என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "President Ramnath kovind"
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் ஆறு நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுளார். அவருடன் மத்திய அரசின் உயரதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது.
இந்நிலையில் வியட்நாமில் இருந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கஜா புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.
முன்னதாக கஜா புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் முதலமைச்சரிடம் கேட்டறிந்தனர். #GajaCyclone #RamnathGovind #EdapapdiPalaniswami
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்று நாள் அரசுமுறை பயணமாக தஜிகிஸ்தான் நாட்டுக்கு சென்றுள்ளார். துஷான்பே நகர விமான நிலையத்தில் அந்நாட்டு துணை பிரதமர் தலைமையில் நேற்று சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக்கு பின்னர் இந்தியா - தஜிகிஸ்தான் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமானது.
அரசியல் உறவு, ஆராய்ச்சி, வேளாண்மை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பாரம்பரிய மருத்துவம், விண்வெளி தொழில்நுட்பம், இளைஞர் நலத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையொப்பமாகின. #RamNathKovind #Tajikistan #EmomaliRahmon #TajikistanIndiaMOU
கேரளாவுக்கு 3 நாள் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று சென்றார். அவரை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வரவேற்றார். கேரளாவில் பல்வேறு அரசு விழாவில் ஜனாதிபதி பேசி வருகிறார்.
நாளை திருச்சூரில் நடக்கும் விழாவில் உரையாற்ற உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு திருச்சூர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசிய நபர் திருச்சூர் வரும் ஜனாதிபதி கொலை செய்யப்படுவார் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார். உஷாரான உயர் அதிகாரிகள் கொலை மிரட்டல் விடுத்த நபரை தேடினர். குன்னங்குளம் உதவி கமிஷனர் சைபர் செல் போலீசார் உதவியுடன் செல்போன் எண்ணை வைத்து தேடினர்.
தீவிர தேடுதல் வேட்டையில் மிரட்டல் விடுத்தது திருச்சூர் விரைக்கல்லில் உள்ள பகவதியம்மன் கோவில் பூசாரி ஜெயராமன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனையும், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பலர் விடுதலை செய்யப்பட்டனர்.
பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கும் ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும் ஜெயிலில் 27 ஆண்டுகளாக இருந்து வருகிறார்கள். ஆயுள் தண்டனை கைதிகள் 14 ஆண்டுகளுக்கு மேல் ஜெயிலில் இருந்தால் அவர்களை விடுவிப்பது வழக்கமானதாக இருக்கிறது.
இவர்கள் 7 பேரும் 20 ஆண்டுகளுக்கு மேல் ஜெயிலில் இருந்து விட்டதால் விடுதலை செய்வது என்று தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால், இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனுதாக்கல் செய்தது.
இதனால் விடுதலைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் மறுசீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டு மத்திய உள்துறையின் விளக்கத்தை கேட்டு இருந்தது. பின்னர் மத்திய அரசு 7 பேரின் உடல்நிலை, குடும்ப சூழ்நிலை, பொருளாதார பின்னணி உள்ளிட்ட 8 விவரங்களை கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது.
அதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்தது. மேலும் மத்திய உள்துறை 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக ஜனாதிபதியின் கருத்தையும் கேட்டது. தமிழக அரசின் பதில்களும், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதை பரிசீலித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுவிக்க முடியாது என்று கூறிவிட்டார்.
இதுபற்றிய தகவல் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜனாதிபதி தனது உத்தரவில் என்ன கூறி இருக்கிறார்? என்ற விவரங்கள் இப்போது கிடைத்துள்ளன. அதில் ஜனாதிபதி கூறியிருப்பதாவது:-
ராஜீவ்காந்தி கொலையில் சம்பந்தப்பட்ட வெளி நாட்டினர் 4 பேர் மற்றும் இந்த கொலையில் உடந்தையாக இருந்த இந்தியர்கள் 3 பேர் என 7 பேரையும் விடுவிப்பது என்பது ஒரு ஆபத்தான முன்னுதாரணமாகிவிடும். மேலும் இது, சர்வதேச அளவிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
நாட்டின் முன்னாள் பிரதமரை கொலை செய்து ஈடு இணையற்ற தவறுகளை செய்திருக்கிறார்கள். சரித்திர கிரிமினல் குற்றத்தை இந்த நாட்டில் செய்திருக்கிறார்கள். அவர்களுடைய செயல்பாடுகள் மிகவும் ஒழுக்கக் கேடானதாகும்.
வெளிநாட்டை சேர்ந்த பயங்கரவாத அமைப்பு மிகவும் திட்டமிட்டு ஒருங்கிணைத்து கொடூரமான இந்த செயலில் ஈடுபட்டுள்ளது. அதில், 9 போலீஸ் அதிகாரிகள் உள்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டின் ஜனநாயகத்தையே சீர்குலைத்து முடக்கி உள்ளனர். இந்த கொலையாளிகளுக்கு விசாரணை கோர்ட்டு மரண தண்டனை விதித்துள்ளது. பெண் மனித வெடிகுண்டை பயன்படுத்தி கொடூர சதித்திட்டத்தின் மூலம் ஏராளமானோருடைய உயிரை பறித்து இருக்கிறார்கள் என்பதால் இந்த தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது.
இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 3 பேர் கொண்ட பெஞ்சும் இதில் உள்ள சதி திட்டங்களை உறுதி செய்து அவர்கள் மோசமான குற்றம் செய்ததை சுட்டிக்காட்டி அரிதிலும் அரிதான வழக்கு என்று கூறி இருக்கிறது.
விடுதலைப்புலிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மூலம் இந்த கொலை திட்டம் நிறைவேற்றப்பட்டு இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். எனவே, அவர்களை விடுவிக்க முடியாது.
இவ்வாறு ஜனாதிபதி தனது உத்தரவில் கூறி இருக்கிறார். #RamNathKovind #RajivgandhiAssassinationcase
காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் அம்மாநிலத்தில் பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. சமீபகாலமாக ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து மோதல் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், காஷ்மீர் மாநில சட்டசபையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் டெல்லி வரும்படி பா.ஜ.க. தலைவர் அழைப்பு விடுத்தார். இன்று எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. இன்று அறிவித்தது.
தேசிய அரசியலில் பெரும் திருப்புமுனையாக கருதப்படும் இந்த அறிவிப்புக்கு பின்னர் தனது முதல் மந்திரி பதவியை மெகபூபா முப்தி இன்று மாலை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த அனுமதிக்குமாறு ஜனாதிபதி மாளிகைக்கு கவர்னர் வோரா கடிதம் அனுப்பியுள்ளார். தற்போது, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். #KashmirPresidentRule #NNVohra
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்