search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Former PM Vajpayee dead"

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு இந்திய தேசத்திற்கு பேரிழப்பாகும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #AtalBihariVajpayee #RIPVajpayee

    புதுடெல்லி:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பாராளுமன்ற துணை சபா நாயகர் தம்பித் துரை, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிரூபர்களிடம் கூறியதாவது:-

    பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர், 50 ஆண்டு காலம் இரு அவைகளிலும் உறுப்பினராக இருந்து சிறந்த முறையிலே பணியாற்றியவர். பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்தவர். பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று முதன் முதலாக பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இலக்கியவாதி. சிறந்த பேச்சாளர். மக்களிடத்திலே அன்பாக பழக கூடியவர். நிர்வாக திறமை மிக்கவர்.

    அப்படிபட்ட தேசபற்றுள்ள மறைந்த பிரதமர் வாஜ்பாய் மறைவு இந்திய தேசத்திற்கு பேரிழப்பாகும். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் பாரதிய ஜனதா கட்சியினுடைய நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் தமிழ் நாடு சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தங்க நாற்கர சாலை, பொக்ரான் அணுகுண்டு சோதனை மற்றும் கார்கில் போர் ஆகியவை வாஜ்பாய் சாதித்த 3 முக்கிய சாதனைகள் ஆகும். #AtalBihariVajpayee #RIPVajpayee

    புதுடெல்லி:

    “சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு காரில் 6 மணி நேரத்தில் சென்று விட்டோம்” என்று நாம் இப்போது பெருமையாக பேசிக் கொள்கிறோம்.

    இந்த பெருமையை நமக்கு உருவாக்கி கொடுத்தவர் அன்றைய பிரதமர் வாஜ்பாய்.

    அவர் உருவாக்கிய சாலை திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் எக்ஸ்பிரஸ் சாலைகள் அமைக்கப்பட்டன. அவ்வாறு உருவானதுதான் சென்னை- கன்னியாகுமரி 6 வழிச்சாலை.

    இந்த சாலை மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இதே போல் பிரதமர் வாஜ்பாய் சாலைகளை உருவாக்கினார்.

    2001-ம் ஆண்டு அவர் பிரதமராக இருந்த போது இப்படி ஒரு சாலை அமைக்கும் திட்டம் அவரது மனதில் தோன்றியது.

    நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களையும் பிரதான சாலைகள் மூலம் இணைப்பது, இதன் மூலம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் குறுகிய நேரத்துக்குள் இந்த சாலையை சென்றடைய வேண்டும் என்பது அவரது திட்டம்.

    இதற்காக முதலில் தங்க நாற்கர சாலை என்ற திட்டத்தை முதலில் கொண்டு வந்தார்.

    இதன்படி டெல்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, அகமதாபாத் வழியாக மீண்டும் டெல்லி வரை சதுரமாக இணைக்கும் சாலை திட்டத்தை உருவாக்கினார்.

    5 ஆண்டில் முடிக்கும் வகையில் பிரமாண்டமான முறையில் திட்டம் உருவாக்கப்பட்டது. இதற்கு ஏராளமான பொருட் செலவாகும், பணிகளை முடிப்பது கடினம் என நிபுணர்கள் அவரிடம கூறிய போது, அதை எல்லாம் புறந்தள்ளி விட்டு திட்டத்தை முடித்தே தீருவது என்பதில் மிக தீவிரமாக இருந்தார்.

    சுமார் ரூ.60 ஆயிரம் கோடி செலவில் 5846 கி.மீட்டர் தூரத்துக்கு இந்த சாலை அமைக்கப்பட்டது. 5 ஆண்டுகளில் வெற்றிகரமாக இந்த பணிகள் நடந்து முடிந்தது.

    இது மட்டும் அல்லாமல் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களையும் இணைக்கும் வகையில் பிரதான சாலை திட்டத்தையும் உருவாக்கினார்.

    இதன் மூலம் அகமதாபாத், பெங்களூரு, புவனேஸ்வரம், கட்டாக், சூரத், விஜயவாடா, ஆக்ரா, புனே, கான்பூர், உதய்பூர் உள்ளிட்ட 20 நகரங்கள் ஒன்றோடு ஒன்றாக இணைக்கப்பட்டன.


    வாஜ்பாய் உருவாக்கிய இந்த திட்டத்தில் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு இன்று நாடு முழுவதும் விரிவான 4 வழி அல்லது 6 வழி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதனால் மக்கள் குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்றடைய முடிகிறது. அது மட்டும் அல்ல, சரக்கு போக்குவரத்துகளும் விரைவாக நடக்கின்றன.

    இந்த சாலை திட்டத்தால் இந்தியாவின் பொருளாதாரமும் வெகுவாக முன்னேறி இருக்கிறது.

    இது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு கிராமத்தையும் அருகில் உள்ள நகரத்தோடு இணைக்கும் வகையில் பிரதம மந்திரி கிராமப்புற சாலை திட்டம் என்ற திட்டத்தை 2000-ம் ஆண்டு தொடங்கினார்.

    கிராம மக்கள் தங்களது விவசாய உற்பத்தி பொருட்களை நகரங்களுக்கு உடனடியாக எடுத்து சென்று விற்று பணம் ஈட்டுவது, இதன் மூலம் இடைத்தரகர்கள் இல்லாத வணிகத்தை செய்வது என்பதற்காகவே இந்த கிராமப்புற சாலை திட்டத்தை அவர் கொண்டு வந்தார்.

    மத்திய அரசின் 60 சதவீத உதவி, மாநில அரசின் 40 சதவீத உதவி என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் மூலம் இன்று நாட்டில் உள்ள ஒவ்வொரு சிறு கிராமமும் அருகில் உள்ள நகரத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.

    இதனால் கிராம பொருளாதார வளர்ச்சி வெகுவாக முன்னேறி இருக்கிறது. சாலை வசதிகள் சரியாக இருந்தால் தான் நாட்டை முன்னேற்ற முடியும் என்று மிக துல்லியமாக திட்டமிட்டு வாஜ்பாய் அன்று கொண்டு வந்த உன்னத திட்டங்கள் இன்று நமக்கெல்லாம் நல்ல பலனை கொடுத்து வருகிறது.

    வாஜ்பாய் பொதுவாக மிக அமைதியான மனிதர். அதிர்ந்து கூட பேச மாட்டார். அதே நேரத்தில் அவர் அபார துணிச்சல் கொண்டவர் என்பதையும் அவருடைய செயல்பாடுகள் நமக்கு காட்டி உள்ளன.

    1998-ம் ஆண்டு மே 11-ந் தேதி இந்தியா பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியது. 1974-ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, முதல் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

    அதன் பிறகு நாம் அதை விட பன்மடங்கு சக்தி கொண்ட அணு ஆயுதங்களை உருவாக்கினோம். ஆனால், இவற்றை சோதனை செய்து பார்ப்பதற்கு நமக்கு பயம்.

    ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்து விடும். பாகிஸ்தான், சீனா போன்றவை நம் மீது கோபம் கொண்டு போர் தொடுத்து விடலாம் என்ற பயம் தான் இதற்கெல்லாம் காரணமாக இருந்தது.

    இதனால் மீண்டும் அணுகுண்டு சோதனை திட்டத்தை எந்த பிரதமரும் கையில் எடுக்கவில்லை. ஆனால், வாஜ்பாய் பிரதமராக வந்ததும் பொக்ரானில் சக்திவாய்ந்த அணு குண்டுகளை வெடித்து இந்தியாவின் மாபெரும் சக்தியை வெளி உலகுக்கு எடுத்து காட்டினார்.

    இதனால் பீதியில் அலறிய பாகிஸ்தானும் கூட பதிலுக்கு சில அணுகுண்டுகளை வெடித்து பூச்சாண்டி காட்டியது.

    நாம் எதிர்பார்த்தது போலவே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்தன. ஆனால், எந்த பொருளாதார தடையும் நம்முடைய துரும்பை கூட அசைத்து பார்க்க முடிய வில்லை.

    பொருளாதார ரீதியாக நாம் தொடர்ந்து வெற்றி பாதையில் பயணம் செய்தோம். இதற்கெல்லாம் வாஜ்பாய்தான் அன்று காரணமாக இருந்தார்.

    இந்தியா பொருளாதாரத்தில் மிகப்பெரும் வளர்ச்சி அடைந்து தன்னிறைவு பெறும் நாடாக மாறியதை கண்டு வயிற்றெரிச்சல் அடைந்த பாகிஸ்தானும், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளும் இந்தியாவை சீர்குலைக்க திட்டமிட்டனர். அதன் ஒரு பகுதியாகதான் 1999-ம் ஆண்டு இந்தியாவின் கார்கில் பகுதிக்குள் பாகிஸ்தான் ஊடுருவியது.

    பிரதமர் வாஜ்பாய் பாகிஸ்தான் ராணுவத்தை பின்வாங்கி செல்லும்படி முதலில் அன்பாக கேட்டார். ஆனால் பாகிஸ்தான் மறுத்ததும் வாஜ்பாய் ஒரு வினாடி கூட யோசிக்கவில்லை. அடுத்த நிமிடமே கார்கில் போரை அறிவித்தார். இந்திய ராணுவ படைகளை ஊக்குவித்து அதிரடி உத்தரவிட்டார்.

    வாஜ்பாய் இப்படி ஒரு அதிரடியை மேற்கொள்வார் பாகிஸ்தானும், பயங்கரவாதிகளும் எதிர்பார்க்கவில்லை. முதலில் அவர்கள் இந்திய ராணுவத்தை வீழ்த்தி விடலாம் என்று நினைத்தனர். ஆனால் வாஜ்பாய் பாகிஸ்தானுக்கு சிறு கடுகளவுக்கு கூட இடம் கொடுக்கவில்லை.

    பாகிஸ்தான் ராணுவத்தை ஓட ஓட விரட்டி அடித்தார். தோல்வி உறுதி என தெரிந்ததும் பாகிஸ்தான் அரசு அமெரிக்காவிடம் உதவி கேட்டு கெஞ்சியது. ஆனால் இந்தியா பக்கம் இருந்த நியாயத்தை உணர்ந்த அமெரிக்கா உதவி செய்யவில்லை. கடைசியில் பாகிஸ்தான் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு இந்தியாவிடம் மண்டியிட்டது.

    இந்த மகத்தான சாதனையை செய்த மாமனிதர் வாஜ்பாய் என்பது குறிப்பிடத்தக்கது.

    ‘இந்தியா எழுந்து நின்று அழுகிறது’ என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். #AtalBihariVajpayee #BJP #அடல்பிகாரிவாஜ்பாய்
    சென்னை:

    ‘இந்தியா எழுந்து நின்று அழுகிறது’ என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

    கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இந்தியப் பெருந்தலைவர் வாஜ்பாயின் மரணம் என்பது ஒன்றல்ல. ஒரு தலைவருக்கும், ஒரு கவிஞருக்கும் என்று 2 மரணங்கள் நேர்ந்திருக்கின்றன. இந்த மாதம் மரணத்திற்கு இலக்கியப் பசி போலும். தெற்கே ஓர் இமயமாகத் திகழ்ந்த கருணாநிதியையும், வடக்கே ஒரு கடலாகத் திகழ்ந்த வாஜ்பாயையும் ஒரே மாதத்தில் உண்டு முடித்திருக்கிறது. வாஜ்பாயிக்கான கண்ணீர் மண்தொடும் பொழுது அவருக்கான பெருமைகள் விண்தொடும் என்பது எனது நம்பிக்கை.



    அவருக்கு மதநேயம் உண்டு; ஆனால் அதைத்தாண்டிய மனிதநேயம் உண்டு. தன் மொழியைத் தாழவிடாத மொழிப்பற்று உண்டு; ஆனால் இன்னொரு மொழியைத் தாழ்த்திவிடாத தனிப் பண்பு உண்டு. கவிதை மனம்கொண்ட ஒருவன் பொதுவாழ்வில் புகுந்தால் அவன் கடைசிவரை கண்ணியமாகவே இருப்பான் என்பதற்கு வாஜ்பாயின் வாழ்வே எடுத்துக்காட்டு.

    அமெரிக்கா அழைத்துச்சென்ற பண்பு

    அவர் பிரதமராக இருந்தபோது அவரது கவிதைகளின் தமிழ்ப் பதிப்பை பிரதமர் இல்லத்தில் வெளியிட்ட நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த அன்பு இப்போது என் கண்களில் ஈரமாகிறது. அகில இந்தியக் கவியரங்குக்கு என்னை அமெரிக்கா அழைத்துச்சென்ற பண்பும் நினைவில் கசிகிறது.

    இந்தியும், தமிழும் இரு துருவங்கள் என்று கருதப்படுகிறபோது, காலத்தால் அழியாத திருவள்ளுவரையும், விடுதலைக் கனல் மூட்டிய பாரதியையும் தந்த தமிழ்மொழி மீது நான் அளவற்ற அன்பும் பற்றும் கொண்டிருக்கிறேன்’ என்று சொன்னபோது ஒரு கட்சித் தலைவராக இல்லாமல் தேசியத் தலைவராகவே உயர்ந்து நின்றவர் வாஜ்பாய்.

    கண்ணீர் வணக்கம்

    கொள்கை வேறுபாடுகளுக்கு மத்தியிலும் மனிதநேயம் என்ற புள்ளியில் இதயங்கள் இளைப்பாற முடியும் என்று சொல்லிப் போகிறது வாஜ்பாயின் வாழ்க்கை. அதைத்தான் அரசியலின் நிகழ்காலம் நெஞ்சில் எழுதிக்கொள்ள வேண்டும்.

    இந்தியா எழுந்து நின்று அழுகிறது. ஒரு கண்ணால் ஒரு தலைவனுக்காக; மறு கண்ணால் ஒரு கவிஞனுக்காக. வாஜ்பாயிக்கு என் கண்ணீர் வணக்கம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    #Vajpayee #AtalBihariVajpayee #RIPVajpayee #Vairamuthu
    “ஸ்ரீ ஸ்திரீ சக்தி” விருதினை வழங்கிய பிரதமர் வாஜ்பாய், சின்னப்பிள்ளை காலில் விழுந்து தொட்டு கும்பிட்டார். இதைத்தொடர்ந்து சின்னப்பிள்ளை நாடு முழுவதும் பிரபலம் ஆனார்.
    மதுரை:

    மதுரை மாவட்டம் புல்லுச்சேரி கிராமத்தை சேர்ந்த பெண், சின்னப்பிள்ளை. களஞ்சியம் என்ற பெயரில் இயக்கம் நடத்திய இவர், மக்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தினார். இதற்காக அவருக்கு 2001-ம் ஆண்டு மத்திய அரசின் “ஸ்ரீ ஸ்திரீ சக்தி” விருது கிடைத்தது. அப்போது அவருக்கு இந்த விருதினை வழங்கிய பிரதமர் வாஜ்பாய், சின்னப்பிள்ளை காலில் விழுந்து தொட்டு கும்பிட்டார். இதைத்தொடர்ந்து சின்னப்பிள்ளை நாடு முழுவதும் பிரபலம் ஆனார்.

    இந்த நிலையில் வாஜ்பாய் மரணம் குறித்து, சின்னப்பிள்ளை கூறியதாவது:-

    மத்திய அரசின் விருதை நான் பெற்றபோது நாட்டுக்கே பிரதமரான அவர் எனது காலில் விழுந்ததை நினைக்கும் போது இப்போதும் எனது மனம் பதைபதைக்கிறது. அவர் இறந்து விட்டார் என்ற செய்தி அறிந்து மனமுடைந்து போய் விட்டேன். சிறந்த தலைவரை இழந்துவிட்டோம். அவரை போன்ற ஒரு தலைவர் இனி நாட்டுக்கு கிடைக்க போவதில்லை. அவர் மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது.

    வாஜ்பாய்க்கு உடல்நிலை சரியில்லை என்ற செய்தியறிந்து அவரை பார்க்க வேண்டும் என்று மனம் எண்ணியது. ஆனால் எனக்கும் உடல் நலம் சரியில்லாமல் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  
    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தீவிர உணவு பிரியர் ஆவார். அவருடன் பணியாற்றிய அதிகாரிகளும், நெருக்கமான பத்திரிகையாளர்களும் இதுபற்றிய சுவையான தகவல்களை நினைவுகூர்ந்துள்ளனர்.
    புதுடெல்லி:

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தீவிர உணவு பிரியர் ஆவார். அவருடன் பணியாற்றிய அதிகாரிகளும், நெருக்கமான பத்திரிகையாளர்களும் இதுபற்றிய சுவையான தகவல்களை நினைவுகூர்ந்துள்ளனர்.

    மத்திய மந்திரிசபை கூட்டங்களில் கூட வாஜ்பாய் உப்புக்கடலையை கொறித்துக் கொண்டு இருப்பார். ஒவ்வொரு தடவையும் தட்டு நிறைய அதை நிரப்பி வைக்க வேண்டும். கூட்டம் முடிவடையும்போது, தட்டு காலியாகி இருக்கும்.

    வாஜ்பாய்க்கு இனிப்புகளும், கடல் உணவுகளும் குறிப்பாக இறால் மிகவும் பிடிக்கும். எந்த ஊருக்கு சென்றாலும், அந்த ஊரின் புகழ்பெற்ற உணவு வகைகளை கேட்டு வாங்கி சாப்பிடுவார்.

    வாஜ்பாயின் சீடரான லால்ஜி தாண்டன், லக்னோவில் இருந்து கபாப் உணவுவகைகளை வாங்கி வந்து தருவார்.

    மத்திய மந்திரி விஜய் கோயலுக்கு பழைய டெல்லியில் இருந்து சாட் உணவுவகைகளை வாங்கி வரும் பொறுப்பு.

    தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஆந்திராவில் இருந்து இறால் வாங்கி வருவார்.

    ஏராளமான மசாலாவுடன் பக்கோடா சாப்பிடுவதும், மசாலா டீ அருந்துவதும் வாஜ்பாய்க்கு பிடித்தமான விஷயம்.

    ஒருமுறை அரசாங்க விருந்தின்போது, உணவு பகுதியில், குலாப் ஜாமுன் உள்ளிட்ட இனிப்புவகைகள் அணிவகுத்து இருந்ததை பார்த்தவுடன், வாஜ்பாய் அந்த பகுதிக்கு நகர்ந்தார்.

    அதை பார்த்து கவலை அடைந்த அதிகாரிகள், ஒரு தந்திரம் செய்தனர். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மாதுரி தீட்சித்தை வாஜ்பாய்க்கு அறிமுகம் செய்து வைத்தனர். பிறகு மாதுரி தீட்சித்துடன் திரையுலகம் குறித்து வாஜ்பாய் உரையாடத் தொடங்கினார். அந்த இடைவெளியில், இனிப்புவகைகளை அங்கிருந்து மறைத்து விட்டனர், அதிகாரிகள்.

    வாஜ்பாய்க்கும் நன்றாக சமைக்கத் தெரியும். தன்னை சந்திக்க வரும் பத்திரிகையாளர்களுக்கு அவரே ஏதேனும் ஒரு உணவுவகையை சமைத்து வழங்குவார். அது பெரும்பாலும் இனிப்புவகையாகவோ அல்லது அசைவமாகவோ இருக்கும்.

    உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது கூட வாஜ்பாய் சமோசா சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக அதிகாரிகள் நினைவு கூர்ந்தனர். 
    டெல்லியில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடலுக்கு பல்வேறு மாநில முதல் மந்திரிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் உள்பட நேரில் சென்று விசாரித்து வந்தனர்.

    இன்று காலை அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5.05 மணிக்கு வாஜ்பாய் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



    இதற்கிடையே,  வாஜ்பாயின் உடல் அவரது டெல்லி வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு முப்படை வீரர்கள் மரியாதை செலுத்தி, தேசிய கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில், வாஜ்பாய் உடலுக்கு பல்வேறு மாநில முதல் மந்திரிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே உள்ளிட்ட பல்வேறு மாநில முதல் மந்திரிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
    டெல்லியில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #MKStalin
    சென்னை:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் உள்பட நேரில் சென்று விசாரித்து வந்தனர்.

    இதற்கிடையே, இன்று காலை அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5.05 மணிக்கு வாஜ்பாய் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு பெரிதும் வேதனையடைந்தேன். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு நாட்டிற்கும், பன்முகத்தன்மைக்கும் பேரிழப்பு. தங்க நாற்கர தேசிய நெடுஞ்சாலை என்றென்றும் வாஜ்பாய் பெயரை நினைவுபடுத்தும். ஜனநாயகத்தின் பக்கம் நின்று தன் வாழ்நாள் முழுவதும் அயராது போராடிய வாஜ்பாய் அவர்களின் இழப்பு நாட்டிற்கு பேரிழப்பாகும் என தெரிவித்துள்ளார். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #MKStalin
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழக கவர்னர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் டெல்லி செல்கின்றனர். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #BanwarilalPurohit #EdappadiPalanisamy #OPanneerselvam #MKStalin
    சென்னை:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் நேரில் சென்று விசாரித்து வந்தனர்.

    இன்று காலை முதல் வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதை
    தொடர்ந்து சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5.05 மணிக்கு அவர் மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது.



    இதற்கிடையே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபன்னீர்செல்வம் மற்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் டெல்லி செல்கின்றனர். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #BanwarilalPurohit #EdappadiPalanisamy #OPanneerselvam #MKStalin
    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #VenkaiahNaidu #LKAdvani #RajnathSingh
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் நேரில் சென்று விசாரித்து வந்தனர்.

    இதற்கிடையே, இன்று காலை முதல் வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5.05 மணிக்கு அவர் மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது.

    இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



    இதுதொடர்பாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறுகையில், வாஜ்பாயின் ஆளுமை, கடமையின் மீதான பக்தி, தலைமைப் பண்பு நீண்ட காலத்துக்கு நினைவு கூரப்படும். பன்முகத்தன்மை கொண்ட ஒரு ரத்தினத்தை நாடு இழந்துவிட்டது என இரங்கல் தெரிவித்துள்ளார்.

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவால் தாங்க முடியாத துயரத்தில் உள்ளேன் என பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    வாஜ்பாய் மறைவு செய்தி மிகுந்த வலியை ஏற்படுத்தியது, மிகச்சிறந்த தலைவரை தேசம் இழந்துள்ளது என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளார். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #VenkaiahNaidu #LKAdvani #RajnathSingh
    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #RamnathKovind #PMModi
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் நேரில் சென்று விசாரித்து வந்தனர்.

    இதற்கிடையே, இன்று காலை முதல் வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5.05 மணிக்கு அவர் மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது.

    இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



    இதுதொடர்பாக ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் கூறுகையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணமடைந்தது அறிந்து மிகவும் வருத்தமடைகிறேன் என இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதேபோல், பிரதமர் மோடி கூறுகையில், வாஜ்பாய் அளித்த உத்வேகம், வழிகாட்டல் ஒவ்வொரு இந்தியருக்கும், பாஜகவினருக்கும் இருக்கும் என தெரிவித்துள்ளார். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #RamnathKovind #PMModi
    ×