search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Radhakrishnan"

    • நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • வணிகவரித்துறை முதன்மைச் செயலாளராக தீரஜ்குமர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, சுகாதாரத்துறை செயலாளர் பதவியில் இருந்து ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்றை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    இதனால், தமிழக சுகாதாரத் துறையின் புதிய செயலாளராக செந்தில்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேலும், உள்துறை செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் மாற்றப்பட்டு பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

    நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறை முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    வணிகவரித்துறை முதன்மைச் செயலாளராக தீரஜ்குமர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    வருவய் நிர்வாக ஆணையராக அல்லது கூடுதல் தலைமைச் செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கேரளாவில் காங்கிரஸ் ஆதரவாளரான முன்னாள் துணை வேந்தர் ராதாகிருஷ்ணன் தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக இணைந்தார். #BJP #Radhakrishnan
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பாராளுமன்ற தேர்தலில் இம்முறை மும்முனை போட்டி நடக்கிறது.

    கேரளாவில் கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி, இப்போது நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலிலும் கணக்கை தொடங்கி விட தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

    இதற்காக கட்சி சார்பற்ற பிரமுகர்களை வளைத்து தேர்தலில் நிறுத்த ஏற்பாடுகள் செய்து வருகிறது.

    அதன்படி பிற கட்சிகளில் இருக்கும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்து பாரதிய ஜனதா வேட்பாளர்களாக களம் இறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நேற்று பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். டெல்லியில் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக இணைந்தார்.

    இவர் கேரள பப்ளிக்சர்வீஸ் கமி‌ஷன் முன்னாள் தலைவரான இவர் காலடியில் உள்ள ஸ்ரீசங்கராச்சார்யா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ஆவார்.

    முன்னாள் துணை வேந்தர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு மாநில பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். இவர் சமீபத்தில் நடந்த சபரிமலை போராட்டத்தில் பங்கேற்றவர். இதனால் பக்தர்கள் மத்தியில் அறிமுகமானவர்.

    எனவே இவரை ஆலப்புழா பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக நிறுத்த பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது. கேரள பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் போது இவரது பெயரும் பட்டியலில் இடம் பெறும் என்று கூறப்படுகிறது. #BJP #Radhakrishnan
    ஜெயலலிதா மரணம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் ஆறுமுகசாமி ஆணையம் 4 மணி நேரம் விசாரணை நடத்தியது. அப்போது அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். #JayaDeathProbe #Radhakrishnan
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று காலை 10.30 மணிக்கு ஆஜரானார்.

    அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன?, உயர் சிகிச்சைக்காக ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்து செல்லாதது ஏன்? என்பது போன்று பல்வேறு கேள்விகளை நீதிபதி ஆறுமுகசாமி அவரிடம் கேட்டார்.

    நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தினார். மதியம் 2.30 மணி வரை 4 மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்தது.

    டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தனது வாக்குமூலத்தில், ‘அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. மனசாட்சிக்கு உட்பட்டு ஜெயலலிதாவுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது. சிகிச்சையில் எந்த குறைபாடும் கிடையாது. ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது எனது தாயார் இறந்து விட்டார்.

    இருந்தபோதிலும் குறுகிய கால விடுமுறையில் சென்று விட்டு திரும்பிய நான், ஜெயலலிதாவை காப்பாற்ற தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன்’ என்று கூறி உள்ளார்.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சந்தேகம் இருந்ததா? என்று நீதிபதி கேட்ட கேள்விக்கு, ‘சந்தேகம் இல்லை’ என்று ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார். அதேபோன்று, ஜெயலலிதாவை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்து செல்வது குறித்து முடிவு எடுப்பதற்காக ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களிடம் தெரிவித்தீர்களா? என்று ஆணையம் கேள்வி எழுப்பியது.

    அதற்கு அவர், ‘அதுகுறித்து தெரிவிக்கவில்லை’ என்று பதில் அளித்தார். இதே கேள்வியை சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணையின் போது கேட்ட போது, ‘அதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு தெரிவித்தேன்’ என்று கூறி உள்ளார். இந்த முரண்பாடு குறித்து மீண்டும் விசாரிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது.



    போயஸ்கார்டனில் ஜெயலலிதாவுக்கு பணிப்பெண்களாக இருந்த தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தேவிகா, சிவயோகம், பூமிகா ஆகியோரை புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கனகசபாபதி நேற்று ஆணையத்தில் ஆஜர்படுத்தினார்.

    அவர்கள், போயஸ்கார்டனில் சந்தேகப்படும்படியாக எந்த சம்பவமும் நடக்கவில்லை என்றும், 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி போயஸ்கார்டனில் ஜெயலலிதாவுக்கு மயக்கம் ஏற்பட்டது தெரியும் என்றும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    மேற்கண்ட தகவலை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

    விசாரணை முடிந்து வெளியே வந்த டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், ‘ஆணையம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன். விசாரணை நடந்து வரும் நிலையில் என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டது?, அதற்கு என்ன பதில் அளித்தேன் என்று கூறுவது சரியாக இருக்காது’ என்றார்.

    விசாரணைக்கு பின்னர் சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் நிருபர்களிடம் கூறும்போது, ‘ஓ.பன்னீர்செல்வம் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை முதல்-அமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பது தொடர்பாக என்னை அழைத்து பேசவில்லை என்று குறுக்கு விசாரணையின்போது ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தனது முயற்சி காரணமாகவே எய்ம்ஸ் டாக்டர்கள் தொடர்ச்சியாக வரவழைக்கப்பட்டு நுரையீரல் பிரச்சினையில் இருந்து ஜெயலலிதா மீண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டேன் என்றும், சிகிச்சையின்போது ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்பட்டன, இறந்த பிறகு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்று பேசப்பட்ட விவகாரம் மனதுக்கு வேதனை அளிப்பதாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்’ என்றார். #JayaDeathProbe #Radhakrishnan
    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தில் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆஜர் ஆனார். #JayaDeathProbe #Radhakrishnan
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.

    இந்த ஆணையத்தில் ஜெயலலிதாவின் உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் டிரைவர்கள், அப்பல்லோ டாக்டர்கள், அரசு டாக்டர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இதுவரை 142 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இவர்களில் சிலரிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார். சசிகலா தனது வாக்குமூலத்தை வக்கீல் மூலம் கடந்த மாதம் தாக்கல் செய்தார்.

    தற்போது விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்த நிலையில் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற விவரங்கள் அனைத்தும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு தெரியும் என்பதால் அவரிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்திருந்தது. அவர் இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.


    அதன்படி ராதாகிருஷ்ணன் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதனிடையே ஜெயலலிதாவின் வீட்டுப் பணிப்பெண்களான தேவிகா, பூமிகா, சிவயோகம் ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்கள்.

    வருகிற 18-ந்தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடமும், 20-ந்தேதி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடமும் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது. #JayaDeathProbe #Radhakrishnan
    கடலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    கடலூர்:

    கடலூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வந்தார். மருத்துவமனையில் உள்ள டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை வார்டில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

    வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார். பின்னர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த நவம்பர் மாதம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 564 பேர் உள்நோயாளிகளாக இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 260 ஆக குறைந்துள்ளது. கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளின் எண்ணிக்கை 146-ல் இருந்து 65 ஆக குறைந்துள்ளது. பொதுவாக நவம்பர் மாதம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு 40 சதவீதம் குறைந்துள்ளது.

    தமிழ்நாட்டில் டெங்கு, பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 23 ஆயிரத்து 294 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். 65 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டு 3,845 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை 13 பேர் இறந்துள்ளனர்.

    அதேபோல் கடந்த ஆண்டு 3,800 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். 17 பேர் இறந்தனர். இந்த ஆண்டு 2,100 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, இதுவரை 37 பேர் இறந்துள்ளனர். கடந்த ஆண்டை விட டெங்கு காய்ச்சல் இறப்பு குறைந்துள்ளது, பன்றி காய்ச்சல் இறப்பு அதிகரித்துள்ளது. கோவையை ஒட்டியுள்ள பகுதிகளில் பன்றி காய்ச்சல் பாதிப்பை தடுக்க கூடுதலாக கண்காணிக்க வேண்டியது உள்ளது.

    தமிழகத்தில் 17 மாவட்டங்களில் ஆண், பெண் விகிதாச்சாரம் குறைவாக உள்ளது. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருந்த பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் அரசு மேற்கொண்ட நடவடிக்கையினால் பெண்குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. தற்போது திருவண்ணாமலை மாவட்டம் தான் சவாலாக இருக்கிறது. பாலின விகிதத்தை அதிகரிக்க சட்டம் மற்றும் விழிப்புணர்வு மூலம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    டெங்கு, பன்றி காய்ச்சலால் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தாமதமாக சிகிச்சைக்கு வருவதால் இந்த உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். #Dengue #SwineFlu #TNHealthSecretary
    சென்னை:

    டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பரவி வருகிறது. காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதால் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    சென்னை சைதாப்பேட்டை தாடண்டன் நகர் அரசு குடியிருப்பில் இன்று காலை சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் டெங்கு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டனர்.

    அரசு அலுவலகங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களிடத்தில் டெங்கு, பன்றி காய்ச்சல் குறித்து துண்டு பிரசுரங்கள் வீடு வீடாக வழங்கினார்கள். சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி ஆகியோர் தலைமையில் இந்தவிழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

    பின்னர் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பன்றி காய்ச்சலை பொறுத்தவரையில் கைகழுவும் பழக்கத்தை தினமும் பின்பற்றி வந்தாலே இந்நோயை தவிர்க்கலாம். நல்ல தண்ணீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பாதிப்பு உண்டாகிறது. நீரில் கொசுக்கள் உருவாகும் பகுதிகளை கண்டறிந்து அவற்றை முழுமையாக அப்புறப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் முழுமையாக கட்டுப்படுத்த முடியும். காய்ச்சல் வந்தால் மருத்துவரை அணுக வேண்டும். டாக்டர் பரிந்துரை இல்லாமல் மருந்து கடைகளுக்கு சென்று மருந்து வாங்கி சாப்பிடக் கூடாது.

    பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பன்றி காய்ச்சலால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களில் பன்றி காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. மக்கள் கூடும் இடங்களில் தான் இவை அதிகமாக பரவுகிறது. அதனால் கை கழுவும் பழக்கத்தை பொதுமக்கள் வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.

    காலை மற்றும் மாலை நேரங்களில் மனிதர்களை கடிக்கும் கருப்பு, வெள்ளை நிறங்கள் கொண்ட கொசுக்களால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. கொசுக்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள முழு கை உடைகளை அணிய வேண்டும்.

    கர்ப்பிணிகள், முதியவர்கள், சர்க்கரை நோய் மற்றும் எடை அதிகம் உள்ளவர்கள் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பன்றி, டெங்கு காய்ச்சல் குறித்து பீதி அடைய வேண்டாம். கவனக்குறைவாகவும் இருக்க வேண்டாம்.



    பன்றி காய்ச்சலுக்கு இதுவரையில் ஏற்கனவே 11 பேர் உயிரிழந்துள்ளனர். காரைக்குடியில் 2 பேரும், கோவை, ஈரோட்டில் இருவரும் அறிகுறியுடன் இறந்துள்ளனர். தாமதமாக சிகிச்சைக்கு வருவதால் இந்த உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் வந்தவுடன் மருத்துவமனைக்கு வந்தால் இறப்பை முற்றிலும் தவிர்த்திருக்கலாம்.

    டெங்கு காய்ச்சலுக்கு இந்த வருடம் இதுவரையில் 9 பேர் உயிர் இழந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #Dengue #SwineFlu #TNHealthSecretary

    டெங்கு கொசு ஒழிப்பு குறித்து ஆய்வு செய்த போது நாயை அவிழ்த்துவிட்டு சுகாதாரத்துறை செயலாளர் ராதகிருஷ்ணன் மற்றும் கலெக்டருக்கு மிரட்டல் விடுத்த தொழிலாளி மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதியில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் அதிகாரிகள் டெங்கு கொசு ஒழிப்பு குறித்து வீடு, வீடாக ஆய்வு செய்தனர்.

    அப்போது மணவாளநகர், காந்தி தெருவில் உள்ள பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டை ஆய்வு செய்ய உள்ளே நுழைந்தனர்.

    உடனே பாலகிருஷ்ணன் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென வீட்டில் இருந்த நாய்களை அவிழ்த்து விட்டார்.

    இதனை கண்டு ஆய்வுக்கு வந்த சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பாதுகாப்புக்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் பாலகிருஷ்ணனை எச்சரித்து நாய்களை வெளியே விரட்டி விட்டனர்.

    பின்னர் அவரது வீட்டில் ஆய்வு செய்தனர். இதில் அந்த வீட்டில் டெங்கு கொசு உருவாகும் வகையில் சுகாதாரம் இல்லாமல் இருந்தது.

    இதையடுத்து பாலகிருஷ்ணனுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவரது வீட்டுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

    இதற்கிடையே அதிகாரிகளை பணி செய்யவிடாமல், அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாக பாலகிருஷ்ணன் மீது மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மணவாளநகர் காந்தி தெருவில் சுகாதாரத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ஆகியோர் டெங்கு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்ய சென்ற போது பாலகிருஷ்ணன் என்பவர் வீட்டில் டெங்கு கொசு உற்பத்திக்கான அனைத்து ஆதாரங்களுடன் மிகவும் சுகாதாரமின்றி சீர்கேட்டுடன் இருந்தது. வீட்டின் உள்ளே செல்ல முயன்றபோது நான்கு பெரிய நாய்களை கொண்டு வீட்டின் உள்ளே வரவிடாமல் அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டார்.

    ஏற்கனவே இதே போன்று துப்புரவு பணியாளர் மற்றும் டிபிசி பணியாளர்கள் பலமுறை இந்த வீட்டிற்கு சென்றபோது வீட்டிற்கு உள்ளே வரவிடாமல் நான்கு பெரிய நாய்களை கொண்டு பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் பணி செய்ய விடாமல் நடந்து கொண்டுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து பாலகிருஷ்ணன் என்பவரின் பயன்படுத்த படாமல் இருந்த மற்றொரு ஒடு; போட்ட வீடு முழுவதும் டெங்கு கொசு ஆதாரம் உள்ளது கண்டறியப்பட்டது. எனவே பொது சுகாதாரம் விதி 1939ன்படி ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த வீடு வருவாய்த்துறை மூலம் ‘சீல்’ வைக்கப்பட்டது.

    மணவாளர் நகர் காவல் நிலையத்தில் சுகாதாரதுறை மற்றும் உள்ளாட்சி துறை பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததற்காக கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் மூலம் புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

    எனவே அரசுத்துறை அலுவலர்கள், அரசு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் தங்களின் முழு ஒத்துழைப்பினை அளிக்க வேண்டும். தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் பொது சுகாதாரம் சட்டம் 1939 ன்படி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #tamilnews
    தமிழகத்தில் இந்த வருடம் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 5 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #DengueFever #SwineFlu #DengueDeaths #TNHealthSecretary
    சென்னை:

    டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தை பலியானதை அறிந்ததும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்றார்.

    அங்கு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெங்குவை பரப்பும் கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத்துறை ஊழியர்கள் உள்ளாட்சி துறை ஊழியர்கள் இணைந்து இந்த பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பொது மக்களும் இணைந்து செயல்பட்டால் தான் கொசுக்களை ஒழிக்க முடியும். டெங்குவினால் உயிர் இழப்பு என்பது ஒரு சதவீதம் என்று கூறலாம். உடலில் தட்டணுக்கள் குறைந்து ரத்தம் வெளியேறும் ஆபத்தான கடைசி நேரத்தில் மட்டுமே உயிர் இழப்பு நேரிடும்.

    அந்த ஒரு சதவீதமும் டெங்கு பாதிப்பு மட்டுமல்லாமல் வேறு நோய்களிலும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு தாமதமாக வருவதால் உயிர் இழப்பு ஏற்படுகிறது. காய்ச்சல் வந்தால் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

    அரசு மற்றும் மாநகராட்சி மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க தேவையான மருந்து, மாத்திரைகள், தடுப்பூசி போன்றவை போதுமானதாக உள்ளன. டெங்குவை கண்டுபிடிக்க கூடிய ‘எலிசா’ பரிசோதனையும் அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ளது. காலி இடங்களில் மழைநீர் தேங்காமல் மக்கள் பார்த்து கொள்ள வேண்டும்.


    குடிநீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். மழை நீர் தேங்கக் கூடிய வீடு-கடைகளில் அவற்றை அப்புறப்படுத்த மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    கொசு உற்பத்தியாகக் கூடிய இடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்படுகிறது. ஒன்றரை லட்சம் தடுப்பூசிகள் தயாராக இருக்கின்றன. பொது மக்கள் பீதி அடைய வேண்டாம். காய்ச்சல் வந்த உடனே ஆஸ்பத்திரிக்கு வந்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அலட்சியமாக இருக்க வேண்டாம்.

    பன்றிக் காய்ச்சல் சங்கரன் கோவில், மதுரை, கோவை, சென்னை போன்ற இடங்களில் பரவி வருகிறது. கிருமி பரவாமல் தடுக்க அடிக்கடி கை கழுவ வேண்டும். பன்றி காய்ச்சல் ஆஸ்துமா, நீரிழிவு நோய் பாதிப்பு உடையவர்கள், கர்ப்பிணிகளை எளிதாக தாக்க கூடியது. சுகாதாரத் துறை தீவிரமாக கண் காணித்து அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

    டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. 2012-ம் ஆண்டு அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு 22 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இந்த வருடம் 2 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது.

    பன்றிக் காய்ச்சலால் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு நாள் ஒன்றுக்கு 25 முதல் 50 பேர் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது.

    இந்த ஆண்டு இதுவரையில் 5 பேர் டெங்கு காய்ச்சலிலும், 11 பேர் பன்றி காய்ச்சலிலும் உயிர் இழந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #DengueFever #SwineFlu #DengueDeaths #TNHealthSecretary
    பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாளை எதிர்கட்சிகள் நடத்தும் பந்த் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க கூடாது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #Radhakrishnan #FuelPrice #BharatBandh

    சென்னை:

    மத்தியில் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து அனைத்து துறைகளையும் சீரழித்த காங்கிரசும் அதற்கு துணை போன தி.மு.க.வும் மக்களை ஏமாற்றுவதற்காக ‘பந்த்’ அறிவித்துள்ளன.

    மக்கள் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. பெட்ரோல்-டீசல் விலையை மனம்போல் உயர்த்துவோம் என்று ஆட்சியில் இருப்பவர்கள் நினைப்பார்களா? எங்களுக்கும் இந்த விலை உயர்வில் விருப்பம் இல்லை தான். ஏன் விலை ஏறுகிறது? இந்த சிக்கலுக்கு யார் காரணம் என்பதை யோசிக்க வேண்டும்.

    மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசும், தி.மு.க.வும் தேர்தல் ஆதாயத்துக்காக எண்ணெய் நிறுவனங்களை கடனில் தள்ளினார்கள். லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடனில் சிக்கி தத்தளித்தன. அந்த கடனை அடைக்க வேண்டாமா? அவர்கள் செய்த தவறுகளை திருத்தி வருகிறோம். அதனால் சில சிரமங்களை மக்களும் ஏற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

    பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்கிறார்கள். மத்திய அரசும் அதைத்தானே விரும்புகிறது. ஆனால் மாநில அரசுகளின் நிலை என்ன?

     


    ஜி.எஸ்.டி. கவுன்சிலில் அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளார்கள். அந்த கவுன்சில்தான் வரி நிர்ணயம் செய்கிறது. ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோலிய பொருட்களை கொண்டுவருவதை ஏற்பார்களா?

    50 வருடமாக மக்களை ஏமாற்றியே ஆட்சி செய்த காங்கிரஸ், தி.மு.க.வின் ஏமாற்று வேலைதான் இந்த ‘பந்த்’ நாடகமும்.

    எங்கள் கொள்கை நாட்டில் தூய்மையான, நேர்மையான நிர்வாகம் வேண்டும். கடனில் சிக்கி கிடக்கும் நிறுவனங்களை மீட்டு மக்களுக்கு சிறப்பான சேவை செய்ய வைக்க வேண்டும். அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.

    உண்மை நிலையை உணர்ந்து எதிர்க் கட்சிகளின் ‘பந்த்’ நாடகத்தை தமிழக மக்கள் முறியடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Radhakrishnan #FuelPrice #BharatBandh

    கந்தன்சாவடி மருத்துவமனையில் கட்டுமான பணியின்போது இரும்பு சாரம் சரிந்த விபத்தில் காயம்அடைந்த 27 பேருக்கு அரசு செலவில் சிகிச்சை அளிக்கப்படும் என்று முதல்வர் கூறியதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
    சென்னை:

    சென்னை கந்தன்சாவடி மருத்துவமனையில் கட்டுமான பணியின்போது இரும்பு சாரம் சரிந்த இடத்தை தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நேற்றையதினம் இரவு சுமார் 7.15 மணி அளவில் ஏற்பட்ட இந்த விபத்து பற்றி அறிந்ததும் அனைத்து துறை அதிகாரிகளும் விரைந்து செயல்பட்டு மீட்பு பணிக்கு உதவினார்கள்.

    இடிபாடுகளில் சிக்கியவர்களில் பப்லு என்பவர் உயிர் இழந்தார். 33 பேர் உயிருடன் மீட்கப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 5 பேர் புறநோயாளியாக சிகிச்சை பெற்றுள்ளனர். 16 பேர் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் உள் நோயாளியாக உள்ளனர்.

    படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆகும் செலவை அரசே ஏற்கும் என முதல்- அமைச்சர் கூறி உள்ளார். எனவே தனியார் ஆஸ்த்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை அங்கிருந்து மாற்ற வேண்டாம் என்று நேற்று இரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த 3 பேருக்கு ஆபரேசன் செய்யப்பட்டது. 11 பேர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியிலும், 16 பேர் அப்பல்லோ ஆஸ்பத்திரியிலும் இப்போது தொடர் சிகிச்சையில் உள்ளனர். ஒட்டு மொத்தமாக 27 பேர் உள்நோயாளிகளாகவும், 5 பேர் புற நோயாளியாகவும் சிகிச்சை பெற்றனர்.


    3 ஆம்புலன்ஸ் வண்டிகள் தொடர்ந்து தயார் நிலையில் உள்ளது. இது ஒரு தனியார் மருத்துவமனை கட்டிடம். இந்த கட்டிடத்துக்கு அனுமதி பெற்று இருக்கிறார்களா? என்பதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காஞ்சீபுரம் கலெக்டர் பொன்னையா கூறுகையில், “கட்டிட விபத்து குறித்த விசாரணை அறிக்கைப்படி மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும். காயம் அடைந்த தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

    மாநில பேரிடர் மீட்பு குழு கமி‌ஷனர் ராஜேந்திர ரத்னு கூறுகையில், “மீட்பு பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் 50 பேர் ஈடுபட்டு வருகிறார்கள். சரிந்து விழுந்துள்ள ராட்சத இரும்பு தூண், சாரம், கம்பிகள் கியாஸ் வெல்டிங் மூலம் வெட்டி அகற்றப்பட்டு வருகிறது. இன்று மாலைக்குள் மீட்பு பணிகள் முடிந்து விடும் என்றார்.

    விபத்து குறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜவகர் சண்முகம் கூறியதாவது:-

    தனியார் மருத்துவமனை கட்டுமான பணி விபத்து குறித்து அரசு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். ராட்சத ஜெனரேட்டர் அறை அமைப்பு பணியில் அடித்தளம் உறுதித்தன்மை இல்லாததால் விபத்து ஏற்பட்டு உள்ளது. தரமற்ற கட்டுமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கட்டிட காண்டிராக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் விபத்து ஏற்படாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Buildingcollapse #ChennaiBuildingcollapse 
    கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் காய்ச்சல் தமிழகத்தில் நுழையவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
    சென்னை:

    சுகாதார துறை செயலாளர் ராதா கிருஷ்ணன்  அவர் மாலை மலர் நிருபரிடம் கூறியதாவது:-

    கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் வவ்வால் மூலம் பன்றிகளுக்கு பரவி மக்களுக்கும் தொற்றி கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பீதி அடைய தேவையில்லை.

    சுகாதார துறை அதிகாரிகளும், டாக்டர்களும் உஷார்படுத்தப்பட்டு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து பொது சுகாதார மையங்களிலும் டாக்டர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    கோழி மூலம் பரவும் பறவை காய்ச்சல் மாதிரி இந்த நோய் இல்லை.

    எனவே கேரளாவில் இருந்து வரும் பலா பழங்களை சாப்பிடுவதில் தடை இல்லை. வவ்வால் கடித்த பழங்களை சாப்பிட்டால் தான் நோய் தாக்குவதாக கூறுகிறார்கள்.

    எனவே கேரளாவில் இருந்து அவ்வளவு எளிதில் இந்த காய்ச்சல் பரவ வாய்ப்பில்லை. ஆனாலும் நாங்கள் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மாவட்ட கலெக்டர்கள், சுகாதார அதரிகாரிகளை உஷார்படுத்தி உள்ளோம்.

    கேரள எல்லைப் பகுதிகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து நோய் பாதிப்புக்குள்ளாகி யாரும் வருகிறார்களா? என்றும் டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

    இதுவரை நிபா நோயால் தமிழகத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×