search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி பலாத்காரம்"

    • ரத்தினகுமாரி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மவுலு அவரது வீட்டிற்குச் சென்றார்.
    • சிறுமியின் பிணத்தை வீட்டின் பின்புறத்தில் உள்ள முட்புதரில் வீசினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பீமாவரத்தை சேர்ந்தவர் அஞ்சி. இவரது மனைவி துர்கா. தம்பதியின் ஒரே மகள் ரத்தினகுமாரி (வயது 14). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

    மாணவிக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.

    கடந்த 26-ந் தேதி சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றனர். சிறுமியின் உறவினரான பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மவுலு. காவலாளியாக வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி குவைத்தில் வேலை செய்து வருகிறார். இவரது இரண்டு மகள்களும் நரசாபுரத்தில் உள்ள விடுதியில் தங்கி அங்குள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இதனால் மவுலு மட்டும் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் ரத்தினகுமாரி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மவுலு அவரது வீட்டிற்குச் சென்றார். சிறுமியிடம் ஆசைவார்த்தைகளை கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

    பின்னர் சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார். இந்த சம்பவத்தை சிறுமி வெளியில் சொல்லிவிட்டால் பிரச்சனை ஏற்படும் என்று எண்ணிய மவுலு சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

    பின்னர் சிறுமியின் பிணத்தை வீட்டின் பின்புறத்தில் உள்ள முட்புதரில் வீசினார்.

    மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமியின் பெற்றோர் மகள் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மகளை ஊர் முழுவதும் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அப்போது அவர்களுடன் மவுலு ஒன்றும் தெரியாதது போல் போலீஸ் நிலையம் சென்று இருந்தார். கடந்த 3 நாட்களாக தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் நேற்று காலை மவுலுவின் வீட்டின் பின்புறத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. அங்கு சென்று பார்த்தபோது சிறுமியின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ரவி பிரசாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் மவுலுவின் வீட்டில் சோதனை நடத்தியபோது சிறுமியின் ஆடைகள் கண்டெடுக்கப்பட்டன.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மவுலுவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • மழை காரணமாக கடந்த 6-ந் தேதி வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
    • மாணவியின் தந்தை அவரிடம் என்ன நடந்தது என்று விசாரித்தார்.

    கோவை:

    கோவை மாவட்டம் வால்பாறை பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    மாணவிக்கு அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.

    மழை காரணமாக கடந்த 6-ந் தேதி வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அன்று மாணவியின் தாய் மற்றும் தந்தை வேலைக்கு சென்று விட்டனர். மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    இதையறிந்த மாணவர், மாணவியின் வீட்டிற்கு சென்றார். தனியாக இருந்த மாணவியிடம் உன்னையே திருமணம் செய்து கொள்வேன் என ஆசைவார்த்தை கூறினார். பின்னர் மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். மாலையில் மாணவியின் தந்தை வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பினார். மாணவியின் தந்தை வருவதை பார்த்த மாணவர் வீட்டின் பின்புறமாக ஓடி தப்பிச் சென்றார். இதனை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். மகளை பார்த்தபோது அவர் பதட்டமாக இருந்தார்.

    மாணவியின் தந்தை அவரிடம் என்ன நடந்தது என்று விசாரித்தார். அதற்கு மாணவி தன்னுடன் படிக்கும் மாணவர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறி அழுதார்.

    இதுகுறித்து மாணவியின் தந்தை வால்பாறை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த மாணவரை கைது செய்தனர்.

    • உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    • இந்த வழக்கில் விடுதி காவலாளி மீது காவல்துறைக்கு சந்தேகம் எழுந்தது.

    மும்பை:

    மும்பையில் 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சார்னி சாலையில் உள்ள அரசு விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவியை காணவில்லை என நேற்று மாலை காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விடுதிக்கு வந்து விசாரணை நடத்தினர். விடுதியின் நான்காவது மாடியில் அவர் தங்கியிருந்த அறை வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது, அந்த மாணவியின் கழுத்து துணியால் நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர்.

    மாணவியின் உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், இந்த வழக்கில் விடுதி காவலாளி மீது காவல்துறைக்கு சந்தேகம் எழுந்தது. அவரது நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க தொடங்கிய சமயத்தில், அவர் நேற்று காலையிலேயே சார்னி சாலை ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனால் அவர் மாணவியை கொலை செய்தபின்னர், ரெயில் முன் விழுந்து தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.

    • பெற்றோர் பிரிந்து வாழ்வதால் மாணவிக்கு கல்லூரி கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
    • ராஜேஷ், ரவீந்திரன் 2 பேரும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ராமநாதபுரம் போலீசாரிடம் சிக்கினர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். ஆங்கிலோ இந்தியனான இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக அவர் சரவணம்பட்டி பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். மாணவியின் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியாக வாழ்த்து வருகின்றனர்.

    பெற்றோர் பிரிந்து வாழ்வதால் மாணவிக்கு கல்லூரி கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவி, கல்லூரி மாணவர் ஒருவரிடம் உதவி கேட்டதாக தெரிகிறது. அப்போது அந்த மாணவர் மூலம் கோவை கொண்டயம்பாளையத்தை சேர்ந்த ஜெர்மன் ராஜேஷ் (வயது 22), ரவீந்திரன் (22) ஆகியோர் மாணவிக்கு அறிமுகம் ஆனார்கள்.

    அவர்கள் 2 பேரும், கடந்த 23-ந்தேதி மாணவி தங்கி இருக்கும் அறைக்கு சென்றனர். அங்கிருந்த மாணவியிடம் கல்வி கட்டணம் செலுத்துவதற்கு உதவுவதாக கூறினர். இதையடுத்து மாணவியை அங்கிருந்து ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அங்கு அறை எடுத்து மாணவியை தங்க வைத்தனர்.

    இந்த நிலையில் ஜெர்மன் ராஜேஷ், ரவீந்திரன் ஆகியோர் மாணவியை ஓட்டல் அறையில் அடைத்து வைத்து, 3 நாட்களாக கட்டாயப்படுத்தி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் அங்கிருந்து தப்பிய மாணவி, நடந்த சம்பவம் குறித்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓட்டலுக்கு சென்றனர். ஆனால் அங்கிருந்து ஜெர்மன் ராஜேஷ், ரவீந்திரன் இருவரும் தலைமறைவாகி விட்டனர். அதே நேரத்தில் ஓட்டல் அறையில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.

    இந்தநிலையில், ராஜேஷ், ரவீந்திரன் 2 பேரும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ராமநாதபுரம் போலீசாரிடம் சிக்கினர்.

    போலீசாரை பார்த்ததும் தாங்கள் வந்த மோட்டர்சைக்கிளை போட்டுவிட்டு தப்ப முயன்றபோது சந்தேகத்தின்பேரில் இருவரையும் போலீசார் பிடித்தனர்.

    விசாரணையில், அவர்கள் 2 பேரும் ரவுடிகள் என்பதும், கல்லூரி மாணவியை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    முன்னதாக போலீசாரிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் கீழே விழுந்ததில் ரவுடிகள் இருவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக இருவரும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    • பரமக்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து அ.தி.மு.க. கவுன்சிலர் உள்பட 5 பேரையும் கைது செய்தனர்.
    • போலீஸ் காவல் முடிந்த பின் 5 பேரும் நாளை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய 9-ம் வகுப்பு மாணவியை 3-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சிகாமணி (வயது 44), மறத்தமிழர் சேனை அமைப்பின் நிறுவனர் புதுமலர் பிரபாகரன் (42), ஜவுளிக்கடை உரிமையாளர் ராஜா முகமது (34) ஆகியோர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் இருந்தது. இதற்கு அதே பகுதியைச் சேர்ந்த கயல்விழி (45), உமா (34) ஆகிய 2 பேர் உடந்தையாக இருந்துள்ளனர்.

    பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இந்த சம்பவம் தொடர்பாக பரமக்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து அ.தி.மு.க. கவுன்சிலர் உள்பட 5 பேரையும் கைது செய்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டார். அதன்படி சிவகங்கை சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் கீதா இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்திய நிலையில் சிறையில் உள்ள 5 பேரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

    மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் கோபிநாத், 5 பேரையும் நேற்று முதல் நாளை (17-ந் தேதி) வரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

    கோர்ட்டு அனுமதி அளித்த உடன் அதன் தீர்ப்பு நகலை பெற்றுக்கொண்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிகாமணி உள்ளிட்ட 3 பேர் அடைக்கப்பட்ட ராமநாதபுரம் சிறைக்கு சென்று அவர்களை காவல் எடுத்தனர். இதேபோல் பரமக்குடி மகளிர் சிறையில் உள்ள 2 பெண்களும் காவலில் எடுக்கப்பட்டனர்.

    5 பேரும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து மாணவியை கூட்டு பலாத்காரம் செய்தது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சில முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கருதப்படுகிறது. அதன் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    போலீஸ் காவல் முடிந்த பின் 5 பேரும் நாளை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.

    • திருமண ஆசை காட்டி பலாத்காரம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    செங்கம் தாலுகா காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 22). இவர், திருவண் ணாமலை அய்யம்பாளையம் அருகே உள்ள ஒரு கிரா மத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியி டம் பழகி வந்தார். அப்போது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். அவளது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் பெற்றோர் சிறு மியை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது டாக்டர்கள் சிறுமியை பரிசோதனை செய்ததில் அவள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது சதீஷ் தான் கார ணம் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர்போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார்வழக்குப்பதிவு செய்து சதீஷை கைது செய்தனர்.

    • பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    பொள்ளாச்சி

    திருப்பூர் தண்ணீர் பந்தலை சேர்ந்த 29 வயது வாலிபர். இவர் அந்த பகுதியில் உள்ள கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    வாலிபர் அனைமலையில் உள்ள தனது தாய் மாமா வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கம். அப்போது வாலிபர் தனது தாய் மாமன் மகளான பிளஸ்-1 படிக்கும் 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.

    நாளுக்கு நாள் வாலிபரின் தொல்லை அதிகமாகவே மாணவி இது குறித்து தனது தாயிடம் கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பிளஸ்-1 மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 29 வயது வாலிபரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.  

    • மாணவிக்கு சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த சபரியுடன் பழக்கம் ஏற்பட்டது.
    • மாணவி தனது காதலன் சபரியிடம் தெரிவித்தார்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி சபரி (வயது 22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் மாணவியின் வீட்டிற்கு தெரிய வந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது மகளை கண்டித்தனர். இது குறித்து மாணவி தனது காதலன் சபரியிடம் தெரிவித்தார்.

    அவர் மாணவியை ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    அங்கு வைத்து மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். மறுநாள் மாணவி தனது வீட்டிற்கு திரும்பினார். அப்போது அவரிடம் பெற்றோர் எங்கு சென்றாய் என்று கேட்டனர். அப்போது வாலிபர் தன்னை பலாத்காரம செய்ததை மாணவி கூறினார்.

    பின்னர் அவர்கள் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சபரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சுமை தூக்கும் தொழிலாளி கைது செய்யப்பட்டனர்.
    • 17 வயது மாணவி ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த 22 வயது லோடு மேனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    சம்பவத்தன்று மாணவி தனது பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் பள்ளிக்கு செல்லாமல் தனது காதலனை சந்தித்தார். அப்போது வாலிபர் மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்றார்.

    பின்னர் அவர் மாணவியை அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு அைழத்து சென்று திருமணம் செய்தார். இதனையடுத்து அவர் தனது வீட்டிற்கு மாணவியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.இந்தநிலையில் பள்ளிக்கு சென்ற தங்களது மகள் மாயமானது குறித்து மாணவியின் பெற்றோர் இது குறித்து கோட்டூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தி வாலிபருடன் தங்கி இருந்த மாணவியை மீட்டனர். அவரை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரையும் கைது செய்தனர்.

    இது குறித்து கோட்டூர் போலீசார் பிளஸ்-2 மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • மாஸ்டர் கைது
    • போக்சோ சட்டத்தில் நடவடிக்கை

    வேலூர்:

    அணைக்கட்டு தாலுகா கெங்கநல்லுார் அடுத்த சீலேரி கிராமத்தை சேர்ந்தவர் பாபு (வயது 35). கராத்தே மாஸ்டர். இவர் அணைக்கட்டில் கராத்தே பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். அணைக்கட்டு பகுதியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி (17) ஒருவர் கராத்தே பயிற்சி பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார்.

    இந்நிலையில் மாணவி மயக்கமடைந்தார். இதையடுத்து மாணவியை அவ ரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர்.அப்போது மாணவி கர்ப்பம் அடைந்துள்ளதாக டாக்டர் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர். தனது கர்ப்பத்துக்கு காரணம் கராத்தே மாஸ்டர் பாபுதான் காரணம் என்று மாணவி கூறியுள்ளார்.

    இதையடுத்து மாணவியின் பெற்றோர் அணைக்கட்டு போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ் பெக்டர் கருணாகரன், சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் மாணவி மைனர் என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் கராத்தே மாஸ்டர் பாபுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடந்த 21-ந் தேதி மாணவி தனது பெற்றோரிடம் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.
    • போலீசார் நர்சிங் மாணவியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவனை கைது செய்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையாறு எஸ்டேட்டை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் உடுமலையில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்தநிலையில் மாணவிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு பல்லடம் கரடிவாவியை சேர்ந்த 16 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 2 வருடங்களாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

    கடந்த 21-ந் தேதி மாணவி தனது பெற்றோரிடம் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். அவரை 16 வயது சிறுவன் பல்லடத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து அவர் திருமண ஆசை காட்டி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    மாணவி வீட்டிற்கு செல்லாததால் அவரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை. இது குறித்து அவரது பெற்றோர் வால்பாறை போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். இந்தநிலையில் மாணவி சிறுவனுடன் தங்கி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் பல்லடத்துக்கு சென்று சிறுவனுடன் தங்கி இருந்த மாணவியை மீட்டனர். பின்னர் வால்பாறைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரை சிறுவன் திருமண ஆசை காட்டி பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் நர்சிங் மாணவியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    • ஐ.டி.ஐ. மாணவர் பிரவீன் ஆசைவார்த்தை கூறி மாணவியை அழைத்து சென்று இருப்பது தெரியவந்தது.
    • பிரவீனை கைது செய்த போலீசார், திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    திருவள்ளூர்:

    திருமுல்லைவாயல் மணிகண்டபுரத்தில் வசிக்கும் 15 வயது சிறுமி 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த 15-ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் திருமுல்லைவாயல் வ.உ.சி., நகரை சேர்ந்த ஐ.டி.ஐ. மாணவர் பிரவீன்(19) ஆசைவார்த்தை கூறி மாணவியை அழைத்து சென்று இருப்பது தெரியவந்தது.

    இந்த நிலையில், கடந்த 17-ந் தேதி அம்பத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மாணவியை விட்டுவிட்டு பிரவீன் தப்பி சென்று விட்டார். மாணவியை போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது பிரவீன் ஆசைவார்த்தை கூறி, அழைத்து சென்று பல முறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதற்கிடையே திருமுல்லைவாயல் ரெயில் நிலையம் அருகே சுற்றித்திரிந்த பிரவீனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    ×