search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Boy arrested"

    • சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • தலைக்கு தேய்க்கும் எண்ணையை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    மதுரை

    மதுரை சிந்தாமணிரோடு ராஜமான் நகரை சேர்ந்தவர் முனியாண்டி. மகன் மணிகண்டன் (வயது28). இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு அடிக்கடி பாலி யல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இந்தநிலையில் சம்பவத் தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டுக் குள் அத்துமீறி நுழைந்த மணிகண்டன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். அப்போது சிறுமி சத்தமாக கூச்சலிட்டார். அவரது கூச்சல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்ட னர். இதனால் அச்சமடைந்த மணிகண்டன் சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதனால் மன உளைச் சலுக்கு ஆளான சிறுமி வீட்டில் யாரும் இல்லாத போது தலைக்கு தேய்க்கும் எண்ணையை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து அந்த டவுன் அனைத்து மகளிர் ேபாலீஸ் நிலையத்தில் சிறுமி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    • 16 வயதுடைய சிறுவனுக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
    • காசர்கோடு என்ற இடத்தில் பதுங்கியிருந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் கீழத்தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 25). இவர் சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 17, 19 வயதுடைய சிறுவர்களுடன் சேர்ந்து ஒரு பழைய கட்டிட சுவர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி ஒத்திகை பார்த்து அந்த காட்சிகளை பதிவாக்கி சமூகவலை தளமான இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டனர். அதன் பின்னணியில் ஒரு பாடல் ஒலிக்க 3 பேரும் நடனம் ஆடிய காட்சிகளும் இடம்பெற்று இருந்தது.

    இதுகுறித்து வள்ளியூர் போலீசார் விசாரணை நடத்தியதில், 3 பேரும் யூ-டியூப் பார்த்து பெட்ரோல் குண்டுகளை தயாரித்ததாகவும், தயாரித்த குண்டுகளை ஒரு கட்டிடத்தின் சுவர் மீது வீசி ஒத்திகை பார்த்ததும் தெரிய வந்தது. மேலும், இதில் 16 வயதுடைய சிறுவனுக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இசக்கியப்பன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து, தலைமறைவான 16 வயது சிறுவனை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வந்த நிலையில் அவன் கேரளாவிற்கு தப்பிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை அங்கு விரைந்து சென்றது. அங்கு காசர்கோடு என்ற இடத்தில் பதுங்கியிருந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

    • அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி வீட்டிற்குள் நுழைந்தார்.
    • அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி வீட்டிற்குள் நுழைந்தார்.

    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள மகாதேவபுரத்தை சேர்ந்தவர் முனுசாமி என்ற ரஞ்சித் (வயது 45). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    சம்பவத்தன்று இரவு அனைவரும் வீட்டில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி வீட்டிற்குள் நுழைந்தார். ஆனால் இது அவர்களுக்கு தெரியவில்லை.

    அந்த நபர் வீட்டில் இருந்த சிறுமியின் சத்தம் வராதபடி வாயை பொத்தியபடி தூக்கி கொண்டு செல்ல முயன்றார். இதனை சிறுமியின் தாய் பார்த்து விட்டார்.

    அவர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். அப்போது அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி விட்டு வெளியே நிறுத்தி இருந்த காரில் தப்பிச் சென்றார்.

    இதுகுறித்து சிறுமியின் தந்தை மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து சிறுவன் தப்பி சென்ற காரை பின்தொடர்ந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் சிறுவன், காரை கல்லார் ரெயில்வே பாலம் அருகே நிறுத்தி விட்டு தப்பி விட்டார்.

    இதையடுத்து போலீசார் காரை கைப்பற்றி, சிறுமியை கடத்த முயன்றது யார்? எதற்காக கடத்த முயன்றார் என விசாரணை மேற்கொண்டனர். முதலில் கைப்பற்றப்பட்ட காரின் பதிவு எண்ணை வைத்து அது யாருடையது என விசாரிக்க தொடங்கினர்.

    விசாரணையில் அந்த கார் கோவையை சேர்ந்த அழகுமுத்து என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிந்தது.

    இதையடுத்து அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, தான் அந்த காரை, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தனுஷ் என்பவருக்கு கடந்த 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை வாடகை பேசி ஒப்படைத்ததாக தெரிவித்தார்.

    போலீசார் தனுஷை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது அவர் தனது சகோதரரான 17 வயது சிறுவன் நண்பர்களுடன் ஒரு திருமணத்துக்கு செல்வதற்கு கார் வேண்டும் என கேட்டதாகவும் அவர் தான் எடுத்து சென்றதாகவும் தெரிவித்தார்.

    மேலும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமியை கடத்த முயன்ற சிறுவன் ரஞ்சித்தின் தங்கை மகன் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் மேட்டுப்பாளையம் பகுதியில் சுற்றிய 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் சிறுமியை எதற்காக கடத்தினாய் என விசாரித்த போது, செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் வாங்க பணம் தேவைப்பட்டதாகவும், அதற்காக சிறுமியை கடத்தி பணம் கேட்க முடிவு செய்ததாக கூறினர்.

    தொடர்ந்து போலீசார் சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இளம்பெண் வெரைட்டி ஹால் போலீசில் புகார் அளித்தார்.
    • சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்தனர்.

    கோவை,

    கோவையை சேர்ந்தவர் 40 வயது இளம்பெண். இவர் கூலி தொழிலாளி. இவர் கோவை சி.எம்.சி காலனி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் பொது இடத்தில் வைத்து இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் அவரது கணவருக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அந்த வாலிபரிடம் விசாரித்தார்.

    அப்போது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த வாலிபர் இளம்பெண்ணின் கணவரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவரை தாக்கி கீழே தள்ளினார். பின்பு கத்தியை காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து இளம்பெண் வெரைட்டி ஹால் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது கோவையை சேர்ந்த சதிஷ்குமார் (வயது 24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். நடுரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் வாலிபர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இருவரும் தனிமையில் உல்லா சமாக இருந்ததால், தற்போது சிறுமி கர்ப்பம் அடைந்து ள்ளார்.
    • குழந்தைகள் நல அலு வலர்கள் மூலம் சிறுமி மீட்கப்பட்டார்.

    கடலுார்:

    கடலுார், திரு வந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இவரு க்கும், 14 வயது சிறுமி க்கும் பள்ளியில் படிக்கும்போது பழக்கம் ஏற்பட்டது. தற்போது இருவருமே பாதியில் படிப்பை நிறுத்திவிட்டனர். பின்னர் இருவரும் தனிமையில் உல்லா சமாக இருந்ததால், தற்போது சிறுமி கர்ப்பம் அடைந்து ள்ளார். இதுகுறித்து சிறுமியின் உறவி னர்கள் குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், குழந்தைகள் நல அலு வலர்கள் மூலம் சிறுமி மீட்கப்பட்டு, கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் அளிக்க ப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து, 16 வயது சிறுவனை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.

    • முருகசாமி மது குடித்து விட்டு வேலைக்கு வந்ததால் இளம்பெண் அவரை வேலைக்கு வேண்டாம் என்று கூறி விட்டார்.
    • முருகசாமி, தகாத வார்த்தைகள் பேசி, பாட்டு பாடி இளம்ெபண்ணை கிண்டல் செய்தார்.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த 35 வயது இளம்பெண். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார்.

    அப்போது அந்த கடையில் காந்திநகரை சேர்ந்த முருகசாமி (வயது 34) என்பவர் எடை போடும் வேலைக்கு சேர்ந்தார். அவர் மது குடித்து விட்டு வேலைக்கு வந்ததால் இளம்பெண் அவரை வேலைக்கு வேண்டாம் என்று கூறி விட்டார். இதனால் முருகசாமிக்கு இளம்பெண் மீது கோபம் ஏற்பட்டது.

    தற்போது இளம்பெண் வேறு ஒரு ரேசன் கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வேலைக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற முருகசாமி, தகாத வார்த்தைகள் பேசி, பாட்டு பாடி கிண்டல் செய்தார்.

    இது குறித்து இளம்பெண் அன்னூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேசன் கடை விற்பனையாளரை பின் தொடர்ந்து சென்று கிண்டல் செய்த முருகசாமியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சிறுமி வேலைக்கு செல்லாமல் தனது காதலனுடன் சென்றார்.
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோவில்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் சிறுமிக்கு நெகமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியான 17 வயது சிறுவனுடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் 2 பேருடைய பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் வயதை காரணம் காட்டி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டனர்.

    சம்பவத்தன்று சிறுமி தனது பெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் சிறுமி வேலைக்கு செல்லாமல் தனது காதலனுடன் சென்றார். பின்னர் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் சிறுவன், சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    வேலைக்கு சென்ற சிறுமி நீண்ட நேரமாக வீட்டிற்கு திரும்பி வராததால் அவரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது சிறுவன் அவரை திருமணம் செய்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் திருமணம் செய்து கொண்ட சிறுவன், சிறுமியை அழைத்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து சிறுமியை போலீசார் அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். சிறுமியை திருமணம் செய்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.   

    • சிறுவன் அடிக்கடி மது குடித்துள்ளதால் கார்த்திக்ராஜ் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது.
    • இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீரான் பாளையம் தெரு கேசவன் நகரை சேர்ந்தவர் கார்த்திக் ராஜ் (வயது 32). கூலித்தொழிலாளி.

    இவரும் அதேபகுதியை சேர்ந்த இவரது உறவினரான 16 வயது சிறுவனும் ஒன்றாக வேலைக்கு சென்று வந்துள்ளனர்.

    இந்நிலையில் சிறுவன் அடிக்கடி மது குடித்துள்ளதால் கார்த்திக்ராஜ் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்தநிலையில் இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டு 2 பேரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு கார்த்திக் ராஜ் தனது வீட்டிற்கு மீரான் பாளையம் தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அங்கு வந்த சிறுவன், கார்த்திக்ராஜிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    அப்போது சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கார்த்திக்ராஜின் தலை மற்றும் முதுகில் சரமாரியாக வெட்டினார். இதில் நிலைதடுமாறிய கார்த்திக் ராஜ் சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி அருகில் இருந்த ஒரு வீட்டிற்குள் சென்று தப்ப முயன்றுள்ளார்.

    எனினும் அந்த சிறுவனும் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிவிட்டு கார்த்திக் ராஜை அரிவாளால் பலமுறை வெட்டி விட்டு தப்பி ஓடினார். இதில் பலத்த காயமடைந்த கார்த்திக் ராஜ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விளாத்திகுளம் போலீசார் கார்த்திக் ராஜை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    ஆனால் கார்த்திக் ராஜ் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட கார்த்திக்ராஜிக்கு லதா (27) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    • சிறுவன் தனது கூட்டாளிகள் 4பேருடன் சேர்ந்து பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் கோவில், மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கைவரிசை காட்டி நூதன முறையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
    • சிறுவனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து 5 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

    போரூர்:

    சென்னை வடபழனி முருகன் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமாக 2 வாலிபர்கள் சுற்றி திரிவதாக வடபழனி போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் விரைந்து சென்று இருவரையும் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்த கைப்பையை வாங்கி சோதனை செய்தனர். அதில் ஏராளமான செல்போன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    போலீசார் விசாரணை செய்து கொண்டு இருந்த போது திடீரென ஒருவன் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிவிட்டான். பிடிபட்ட வாலிபர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட சிறுவன் என்பது தெரிந்தது.

    சிறுவன் தனது கூட்டாளிகள் 4பேருடன் சேர்ந்து பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் கோவில், மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கைவரிசை காட்டி நூதன முறையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து 5 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய வாலிபர் உள்பட கூட்டாளிகள் 4 பேரை போலீசார் தேடி வரு கின்றனர்.

    • இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சென்னைக்கு கடத்தி சென்றார்.
    • பாலியல் தொல்லை கொடுத்த அண்ணனும் சிக்கினார்.

    கோவை

    கோவை பெரியநா யக்கன் பாளையத்தை அடுத்த சாமநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. அவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து திடீரென மாயம் ஆனார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    இதையடுத்து சிறுமியின் தாயார் பெரியநாயக்கன் பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் மாயம் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். அப்போது சிறுமி சென்னையில் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சென்னை விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். பின்னர் சிறுமியை கோவை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கும் சென்னையை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இது நாளடைவில் காதலாக மாறியது.

    2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். அப்போது சிறுவன், மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி சென்னைக்கு கடத்தி சென்றுள்ளார்.

    அங்கு சிறுவன், மாணவியை பாலியல் தொந்தரவு செய்தது ெதரியவந்தது.

    மேலும் விசாரணையில் சிறுமியை அவரது தாயாரின் தங்கை மகன் அரவிந்த் (25) என்பவரும் சிறுமியை 2 வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததும் ெதரியவந்தது.

    இதையடுத்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார் மாயம் வழக்கை போக்சோ வழக்காக மாற்றி சிறுமியை கடத்தி சென்ற 17 வயது சிறுவன் மற்றும் சிறுமியின் அண்ணன் அரவிந்த் ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    • ஈரோடு ரெயில் நிலையத்தில் சிறுவன் சிறுமியுடன் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் மீட்டனர்.
    • பின்னர் போலீசார் சிறுமி மாயமான வழக்கை மாற்றி 17 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுண்டன்புதுர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார்.

    இது குறித்து அவரது பெற்றோர் கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    போலீசாரின் விசாரணையில் கணபதி பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இரவு ஈரோடு ரெயில் நிலையத்தில் சிறுவன் சிறுமியுடன் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் மீட்டனர்.

    பின்னர் போலீசார் சிறுமி மாயமான வழக்கை மாற்றி 17 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் சிறுவனை ஈரோடு சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    • மேட்டுப்பாளையம் அருகே வீட்டில் குளியலறையில் பெண் குளித்துக்கொண்டிருந்தார்.
    • அப்போது குளியல் அறைக்கு வெளியில் இருந்து ஒரு சத்தம் வந்தது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறையை சேர்ந்தவர் 38 வயது பெண். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பெண் வீட்டில் உள்ள குளியலறைக்கு குளிக்க சென்றார். அங்கு அவர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது குளியல் அறைக்கு வெளியில் இருந்து ஒரு சத்தம் வந்தது. சத்தம் வந்த இடம் நோக்கி பெண் சென்றார்.

    அப்போது அங்கிருந்து வாலிபர் ஒருவர் ஓடுவதை பார்த்ததும் இளம்பெண் அதிர்ச்சியானார். உடனே அருகில் இருந்தவர்களிடம் யார் என்று விசாரித்தார். மேலும் இது தொடர்பாக தனது கணவரிடம் தெரிவித்தார்.

    பின்னர் 2 பேரும் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் தான் பெண் குளிப்பதை வீடியோ எடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை பிடித்து விசாரித்தனர். மேலும் அவரது செல்போனை வாங்கி பார்த்தனர். அதில் பல்வேறு பெண்களை தகாத முறையில் வீடியோ எடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    ×