search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vishaka committee"

    ஐஜி மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் எஸ்பி தொடர்ந்த வழக்கில், விசாகா கமிட்டியை எதிர்மனுதாரராகச் சேர்க்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #VishakaCommittee
    சென்னை:

    தமிழக லஞ்ச ஒழிப்புப்பிரிவில் ஐ.ஜி.யாக பணியாற்றி வரும் போலீஸ் அதிகாரி மீது, பெண் போலீஸ் சூப்பிரண்டு பாலியல் கொடுமை செய்ததாக புகார் செய்தார். இதையடுத்து இந்த புகார் குறித்து விசாரிக்க கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது.

    இந்த கமிட்டியில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் உறுப்பினராக இல்லை என்று கூறி, இந்த விசாகா கமிட்டியை மாற்றியமைக்க கோரி ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்சில் விசாரணையில் உள்ளது.

    இந்த நிலையில், தனக்கு பாலியல் கொடுமை செய்த ஐ.ஜி. மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்து இடம் மாற்றம் செய்யவேண்டும். கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்ட விசாகா கமிட்டியை மாற்றி அமைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் சூப்பிரண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த வழக்கு நீதிபதி சத்ருஹன புஜாரி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான தாட்சாயினி ஆஜராகி, ‘மனுதாரர் ஆகஸ்டு 17ந்தேதி புகார் செய்தார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசாகா கமிட்டி மட்டும் அமைத்துள்ளனர். அதில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் பெண் அமைப்புகளின் உறுப்பினர்களாக உள்ளவர்களை உறுப்பினர்களாக இந்த கமிட்டியில் சேர்க்கவில்லை. எனவே, இந்த விசாகா கமிட்டியையே மாற்றி அமைக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

    அப்போது குற்றச்சாட்டுக்கு ஆளான ஐ.ஜி. சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஆர்.தியாகராஜன், ‘மனுதாரர் பாலியல் புகாரை லஞ்ச ஒழிப்புத்துறையில் உள்ள விசாகா கமிட்டியிடம் கொடுக்கவில்லை. அதுவும் அந்த விசாகா கமிட்டியின் தலைவராக மனுதாரர்தான் இருந்தார்’ என்று கூறினார்.

    ‘அப்படியென்றால், மனுதாரரின் புகாரை, மனுதாரரே விசாரித்து முடிவு எடுத்துக் கொள்ளலாமா? ஐ.ஜி.யை பணியிட மாற்றம் செய்யலாமா? இதை ஒப்புக்கொண்டால், இந்த வழக்கையே வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்’ என்று வக்கீல் தாட்சாயினி வாதிட்டார்.

    தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், விசாகா கமிட்டியை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஏற்கனவே, ஒரு வழக்கு தொடரப்பட்டு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இருந்தாலும், இந்த வழக்கிற்கு அரசு தரப்பின் கருத்தை கேட்டு தெரிவிக்கிறேன் என்று கூறினார்

    அப்போது மனுதாரர் வக்கீல் தாட்சாயினி, ‘லஞ்ச ஒழிப்புப்பிரிவு அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் ஆகஸ்டு 5-ந்தேதி வரையிலான பதிவை பாதுகாக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிடவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

    அதற்கு அட்வகேட் ஜெனரல், ‘இந்த கேமரா பதிவை 2 நகல் எடுத்து, ஒன்றை விசாகா கமிட்டிக்கு கொடுத்துள்ளோம். மற்றொன்றை முத்திரையிடப்பட்ட உறையில் பாதுகாப்பாக வைத்துள்ளோம்’ என்று கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கை வருகிற 12-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். #VishakaCommittee
    பாலியல் புகார்கள் பற்றி விசாரிக்க கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாகா குழுவை வேறு அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
    சென்னை:

    பாலியல் புகார்கள் பற்றி விசாரிக்க கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாகா குழுவை மாற்றியமைக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    காவல்துறையில் பெண் காவலர்கள், பெண் அதிகாரிகள் அளிக்கும் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில், கூடுதல் டி.ஜி.பி. அருணாச்சலம், டி.ஐ.ஜி. தேன்மொழி, மூத்த நிர்வாக அதிகாரி ரமேஷ் பாபு மற்றும் ஓய்வுபெற்ற எஸ்.பி. சரஸ்வதி அடங்கிய குழுவை அமைத்து கடந்த 17-ந்தேதி தமிழக டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

    இந்த குழு சட்டப்படி அமைக்கப்படவில்லை எனக்கூறி, சென்னை சூளை மேட்டைச் சேர்ந்த வக்கீல் பிரேம் ஆனந்த் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

    சட்டப்படி விசாகா குழுவில் ஒரு தலைமை அதிகாரியும் குறைந்தது மூன்று உறுப்பினர்களும் இடம்பெற்றிருக்க வேண்டும். அவர்களில் ஒருவர் பெண்கள் அமைப்பு அல்லது தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளாக இருக்க வேண்டும்.

    ஆனால் டி.ஜி.பி. அமைத்துள்ள இந்த குழுவில் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த உறுப்பினர்கள் யாரும் இடம் பெறவில்லை. மேலும் இந்த குழு உயர் அதிகாரிகளை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

    மேலும் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் சட்டவிதிகளை பின்பற்றி, விசாகா குழுக்களை அமைக்க உள்துறை செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுத்துறை செயலாளர்களுக்கும், டி.ஜி.பி.க்கும் உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கூறியிருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி தஹிலரமானி, நீதிபதி எம்.துரைசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை வேறு அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. #tamilnews
    பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் ஐ.ஜி. மீது பாலியல் புகார் கூறியது தொடர்பாக விசாகா கமிட்டி இருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. #Vishakacommittee
    சென்னை:

    சென்னையில் பணியாற்றும் பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் தனது மேல் அதிகாரியான ஐ.ஜி. மீது பாலியல் புகார் தெரிவித்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புகாருக்குள்ளாகி இருக்கும் ஐ.ஜி. சென்னையில் துணை கமி‌ஷனராகவும், வெளிமாவட்டங்களில் டி.ஐ.ஜி.யாகவும் பணியாற்றியவர். போலீஸ் துறையில் நியாயமான அதிகாரி என்றும் பெயர் எடுத்தவர். இதனால் அவர் மீது கூறப்பட்டுள்ள பாலியல் புகார் உயர் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பான பேச்சாக மாறியுள்ளது.

    காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் மற்றும் அரசு பெண் ஊழியர்கள் ஆகியோருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசாகா கமிட்டிக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் புதிதாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.

    கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையிலான இந்த கமிட்டியில் கூடுதல் டி.ஜி.பி. அருணாசலம், டி.ஐ.ஜி. தேன்மொழி, ஓய்வு பெற்ற கூடுதல் சூப்பிரண்டு சரஸ்வதி, டி.ஜி.பி. அலுவலக மூத்த நிர்வாக அதிகாரி ரமேஷ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.


    இந்த கமிட்டியின் முதல் கூட்டம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மாநில குற்ற ஆவண காப்பக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. காலை 11.30 மணி அளவில் கூடிய இந்த கூட்டத்துக்கு கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமை தாங்கினார். கமிட்டியில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் ஐ.ஜி. மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு கூறி இருக்கும் பாலியல் குற்றச்சாட்டு குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    புகார் கூறி இருக்கும் பெண் அதிகாரிக்கும், புகாருக்குள்ளான போலீஸ் ஐ.ஜி.க்கும் விரைவில் சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரணை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    விசாகா கமிட்டியின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தபடுபவர்கள் மீதான குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது.

    இதன் மூலம் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பெண் போலீஸ் அதிகாரி மீதான பாலியல் புகார் பற்றி உரிய முறையில் பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்படும் என்று கமிட்டி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். எனவே ஐ.ஜி. மீதான பாலியல் விவகாரத்தில் விசாகா கமிட்டி எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? என்பது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இன்றைய கூட்டம் முடிந்த பின்னர் விரைவில் மீண்டும் விசாகா கமிட்டி கூட உள்ளது. அப்போது முதலில் பெண் போலீஸ் சூப்பிரண்டை வரவழைத்து விசாரணை நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விசாரணையில் அவர் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஐ.ஜி.யிடமும் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. #Vishakacommittee
    ஐ.ஜி. மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு கொடுத்துள்ள செக்ஸ் புகார் குறித்து நாளை போலீஸ் அதிகாரிகள் குழு விசாரிக்க உள்ளது. #Vishakacommittee
    சென்னை:

    தமிழக காவல் துறையில் பெண் அதிகாரி ஒருவர் சென்னையில் முக்கிய பிரிவு ஒன்றில் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்தார்.

    அவருக்கு உயர் அதிகாரியாக ஐ.ஜி. அந்தஸ்தில் ஆண் போலீஸ் அதிகாரி இருக்கிறார்.

    ஒரே பிரிவில் இருந்ததால் அந்த ஐ.ஜி. அடிக்கடி பெண் போலீஸ் சூப்பிரண்டை அழைத்து வழக்குகள் தொடர்பாக பேசுவதுண்டு. நாளடைவில் அந்த பெண் போலீஸ் சூப்பிரண்டு மீது ஐ.ஜி.க்கு ஈர்ப்பு ஏற்பட்டது.

    சுமார் 7 மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் அவர் தனது ஆசையை மறைமுகமாக வெளிப்படுத்தினார். இதற்கு பெண் போலீஸ் சூப்பிரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    என்றாலும் ஐ.ஜி. தொடர்ந்து பெண் போலீஸ் சூப்பிரண்டிடம் செக்ஸ் ரீதியிலான முயற்சிகளை கையாண்டதாக தெரிகிறது. பல தடவை பாராட்டுவதாக கூறி அவர் கட்டிப்பிடிக்க முயற்சி செய்தாராம்.

    ஒரு தடவை ஒரு வழக்கு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று பெண் சூப்பிரண்டை அவர் தனது அறைக்கு அழைத்திருந்தாராம். அப்போது அவர் தனது செல்போனில் ஆபாச படத்தை காட்டினாராம்.

    ஒரு கட்டத்தில் தனது ஆசைக்கு அடிபணியாததால் அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஐ.ஜி. இறங்கியதாக தெரிகிறது. அதாவது அந்த பெண் சூப்பிரண்டிடம் “உன்னைப் பற்றிய ஆண்டு ரகசிய அறிக்கை (ஏ.சி.ஆர்.)யில் உனக்கு எதிராக குறிப்புகளை எழுதுவேன்” என்று ஐ.ஜி. அச்சுறுத்தும் வகையில் மிரட்டினாராம்.

    இதனால் என்ன செய்வது என்று தவித்த அந்த பெண் போலீஸ் சூப்பிரண்டு வேறு பிரிவுக்கு மாற்றலாகி சென்று விடலாம் என்று முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால் அவருக்கு உடனடி இடமாற்றம் எதுவும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் அந்த ஐ.ஜி. ஒருநாள் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் முயற்சியில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இனியும் பொறுமையாக இருக்க கூடாது என்று முடிவு செய்த பெண் போலீஸ் சூப்பிரண்டு சமீபத்தில் போலீஸ் டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரனை சந்தித்து முறையிட்டார்.

    அப்போது தனக்கு ஐ.ஜி. எந்தெந்த வகையில் செக்ஸ் தொந்தரவு கொடுத்தார் என்று டி.ஜி.பி.யிடம் பெண் போலீஸ் சூப்பிரண்டு விளக்கமாக எடுத்துக் கூறினார்.

    பெண் போலீஸ் சூப்பிரண்டு ஆதாரத்துடன் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை கண்டு டி.ஜி.பி. அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இதுபற்றி விசாரிக்க உத்தரவிட்டார். அரசு அலுவலகங்களில் பெண் ஊழியர்களுக்கு இழைக்கப்படும் பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் விசாகா கமிட்டி மூலம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையிலான அந்த விசாகா கமிட்டியில் கூடுதல் டி.ஜி.பி. அருணாசலம், காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. தேன்மொழி, ஓய்வு பெற்ற கூடுதல் சூப்பிரண்டு சரஸ்வதி, டி.ஜி.பி. அலுவலக மூத்த அதிகாரி ரமேஷ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

    இந்த கமிட்டி ஐ.ஜி. மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு கொடுத்துள்ள புகாரை முதல் வழக்காக விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தமிழக காவல்துறையின் விசாக கமிட்டி நாளை (வியாழக்கிழமை) கூட உள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மாநில குற்ற ஆவணக் காப்பகம் கட்டிடத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கூடுதல் டி.ஜி.பி.சீமா அகர்வால் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

    கூட்டத்தில் பெண் போலீஸ் சூப்பிரண்டு அளித்த செக்ஸ் புகார் குறித்து விசாரணை தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே பெண் போலீஸ் சூப்பிரண்டு கொடுத்த புகாரின் அடிப்படையில் பூர்வாங்க விசாரணைகள் நடந்து முடிந்து விட்டன. எனவே நாளைய தினம் விசாரணையின் அடுத்தக் கட்டம் தொடங்கப்பட உள்ளது.

    செக்ஸ் புகார் செய்த பெண் போலீஸ் சூப்பிரண்டிடம் விசாரணை நடத்த உள்ளனர் . அவரிடம் வாக்குமூலம் பெற முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்பிறகு குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் ஐ.ஜி.யிடமும் விசாரணை நடத்தப்படும். அவர்கள் சொல்லும் தகவலின் அடிப்படையில் விசாகா கமிட்டி இறுதி முடிவு எடுக்கும்.

    இந்த தகவல்களை விசாரணை கமிட்டி உறுப்பினர்களில் ஒருவர் தெரிவித்தார். விசாகா கமிட்டி யாருக்கும் சாதக பாதகம் இன்றி நியாயமான முடிவை எடுக்கும் என்றும் அந்த உறுப்பினர் கூறினார். எனவே செக்ஸ் புகாருக்கு ஆளாகி இருக்கும் ஐ.ஜி. மீது துறை ரீதியிலான நடவடிக்கை பாயுமா? என்ற பரபரப்பு தமிழக காவல்துறை வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.

    விசாக கமிட்டி விசாரணை நாளை தொடங்குவதையொட்டி பெண் போலீஸ் சூப்பிரண்டு கொடுத்த செக்ஸ் புகாரில் உடனடி நடவடிக்கைகள் ஆரம்பமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் செக்ஸ் புகார் கூறிய பெண் அதிகாரி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது பணிபுரிந்த இடத்தில் இருந்து வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இருப்பினும் அவருக்கு சென்னையிலேயே பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    நேற்று ஒரே நாளில் 16 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களுடன் பெண் அதிகாரியும் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் செக்ஸ் புகார் சுமத்தப்பட்ட ஐ.ஜி. இடமாற்றம் செய்யப்படவில்லை. அவர் அதே பிரிவில் உள்ளார். #Vishakacommittee
    போலீஸ் ஐ.ஜி. மீது செக்ஸ் புகார் கூறிய பெண் அதிகாரி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது பணிபுரிந்த இடத்தில் இருந்து வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். #Vishakacommittee
    சென்னை:

    சென்னையில் பணியாற்றி வரும் பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் தனது மேல் அதிகாரியான ஐ.ஜி. மீது செக்ஸ் புகார் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த அதிகாரிகள் இருவரும் ஒரே துறையில் பணியாற்றினர். அப்போது ஐ.ஜி. அந்தஸ்தில் இருந்த அதிகாரி பெண் போலீஸ் சூப்பிரண்டின் செல்போனுக்கு ஆபாச படங்களை அனுப்பியதாகவும், தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக விசாகா கமிட்டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் செக்ஸ் புகார் கூறிய பெண் அதிகாரி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது பணிபுரிந்த இடத்தில் இருந்து வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இருப்பினும் சென்னையிலேயே பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    நேற்று ஒரே நாளில் 16 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களுடன் பெண் அதிகாரியும் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. #Vishakacommittee
    ×