search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கிகளில் கடன் பெற்று தலைமறைவாக வாழ்வது நாட்டுக்கு செய்யும் துரோகம் - ராம்நாத் கோவிந்த்
    X

    வங்கிகளில் கடன் பெற்று தலைமறைவாக வாழ்வது நாட்டுக்கு செய்யும் துரோகம் - ராம்நாத் கோவிந்த்

    டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வங்கிகளில் கடன் பெற்று தலைமறைவாக வாழ்வது நாட்டுக்கு செய்யும் துரோகம் என தெரிவித்துள்ளார். #ICAI #RamnathKovind
    புதுடெல்லி:

    இந்திய பட்டய கணக்காளர்கள் அமைப்பான ஐ.சி.ஏ.ஐ.யின் 70-வது ஆண்டு விழா நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: 

    சில தொழிலதிபர்கள் வங்கிகளில் பெரிய அளவில் கடன் வாங்குகின்றனர். ஆனால் அவற்றை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வருகின்றனர். அவ்வாறு செய்யும் தொழிலதிபர்கள் அவர்களது நம்பிக்கையை மட்டும் தகர்க்கவில்லை, அதற்கு மாறாக, நாட்டு மக்களையும், ஒட்டுமொத்த அமைப்புகளையும் ஏமாற்றுவதற்கு சமம்.

    மேலும், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி பிரமிக்கத்தக்க வைக்கும் வகையில் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். #ICAI #RamnathKovind
    Next Story
    ×