என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » mahatma gandhi statue
நீங்கள் தேடியது "Mahatma gandhi statue"
தென்கொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, அங்குள்ள பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள காந்தி சிலையை திறந்து வைத்தார். #ModiInSouthKorea #ModiInSeoul #ModiKoreaVisit
சியோல்:
இந்திய பிரதமர் மோடி தென்கொரியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு இன்று அதிகாலை தென் கொரிய தலைநகர் சியோல் போய்ச் சேர்ந்தார்.
பிரதமர் மோடிக்கு சியோல் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மோடி தங்கி இருந்த ஓட்டலில் இந்திய வம்சாவளியினர் அவரைச் சந்தித்து வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய மோடி, மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை கொண்டாடி வரும் வேளையில், அவரது சிலையை திறந்து வைத்தது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்று குறிப்பிட்டார். மேலும், பயங்கரவாதம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய இரண்டும் மனிதகுலம் எதிர்கொண்டுள்ள இரண்டு பெரிய சவால்கள் என்றும் கூறினார்.
மகாத்மா காந்தியின் போதனைகளை சுட்டிக்காட்டி பேசிய மோடி, உலகின் முக்கிய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு இந்த போதனைகள் உதவும் என்றார்.
பிரதமர் மோடி தனது பயணத்தின் போது இந்திய-தென்கொரியா இடையே தொழில், வர்த்தகம் தொடர்பாக அந்நாட்டு அதிபர் மூன் ஜாயியுடன் பேச்சு நடத்துகிறார். புதிய ஒப்பந்தங்களிலும் இரு நாட்டு தலைவர்கள் கையெழுத்திடுகிறார்கள்.
இந்த சுற்றுப் பயணத்தின் போது பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற திட்டங்களுக்காக அவருக்கு அமைதிக்கான மகாத்மா காந்தி விருது தென்கொரிய அரசு சார்பில் வழங்கப்படுகிறது.
பிரதமர் மோடி தென்கொரியா செல்வது இது 2-வது முறையாகும். கடந்த 2015-ம் ஆண்டு மோடி தென்கொரியா சென்று அந்நாட்டுடன் தொழில், வர்த்தகம் தொடர்பாக பேச்சு நடத்தினார். #ModiInSouthKorea #ModiInSeoul #ModiKoreaVisit
இந்திய பிரதமர் மோடி தென்கொரியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு இன்று அதிகாலை தென் கொரிய தலைநகர் சியோல் போய்ச் சேர்ந்தார்.
பிரதமர் மோடிக்கு சியோல் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மோடி தங்கி இருந்த ஓட்டலில் இந்திய வம்சாவளியினர் அவரைச் சந்தித்து வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், சியோலில் உள்ள புகழ்பெற்ற யோக்சி பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு நிறுவப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை மோடி, தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் மற்றும் ஐநா சபை முன்னாள் பொதுச்செயலாளர் பான் கிமூன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய மோடி, மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை கொண்டாடி வரும் வேளையில், அவரது சிலையை திறந்து வைத்தது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்று குறிப்பிட்டார். மேலும், பயங்கரவாதம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய இரண்டும் மனிதகுலம் எதிர்கொண்டுள்ள இரண்டு பெரிய சவால்கள் என்றும் கூறினார்.
மகாத்மா காந்தியின் போதனைகளை சுட்டிக்காட்டி பேசிய மோடி, உலகின் முக்கிய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு இந்த போதனைகள் உதவும் என்றார்.
பிரதமர் மோடி தனது பயணத்தின் போது இந்திய-தென்கொரியா இடையே தொழில், வர்த்தகம் தொடர்பாக அந்நாட்டு அதிபர் மூன் ஜாயியுடன் பேச்சு நடத்துகிறார். புதிய ஒப்பந்தங்களிலும் இரு நாட்டு தலைவர்கள் கையெழுத்திடுகிறார்கள்.
இந்த சுற்றுப் பயணத்தின் போது பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற திட்டங்களுக்காக அவருக்கு அமைதிக்கான மகாத்மா காந்தி விருது தென்கொரிய அரசு சார்பில் வழங்கப்படுகிறது.
பிரதமர் மோடி தென்கொரியா செல்வது இது 2-வது முறையாகும். கடந்த 2015-ம் ஆண்டு மோடி தென்கொரியா சென்று அந்நாட்டுடன் தொழில், வர்த்தகம் தொடர்பாக பேச்சு நடத்தினார். #ModiInSouthKorea #ModiInSeoul #ModiKoreaVisit
மத்திய அமெரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஹவானாவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். #PresidentKovind
ஹவானா:
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கிரீஸ், சுரினாம் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று கியூபா சென்றடைந்தார். ஹவானா விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை அந்நாட்டு மந்திரி மற்றும் உயரதிகாரிகள் வரவேற்றனர்.
இதையடுத்து, முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்துக்கு சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அங்கு அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார்.
அதைத்தொடர்ந்து, ஹவானாவில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா கோவிந்த் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவருடன் இந்திய தூதரக அதிகாரிகள் உடனிருந்தனர். மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர், கியூபா அதிபரை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். #RamnathKovind #Havana
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X