search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
    X

    பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

    • திருமண ஆசை காட்டி பலாத்காரம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    செங்கம் தாலுகா காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 22). இவர், திருவண் ணாமலை அய்யம்பாளையம் அருகே உள்ள ஒரு கிரா மத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியி டம் பழகி வந்தார். அப்போது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். அவளது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் பெற்றோர் சிறு மியை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது டாக்டர்கள் சிறுமியை பரிசோதனை செய்ததில் அவள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது சதீஷ் தான் கார ணம் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர்போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார்வழக்குப்பதிவு செய்து சதீஷை கைது செய்தனர்.

    Next Story
    ×