search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கராத்தே பயிற்சிக்கு வந்த மாணவி கர்ப்பம்
    X

    கராத்தே பயிற்சிக்கு வந்த மாணவி கர்ப்பம்

    • மாஸ்டர் கைது
    • போக்சோ சட்டத்தில் நடவடிக்கை

    வேலூர்:

    அணைக்கட்டு தாலுகா கெங்கநல்லுார் அடுத்த சீலேரி கிராமத்தை சேர்ந்தவர் பாபு (வயது 35). கராத்தே மாஸ்டர். இவர் அணைக்கட்டில் கராத்தே பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். அணைக்கட்டு பகுதியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி (17) ஒருவர் கராத்தே பயிற்சி பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார்.

    இந்நிலையில் மாணவி மயக்கமடைந்தார். இதையடுத்து மாணவியை அவ ரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர்.அப்போது மாணவி கர்ப்பம் அடைந்துள்ளதாக டாக்டர் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர். தனது கர்ப்பத்துக்கு காரணம் கராத்தே மாஸ்டர் பாபுதான் காரணம் என்று மாணவி கூறியுள்ளார்.

    இதையடுத்து மாணவியின் பெற்றோர் அணைக்கட்டு போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ் பெக்டர் கருணாகரன், சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் மாணவி மைனர் என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் கராத்தே மாஸ்டர் பாபுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×