search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவன் கைது"

    • தினேசை வெட்டியதால் ஆத்திரத்தில் இருந்த அவரது தம்பியான சிறுவன் பழிவாங்கும் வகையில் ஆகாசை நோட்டமிட்டார்.
    • ராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்து கெல்லீசில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் ஆகாஷ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கிளி என்கிற தினேஷ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த மோதலில் கடந்த மாதம் தினேசை கத்தியால் ஆகாஷ் வெட்டினார்.

    இந்த வழக்கில் கைதான ஆகாசை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ஜாமினில் வந்தார். தினேசை வெட்டியதால் ஆத்திரத்தில் இருந்த அவரது தம்பியான சிறுவன் பழிவாங்கும் வகையில் ஆகாசை நோட்டமிட்டார்.

    நேற்று இரவு ராயபுரம் பகுதியில் உள்ள ராபின்சன் விளையாட்டு மைதானத்தில் ஆகாஷ் தனியாக வந்தபோது அவரது கழுத்தை பிளேடால் அறுத்து விட்டு சிறுவன் தப்பி ஓடிவிட்டான். இதில் பலத்த காயம் அடைந்த ஆகாசுக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து ராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்து கெல்லீசில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

    • 16 வயதுடைய சிறுவனுக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
    • காசர்கோடு என்ற இடத்தில் பதுங்கியிருந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் கீழத்தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 25). இவர் சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 17, 19 வயதுடைய சிறுவர்களுடன் சேர்ந்து ஒரு பழைய கட்டிட சுவர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி ஒத்திகை பார்த்து அந்த காட்சிகளை பதிவாக்கி சமூகவலை தளமான இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டனர். அதன் பின்னணியில் ஒரு பாடல் ஒலிக்க 3 பேரும் நடனம் ஆடிய காட்சிகளும் இடம்பெற்று இருந்தது.

    இதுகுறித்து வள்ளியூர் போலீசார் விசாரணை நடத்தியதில், 3 பேரும் யூ-டியூப் பார்த்து பெட்ரோல் குண்டுகளை தயாரித்ததாகவும், தயாரித்த குண்டுகளை ஒரு கட்டிடத்தின் சுவர் மீது வீசி ஒத்திகை பார்த்ததும் தெரிய வந்தது. மேலும், இதில் 16 வயதுடைய சிறுவனுக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இசக்கியப்பன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து, தலைமறைவான 16 வயது சிறுவனை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வந்த நிலையில் அவன் கேரளாவிற்கு தப்பிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை அங்கு விரைந்து சென்றது. அங்கு காசர்கோடு என்ற இடத்தில் பதுங்கியிருந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

    • பேண்ட் பாக்கெட்டில் இருந்த பர்ஸை அங்கு நின்று கொண்டிருந்த சிறுவன் பிக்பாக்கெட் அடித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடமுயன்றான்.
    • சுதாரித்து கொண்ட பெரியசாமி அந்த சிறுவனை மடக்கி பிடித்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சாந்தியப்பன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. விவசாயி. இவர் நேற்று கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் ராயக்கோட்டை செல்லும் மேம்பாலம் அருகே உள்ள பேக்கரிகடையில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த பர்ஸை அங்கு நின்று கொண்டிருந்த சிறுவன் பிக்பாக்கெட் அடித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடமுயன்றான். உடனே சுதாரித்து கொண்ட பெரியசாமி அந்த சிறுவனை மடக்கி பிடித்தார்.

    இதைத்தொடர்ந்து பெரியசாமி அந்த சிறுவனை கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்த சிறுவனிடம் போலீசார விசாரித்ததில் அரசமரத்துப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்தனர். 

    • ராம் நகரைச் சேர்ந்த 17வயது சிறுவன், ஆஞ்சியின் செல்போனை திருடி தப்பி ஓடினார்.
    • அந்த சிறுவனை மடக்கி பிடித்து ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராயக்கோட்டை சாலை ஹவுசிங்போர்டு பகுதியைச் சேர்ந்தவர் ஆஞ்சி (வயது28).

    இவர் சம்பவத்தன்று அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மாரியம்மன் கோவில் அருகே ராம் நகரைச் சேர்ந்த 17வயது சிறுவன், ஆஞ்சியின் செல்போனை திருடி தப்பி ஓடினார்.

    உடனே அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த சிறுவனை மடக்கி பிடித்து ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். 

    • சோதனை நடத்தியதில், விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
    • அவனிடமிருந்த ரூ.500 மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நார்த்தம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் விற்பதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

    இந்த தகவலின்பேரில் சம்மந்தப்பட்ட பேருந்து நிறுத்தம் பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அப்போது நார்த்தம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில், அமர்ந்திருந்த 17 வயது சிறுவனை போலீசார் பிடித்து சோதனை நடத்தியதில், விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

    பிடிப்பட்ட 17 வயது சிறுவன் நார்த்தம்பட்டி பகுதியை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. பின்னர் அதியமான்கோட்டை போலீசார் 17 வயது சிறுவனை கைது செய்து, அவனிடமிருந்த ரூ.500 மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    • மாணவியுடன், சிறுவன் நெருங்கி பழகிய நிலையில், அந்த மாணவி கர்ப்பமடைந்தார்.
    • மாணவியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் முறையிட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பிராந்தியத்தில் 16 வயது மதிக்கத்தக்க மாணவி பிளஸ்-1 படித்து வருகிறார்.

    இவரை அதே பகுதியில் வசிக்கும் அவரது உறவினரான 17 வயது நிரம்பிய பிளஸ்-2 படிப்பை பாதியில் கைவிட்ட சிறுவன் காதலித்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அந்த மாணவியுடன், சிறுவன் நெருங்கி பழகிய நிலையில், அந்த மாணவி கர்ப்பமடைந்தார்.

    சோர்வுடன் காணப்பட்ட சிறுமியை சமீபத்தில் அவரது பெற்றோர் அங்குள்ள மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றபோது அந்த மாணவி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து மாணவியிடம் விசாரித்தபோது நடந்த சம்பவத்தை அந்த மாணவி கூறினார். உடனடியாக மாணவி மூலமாக சிறுவனிடம் பேசியபோது இச்சம்பவத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என அவரை மிரட்டியுள்ளார்.

    இதையடுத்து மாணவியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் முறையிட்டனர். விசாரணை மேற்கொண்ட போலீசார் மாணவியை கர்ப்பமாக்கி மிரட்டல் விடுத்த சிறுவன் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    • கஞ்சா புகைக்க கற்றுக்கொடுத்த சிறுவனுக்கும், எதிர்தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
    • தலைமறைவாக உள்ள அவனது கூட்டாளிகளான 2 சிறுவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    ராயபுரம் கிரேஸ் கார்டன் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனுக்கு கஞ்சா புகைக்க கற்றுக்கொடுத்ததாக தெரிகிறது. இதனை அறிந்த பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை கண்டித்தார். இதனால் கஞ்சா புகைக்க கற்றுக்கொடுத்த சிறுவனுக்கும், எதிர்தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் கோபத்தில் இருந்த கஞ்சா புகைக்க கற்றுக்கொடுத்த சிறுவன் சம்பவத்தன்று இரவு பெட்ரோல் குண்டுடன் எதிர்தரப்பு சிறுவனின் வீட்டுக்கு கூட்டாளிகளுடன் வந்தார். அப்போது அங்கு யாரும் இல்லாததால் பெட்ரோல் குண்டை சாலையோரத்தில் இருந்த மின் இணைப்பு பெட்டி மீது வீசிவிட்டு அவர்கள் தப்பிச் சென்று விட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ராயபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவன் மீது ஏற்கனவே 6 குற்றவழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தலைமறைவாக உள்ள அவனது கூட்டாளிகளான 2 சிறுவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    • சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல் குளம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • விசாரணையில் அவர்கள் நடுக்குப்பத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் அவனது கூட்டாளி சத்ய பிரதீப் என்று தெரியவந்தது.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல் குளம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்தபடி 2 பேர் கஞ்சா புகைத்துக்கொண்டு இருந்தனர். அவர்கள் இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள். இதையடுத்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    அங்குவைத்து அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் இருவரும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் நடுக்குப்பத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் அவனது கூட்டாளி சத்ய பிரதீப் என்று தெரியவந்தது.

    இதில் சிறுவன் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும், சத்ய பிரதீப் அவனுக்கு உறுதுணையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    17 வயதான சிறுவன் பகல் நேரத்தில் ரெயிலில் சமோசா விற்று பிழைப்பு நடத்தி வந்தான். இரவு நேரத்தில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தான். திருட்டு சம்பவங்கள் மூலம் கிடைக்கும் பணத்தில் கஞ்சா புகைத்து ஆடம்பரமாக செலவழித்து வந்தான்.

    அவர்கள் போலீசில் பிடிபடுவதற்கு முன்பு திருநின்றவூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடி விட்டு அதை விற்பனை செய்வதற்காக எழும்பூருக்கு கொண்டு வந்துள்ளனர். வரும் வழியில் பூந்தமல்லி, நசரத்பேட்டை பகுதிகளில் 3 இடங்களில் செல்போன் வழிப்பறி செய்துள்ளனர்.

    இதையடுத்து அவர்கள் இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி வீட்டிற்குள் நுழைந்தார்.
    • அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி வீட்டிற்குள் நுழைந்தார்.

    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள மகாதேவபுரத்தை சேர்ந்தவர் முனுசாமி என்ற ரஞ்சித் (வயது 45). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    சம்பவத்தன்று இரவு அனைவரும் வீட்டில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி வீட்டிற்குள் நுழைந்தார். ஆனால் இது அவர்களுக்கு தெரியவில்லை.

    அந்த நபர் வீட்டில் இருந்த சிறுமியின் சத்தம் வராதபடி வாயை பொத்தியபடி தூக்கி கொண்டு செல்ல முயன்றார். இதனை சிறுமியின் தாய் பார்த்து விட்டார்.

    அவர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். அப்போது அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி விட்டு வெளியே நிறுத்தி இருந்த காரில் தப்பிச் சென்றார்.

    இதுகுறித்து சிறுமியின் தந்தை மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து சிறுவன் தப்பி சென்ற காரை பின்தொடர்ந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் சிறுவன், காரை கல்லார் ரெயில்வே பாலம் அருகே நிறுத்தி விட்டு தப்பி விட்டார்.

    இதையடுத்து போலீசார் காரை கைப்பற்றி, சிறுமியை கடத்த முயன்றது யார்? எதற்காக கடத்த முயன்றார் என விசாரணை மேற்கொண்டனர். முதலில் கைப்பற்றப்பட்ட காரின் பதிவு எண்ணை வைத்து அது யாருடையது என விசாரிக்க தொடங்கினர்.

    விசாரணையில் அந்த கார் கோவையை சேர்ந்த அழகுமுத்து என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிந்தது.

    இதையடுத்து அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, தான் அந்த காரை, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தனுஷ் என்பவருக்கு கடந்த 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை வாடகை பேசி ஒப்படைத்ததாக தெரிவித்தார்.

    போலீசார் தனுஷை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது அவர் தனது சகோதரரான 17 வயது சிறுவன் நண்பர்களுடன் ஒரு திருமணத்துக்கு செல்வதற்கு கார் வேண்டும் என கேட்டதாகவும் அவர் தான் எடுத்து சென்றதாகவும் தெரிவித்தார்.

    மேலும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமியை கடத்த முயன்ற சிறுவன் ரஞ்சித்தின் தங்கை மகன் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் மேட்டுப்பாளையம் பகுதியில் சுற்றிய 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் சிறுமியை எதற்காக கடத்தினாய் என விசாரித்த போது, செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் வாங்க பணம் தேவைப்பட்டதாகவும், அதற்காக சிறுமியை கடத்தி பணம் கேட்க முடிவு செய்ததாக கூறினர்.

    தொடர்ந்து போலீசார் சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 2 பேருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தார்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தேவவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஐயப்பன் (வயது 53), லாரி டிரைவர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் செல்லத்துரை (55), விவசாயி. இவர் பா.ஜனதா கூட்டுறவு பிரிவின் வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய தலைவராக இருந்து வந்தார்.

    இவர்கள் 2 பேருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை தெருவில் வைத்து அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்லத்துரை கத்தியால் ஐயப்பனை குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    அப்போது அங்கு வந்த ஐயப்பனின் 17 வயதான மகன் தனது தந்தையை கொன்ற ஆத்திரத்தில் செல்லத்துரை கையில் வைத்திருந்த கத்தியை பிடுங்கி அவரை குத்தியாக கூறப்படுகிறது. இதில் செல்லத்துரையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தார். பின்னர் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நெல்லையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

    • சிறுவன் சிறுமியை தனது அக்காள் ஊரான விழுப்புரம் பனக்குப்பம் பகுதிக்கு அழைத்து சென்றார்.
    • தனியாக இருந்த சிறுமியிடம் சிறுவனின் அக்காள் உனக்கு எனது தம்பியுடன் எப்படி பழக்கம் ஏற்பட்டது. நீ எப்படி கர்ப்பமானாய் என்று கேட்டுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் அருகே தூக்கணாம்பாக்கம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி திருவந்திபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்துவந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், 14 வயது சிறுமி படிக்கும் பள்ளியில் படித்து வந்தார். அப்போது இருவரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. கண்களால் பேசிய அவர்கள் நாளடைவில் காதல் வயப்பட்டனர். அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்தனர். இந்த விவகாரம் அரசல் புரசலாக தெரியவந்தது. இதனால் 2 பேரும் பள்ளியில் இருந்து படிப்பை நிறுத்திவிட்டனர். இதற்கிடையே அந்த சிறுமி கர்ப்பமானார்.

    அதிர்ச்சியடைந்த சிறுமி தனது காதலனிடம் தெரிவித்தார். உடனே காதலன் உனனை திருமணம் செய்து கொள்கிறேன் என்று உறுதியளித்தார். அதன்பின்னர் அந்த சிறுவன் சிறுமியை தனது அக்காள் ஊரான விழுப்புரம் பனக்குப்பம் பகுதிக்கு அழைத்து சென்றார்.

    அப்போது சிறுவன் தனது அக்காளிடம் நான் இவளை திருமணம் செய்ய உள்ளேன். எனவே பத்திரமாக பாதுகாக்கும்படி கூறிவிட்டு தனது ஊருக்கு வந்துவிட்டார். தனியாக இருந்த சிறுமியிடம் சிறுவனின் அக்காள் உனக்கு எனது தம்பியுடன் எப்படி பழக்கம் ஏற்பட்டது. நீ எப்படி கர்ப்பமானாய் என்று கேட்டுள்ளார்.

    இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. சத்தம்கேட்டு அந்த பகுதியில் உள்ளவர்கள் குழந்தைகள் நல காப்பகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது நடந்த விபரத்தை கண்ணீர் மல்க அந்த சிறுமி கூறினார். சம்பவம் நடந்த இடம் திருப்பாதிரிபுலியூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் உடனடியாக அங்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த திருப்பாதிரிபுலியூர் போலீசார் விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது மேற்கண்ட தகவலை தெரிவித்தார். அதன்பேரில் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து கைது செய்தனர். சிறுமி காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கைதான சிறுவனை போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

    • இருவரும் தனிமையில் உல்லா சமாக இருந்ததால், தற்போது சிறுமி கர்ப்பம் அடைந்து ள்ளார்.
    • குழந்தைகள் நல அலு வலர்கள் மூலம் சிறுமி மீட்கப்பட்டார்.

    கடலுார்:

    கடலுார், திரு வந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இவரு க்கும், 14 வயது சிறுமி க்கும் பள்ளியில் படிக்கும்போது பழக்கம் ஏற்பட்டது. தற்போது இருவருமே பாதியில் படிப்பை நிறுத்திவிட்டனர். பின்னர் இருவரும் தனிமையில் உல்லா சமாக இருந்ததால், தற்போது சிறுமி கர்ப்பம் அடைந்து ள்ளார். இதுகுறித்து சிறுமியின் உறவி னர்கள் குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், குழந்தைகள் நல அலு வலர்கள் மூலம் சிறுமி மீட்கப்பட்டு, கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் அளிக்க ப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து, 16 வயது சிறுவனை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.

    ×