search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hospital Building Collapse"

    கந்தன்சாவடியில் தனியார் மருத்துவமனை கட்டுமான பணியின்போது சாரம் சரிந்ததில் 2 பேர் பலியான நிலையில் டிராபிக் ராமசாமி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த முறையீடு மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
    சென்னை:

    கந்தன்சாவடி கட்டிட விபத்து குறித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் தனியாக முறையீட்டு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

    ‘‘300 ஏக்கர் உள்ள இந்த நிலம் அரசின் புறம்போக்கு நிலம் என்றும், இந்த நிலத்தை முறைகேடாக அரசு அதிகாரிகள் தனியாருக்கு வழங்கி உள்ளனர்.

    இவ்வாறு அரசு நிலத்தில் தனியாருக்கு கட்டிடம் கட்ட அனுமதி வழங்கியதில் விதிமீறல் நடந்துள்ளது. இவ்விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மூறையீட்டு மனுவை அனுமதித்த நீதிபதிகள் கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோரை கொண்ட அமர்வு,  இம்மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என தெரிவித்தார்.
    முறையாக அனுமதி இல்லாமல் கட்டுமான பணியில் ஈடுபட்ட கோவையை சேர்ந்த ஜெம் மருத்துவமனை நிர்வாகத்திற்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். #hospitalbuildingcollapses
    சோழிங்கநல்லூர்:

    சென்னை, பெருங்குடியை அடுத்த கந்தன்சாவடி எம்.ஜி.ஆர். சாலையில் கோவையை சேர்ந்த ஜெம் குரூப் சார்பில் 8 மாடிகள் கொண்ட ஆஸ்பத்திரி கட்டப்பட்டு உள்ளது. இந்த ஆஸ்பத்திரியின் பின்புறம் 50 அடி உயரத்தில் பெரிய ஜெனரேட்டர் அறை அமைக்க கட்டுமான பணி நடந்து வந்தது. இதற்காக ராட்சத இரும்பு தூண்களால் சாரம் அமைக்கப்பட்டு இருந்தது.

    இதில் பீகார், ஒடிசா மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் கட்டுமான பணியின்போது திடீரென சாரம் சரிந்து விழுந்தது. இடிபாட்டுக்குள் சிக்கிய பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி பப்லுகுமார் (வயது18) பரிதாபமாக இறந்தார்.

    மேலும் 32 பேர் மீட்கப்பட்டனர். இவர்களில் பலத்த காயம் அடைந்த 10 பேர் கந்தன் சாவடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும். 19 பேர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டுமான நிறுவன என்ஜினீயர்களான விருதுநகரை சேர்ந்த முருகேசன், ஈரோட்டை சேர்ந்த சிலம்பரசன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    இந்தநிலையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜன்சவுத்ரி (25) இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதனால் கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்தது. மேலும் 3 பேரின் நிலைமை மோசமாக உள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து நடந்த பகுதியில் சி.எ.ம்.டி.ஏ அதிகாரிகள் குழு நேற்று நேரில் வந்து ஆய்வு செய்தனர். அப்போது ஜெம் மருத்துவமனை நிர்வாகம் 8 மாடி கட்டிடத்திற்கு மட்டும் சி.எம்.டி.ஏ.விடம் முறையாக அனுமதி பெற்றது தெரிந்தது. மருத்துவமனைக்கு ஜெனரேட்டர் அறை மற்றும் கார் பார்க்கிங் கட்டுமான பணிக்கு எந்த அனுமதியும் பெறாமல் கட்டியது தெரியவந்தது.

    இதையடுத்து முறையாக அனுமதி இல்லாமல் கட்டுமான பணியில் ஈடுபட்ட ஜெம் மருத்துவமனை நிர்வாகத்திற்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    இதற்கிடையே நேற்று மாலை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவசர கூட்டம் நடந்தது. இதில் சிஎம்டிஏ இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி, சி.எம்.டி.ஏ. அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சி.எம்.டி.ஏ.விடம் முறையாக அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்களை ஆய்வு செய்து நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. மேலும், அனுமதிக்கப்பட்ட தளங்களை தவிர கூடுதல் தளங்கள் கட்டினால் அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் உரிமையாளருக்கு சிஎம்டிஏ சார்பில் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பப்படும். அப்படி சம்மன் அனுப்பி விளக்கம் அளிக்காத கட்டிடத்தை ‘சீல்’ வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். #hospitalbuildingcollapses
    கந்தன்சாவடி மருத்துவமனையில் கட்டுமான பணியின்போது இரும்பு சாரம் சரிந்த விபத்தில் காயம்அடைந்த 27 பேருக்கு அரசு செலவில் சிகிச்சை அளிக்கப்படும் என்று முதல்வர் கூறியதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
    சென்னை:

    சென்னை கந்தன்சாவடி மருத்துவமனையில் கட்டுமான பணியின்போது இரும்பு சாரம் சரிந்த இடத்தை தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நேற்றையதினம் இரவு சுமார் 7.15 மணி அளவில் ஏற்பட்ட இந்த விபத்து பற்றி அறிந்ததும் அனைத்து துறை அதிகாரிகளும் விரைந்து செயல்பட்டு மீட்பு பணிக்கு உதவினார்கள்.

    இடிபாடுகளில் சிக்கியவர்களில் பப்லு என்பவர் உயிர் இழந்தார். 33 பேர் உயிருடன் மீட்கப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 5 பேர் புறநோயாளியாக சிகிச்சை பெற்றுள்ளனர். 16 பேர் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் உள் நோயாளியாக உள்ளனர்.

    படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆகும் செலவை அரசே ஏற்கும் என முதல்- அமைச்சர் கூறி உள்ளார். எனவே தனியார் ஆஸ்த்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை அங்கிருந்து மாற்ற வேண்டாம் என்று நேற்று இரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த 3 பேருக்கு ஆபரேசன் செய்யப்பட்டது. 11 பேர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியிலும், 16 பேர் அப்பல்லோ ஆஸ்பத்திரியிலும் இப்போது தொடர் சிகிச்சையில் உள்ளனர். ஒட்டு மொத்தமாக 27 பேர் உள்நோயாளிகளாகவும், 5 பேர் புற நோயாளியாகவும் சிகிச்சை பெற்றனர்.


    3 ஆம்புலன்ஸ் வண்டிகள் தொடர்ந்து தயார் நிலையில் உள்ளது. இது ஒரு தனியார் மருத்துவமனை கட்டிடம். இந்த கட்டிடத்துக்கு அனுமதி பெற்று இருக்கிறார்களா? என்பதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காஞ்சீபுரம் கலெக்டர் பொன்னையா கூறுகையில், “கட்டிட விபத்து குறித்த விசாரணை அறிக்கைப்படி மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும். காயம் அடைந்த தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

    மாநில பேரிடர் மீட்பு குழு கமி‌ஷனர் ராஜேந்திர ரத்னு கூறுகையில், “மீட்பு பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் 50 பேர் ஈடுபட்டு வருகிறார்கள். சரிந்து விழுந்துள்ள ராட்சத இரும்பு தூண், சாரம், கம்பிகள் கியாஸ் வெல்டிங் மூலம் வெட்டி அகற்றப்பட்டு வருகிறது. இன்று மாலைக்குள் மீட்பு பணிகள் முடிந்து விடும் என்றார்.

    விபத்து குறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜவகர் சண்முகம் கூறியதாவது:-

    தனியார் மருத்துவமனை கட்டுமான பணி விபத்து குறித்து அரசு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். ராட்சத ஜெனரேட்டர் அறை அமைப்பு பணியில் அடித்தளம் உறுதித்தன்மை இல்லாததால் விபத்து ஏற்பட்டு உள்ளது. தரமற்ற கட்டுமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கட்டிட காண்டிராக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் விபத்து ஏற்படாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Buildingcollapse #ChennaiBuildingcollapse 
    சென்னை அருகே தனியார் மருத்துவமனையின் புதிய கட்டுமானப் பணியின்போது சாரம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக என்ஜினீயர்கள் 2 பேர் கைதாகினர். #Chennai #Buildingcollapse
    சென்னை:

    சென்னை அருகே தனியார் மருத்துவமனையின் புதிய கட்டுமானப் பணியின்போது சாரம் இடிந்து விழுந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இதில் ஒருவர் பலியானார். 33 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.

    சென்னையை அடுத்த பெருங்குடி கந்தன்சாவடி கோவிந்தராஜ் நகரில் கோவையைச் சேர்ந்த ஜெம் குரூப் சார்பில்  புதிதாக மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.  இதன் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அதே வளாகத்தில் பிரமாண்டமான ஜெனரேட் டர் அறையுடன் கூடிய 4 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது.

    இதற்காக 10-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டு இதன் மேல் ராட்சத இரும்பு சாரம் கட்டப்பட்டு இருந்தன. இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.

    நேற்று மாலை திடீரென்று இரும்பு சாரம் சரிந்து சுற்றுச்சுவர் மீது விழுந்தது.  மருத்துவமனை எதிரில் உள்ள 2 வீடுகள் மீதும் இரும்பு சாரம் விழுந்ததால் பலத்த சேதம் அடைந்தன.

    இரும்பு சாரம் மற்றும் கட்டிட இடிபாடுகளுக்குள் தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.   தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  இடிபாடுகளை அகற்றி தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்லு  (23) என்ற தொழிலாளி இடிபாடுகளில் சிக்கி பலியானார். அவரது பிணம் உடனடியாக மீட்கப்பட்டது.  30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

    அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்பல்லோ மருத்துவமனையில் 16 பேரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 11 பேரும் சேர்க்கப்பட்டனர்.  ஆபத்தான நிலையில் இருந்த மோகன், ராஜன், சந்தோஷ் ஆகிய  3 தொழிலாளர்களுக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில்  அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சில தொழிலாளர்கள் லேசான காயம் அடைந்ததால் முதல் உதவி சிகிச்சை பெற்று திரும்பினார்கள்.


    இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி இன்று காலை நடந்தது. சரிந்த ராட்சத இரும்பு சாரங்களை எந்திர கட்டர்கள் மூலம் வெட்டி எடுத்தார்கள்.  ஜே.சி.பி. எந்திரம் மூலம் கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகிறது.
    விபத்து குறித்து தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கட்டுமான பணியை மேற்கொண்ட  நிறுவனம்  மீது அலட்சியமாக செயல்பட்டது  உள்பட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    உடனடியாக என்ஜினீயர்கள் முருகேசன், சிலம்பரசன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கட்டிட விபத்து நடந்த மருத்துவமனையை சுற்றி குடியிருப்புகள் உள்ளன. இந்த  விபத்தால்  அங்கு வசிப்பவர்கள் பீதி அடைந்துள்ளனர். சிலர் வீடுகளை காலி செய்துவிட்டு உறவினர்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர்.

    கட்டிட விபத்து நடந்த இடத்தை  சுகாதாரத் துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன், காஞ்சீபுரம் கலெக்டர் பொன்னையா, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விசுவநாதன், மாநில பேரிடர் மீட்பு கமிஷனர் ராஜேந்திர ரத்னு ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். #Chennai #Buildingcollapse
    ×