search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pocso act"

    • மாணவியுடன், சிறுவன் நெருங்கி பழகிய நிலையில், அந்த மாணவி கர்ப்பமடைந்தார்.
    • மாணவியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் முறையிட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பிராந்தியத்தில் 16 வயது மதிக்கத்தக்க மாணவி பிளஸ்-1 படித்து வருகிறார்.

    இவரை அதே பகுதியில் வசிக்கும் அவரது உறவினரான 17 வயது நிரம்பிய பிளஸ்-2 படிப்பை பாதியில் கைவிட்ட சிறுவன் காதலித்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அந்த மாணவியுடன், சிறுவன் நெருங்கி பழகிய நிலையில், அந்த மாணவி கர்ப்பமடைந்தார்.

    சோர்வுடன் காணப்பட்ட சிறுமியை சமீபத்தில் அவரது பெற்றோர் அங்குள்ள மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றபோது அந்த மாணவி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து மாணவியிடம் விசாரித்தபோது நடந்த சம்பவத்தை அந்த மாணவி கூறினார். உடனடியாக மாணவி மூலமாக சிறுவனிடம் பேசியபோது இச்சம்பவத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என அவரை மிரட்டியுள்ளார்.

    இதையடுத்து மாணவியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் முறையிட்டனர். விசாரணை மேற்கொண்ட போலீசார் மாணவியை கர்ப்பமாக்கி மிரட்டல் விடுத்த சிறுவன் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    • அங்கன்வாடி மையத்திற்கு சென்ற மகள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அவரது தாய் சிறுமியை தேடிச் சென்றார்.
    • சிகிச்சைக்காக சிறுமியை சித்திப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், செரியல் அடுத்த யெல்லதாசூர் நகரை சேர்ந்த 5 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் சிறுமி வழக்கம் போல் அங்கன்வாடி மையத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது வாலிபர் சிறுமியை வலுக்கட்டாயமாக அவரது வீட்டிற்குள் கடத்தி சென்றார். அங்கு வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    அங்கன்வாடி மையத்திற்கு சென்ற மகள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அவரது தாய் சிறுமியை தேடிச் சென்றார்.

    அப்போது சிறுமி அழுதபடி சாலையில் நடந்து வந்தார். மகளைக் கண்ட அவரது தாய் சிறுமியிடம் விசாரித்தார்.

    சிறுமி நடந்த சம்பவங்கள் குறித்து தனது தாயிடம் கூறினார். மேலும் சிறுமியின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வழிவதை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து சிகிச்சைக்காக சிறுமியை சித்திப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து சிறுமியின் தாய் சித்திபேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • மழை காரணமாக கடந்த 6-ந் தேதி வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
    • மாணவியின் தந்தை அவரிடம் என்ன நடந்தது என்று விசாரித்தார்.

    கோவை:

    கோவை மாவட்டம் வால்பாறை பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    மாணவிக்கு அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.

    மழை காரணமாக கடந்த 6-ந் தேதி வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அன்று மாணவியின் தாய் மற்றும் தந்தை வேலைக்கு சென்று விட்டனர். மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    இதையறிந்த மாணவர், மாணவியின் வீட்டிற்கு சென்றார். தனியாக இருந்த மாணவியிடம் உன்னையே திருமணம் செய்து கொள்வேன் என ஆசைவார்த்தை கூறினார். பின்னர் மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். மாலையில் மாணவியின் தந்தை வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பினார். மாணவியின் தந்தை வருவதை பார்த்த மாணவர் வீட்டின் பின்புறமாக ஓடி தப்பிச் சென்றார். இதனை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். மகளை பார்த்தபோது அவர் பதட்டமாக இருந்தார்.

    மாணவியின் தந்தை அவரிடம் என்ன நடந்தது என்று விசாரித்தார். அதற்கு மாணவி தன்னுடன் படிக்கும் மாணவர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறி அழுதார்.

    இதுகுறித்து மாணவியின் தந்தை வால்பாறை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த மாணவரை கைது செய்தனர்.

    • அன்றைய வாழ்க்கை பயணம் என்பது போக்குவரத்து இல்லாத சாலை போன்று இருந்தது.
    • சமூக வலைதளம், தொலைக்காட்சி என மாணவர்களுக்கு பல்வேறு இடையூறுகள் உள்ளன.

    பல்லடம் :

    திருப்பூர் அருகே அருள்புரத்தில் ஜெயந்தி பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு போதை பொருள் ஒழிப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    பள்ளி தாளாளர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் விஜயராகவன் வரவேற்றார். பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன் மற்றும் பிரவீன் பானு ஆகியோர் பேசுகையில் "அன்றைய வாழ்க்கை பயணம் என்பது போக்குவரத்து இல்லாத சாலை போன்று இருந்தது. இன்று சமூக வலைதளம், தொலைக்காட்சி என மாணவர்களுக்கு பல்வேறு இடையூறுகள் உள்ளன. இன்றைய சமுதாயத்திற்கு தொலைபேசி மிகப்பெரிய சவாலாக உள்ளது. அடுத்ததாக மாணவர்களின் சமுதாயத்தை சீரழிப்பதாக போதைப்பொருள் பழக்கம் உள்ளது. மிகவும் கவனமாக இருந்தால் மட்டுமே இடையூறுகளை தாண்டி உங்களது இலக்கை நோக்கி செல்ல முடியும். போதை பழக்கம் குறித்து விழிப்புணர்வு இல்லாமலேயே மாணவர்கள் அதில் சிக்கிக்கொண்டு தங்களது வாழ்க்கையை இழக்கின்றனர். புதிதாக சந்தைக்கு வரும் சாக்லேட் குறித்து தெரியாமல் வாங்காதீர்கள். ஏனெனில் அதில் போதைப்பொருள் சிறிய அளவில் சேர்க்கப்படுவதால் அதனை சாப்பிட்டு நாளடைவில் அதற்கு அடிமையாகி விடும் அவலம் உள்ளது. மாணவர்களாகிய உங்களை நம்பியே இந்த சமுதாயம் உள்ளது '' என்றனர்.

    • கயத்தாறு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருச்சபைக்கு பிரார்த்தனைக்கு சென்று வந்துள்ளார்.
    • போதகர் வினோத் ஜோஸ்வாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கயத்தாறு:

    வேலூர் மாவட்டம் எழிலநகர் காந்தி தெருவை சேர்ந்தவர் வினோத் ஜோஸ்வா (வயது40).

    இவர் கடந்த 10 ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை அடுத்த கீழக்கோட்டை சின்னகுளம் பகுதியில் உள்ள ஒரு திருச்சபையில் போதகராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு திருச்சபையில் வைத்து போதனை வகுப்புகளும் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் கயத்தாறு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அந்த திருச்சபைக்கு பிரார்த்தனைக்கு சென்று வந்துள்ளார். மேலும் அங்கு நடைபெறும் வகுப்பிலும் பங்கேற்றுள்ளார். அப்போது அந்த இளம்பெண்ணுடன் பழகிய போதகர் வினோத் ஜோஸ்வா கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

    மேலும் அவரை மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இதனை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக அந்த இளம்பெண்ணை, போதகர் மிரட்டி உள்ளார். இதனால் அவர் யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார்.

    எனினும் தொடர்ந்து தொந்தவு செய்து வந்ததால் மிகவும் பாதிக்கப்பட்ட இந்த இளம்பெண் தனது பெற்றோரிடம் அழுதவாறே நடந்தவற்றை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இது தொடர்பாக கடம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கோகிலா இதுகுறித்து விசாரணை நடத்தினார்.

    அதில் 5 ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண், சிறுமியாக இருந்த போதே அவரிடம் போதகர் பாலியல் தொந்தரவு செய்து வந்ததும், பின்னர் அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் போதகர் வினோத் ஜோஸ்வாவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
    • மாரண்டஅள்ளி போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

    மாரண்டஅள்ளி:

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே வாத்தியார் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த 16வயது சிறுமி.

    அதே பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (22). இவர் அந்த சிறுமியை காதலித்து வந்தார். இதன்காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில் சிறுமி கர்ப்பமடைந்தார்.

    அந்த சிறுமிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டதால் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் சிறுமியின் கணவர் ராஜ்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று வீட்டில் பாட்டி இல்லை. சிறுமி மட்டும் தனியாக இருந்தார்.
    • சிறுமியை 2 பேரும் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவை சோலை நகர் பகுதியில் 17 வயது சிறுமி பாட்டியுடன் வசித்து வருகிறார். அவருக்கு பெற்றோர் கிடையாது.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஜிப்மரில் காவலாளியாக வேலை செய்யும் ஸ்ரீதர் (வயது 37) என்பவர் அந்த சிறுமியிடம் பழகி வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது பாட்டி வீட்டில் இல்லை. சிறுமி மட்டும் தனியாக இருந்தார். அப்போது அங்கு சென்ற ஸ்ரீதர், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த அந்த சிறுமியின் பாட்டி அவரிடம் விசாரணை நடத்தியபோது ஸ்ரீதரும், அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சிவா (47) என்பவரும் சிறுமியை தனித்தனியாக பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் குழந்தைகள் நலக்குழுவில் புகார் தெரிவித்தார். அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது சிறுமியை 2 பேரும் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதுகுறித்து குழந்தைகள் நலக்குழுவினர் முத்தியால் பேட்டை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதர், சிவா ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    • 11 வயது பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
    • மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த சின்னவாளவாடியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 53). தேங்காய் பறிக்கும் வேலை செய்து வருகிறார். இவர் தான் வேலை செய்யும் தோட்டத்துக்கு அருகில் வீட்டில் தனியாக இருந்த 11 வயது பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இவர் மாணவியின் வீட்டுக்கு வந்து செல்வதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதைத்தொடர்ந்து பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர். அதில் மாரிமுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் கூறி கதறி அழுது உள்ளார். இதையடுத்து மாணவியை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.மேலும் இது குறித்து உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதாவிடம் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • இது தொடர்பான வழக்கு தேவிகுளம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.
    • அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமி பள்ளிக்கு செல்லும்போது மிகவும் சோர்வாக இருந்தார்.

    இதுபற்றி வகுப்பு ஆசிரியர், சிறுமியின் தாயாரிடம் கூறினார். அவர் சிறுமியை விசாரித்த போது, சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது. அவரை சிறுமியின் தந்தையும், அவரது தாய்மாமாவும் தாயார் வீட்டில் இல்லாத போது சில்மிஷம் செய்தது தெரியவந்தது.

    அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார், இதுபற்றி குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அவர்கள் சம்பவம் குறித்து விசாரித்த பின்னர் இடுக்கி போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து, சிறுமியின் தந்தை மற்றும் தாய்மாமாவை கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த 2021-ம் ஆண்டு நடந்தது.

    இது தொடர்பான வழக்கு தேவிகுளம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அவரது தந்தை மற்றும் தாய்மாமாவிற்கு அவர்கள் செய்த குற்றங்களின் அடிப்படையில் தலா 84 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்தார்.

    மேலும் இருவருக்கும் தலா ரூ.3 லட்சம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என கூறியிருந்ததால் அவர்கள் 20 ஆண்டுகள் ஜெயிலில் இருக்க வேண்டியதிருக்கும். இந்த தீர்ப்பு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • முத்துப்பாண்டிக்கு உடல்நிலை பாதிக்கப்படவே தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
    • பள்ளி ஆசிரியர்கள் சிறுமி பள்ளிக்கு வராததை கண்டு வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த கரையூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவி. அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 12 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். தேவியின் கணவர் உடல் நலக்குறைவால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கணவன் இறந்த பிறகு தனது குழந்தைகளுடன் கரையூரில் வசித்து வந்த தேவிக்கு தூத்துக்குடியை சேர்ந்த லாரி டிரைவர் முத்துப்பாண்டி மிஸ்டு கால் மூலம் அறிமுகம் ஆனார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தூத்துக்குடி சென்று வசித்து வந்தனர்.

    இந்நிலையில் முத்துப்பாண்டிக்கு உடல்நிலை பாதிக்கப்படவே தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அவருக்கு அருகில் உள்ள படுக்கையில் தூத்துக்குடியை சேர்ந்த சுரேஷ் பெர்னாண்டோ (50) என்பவர் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது சுரேஷ் பெர்னாண்டோவுக்கும், தேவிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் முத்துப்பாண்டியை கைவிட்டு விட்டு கள்ளக்காதலன் சுரேஷ் பெர்னாண்டோவுடன் தேவி கரையூர் வந்தார்.

    அங்கு பெர்னாண்டோ இரவு நேரங்களில் தேவியின் 12 வயது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இருப்பினும் அதனை தேவி கண்டு கொள்ளவில்லை.

    இதனால் மனம் உடைந்த 12 வயது சிறுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். பள்ளி ஆசிரியர்கள் சிறுமி பள்ளிக்கு வராததை கண்டு வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது அக்கம்பக்கத்தினர் நடந்த விவரத்தை கூறினர். இதை கேட்ட பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக சமூகநல பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் சமூக நல அலுவலர்கள் தாராபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் கடந்த மாதம் 4-ந்தேதி அந்த சிறுமியின் தாய், சுரேஷ் பெர்னாண்டோ ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பிறகு சிறுமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி முன்பு சிறுமி வாக்குமூலம் அளித்தார்.

    அந்த வாக்கு மூலத்தில், தனது தாயின் கள்ளக்காதலன் சுரேஷ் பெர்னாண்டோ தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அதற்கு உடந்தையாக தனது தாய் இருந்ததாகவும் கூறியுள்ளார். அத்துடன் அருகில் வசிக்கும் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயதான 2 சிறுவர்கள் மீதும் பாலியல் புகார் தெரிவித்தார். நீதிபதியிடம் சிறுமி அளித்த வாக்குமூலத்தின் பேரில் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செல்வம் அந்தப்பெண்ணின் தாய் மற்றும் கள்ளக்காதலன் சுரேஷ் பெர்னாண்டோ மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.

    • சிறுமியின் தாயார் செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி குமர வேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 23-ந்தேதி சிறுமியின் பெற்றோர் மஞ்சள் நீர் விழாவுக்கு வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பி வந்தனர்.

    இந்நிலையில் சிறுமி உடல் சோர்வாக இருந்ததை கண்டு அவரிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து சிறுமியிடம் பெற்றோர் வயிற்றுவலிக்கான காரணம் குறித்து கேட்டனர். இதற்கு அச்சிறுமி போரூரை சேர்ந்த சிவலிங்கம் மகன் குமரவேல் (வயது 23) என்பவர் தன்னை காதலிப்பதாக கூறி, வீட்டுக்கு அழைத்து சென்று கட்டாய உடலுறவில் ஈடுபட்டதும், இதனை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக கூறினார்.

    இது குறித்து சிறுமியின் தாயார் செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி குமர வேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    சாணார்பட்டி அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    குள்ளனம்பட்டி:

    சாணார்பட்டி அருகே அஞ்சுகுழிபட்டியைச் சேர்ந்தவர் சங்கிலிமுருகன் (28).ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 20-ந் தேதி பிளஸ் 2 மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் கிடைக்காததால் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி மாணவியை கடத்திச் சென்ற ஆட்டோ டிரைவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் ஆட்டோ டிரைவர் சங்கிலி முருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
    ×