

    மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி (48) தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்று வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர்.   

    லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடியை கடந்த மார்ச் மாதம் லண்டன் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கைதிகள் நெருக்கடி மிகுந்த வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு 3 முறை நிராகரிக்கப்பட்டது. அவரது சிறைக்காவலும் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது. கடைசியாக அவரது ஜாமீன் மனுவை நிராகரித்தபோது, மே 24-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்தது வழக்கின் முழுமையான விசாரணை மே 30-ம் தேதி நடைபெறும் என அறிவித்தது.

    இதற்கிடையே நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக லண்டன் கோர்ட்டில் வழக்கு நடைபெறுகிறது. நிரவ் மோடியை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    இந்த ஆவணங்களின் அடிப்படையில் இன்று விசாரணை தொடங்கியது. அப்போது நிரவ் மோடி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரது நீதிமன்றக் காவலை ஜூன் 27-ம்தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 29-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அத்துடன், நிரவ் மோடி இந்தியாவில் எந்த சிறையில் அடைக்கப்படுவார்? என்ற தகவலை இந்திய அரசு 14 நாட்களுக்குள் தெரிவிக்கும்படி நீதிபதி கேட்டுக்கொண்டார்.
    நிரவ் மோடியின் ஜாமீன் மனு, இங்கிலாந்து நீதிமன்றத்தால் மூன்றாவது முறையாக நிராகரிக்கப்பட்டது. #NiravModi #PNBFraud
    லண்டன்:

    மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48), அங்குள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றின் மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக 2 பில்லியன் டாலருக்கு அதிகமான தொகையை (சுமார் ரூ.13 ஆயிரத்து 500 கோடி) பரிமாற்றம் செய்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக அவர் மீது இந்தியாவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு முன்பாகவே அவர் நாட்டில் இருந்து தப்பி விட்டார். அவர் இங்கிலாந்தில் இருப்பதை அறிந்து, அவரை நாடு கடத்திக்கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. இந்த நிலையில் அவர் லண்டனில் கடந்த மார்ச் 19ந்தேதி கைது செய்யப்பட்டார். 20ந்தேதி வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் தரப்பில் ஜாமீன் மனு தாக்கலானது. ஆனால் அதை நீதிபதி மேரி மல்லான் தள்ளுபடி செய்துவிட்டார். அதைத்தொடர்ந்து நிரவ் மோடி சிறையில் அடைக்கப்பட்டார்.

    அவரது நீதிமன்றக்காவல், கடந்த மார்ச் 29ந்தேதி முடிந்தது.  அன்றைய தினம் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது சார்பில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.  சாட்சியங்களை கலைத்து விடுவார் என இந்திய தரப்பில் வாதிடப்பட்டது.  அதனால் லண்டன் நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    இந்நிலையில், நிரவ் மோடி ஜாமீன் கோரி இங்கிலாந்து நீதிமன்றத்தின் முன் இன்று ஆஜரானார். ஏற்கனவே இரண்டு முறை அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், 3வது முறையாக இன்றும் அவரது ஜாமீன் மனுவை லண்டன் கோர்ட் நிராகரித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #NiravModi #PNBFraud 
    ஏராளமான ஆதாரங்கள் இருப்பதால் விஜய்மல்லையாவுக்கு முன்னதாகவே நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வந்து வர திட்டமிடப்பட்டுள்ளது. #NiravModi
    லண்டன்:

    மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெகில் கோக்‌ஷி ஆகியோர் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடியை மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார்கள்.

    இதில் நிரவ்மோடி சில மாதங்களாக பல நாடுகளுக்கு சென்று தலைமறைவாக இருந்தார்.

    கடைசியாக இங்கிலாந்து வந்த அவர் லண்டனில் தங்கி இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரை நாடு கடத்தி இந்தியா கொண்டுவர மத்திய அரசு முயற்சித்தது. இதற்கான சட்ட நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது.

    அவருக்கு லண்டன் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. அதை ஏற்று அவர் ஆஜர் ஆகவில்லை. இதனால் கோர்ட்டு உத்தரவின்படி அவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

    அவர் உடனடியாக விடுவிக்கும்படி கோர்ட்டில் ஜாமீன் கேட்டார். ஆனால் நீதிபதி ஜாமீனில் விடுவிக்க மறுத்து விட்டார். 26-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அவரை முறைப்படி நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கான சட்ட நடைமுறைகள் விரைவில் தொடங்க உள்ளன. நிரவ்மோடி முறைகேடு செய்ததற்கான பல ஆதாரங்கள் இந்தியா தரப்பில் இருந்து இங்கிலாந்திடம் கொடுக்கப்பட்டுள்ளன.

    நிரவ்மோடி மீது சி.பி.ஐ., அமலாக்க பிரிவு ஆகியவை தனித்தனியாக வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த 2 அமைப்புகளுமே ஏராளமான மோசடி ஆதாரங்களை திரட்டி உள்ளன. அதைவைத்து நிரவ்மோடியை எளிதாக இந்தியா கொண்டு வந்து விடலாம் என்று மத்திய அரசு கருதுகிறது.

    இதே போன்று மோசடி செய்து லண்டனில் தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வர முயற்சி நடந்தது. ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரை இந்தியா கொண்டு வருவதற்கு தாமதமாகி வருகிறது.

    ஆனால் நிரவ் மோடியை பொறுத்தவரை ஏராளமான ஆதாரங்கள் இருப்பதால் விஜய்மல்லையாவுக்கு முன்னதாகவே நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வந்து விடலாம் என்று நினைக்கின்றனர்.

    இதற்கான நடவடிக்கைகளை இந்தியாவும் இங்கிலாந்தும் இணைந்து எடுக்கும். எனவே 6 மாத காலத்துக்குள் நிரவ் மோடி இந்தியா கொண்டு வரப்பட வாய்ப்பு ஏற்பட்டு இருப்பதாக மத்திய வெளியுறவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #NiravModi
    பணமோசடி வழக்கில் தேடப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியை பிரிட்டனில் இருந்து நாடு கடத்துவது தொடர்பான இந்தியாவின் கோரிக்கை நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. #NiravModi #NiravModiExtradition
    லண்டன்:

    இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் (வயது 48), அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    தப்பி ஓடிய நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகின. பின்னர் நிரவ் மோடி பிரிட்டனில் இருப்பதாக தெரியவந்தது. அவரை இந்தியாவிற்கு கொண்டு வருவது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்தது.

    இந்நிலையில், நிரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பான இந்தியாவின் கோரிக்கையை, பிரிட்டன் உள்துறை அமைச்சகம், லண்டன் நீதிமன்றத்திற்கு அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வழக்கு லண்டன் நீதிமன்றத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அனுப்பப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வந்திருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



    இதையடுத்து நிரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பான சட்ட நடைமுறை விரைவில் தொடங்க உள்ளது. இந்தியாவில் இருந்து அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் விரைவில் லண்டன் சென்று, வழக்கறிஞர்களை நியமித்து நிரவ் மோடிக்கு எதிரான ஆதாரங்களுடன் வழக்கை நடத்த உள்ளனர்.

    நிரவ் மோடி தற்போது லண்டனில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருப்பதாகவும், வைர வியாபாரம் செய்து வருவதாகவும் பிரிட்டன் நாளிதழ் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. #NiravModiExtradition
    என்னை கொன்று விடுவார்கள் என்பதால் நாடு திரும்ப மாட்டேன் என்று வக்கீல் மூலம் கோர்ட்டில் வைர வியாபாரி நிரவ் மோடி தெரிவித்தார். #NiravModi #India #PNBFraud
    மும்பை:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடிய பிரபல மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி. அவர் எந்த நாட்டில் பதுங்கி உள்ளார் என்பது இதுவரை தெளிவாக தெரிய வரவில்லை.

    அவர் மீது சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளன. நிரவ் மோடி மீதான வழக்கு மும்பையில் உள்ள சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த கோர்ட்டில் அமலாக்கத்துறை அண்மையில் ஒரு மனுவை தாக்கல் செய்தது.



    அதில், தலைமறைவாக உள்ள நிரவ் மோடியை பொருளாதர குற்றவாளிகள் சட்டத்தின் கீழ், தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த மனு மீது கோர்ட்டில் விசாரணை நேற்று நடந்தது.

    அப்போது நிரவ் மோடி தரப்பில் ஆஜரான வக்கீல் விஜய் அகர்வால் கூறுகையில், தனது சொத்து விவரங்கள் குறித்த எந்த தகவலோ, புள்ளிவிவரமோ நிரவ் மோடியிடம் இல்லை என்றார்.

    அதற்கு அமலாக்கத்துறை வக்கீல்கள், நிரவ் மோடியை விசாரணைக்கு வரும்படி இதுவரை ஏராளமான இ-மெயில்கள், சம்மன்கள் அனுப்பப்பட்டு உள்ளன. அதை அவரும் பெற்றுக் கொண்டு உள்ளார். ஆனால் எங்களுடைய விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் இந்தியா திரும்புவதற்கு விரும்பவில்லை என்றனர்.

    அப்போது, நிரவ் மோடியின் வக்கீல், “எனது கட்சிக்காரரை ராவணனுடன் ஒப்பிடுகின்றனர். அவருடைய 50 அடி உயர உருவ பொம்மையை இந்தியாவில் எரித்துள்ளனர். நாடு திரும்பினால் அவரை கொன்று விடுவார்கள் என்பதற்கான ஆதாரங்களும் உள்ளன. எனவே பாதுகாப்பு காரணம் கருதி அவர் நாடு திரும்ப விரும்பவில்லை. அதேநேரம் தான் விசாரணைக்கு ஆஜராக முடியாதது பற்றி அமலாக்கத்துறை, சி.பி.ஐ.க்கு அவர் கடிதமும் எழுதி உள்ளார்” என்று வாதிட்டார்.

    அதற்கு அமலாக்கத்துறை வக்கீல்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தால் நிரவ் மோடி அதுபற்றி போலீசில் புகார் செய்திருக்கவேண்டும். ஆனால் அதைச் செய்யவில்லை என்று வாதிட்டனர்.  #NiravModi #India #PNBFraud 
    வெளிநாடுகளில் இருந்து வைர கற்களை இறக்குமதி செய்தபோது சுங்க வரியை ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நிரவ்மோடியை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று சூரத் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #NiravModi
    புதுடெல்லி:

    குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ்மோடி தொழிலை விருத்தி செய்வதற்காக பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கினார்.

    பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் மட்டும் ரூ.12 ஆயிரத்து 400 கோடி ரூபாயை கடன் வாங்கி இருந்தார்.

    கடனை திருப்பி கொடுக்காமல் அவர் இழுத்தடித்துக் கொண்டே இருந்தார். இதையடுத்து அவர் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதனால் அவர் கடந்த ஜனவரி மாதம் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்.

    அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. அவர் செய்த பணப்பரிமாற்றம் மோசடி குறித்து அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து வைர கற்களை இறக்குமதி செய்தபோது சுங்க வரியை ஏய்ப்பு செய்ததாக அவர் மீது சூரத் கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது.

    அப்போது நிரவ்மோடிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. மேலும் நிரவ் மோடியை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். #NiravModi
    இந்தியாவுக்கு கொண்டு வந்து என்னை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று டி.வி. விவாதத்தில் பேசி வருவதால், என் மீதான பிடிவாரண்டை ரத்து செய்யுங்கள் என்று நகை வியாபாரி மெகுல் சோக்சி மும்பை கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். #MehulChoksi
    மும்பை:

    பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியை ஏமாற்றி, ரூ.12 ஆயிரத்து 636 கோடி மோசடி செய்ததாக பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, அவருடைய உறவினரும், கீதாஞ்சலி குழும நிர்வாக இயக்குனருமான மெகுல் சோக்சி உள்ளிட்டோர் மீது சி.பிஐ. வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து, நிரவ் மோடி, மெகுல் சோக்சி இருவரும் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று விட்டனர். மெகுல் சோக்சி மீது சி.பி.ஐ. 2 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது.

    அவற்றின் அடிப்படையில், கடந்த மே 22-ந் தேதி, மும்பை தனிக்கோர்ட்டு, மெகுல் சோக்சிக்கு எதிராக ‘பிடிவாரண்டு’ பிறப்பித்தது. அதை ரத்து செய்யக்கோரி, கடந்த ஜூன் மாதம் ஏற்கனவே அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்நிலையில், மெகுல் சோக்சி சார்பில் அவருடைய வக்கீல் சஞ்சய் அப்பாட், நேற்று மும்பை தனிக்கோர்ட்டில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-


    தேசிய செய்தி தொலைக்காட்சி ஒன்றில் சமீபத்தில் ஒரு விவாத நிகழ்ச்சி பார்த்தேன். அதில், தொலைபேசி மூலம் பேசிய 2 பேர், “தனிப்படை மூலம் என்னை பிடித்து இந்தியாவுக்கு கொண்டு வந்து சுட்டுக்கொல்ல வேண்டும். அப்போதுதான், இனிமேல் வங்கி மோசடிகளை நிறுத்த முடியும்” என்று பேசினர்.

    அதைக்கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். நிகழ்ச்சி தொகுப்பாளரும், விவாதத்தில் பங்கேற்றவர்களும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் சிரித்தபடி இருந்தனர். இதனால், அவர்களும் அக்கருத்தை ஆதரிப்பது போல் உள்ளது.

    ஆகவே, இந்தியாவுக்கு கொண்டு சென்றால், என்னை சுட்டுக்கொல்லவோ, கும்பல் கொலை செய்யவோ வாய்ப்புள்ளது. இதை கருத்திற்கொண்டு, எனக்கு எதிரான பிடிவாரண்டை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு மெகுல் சோக்சி கூறியுள்ளார்.

    இதற்கு சி.பி.ஐ. பதில் அளிக்குமாறு கூறிய கோர்ட்டு, அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 3-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.  #pnbfraudcase #MehulChoksi #NiravModi
    பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தலைமறைவாக இருக்கும் நிரவ் மோடியை கைது செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று ஜாமினில் விட முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. #NiravModi
    மும்பை:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வரும் அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களை முடக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதில், சி.பி.ஐ., பொருளாதார அமலாக்கப் பிரிவினர், வருமான வரித்துறையினர் என 3 தரப்பினரும் ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே நிரவ் மோடியின் நகை கடை மற்றும் வைர நிறுவனங்களில் இருந்து ரூ.5,714 கோடி முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் 141 வங்கி கணக்குகளை முடக்கி வைத்துள்ளனர்.

    நிரவ் மோடி நிறுவனங்களின் டெபாசிட்டுகள், பங்குச்சந்தை முதலீடுகள் உள்ளிட்டவை தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ரூ.94 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டது. நிரவ் மோடி குழுமத்துக்கு சொந்தமான 523 கோடி ரூபாய் மதிப்புடைய 21 சொத்துகளை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். 9 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர். இதற்கிடையில், பிரிட்டன் நாட்டில் குடியேற நிரவ் கோடி முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், தலைமறைவாக இருக்கும் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தாரை கைது செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று ஜாமினில் விட முடியாத கைது உத்தரவை பிறப்பித்துள்ளது. #warrantagainstNiravModi #NiravModi
    ×