search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police Superintendent"

    ஊர்க்காவல்படையில் காலியாக உள்ள 63 பணியிடங்களுக்கு வருகிற 23 மற்றும் 24-ந் தேதிகளில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்துள்ளார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 55 ஆண்கள், 8 பெண்கள் என 63 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் நாளை (15-ந் தேதி) முதல் 21-ந் தேதி வரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், சீதக்காதி- சேதுபதி விளையாட்டு அரங்கம் பின்புறமுள்ள மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும்.

    வருகிற 23,24-ந் தேதிகளில் காலை 9 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்காவல் படை வீரர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்பவர்கள் 18 வயதுக்கு மேல் 50 வயதிற்குள் நல்ல உடல் தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்பவராக இருக்க வேண்டும். விளையாட்டு வீரர், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    10-ம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 21-ந் தேதி மாலை 5 மணிக்கு முன், மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    ஆதார் அட்டை, ரே‌ஷன் கார்டு. மாற்று சான்றிதழ், இரண்டு போட்டோ (பாஸ்போர்ட் சைஸ்)மதிப்பெண் பட்டியல் அசல் சான்று தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும். ஊர்க்காவல் படை வீரராக தேர்வு செய்யப்படுவோருக்கு காவல்துறை மூலம் 45 நாள் பயிற்சி அளிக்கப்படும். மாதத்திற்கு 5 நாள் மட்டும் பணி வழங்கப்படும். பணிபுரிந்த நாளுக்கு 560 வீதம் 5 நாட்களுக்கு மாதம் ரூ.2800 ஊதியம் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    உடுமலை கவுசல்யா இன்று திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு கயல் விழியிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார். #udumalaikousalya

    திருப்பூர்:

    உடுமலை கவுசல்யா இன்று திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு கயல் விழியிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் சங்கர் சமூக நீதி அறக்கட்டளை நடத்தி வருகிறோம். அறக்கட்டளைக்கு சந்தோஷ்ஸ்ரீ என்ற பெண் நேற்று வந்தார். கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறி பாதுகாப்பு கேட்டு அறக்கட்டளையில் தங்க அனுமதி கேட்டார். அவருக்கு நாங்கள் அனுமதி வழங்கி பாதுகாப்பு அளித்தோம்.

    இரவு 9.30 மணிக்கு 2 போலீசார் அறக்கட்டளைக்கு வந்து எங்கள் பாதுகாப்பில் இருந்த பெண்ணை தரதரவென இழுத்துச்சென்றனர்.

    இதை தடுக்க முயன்ற சங்கரின் தம்பியை போலீசார் தாக்கினர். சட்டத்திற்கு புறம்பாக நடந்த 2 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார். #udumalaikousalya

    விழுப்புரம் மாவட்டத்தில் 41 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பிறப்பித்துள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடுபேட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சூரியநாராயணன் மயிலம் போலீஸ் நிலையத்திற்கும், திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய ஏட்டு மஞ்சுளா உளுந்தூர்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏட்டுகள் ராஜதுரை திருநாவலூர் போலீஸ் நிலையத்திற்கும், காளிதாசன் உளுந்தூர்பேட்டை போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கும், ராஜேந்திரன் கிளியனூர் போலீஸ் நிலையத்திற்கும், ஆரோக்கியதாஸ் விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்திற்கும், கண்ணன் சங்கராபுரத்திற்கும், போலீஸ்காரர்கள் ரவி கீழ்குப்பத்திற்கும், சக்திவேல் வளவனூருக்கும், ராமலிங்கம் கரியாலூருக்கும், வசந்தராஜன், ரமேஷ் ஆகியோர் திருவெண்ணைநல்லூருக்கும், பசுபதி மரக்காணத்திற்கும், பூங்கொடி ஒலக்கூருக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.

    இதேபோல் விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை பிரிவில் 5 ஆண்டுகளாக போலீஸ்காரராக பணியாற்றி வந்த சுரேஷ், பிரகாஷ்குமார், சத்தியநாராயணன், சுபாஷ், சரவணன், கோபிநாதன், செல்வத்துரை உள்ளிட்ட 27 பேர் மாவட்டத்திற்குள் வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பிறப்பித்துள்ளார். 

    ஒடிசா மாநிலம், மல்லாங்கிரி மாவட்டத்தில் தலைக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்ட பெண் மாவோயிஸ்ட் போலீஸ் சூப்பிரண்ட் முன்னிலையில் இன்று சரண் அடைந்தார். #WomanMaoist #OdishaMaoist
    புவனேஸ்வர்:

    மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.

    பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.



    இவர்களில் சிலர் வன்முறையை கைவிட்டு நன்முறை பாதைக்கு திரும்புகின்றனர். அவ்வகையில், ஒடிசா மாநிலம், மல்லாங்கிரி மாவட்டத்தில் தலைக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்ட பெண் மாவோயிஸ்ட் இடி மடி(23) இன்று அம்மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஜக்மோகன் மீனா முன்னிலையில் இன்று சரண் அடைந்தார்.

    கொலை உள்ளிட்ட பல வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த இவருக்கு ஒடிசா மாநில அரசின் அறிவிப்பின்படி வீடு கட்ட நிதியுதவி, கல்வி கற்க விரும்பினால் அதற்கான நிதி அல்லது விரும்பிய தொழில் செய்வதற்கான பயிற்சி அளிக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்ட் தெரிவித்தார். #WomanMaoist #OdishaMaoist #Maoistsurrenders
    வீட்டில் பட்டாசுகளை விற்பனைக்காக சேமித்து வைக்கக்கூடாது. குடியிருப்பு பகுதிகளில் யாரேனும் பட்டாசுகளை சேமித்து வைத்திருந்தால் காவல் நிலையத்தில் தகவல் அளிக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். #Firecrackers
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் நாகலுத்து தெருவில் வசித்து வந்தவர் மைதீன் (52). இவர் அந்த பகுதியில் பட்டாசு விற்பனை தொழில் செய்து வருகிறார்.

    தீபாவளி பண்டிகைக்காக நாட்டு ரக பட்டாசுகளை அதிக அளவில் வாங்கி வந்து வீட்டில் வைத்திருந்தார், நேற்று பட்டாசுகளை பேக்கிங் செய்யும் பணியில் நேற்று மாலை மைதீன், அவரது மனைவி தாஹிரா பானு, மகன் முஷ்டாக் ஆகியோர் ஈடுபட்டனர்.

    அப்போது மைதீன் டீ குடிப்பதற்காக வெளியே சென்றபோது பட்டாசுகளை திடீரென வெடித்தன, இதில் தாஹிரா பானு, மற்றும் முஷ்டாக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும் மைதீன் வீட்டு சுவர் இடிந்து பக்கத்து வீட்டில் விழுந்தது. இதில் அந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மஸ்தான் என்பவர் உயிரிழந்தார். வீட்டு வாசல் முன்பு அமர்ந்திருந்த மஸ்தானின் தாயார் சர்புதீன் பானு படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.

    இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சர்புதீன் பானுவும் இறந்தார்.

    இதுகுறித்து விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து அனுமதியின்றி நாட்டு ரக பட்டாசுகளை வீட்டில் வைத்தது தொடர்பாக மைதீனை கைது செய்தனர்.

    விபத்து குறித்து அறிந்ததும் அமைச்சர் பெஞ்சமின், மரகரம் குமரவேல் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வாலாஜாபாத் பா.கணேசன், வி.சோமசுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தர மூர்த்தி உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

    வீட்டில் பட்டாசுகளை விற்பனைக்காக சேமித்து வைக்கக்கூடாது. குடியிருப்பு பகுதிகளில் யாரேனும் பட்டாசுகளை சேமித்து வைத்திருந்தால் அது குறித்த தகவல்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் அளிக்குமாறும், இதன் மூலம் உயிரிழப்புகளை தவிர்க்கலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். #Firecrackers
    பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் ஐ.ஜி. மீது பாலியல் புகார் கூறியது தொடர்பாக விசாகா கமிட்டி இருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. #Vishakacommittee
    சென்னை:

    சென்னையில் பணியாற்றும் பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் தனது மேல் அதிகாரியான ஐ.ஜி. மீது பாலியல் புகார் தெரிவித்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புகாருக்குள்ளாகி இருக்கும் ஐ.ஜி. சென்னையில் துணை கமி‌ஷனராகவும், வெளிமாவட்டங்களில் டி.ஐ.ஜி.யாகவும் பணியாற்றியவர். போலீஸ் துறையில் நியாயமான அதிகாரி என்றும் பெயர் எடுத்தவர். இதனால் அவர் மீது கூறப்பட்டுள்ள பாலியல் புகார் உயர் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பான பேச்சாக மாறியுள்ளது.

    காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் மற்றும் அரசு பெண் ஊழியர்கள் ஆகியோருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசாகா கமிட்டிக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் புதிதாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.

    கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையிலான இந்த கமிட்டியில் கூடுதல் டி.ஜி.பி. அருணாசலம், டி.ஐ.ஜி. தேன்மொழி, ஓய்வு பெற்ற கூடுதல் சூப்பிரண்டு சரஸ்வதி, டி.ஜி.பி. அலுவலக மூத்த நிர்வாக அதிகாரி ரமேஷ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.


    இந்த கமிட்டியின் முதல் கூட்டம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மாநில குற்ற ஆவண காப்பக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. காலை 11.30 மணி அளவில் கூடிய இந்த கூட்டத்துக்கு கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமை தாங்கினார். கமிட்டியில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் ஐ.ஜி. மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு கூறி இருக்கும் பாலியல் குற்றச்சாட்டு குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    புகார் கூறி இருக்கும் பெண் அதிகாரிக்கும், புகாருக்குள்ளான போலீஸ் ஐ.ஜி.க்கும் விரைவில் சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரணை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    விசாகா கமிட்டியின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தபடுபவர்கள் மீதான குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது.

    இதன் மூலம் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பெண் போலீஸ் அதிகாரி மீதான பாலியல் புகார் பற்றி உரிய முறையில் பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்படும் என்று கமிட்டி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். எனவே ஐ.ஜி. மீதான பாலியல் விவகாரத்தில் விசாகா கமிட்டி எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? என்பது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இன்றைய கூட்டம் முடிந்த பின்னர் விரைவில் மீண்டும் விசாகா கமிட்டி கூட உள்ளது. அப்போது முதலில் பெண் போலீஸ் சூப்பிரண்டை வரவழைத்து விசாரணை நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விசாரணையில் அவர் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஐ.ஜி.யிடமும் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. #Vishakacommittee
    தூத்துக்குடியில் இருந்து சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் சாலை விதிகளை மதித்து பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தெரிவித்து உள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இருந்து சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் சாலை விதிகளை மதித்து பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி விருதுநகர் மாவட்டம் தானிப்பாறையில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் திருவிழாவுக்கு தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர்.

    கடந்த காலங்களில் நடந்த விழாவின்போது, மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் மொத்தம் 21 ஆண்கள், 28 பெண்கள் அடித்து செல்லப்பட்டு உள்ளனர். எனவே பக்தர்கள் பாதுகாப்பு கருதி கோவிலுக்கு நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) வரை காலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    ஆகையால் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சதுரகிரி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் சென்றும், சாலை விதிகளை கடைபிடித்தும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
    உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    உளுந்தூர்பேட்டை:

    விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேற்று உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த விழுப்புரம் அருகே அரும்பட்டு கிராமத்தில் இரு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணமான 17 வயது சிறுமியிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அந்த சிறுமிக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.

    தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விழுப்புரம் மாவட்டத்திலேயே கல்வராயன்மலை பகுதியை சேர்ந்த சிலர் தான் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்தனர். ஆனால் தற்போது எறையூர் பகுதியை சேர்ந்த பலர் தங்களது வீடுகளில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. அவ்வாறு உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் உடனே அதனை எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    திருவண்ணாமலையில் மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து திருவண்ணாமலையில் நாளை (1-ந்தேதி) மாணவர்கள் போராட்டம் நடத்தப்போவதாக சமூக வலை தளங்களில் தகவல் பரவியது. இதைதொடர்ந்து, திருவண்ணாமலை போலீஸ்சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களை அழைத்து போலீஸ்சூப்பிரண்டு பொன்னி பேசினார்.

    அப்போது, மாணவர்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம். இந்த தகவலை பரப்பியது யார் என அடையாளம் கண்டு விட்டோம். இந்த தகவலை பரப்பியவர்கள் மாணவர்கள் கிடையாது.

    எனவே இந்த போராட்டத்துக்கும், மாணவர்களுக்கும் தொடர்பு இல்லை. போராட்டத்தில் பங்கேற்று படிப்பையும், எதிர்காலத்தையும் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தார். #Tamilnews
    திருச்சி சாலையில் அதிகரித்து வரும் விபத்துக்கான காரணம் குறித்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, அதிகாரிகளுடன் ஆய்வு நடத்த உள்ளார்.
    கோவை:

    கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் சமீப காலமாக விபத்துகள் அதிகரித்து வருகிறது.  குறிப்பாக திருச்சி சாலையில் பாப்பம்பட்டி பிரிவு அருகே உள்ள சிந்தாமணி பிரிவில் தொடங்கி சூலூர், காங்கேயம்பாளையம் வரை சாலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை வாகன விபத்துகளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

    திருச்சி சாலையில் பாதுகாப்பற்ற பகுதியாக கருதப்படும் இந்த குறிப்பிட்ட 8 கிலோ மீட்டர் சாலை மிகவும் குறுகலான இருவழிச்சாலையாகவே உள்ளது. சாலையின் அகலத்துக்கு ஏற்ப இல்லாமல் தினந்தோறும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இச்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் பல முறை வலியுறுத்தினர். ஆனால் இதுவரை அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாலையை விரிவாக்கம் செய்தால் தான் விபத்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் தற்போது அதிகாரிகள் உணரத் தொடங்கி உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட காவல் துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த சாலையில் ஆய்வு நடத்தினர்.

    மையத்தடுப்புகள் இல்லாத இச்சாலையில் விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டது.

    இன்று கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி, தேசிய நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை அதிகா ரிகளுடன் சென்று இந்த சாலையில் ஆய்வு நடத்த உள்ளார். இதில் விபத்துகளை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்த உள்ளனர்.
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபினவ் இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பான 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு வழக்குக்கும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விசாரணை 3 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக ஆவணங்கள் சேகரிக்கப்படுகிறது. 2-வது கட்டமாக சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. 3-வதாக இறுதி விசாரணை நடத்தப்படுகிறது. தற்போது முதல் கட்டமாக ஆவணங்கள் சேகரிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சேகரிக்கப்ப‌ட்டு வருகின்றன.

    மேலும் துப்பாக்கி சூடு சம்பவத்தையொட்டி வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வந்த புகைப்படங்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது. உறுதிபடுத்தப்பட்ட ஆவணம், வழக்கு தொடர்பான உறுதிபடுத்தப்படாத ஆவணங்களும் சேகரிக்கப்படுகிறது. இதற்காக சம்பவம் நடந்த ஒவ்வொரு இடத்திலும் போலீசார் மீண்டும், மீண்டும் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் விசாரணை முழுவதும் ரகசியமாக நடத்தப்படுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரிடமும், காயம் அடைந்தவர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபினவ் இன்று தூத்துக்குடிக்கு வந்தார்.

    துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை அதிகாரிகளான டி.எஸ்.பி.க்கள் சேகரித்த விவரங்களை அவர் கேட்டறிகிறார். தொடர்ந்து விசாரணை அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் ஆலோசனை நடத்துகிறார். மேலும் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களிடமும் அவர் விசாரணை நடத்த உள்ளார்.

    மாணவி கடத்தலை தடுக்க உதவிய செருப்பு தைக்கும் தொழிலாளி முருகேசனுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி பாராட்டி பரிசு வழங்கினார்.
    காங்கேயம்:

    காங்கேயம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறுதொழுவு தேவனபாளையம் பகுதியை சேர்ந்த 5-ம் வகுப்பு படித்து வரும் மாணவி நேற்று முன்தினம் மாலையில் பள்ளி கூடம் முடித்து வந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம ஆசாமி, மாணவிக்கு பிஸ்கெட் வாங்கி கொடுத்து பஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். இதை பார்த்து சந்தேகம் அடைந்த அந்த பகுதியில் செருப்பு தைக்கும் தொழிலாளி முருகேசன்(வயது 60) என்பவர் இதுகுறித்து அந்த ஆசாமியிடம் கேட்டுள்ளார்.

    மேலும், இதுகுறித்து உடனடியாக போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த ஆசாமி பீகார் மாநிலத்தை சேர்ந்த ஜிஜந்தர்(25) என்பதும், இவர் பிஸ்கெட் வாங்கி கொடுத்து மாணவியை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி கடத்தப்பட்டதை கண்டு உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்து, குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்க உதவியாக இருந்த முருகேசனுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி பாராட்டி பரிசு வழங்கினார். 
    ×