search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boy arrest"

    • தினேசை வெட்டியதால் ஆத்திரத்தில் இருந்த அவரது தம்பியான சிறுவன் பழிவாங்கும் வகையில் ஆகாசை நோட்டமிட்டார்.
    • ராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்து கெல்லீசில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் ஆகாஷ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கிளி என்கிற தினேஷ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த மோதலில் கடந்த மாதம் தினேசை கத்தியால் ஆகாஷ் வெட்டினார்.

    இந்த வழக்கில் கைதான ஆகாசை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ஜாமினில் வந்தார். தினேசை வெட்டியதால் ஆத்திரத்தில் இருந்த அவரது தம்பியான சிறுவன் பழிவாங்கும் வகையில் ஆகாசை நோட்டமிட்டார்.

    நேற்று இரவு ராயபுரம் பகுதியில் உள்ள ராபின்சன் விளையாட்டு மைதானத்தில் ஆகாஷ் தனியாக வந்தபோது அவரது கழுத்தை பிளேடால் அறுத்து விட்டு சிறுவன் தப்பி ஓடிவிட்டான். இதில் பலத்த காயம் அடைந்த ஆகாசுக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து ராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்து கெல்லீசில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

    மேட்டூர் அருகே லாரி டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டூர்:

    மேட்டூரை அடுத்த காவேரி கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் செல்ல வேலு (வயது34). லாரி டிரைவரான இவர் கடந்த 17-ந்தேதி கிழக்கு, மேற்கரை கால்வாய் கரை பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தார். மர்ம நபர்கள் செல்லவேலுவை கொலை செய்து கால்வாய் கரை பகுதியில் வீசி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்ல வேலு உடலை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிநவ் சம்பவ இடத்தை நேரில் வந்து பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தினார்.

    கொலை நடந்து 3 நாட்களாக கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் குறித்தும் துப்பு துலங்காமல் இருந்தது. இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கொலையாளிகளை தேடினர். அப்போது இந்த கொலையில் செல்லவேலுவிடம் கிளீனராக இருந்த 17 வயது சிறுவன் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    செல்லவேலுவுக்கு அந்த பகுதியை சேர்ந்த 40 வயது பெண்ணுடன் தொடர்பு இருந்தது. அடிக்கடி அந்த பெண்ணை தனிமையில் சந்தித்து வந்துள்ளார். இது அந்த சிறுவனுக்கு தெரியவந்தது. செல்லவேலுவுக்கு தெரியாமல் சிறுவன் அந்த பெண்ணிடம் பழக ஆரம்பித்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணும் சிறுவனும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

    இந்த வேளையில் அங்கு வந்த செல்லவேலு அவர்களை கையும் களவுமாக மடக்கி பிடித்தார். சிறுவனை கண்டித்த செல்லவேலு இதுபற்றி அவனது பெற்றோரிடம் சொல்லிவிடுவதாக எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து செல்லவேலுவை கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் சிறுவனை கைது செய்தனர். அவனிடம் இருந்த கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இறச்சகுளம் அருகே பிறந்தநாள் விழாவின் போது 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் மீது போஸ்கோ சட்டப்படி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    நாகர்கோவில்:

    குலசேகரம் பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் கணவரை பிரிந்து 4 வயது மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

    அந்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இவர்களின் குழந்தைக்கு சமீபத்தில் பிறந்த நாள் வந்தது.

    இதற்காக குழந்தையை பெண்ணின் கணவர் இறச்சகுளம் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

    இறச்சகுளம் பகுதியில் உள்ள கணவரின் உறவினர் வீட்டில் சிறுமியின் பிறந்த நாள் விழா நடந்தது. விழா முடிந்த பின்பு சிறுமியை அவரது தாயாரிடம் கணவர் ஒப்படைத்தார்.

    அப்போது சிறுமி, தாயாரிடம், கணவரின் உறவினர் வீட்டில் தனக்கு பாலியல் தொல்லை நடந்ததாக கூறி அழுதார்.

    அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் இது பற்றி பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். அதில் பிறந்த நாள் விழாவுக்குச் சென்ற இடத்தில் கணவரின் உறவுக்கார சிறுவன், தனது 4 வயது மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்தார்.

    13 வயதே ஆன அந்த சிறுவன் மீது பூதப்பாண்டி போலீசார் போஸ்கோ சட்டப்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவனை போலீசார் கைது செய்தனர். #Indiankilled

    நியூஜெர்சி:

    தெலுங்கானா மாநிலம் மேடக் பகுதியை சேர்ந்தவர் சுனில் எட்லா (61). இவர் அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் வென்ட்னார் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.

    அட்லாண்டிக் சிட்டியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஆடிட்டராக பணிபுரிந்தார். கடந்த 15-ந்தேதி இரவு இவர் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியேவந்தார்.

    அப்போது 16 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் அங்கு காரில் வந்தான். அதில் இருந்து இறங்கிய அவன் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுனில் எட்லாவை சரமாரியாக சுட்டான்.

    இதனால் நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே அந்த சிறுவன் காரில் ஏறி தப்பி ஓடிவிட்டான்.


    தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி துப்பாக்கியால் சுட்ட சிறுவனை கைது செய்தனர்.

    அவன் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கொள்ளை மற்றும் சட்டத்துக்கு விரோதமாக கைத் துப்பாக்கி வைத்திருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் வழக்கு போடப்பட்டுள்ளது.

    சுனில்எட்லா கடந்த 1987-ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்தியா வந்து தனது குடும்பத்தினரை சந்தித்தார். டிசம்பர் மாதத்தில் தனது தாயாரின் 98-வது பிறந்த நாள் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட 2 மாத விடுமுறையில் இந்தியா வர இருந்தார்.

    தாயாரின் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். அதற்குள் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் சுடப்பட்டதற்கான காரணம் வெளியிடப்படவில்லை. இவர் அட்லாண்டிக் சிட்டியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பியானோ வாசித்து வந்தார். இதனால் இவர் பிரபலமானவராக திகழ்ந்தார். #Indiankilled

    கே.ஜி. சாவடி அருகே தொழிலாளி வீட்டில் திருடிய 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest

    கோவை:

    கோவை கே.ஜி. சாவடி அருகே உள்ள மஸ்திகவுண்டன் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 38). கூலித் தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். வேலை முடிந்ததும் மாலையில் வீட்டுக்கு திரும்பினார்.அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது.

    அதிர்ச்சியடைந்த ரவிக்குமார் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அறையில் இருந்த பீரோவை திறந்த மர்மநபர் அதில் இருந்த 3ž பவுன் தங்க நகைகள், ரூ. 15 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிவிட்டு வீட்டு முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து ரவிக்குமார் கே.ஜி. சாவடி போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற மர்நபரை தேடிவந்தனர். நேற்று அந்த பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 15 வயது சிறுவனை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். விசாரணையில் சிறுவன் அரசம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவருவதும் தான் தான் ரவிக்குமார் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடி மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றதையும் ஒப்புக்கொண்டான்.

    இதனையடுத்து போலீசார் சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

    அமெரிக்காவில் வீட்டில் மர்மமாக இறந்த கிடந்த 83 வயது மூதாட்டியை பிரேத பரிசோதனை செய்ததில் கற்பழிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததையடுத்து 14 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
    நியூயார்க்:

    அமெரிக்காவில் உள்ள பால்டி மோர் நகரை சேர்ந்த பெண் டோரோதிமயே நீல். 83 வயதான இவர் தனது வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனை நடத்தினர். அப்போது அவர் கற்பழிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. அதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    இது தொடர்பாக 14 வயது சிறுவன் திரோன் ஹார்வின் என்பவனை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். அவன் மீது கற்பழிப்பு மற்றும் கொலை குற்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    பாட்னாவில் இலவசமாக காய்கறி கொடுக்க மறுத்த சிறுவனை சிறையில் அடைத்தது தொடர்பாக 11 போலீஸ்காரர்களை சஸ்பெண்டு செய்து ஐ.ஜி. உத்தரவிட்டார். #patnapolice
    பாட்னா:

    பீகார் மாநிலம் பாட்னாவில் சாலையோரம் வியாபாரம் செய்பவர்களிடம் போலீசார் கட்டாய மாமூல் வசூலில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சிறுவன் இப்போது தான் வந்தேன் வியாபாரம் ஆகவில்லை என்றான்.அப்படியானால் காய்கறியாக கொடு என்று கேட்டனர். அதற்கு சிறுவன் மறுத்து விட்டான். இதையடுத்து சிறுவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    போலீசாரின் இந்த செயல் குறித்து சிறுவனின் தந்தை முதல்-மந்திரி நிதிஷ்குமாருக்கு கடிதம் எழுதினார். அவர் உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து பாட்னா ஐ.ஜி. நய்யார் உசைன்கான் இதுபற்றி விசாரிக்க 3 பேர் குழுவை நியமித்தார். அவர்கள் விசாரணை நடத்தி ஐ.ஜி.யிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். இதில் சிறுவனுக்கு எதிராக போலீசார் விதியை மீறி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சிறையில் அடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட 2 போலீஸ் நிலைய அதிகாரிகள் உள்பட 11 போலீஸ்காரர்களை சஸ்பெண்டு செய்து ஐ.ஜி. உத்தரவிட்டார். மேலும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சிறுவனை விடுதலை செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கவும் உத்தரவிடப்பட்டது. #patnapolice
    தேனி மாவட்டத்தில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான்.
    உத்தமபாளையம்:

    தேனி அருகே தேவாரம் சாலைத் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 5 வயது மகள் அப்பகுயில் விளையாடச் சென்றார். அப்போது திடீரென அவர் மாயமானார். இது குறித்து தேவாரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

    18-ம் கால்வாய் பகுதியில் 2 மர்ம நபர்கள் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இருவரையும் பிடித்து போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். கடத்தப்பட்ட சிறுமியை 16 வயது மதிக்கத்தக்க சிறுவன் தனது மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து வீட்டில் விட்டுள்ளார்.

    அந்த சிறுவனிடம் சிறுமியின் உறவினர்கள் விசாரித்த போது சரியாக பதிலளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சிறுவனை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

    தேவாரம் பகுதியில் குழந்தைகள் கடத்தப்படுவதாக தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து ஏராளமானோர் தேவாரம் போலீஸ் நிலையம் அருகே குவிந்தனர். வீரபாண்டி திருவிழாவுக்காக 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக சென்றுள்ளனர்.

    இதனால் போலீஸ் நிலையத்தில் குறைந்த அளவே போலீசார் பணியில் இருந்துள்ளனர். தொடர்ந்து உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீசாரால் கட்டுபடுத்த முடியவில்லை.

    மேலும் போலீஸ் மெத்தனமாக செயல்படுவதாக கூறி அவர்களை கண்டித்து சிறுமியின் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். கூட்டத்தில் சிலர் கல் வீசியதால் அரசு பஸ் முன்பக்க கண்ணாடி உடைந்தது. எனவே கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். உறவினர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி போலீசார் விசாரணை நடத்தினர்.

    கடத்தப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அசோக் பிரபாகரன் (16) என்ற சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
    ×