என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமேதி மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் வயநாட்டுக்கு ஓட்டம்பிடித்த ராகுல் - அமித் ஷா கிண்டல்
Byமாலை மலர்31 March 2019 10:13 AM GMT (Updated: 31 March 2019 10:13 AM GMT)
அமேதி தொகுதிக்கு எதுவுமே செய்யாததால் மக்களுக்கு பதில் சொல்ல முடியாத ராகுல் காந்தி இந்தமுறை வயநாட்டுக்கு ஓட்டம்பிடிப்பதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். #RahulGandhi #Wayanadpolls #Amethipolls #LSpolls #Amit Shah
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11-ம் தேதி முதல்கட்ட பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில் பாஜக தலைவர் அமித் ஷா இன்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
அம்மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள பிஜ்னோர் பகுதியில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, சம்ஜூதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளான லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளை விடுதலை செய்துவிட்டு இந்துக்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதற்காக காங்கிரஸ் அரசு அசிமானந்தாவை சிறைக்கு அனுப்பியது என்று குற்றம்சாட்டினார்.
இந்த மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அவர்களுக்கு பதில் சொல்ல முடியாத ராகுல் காந்தி தற்போது கேரளாவில் உள்ள வயநாடு தொகுதிக்கு ஒட்டம் பிடித்திருக்கிறார் எனவும் அமித் ஷா குறிப்பிட்டார். #RahulGandhi #Wayanadpolls #Amethipolls #LSpolls #Amit Shah
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X