search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாரம் சரிந்து விபத்து - டிராபிக் ராமசாமி முறையீடு மனு ஐகோர்ட்டில் நாளை விசாரணை
    X

    சாரம் சரிந்து விபத்து - டிராபிக் ராமசாமி முறையீடு மனு ஐகோர்ட்டில் நாளை விசாரணை

    கந்தன்சாவடியில் தனியார் மருத்துவமனை கட்டுமான பணியின்போது சாரம் சரிந்ததில் 2 பேர் பலியான நிலையில் டிராபிக் ராமசாமி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த முறையீடு மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
    சென்னை:

    கந்தன்சாவடி கட்டிட விபத்து குறித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் தனியாக முறையீட்டு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

    ‘‘300 ஏக்கர் உள்ள இந்த நிலம் அரசின் புறம்போக்கு நிலம் என்றும், இந்த நிலத்தை முறைகேடாக அரசு அதிகாரிகள் தனியாருக்கு வழங்கி உள்ளனர்.

    இவ்வாறு அரசு நிலத்தில் தனியாருக்கு கட்டிடம் கட்ட அனுமதி வழங்கியதில் விதிமீறல் நடந்துள்ளது. இவ்விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மூறையீட்டு மனுவை அனுமதித்த நீதிபதிகள் கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோரை கொண்ட அமர்வு,  இம்மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என தெரிவித்தார்.
    Next Story
    ×