search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போன் திருடிய சிறுவன் கைது
    X

    செல்போன் திருடிய சிறுவன் கைது

    • ராம் நகரைச் சேர்ந்த 17வயது சிறுவன், ஆஞ்சியின் செல்போனை திருடி தப்பி ஓடினார்.
    • அந்த சிறுவனை மடக்கி பிடித்து ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராயக்கோட்டை சாலை ஹவுசிங்போர்டு பகுதியைச் சேர்ந்தவர் ஆஞ்சி (வயது28).

    இவர் சம்பவத்தன்று அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மாரியம்மன் கோவில் அருகே ராம் நகரைச் சேர்ந்த 17வயது சிறுவன், ஆஞ்சியின் செல்போனை திருடி தப்பி ஓடினார்.

    உடனே அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த சிறுவனை மடக்கி பிடித்து ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.

    Next Story
    ×