search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கியூபா"

    • பிப்ரவரி 1ம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது.
    • 25 பேசோ (பைசா)வில் இருந்த விலை 132 பேசோவாக உயர்கிறது.

    கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கியூபா - எரிபொருள் விலையை 500% உயர்த்தியுள்ளது.

    மிக மோசமான பொருளாதார நெருக்கடியால், எரிபொருள் விலையை 500 சதவீதம் உயர்த்த கியூபா அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி, பிப்ரவரி 1ம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

    25 பேசோ (பைசா)வில் இருந்த விலை 132 பேசோவாக உயர்கிறது.

    இது இந்திய மதிப்பில் ஒரு லிட்டர் ரூ.456க்கு விற்பனையாகும்.

    மத்திய அமெரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று கியூபா சென்றடைந்தார். அங்கு பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார். #PresidentKovind
    ஹவானா:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கிரீஸ், சுரினாம் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று கியூபா சென்றடைந்தார். ஹவானா விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை அந்நாட்டு மந்திரி மற்றும் உயரதிகாரிகள் வரவேற்றனர்.

    இதனை அடுத்து, முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்துக்கு சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அங்கு அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார். அந்நாட்டில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கும் அவர், அதிபரை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். 
    ×