search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Student rape"

    • போக்சோவில் வழக்கு பதிவு
    • பலமுறை வெளி இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார்

    ராணிப்பேட்டை:

    வாலாஜாவில் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்நாதன்(40) திருமணமானவர். இவர் வாலாஜாவில் உள்ள தனியார் டியூசன் சென்டரில் வேதியியல் பாட ஆசிரியராக வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் செந்தில்நாதனுக்கு டியூசன் சென்டருக்கு படிக்க வந்த 17வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் செந்தில்நாதன் தனது பிறந்த நாள் அன்று மாணவியை வீட்டிற்கு அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி வலுக்கட்டாயமாக மாணவியை பலாத்காரம் செய்தார்.

    மேலும் இது குறித்து வெளியே கூறினால் உன்னை ஒழித்துவிடுவேன் என மிரட்டியதோடு பலமுறை வெளி இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.

    மாணவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்துள்ளனர். விசாரித்த போது மாணவி பள்ளிக்கு சரிவர வருவதில்லை அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து பெற்றோர் மாணவியிடம் விசாரித்த போது தனக்கு நடந்த கொடுமையை கூறினார்.

    இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரின் இன்ஸ்பெக்டர் ஷாகின் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள டியூசன் மாஸ்டர் செந்தில்நாதனை தேடி வருகின்றனர்.

    • திருமண ஆசை காட்டி பலாத்காரம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    செங்கம் தாலுகா காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 22). இவர், திருவண் ணாமலை அய்யம்பாளையம் அருகே உள்ள ஒரு கிரா மத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியி டம் பழகி வந்தார். அப்போது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். அவளது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் பெற்றோர் சிறு மியை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது டாக்டர்கள் சிறுமியை பரிசோதனை செய்ததில் அவள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது சதீஷ் தான் கார ணம் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர்போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார்வழக்குப்பதிவு செய்து சதீஷை கைது செய்தனர்.

    • சுமை தூக்கும் தொழிலாளி கைது செய்யப்பட்டனர்.
    • 17 வயது மாணவி ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த 22 வயது லோடு மேனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    சம்பவத்தன்று மாணவி தனது பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் பள்ளிக்கு செல்லாமல் தனது காதலனை சந்தித்தார். அப்போது வாலிபர் மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்றார்.

    பின்னர் அவர் மாணவியை அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு அைழத்து சென்று திருமணம் செய்தார். இதனையடுத்து அவர் தனது வீட்டிற்கு மாணவியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.இந்தநிலையில் பள்ளிக்கு சென்ற தங்களது மகள் மாயமானது குறித்து மாணவியின் பெற்றோர் இது குறித்து கோட்டூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தி வாலிபருடன் தங்கி இருந்த மாணவியை மீட்டனர். அவரை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரையும் கைது செய்தனர்.

    இது குறித்து கோட்டூர் போலீசார் பிளஸ்-2 மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • மாஸ்டர் கைது
    • போக்சோ சட்டத்தில் நடவடிக்கை

    வேலூர்:

    அணைக்கட்டு தாலுகா கெங்கநல்லுார் அடுத்த சீலேரி கிராமத்தை சேர்ந்தவர் பாபு (வயது 35). கராத்தே மாஸ்டர். இவர் அணைக்கட்டில் கராத்தே பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். அணைக்கட்டு பகுதியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி (17) ஒருவர் கராத்தே பயிற்சி பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார்.

    இந்நிலையில் மாணவி மயக்கமடைந்தார். இதையடுத்து மாணவியை அவ ரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர்.அப்போது மாணவி கர்ப்பம் அடைந்துள்ளதாக டாக்டர் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர். தனது கர்ப்பத்துக்கு காரணம் கராத்தே மாஸ்டர் பாபுதான் காரணம் என்று மாணவி கூறியுள்ளார்.

    இதையடுத்து மாணவியின் பெற்றோர் அணைக்கட்டு போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ் பெக்டர் கருணாகரன், சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் மாணவி மைனர் என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் கராத்தே மாஸ்டர் பாபுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×