என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » mumbai high court
நீங்கள் தேடியது "Mumbai High Court"
இந்தியாவுக்கு கொண்டு வந்து என்னை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று டி.வி. விவாதத்தில் பேசி வருவதால், என் மீதான பிடிவாரண்டை ரத்து செய்யுங்கள் என்று நகை வியாபாரி மெகுல் சோக்சி மும்பை கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். #MehulChoksi
மும்பை:
பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியை ஏமாற்றி, ரூ.12 ஆயிரத்து 636 கோடி மோசடி செய்ததாக பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, அவருடைய உறவினரும், கீதாஞ்சலி குழும நிர்வாக இயக்குனருமான மெகுல் சோக்சி உள்ளிட்டோர் மீது சி.பிஐ. வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து, நிரவ் மோடி, மெகுல் சோக்சி இருவரும் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று விட்டனர். மெகுல் சோக்சி மீது சி.பி.ஐ. 2 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது.
அதைக்கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். நிகழ்ச்சி தொகுப்பாளரும், விவாதத்தில் பங்கேற்றவர்களும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் சிரித்தபடி இருந்தனர். இதனால், அவர்களும் அக்கருத்தை ஆதரிப்பது போல் உள்ளது.
ஆகவே, இந்தியாவுக்கு கொண்டு சென்றால், என்னை சுட்டுக்கொல்லவோ, கும்பல் கொலை செய்யவோ வாய்ப்புள்ளது. இதை கருத்திற்கொண்டு, எனக்கு எதிரான பிடிவாரண்டை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மெகுல் சோக்சி கூறியுள்ளார்.
இதற்கு சி.பி.ஐ. பதில் அளிக்குமாறு கூறிய கோர்ட்டு, அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 3-ந் தேதிக்கு ஒத்திவைத்தது. #pnbfraudcase #MehulChoksi #NiravModi
பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியை ஏமாற்றி, ரூ.12 ஆயிரத்து 636 கோடி மோசடி செய்ததாக பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, அவருடைய உறவினரும், கீதாஞ்சலி குழும நிர்வாக இயக்குனருமான மெகுல் சோக்சி உள்ளிட்டோர் மீது சி.பிஐ. வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து, நிரவ் மோடி, மெகுல் சோக்சி இருவரும் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று விட்டனர். மெகுல் சோக்சி மீது சி.பி.ஐ. 2 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது.
அவற்றின் அடிப்படையில், கடந்த மே 22-ந் தேதி, மும்பை தனிக்கோர்ட்டு, மெகுல் சோக்சிக்கு எதிராக ‘பிடிவாரண்டு’ பிறப்பித்தது. அதை ரத்து செய்யக்கோரி, கடந்த ஜூன் மாதம் ஏற்கனவே அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், மெகுல் சோக்சி சார்பில் அவருடைய வக்கீல் சஞ்சய் அப்பாட், நேற்று மும்பை தனிக்கோர்ட்டில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தேசிய செய்தி தொலைக்காட்சி ஒன்றில் சமீபத்தில் ஒரு விவாத நிகழ்ச்சி பார்த்தேன். அதில், தொலைபேசி மூலம் பேசிய 2 பேர், “தனிப்படை மூலம் என்னை பிடித்து இந்தியாவுக்கு கொண்டு வந்து சுட்டுக்கொல்ல வேண்டும். அப்போதுதான், இனிமேல் வங்கி மோசடிகளை நிறுத்த முடியும்” என்று பேசினர்.
அதைக்கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். நிகழ்ச்சி தொகுப்பாளரும், விவாதத்தில் பங்கேற்றவர்களும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் சிரித்தபடி இருந்தனர். இதனால், அவர்களும் அக்கருத்தை ஆதரிப்பது போல் உள்ளது.
ஆகவே, இந்தியாவுக்கு கொண்டு சென்றால், என்னை சுட்டுக்கொல்லவோ, கும்பல் கொலை செய்யவோ வாய்ப்புள்ளது. இதை கருத்திற்கொண்டு, எனக்கு எதிரான பிடிவாரண்டை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மெகுல் சோக்சி கூறியுள்ளார்.
இதற்கு சி.பி.ஐ. பதில் அளிக்குமாறு கூறிய கோர்ட்டு, அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 3-ந் தேதிக்கு ஒத்திவைத்தது. #pnbfraudcase #MehulChoksi #NiravModi
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X