என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sathuragiri"
- ஆடி, தை, மகாளய அமாவாசை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.
- காட்டுத்தீயின் பாதிப்பு காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல நேற்று தடை விதிக்கப்பட்டது.
திருமங்கலம்:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. மலை உச்சியில் உள்ள இந்த கோவிலுக்கு மாதத்தில் பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய தலா 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஆடி, தை, மகாளய அமாவாசை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். ஆடி மாத பவுர்ணமி, பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று முதல் வருகிற 2-ந்தேதி வரை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சதுரகிரி வனச்சரகத்திற்குட்பட்ட ஊஞ்சிக் கல் மலையில் காட்டுத் தீ பரவியது. காற்றின் வேகம் காரணமாக தீ சில கிலோ மீட்டர் பரவியதால் அதனை தடுக்க வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
காட்டுத்தீயின் பாதிப்பு காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல நேற்று தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக மலையேற தாணிப்பாறைக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பிச்சென்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் தீயின் பரவல் குறைந்தது. மேலும் இந்த காட்டுத் தீ காரணமாக சதுரகிரி கோவில் அமைந்துள்ள பகுதியில் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இன்று முதல் பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டது. இதையொட்டி திரளான பக்தர்கள் இன்று காலை 7 மணி முதல் மலையேறினர்.
மலை பாதைகளில் நீரோடைகள் மற்றும் முக்கிய பகுதிகளில் வனத்துறையின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆடி பவுர்ணமியை முன்னிட்டு 2-ந்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.
- மலைமேல் உள்ள இந்த கோவில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
- காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர-சந்தனமகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலைமேல் உள்ள இந்த கோவில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 1-ந்தேதி ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு நாளை (30-ந்தேதி) முதல் 2-ந்தேதி வரை பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். 10 வயதுக்கு உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலை ஏற அனுமதி கிடையாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலை பாதைகளில் உள்ள நீரோடைகளில் குளிக்கக்கூடாது.
இரவில் மலை கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித் துள்ளது. சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருகிறது.
- இந்த முறை 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலை உச்சியில் 3 ஆயிரம் அடிக்கு மேல் அமைந்துள்ள இக்கோவிலுக்கு மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் திரளாக சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இதற்காக வனத்துறை சார்பில் மாதத்தில் மொத்தம் 8 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஆடி, தை, மகாளய அமாவாசை நாட்களில் சதுரகிரிக்கு பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருகிறது. முதல் அமாவாசை வருகிற 17-ந்தேதியும், 2-வது அமாவாசை ஆகஸ்ட் 16-ந்தேதியும் வருகிறது.
இந்த நிலையில் ஆடி அமாவாசை மற்றும் சனி பிரதோஷத்தை முன்னிட்டு இன்று (15-ந்தேதி) முதல் வருகிற 18-ந்தேதி வரை 4 நாட்கள் சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முதல் நாளான இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே மலை அடிவாரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். காலை 6.30 மணிக்கு கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக அவர்களின் உடைமைகளை வனத்துறையினர் சோதனை செய்தனர்.
சனிப்பிரதோஷம் சிறப்பானதாக கருதப்படுவதாலும், அதுமட்டுமின்றி ஆடி அமாவாசையை முன்னிட்டும் இன்று வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதையொட்டி அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை விருதுநகர்-மதுரை மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து செய்திருந்தன.
மதுரை, விருதுநகர், திருமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இருந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. மலை அடிவாரம் மற்றும் மலையேறும் பாதைகளில் வனத்துறை மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. முன்னதாக பன்னீர், பால், தயிர் உள்ளிட்ட 18 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடந்தன.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மலை அடிவாரத்திலும், மலை மேல் உள்ள கோவில் பகுதியிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
ஆடி அமாவாசைக்கு 2 நாட்களே இருப்பதால் இந்த முறை 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சதுரகிரிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை அரசு அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
- கோவிலில் இரவு தங்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
- நாளை முதல் 18-ந்தேதி வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆனி மாத பிரதோஷம் மற்றும் ஆடி மாத அமாவாசை சிறப்பு வழிபாட்டிற்காக வருகிற நாளை (15-ந்தேதி) முதல் 18-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது என வனத்துறை அறிவித்துள்ளது. கோவிலில் இரவு தங்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
அதேபோல தடை செய்யப்பட்ட பொருட்களை பக்தர்கள் மலைப்பகுதிக்கு கொண்டு செல்ல அனுமதி கிடையாது.
- கோவிலில் இரவு தங்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
- காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆனி மாத பிரதோஷம் மற்றும் ஆடி மாத அமாவாசை சிறப்பு வழிபாட்டிற்காக வருகிற 15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது என வனத்துறை அறிவித்துள்ளது. கோவிலில் இரவு தங்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
அதேபோல தடை செய்யப்பட்ட பொருட்களை பக்தர்கள் மலைப்பகுதிக்கு கொண்டு செல்ல அனுமதி கிடையாது.
- மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.
- பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்த சாப்டூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. மலை மேல் உள்ள இந்த கோவிலுக்கு மாதத்தின் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஆனி மாத பவுர்ணமி (3-ந்தேதி), நாளை (1-ந்தேதி) சனி பிரதோசத்தை முன்னிட்டு இன்று முதல் 4-ந்தேதி வரை பக்தர்கள் தசரினம் செய்ய வனத்துறை அனுமதி அளித்திருந்தது.
இன்று காலை மதுரை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் மலையடிவாரத்தில் திரண்டனர். 7 மணியளவில் பக்தர்களின் உடமைகள் சோதனை செய்யப்பட்டு மலையேற அனுமதிக்கப்பட்டனர். சிறுவர்கள், பெண்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வத்துடன் மலையேறினர்.
மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள். சாமி தரிசனம் செய்ய செல்பவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கக்கூடாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. 60 வயது மேற்பட்டவர்களுக்கு மலையேற அனுமதி இல்லை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்திருந்தனர்.
அனுமதி நாட்களில் மழை அறிகுறிகள் இருந்தால் மலையேற தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. நாளை சனி பிரதோசம் மற்றும் விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என கூறப்படுகிறது.
இதையொட்டி அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், வனத்துறையினரும் செய்து வருகின்றனர்.
- மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.
- பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
வருகிற 3-ந் தேதி ஆனி மாத பவுர்ணமி மற்றும் பிரதோஷ (1-ந் தேதி) வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப் பட்டுள்ளது. அதன்படி வருகிற 1-ந் தேதி (சனிக்கிழமை) முதல் வருகிற 4-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம்.
10 வயது உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.
இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது. அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் மலையேற பக்தர்களுக்கு தடை வைக்கப்படும் என வனத்துறை தெரிவித்து உள்ளது.
சனி பிரதோஷத்தை முன்னிட்டு இம்முறை சதுரகிரிக்கு வழக்கத்தை விட அதிகமாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான குடிதண்ணீர் உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட வனத்துறை செய்துள்ளது.
- எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை.
- மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
நாளை (15-ந் தேதி) பிரதோஷம், 17-ந் தேதி ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 18-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம்.
10 வயது உட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.
இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது. அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு இம்முறை சதுரகிரிக்கு வழக்கத்தை விட அதிகமாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான குடிதண்ணீர் உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட வனத்துறை செய்துள்ளது.
- எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை.
- மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
வருகிற 15-ந் தேதி பிரதோஷம், 17-ந் தேதி ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 15-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் வருகிற 18-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம்.
10 வயது உட்பட்ட வர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.
இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது. அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு இம்முறை சதுரகிரிக்கு வழக்கத்தை விட அதிகமாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான குடிதண்ணீர் உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட வனத்துறை செய்துள்ளது.
பின்னர் காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு நடந்த அமாவாசை சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி அருளைப் பெற்றனர்.பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.