search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pocso act"

    • வயநாடு மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறினா
    • சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், வயிற்று வலி அல்ல என்றும் அது பிரசவ வலி என்று கூறினர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் வயநாடு மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறினார். இதனைத்தொடர்ந்து அவரை ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் அழைத்துச்சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுமிக்கு வயிற்று வலி அல்ல என்றும் அது பிரசவ வலி என்றும் கூறினர். இதனை கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

    தொடர்ந்து சிறுமியிடம் விசாரித்தபோது, அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 56 வயது தொழிலாளி தான் இதற்கு காரணம் என தெரியவந்தது. அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்தார்.
    • போலீசார் 2 பேர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே அணைப்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் லோகேஸ்வரன்(21). இவர் அதேபகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அந்த பெண் 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வெங்கடாஜலம் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து ேலாகேஸ்வரனை கைது செய்தார்.

    இதேபோல் நத்தம் கோமணம்பட்டியை சேர்ந்த மோகன்தாஸ் மகன் அஜித்(21). இவர் அதேபகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சாணார்பட்டி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் விக்ேடாரியா லூர்துமேரி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து அஜித்தை கைது செய்தார்.

    • சிறுமி தனியாக இருப்பதை கண்ட உடற்பயிற்சி கூட பயிற்சியாளர் சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து உடற்பயிற்சி கூடத்திற்கு அழைத்துச் சென்றார்.
    • போலீசார் பயிற்சியாளர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    திருப்பதி:

    ஐதராபாத் மேடிப்பள்ளியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் முதல் மாடியில் தனி நபர் ஒருவர் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார்.

    இந்த உடற்பயிற்சி கூடத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பயிற்சியாளராக வேலை செய்து வருகிறார்.

    அடுக்குமாடி குடியிருப்பில் 7 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். சக நண்பர்களுடன் விளையாடுவதற்காக சிறுமி வீட்டிலிருந்து வெளியே வந்தார்.

    சிறுமி தனியாக இருப்பதை கண்ட உடற்பயிற்சி கூட பயிற்சியாளர் சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து உடற்பயிற்சி கூடத்திற்கு அழைத்துச் சென்றார்.

    அங்கு 3 மணிநேரம் அடைத்து வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். வீட்டில் இருந்து விளையாட சென்ற மகள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அவரது தாய் மகளை தேடிச் சென்றார்.

    அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் விளையாடிக் கொண்டு இருந்த சிறுமிகளுடன் தனது மகள் இல்லாத இதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் மகளை தேடி அலைந்து திரிந்தார்.

    அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சில பெண்கள் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று கதவை தட்டினர். கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. சிறிது நேரம் கழித்து உடற்பயிற்சி கூட பயிற்சியாளர் கதவை திறந்தார்.

    அவரிடம் சிறுமி குறித்து விசாரித்தபோது சிறுமி உள்ளே இருப்பதாக தெரிவித்தார். அப்போது பெண்கள் சிறுமியை ஏன் உடற்பயிற்சி கூடத்திற்குள் நீண்ட நேரம் வைத்திருந்தாய் என கேள்வி கேட்டபோது அவர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார்.

    இதனால் சந்தேகம் அடைந்த பெண்கள் பயிற்சியாளரை சரமாரியாக தாக்கி, போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடற்பயிற்சி கூட பயிற்சியாளரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்ததில் அவர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பயிற்சியாளர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • சிறுமிக்கு அதே பகுதியில் வசித்து வரும் உறவினரான ராஜேஷ் என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.
    • சிறுமியின் பெற்றோர் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர், கசவ நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு அதே பகுதியில் வசித்து வரும் உறவினரான ராஜேஷ் (36) என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • குமார் மதுராந்தகத்தில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
    • போலீசார் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகத்தை அடுத்த வள்ளுவப்பாக்கம் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் எபி என்ற குமார் (வயது 32). மதுராந்தகத்தில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் அந்த பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பிறந்தநாள் என்பதால் அவருக்கு பிறந்த நாள் பரிசு தருவதாக கூறி அதே ஊரில் உள்ள செல்லியம்மன் கோவிலுக்கு அருகே அழைத்துள்ளார். அங்கு வந்த மாணவிக்கு குமார் பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து யாரிடமாவது சொன்னால் உனது குடும்பத்தை காலி செய்து விடுவேன், உனது புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • முகநூலில் பழகும்போது இது போன்று தவறான நபர்களின் அறிமுகம் கிடைக்கலாம் என்றும் எனவே பெண்கள் உஷாராக இருக்க வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் கணவரை இழந்து 2 மகன்கள், ஒரு மகளுடன் வசித்து வந்தார்.

    கணவர் மறைவுக்கு பிறகு அரக்கோணத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்த அவர் அங்கு ஒரு வாலிபருடன் பழகி ஏமாந்துள்ளார்.

    இதன் பின்னர் மீண்டும் காஞ்சிபுரத்துக்கே வந்து குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் பேஸ்புக் மூலமாக தினேஷ்குமார் என்ற வாலிபர் 3 குழந்தைகளின் தாயுடன் பழகி இருக்கிறார் அப்போது இருவரும் தனிமையில் சந்தித்து பேசி உள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் மிகவும் நெருக்கமானது. இதனால் இருவரும் திருமணம் செய்யாமலேயே கணவன் - மனைவி போல வாழ்ந்து வந்தனர். இந்த லிவ்விங் டொகதர் வாழ்க்கையில் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் பெண்ணின் மகளான 10-ம் வகுப்பு மாணவி மீதும் தினேஷ் குமார் காம பார்வையை வீசினார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மகளாக பார்க்க வேண்டிய மாணவியை பள்ளியில் இருந்து ஏதோ காரணம் கூறி அழைத்து வந்து வீட்டில் வைத்தே மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது போன்று தினேஷ்குமார் பல முறை நடந்து கொண்டு உள்ளார்.

    ஒரு கட்டத்தில் தினேஷ்குமாரின் தொல்லை அதிகமானதால் அதிர்ச்சி அடைந்த மாணவி என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். பின்னர் தனது தாயிடம் இது பற்றி சொல்லி அழுதார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் காஞ்சிபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தினேஷ் குமார் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. அவரை போலீசார் கைது செய்து செய்து சிறையில் அடைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் கூறும்போது முகநூலில் பழகும்போது இது போன்று தவறான நபர்களின் அறிமுகம் கிடைக்கலாம் என்றும் எனவே பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனைத்து மாநிலங்களிலும் போக்சோ சட்டத்தின் கீழ் அதிகமான வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன.
    • பாலியல் அத்துமீறல்களில் பாதிக்கப்பட்டவர்களில் 15 முதல் 18 வயதுடைய சிறுவர்-சிறுமிகளே அதிகம்.

    திருவனந்தபுரம்:

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள், வாகனங்கள், ஓட்டல்கள் என பல இடங்களில் அவர்கள் பாலியல் ரீதியாக பாதிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

    பாலியல் சம்பவங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக கடந்த 2012-ம் ஆண்டு போக்சோ சட்டம் (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012) கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் வருவதற்கு முன்பு வரை குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் பதியப்பட்டது.

    போக்சோ சட்டம் வந்தபிறகு, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் அனைத்தும் இந்த சட்டத்தின் கீழ்தான் பதியப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதாரண சிறை தண்டனை முதல், கடுங்காவல் மற்றும் ஆயுள் தண்டனை வரை கொடுக்கப்படும்.

    அனைத்து மாநிலங்களிலும் போக்சோ சட்டத்தின் கீழ் அதிகமான வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன. கேரள மாநிலத்தில் போக்சோ வழக்குகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. 2012-ம் ஆண்டு போக்சோ சட்டம் அமலாகிய நிலையில், கேரள மாநிலத்தில் கடந்த 2013-ம் ஆண்டு 1,002 வழக்குகள் பதிவாகின.

    ஆனால் கடந்த ஆண்டு அதன் எண்ணிக்கை 4,582 ஆக அதிகரித்து உள்ளது. 2013-ஆண்டை ஒப்பிடுகையில் இது 4 மடங்கு அதிகமாகும். இந்த வழக்குகளில் மொத்தம் 5,002 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் களில் 4,643 பேர் ஆண்கள். 115 பேர் பெண்கள். மீதமுள்ள 244பேர் ஆணா அல்லது பெண்ணா என்ற விவரம் கிடைக்கவில்லை.

    கடந்த ஆண்டு பதிவாகியிருக்கும் போக்சோ வழக்குகளில் 1,004 சம்பவங்கள் வீடுகளிலும், 133 சம்பவங்கள் பள்ளிகளிலும், 102 சம்பவங்கள் வாகனங்களிலும், 99 சம்பவங்கள் ஓட்டல்களிலும், 96 சம்பவங்கள் நண்பர்களின் வீடுகளிலும், 29 சம்பவங்கள் மருத்துவமனைகளிலும், 12 சம்பவங்கள் குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களிலும், மற்றவை வேறு சில பொதுவான இடத்திலும் நடந்துள்ளது.

    பாலியல் அத்துமீறல்களில் பாதிக்கப்பட்டவர்களில் 15 முதல் 18 வயதுடைய சிறுவர்-சிறுமிகளே அதிகம். பெரும்பாலான குழந்தைகள் தங்களது சொந்த வீட்டிலேயே உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரால் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

    மாவட்ட அளவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் 583-ம், மலப்புரத்தில் 555-ம், எர்ணாகுளத்தில் 464-ம் கடந்த ஆண்டில் போக்சோ வழக்குகள் பதிவாகி உள்ளன. பத்தினம்திட்டா மாவட்டத்தில் மட்டும் மிகவும் குறைவாக 189 போக்சோ வழக்குகள் பதிவாகி இருக்கிறது.

    கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    • கைது செய்யப்பட்ட முர்ஷித் முகம்மதை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
    • இதுபோன்று எத்தனை சிறுமிகளை சீரழத்தார் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் முர்ஷித் முகம்மது(வயது24). தனியார் பஸ் ஒன்றில் டிரைவராக பணிபுரிந்து வந்த இவர் மீது மலப்புரத்தை சேர்ந்த ஒரு மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.

    அவர்கள் தங்களது புகாரில், பஸ்சில் சென்ற தங்களின் மகளுடன் முர்ஷித் முகம்மது நட்பாக பழகி ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதனை யாரிடமும் கூறக்கூடாது என்று மாணவிக்கு மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்திருந்தனர்.

    இதையடுத்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். முர்ஷித் முகம்மது டிரைவராக வேலைபார்த்த பஸ்சில் மாணவி சென்று வந்திருக்கிறார். அப்போது அவரிடம் நட்பாக பழகியிருக்கிறார். அதனடிப்படையில் அந்த மாணவியும் அவருடன் பேசி வந்துள்ளாளர்.

    இதையடுத்து அந்த மாணவியை வயநாட்டில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். மேலும் அதனை வெளியில் கூறக்கூடாது என்று மாணவியை மிரட்டியிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து டிரைவர் முரஷித் முகம்மது மீது போக்சோ சட்டத்தில் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர். தலைமறைவாக இருந்த அவரை ரகசியமாக தேடி வந்தனர். அவரது செல்போன் சிக்னல் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டறிந்த போலீசார், அவர் இருந்த ரிசார்ட்டுக்கு அதிரடியாக சென்று கைது செய்தனர்.

    அப்போது அவர் மற்றொரு மைனர் பெண்ணுடன் இருந்தார். அந்த பெண்ணும் பஸ்சில் பயணம் செய்தபோது ஏற்பட்ட பழக்கத்தில், டிரைவர் அழைத்தபடி ரிசார்ட்டுக்கு வந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. அந்த மைனர் பெண்ணுக்கு போலீசார் அறிவுரை கூறி, அவர்களது குடும்பத்தினருடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

    கைது செய்யப்பட்ட முர்ஷித் முகம்மதை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் பல சிறுமிகளை அதேபோன்று சீரழித்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

    தனது பஸ்சில் பயணிக்கக்கூடிய மைனர் சிறுமிகளிடம் நட்பாக பழகுவது போல் பேசி, ரிசார்ட்டுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். தனது செயல் யாருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தாத வகையில் பழகி, சிறுமிகளை ரிசார்ட்டுக்கு காலையில் அழைத்துச் சென்று, பின்னர் மாலையில் மீண்டும் சிறுமிகளை திரும்பி விட்டுவிடுவாராம்.

    அவர் இதுபோன்று எத்தனை சிறுமிகளை சீரழித்தார் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
    • சிறுமி 45 நாட்கள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    கோவை:

    கோவை கோவில்பாளையம் அருகே உள்ள அத்திப்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் ஹரிதாஸ் (வயது23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. இந்த நிலையில் ஹரிதாஸ் கடந்த ஏப்ரல் மாதம் ஆசைவார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்தார். பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதன் காரணமாக சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அவரது உறவினர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் சிறுமியை பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி 45 நாட்கள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து டாக்டர்கள் சூலூர் கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ஹரிதாஸ் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய ஹரிதாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போக்சோவில் கைது
    • ஜெயிலில் அடைத்தனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த அரிமலை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் ( வயது 20).

    இவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மைனர் பெண்ணை சில நாட்களுக்கு முன்பு கடத்திச் சென்றதாக மாணவியின் பெற்றோர் வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தனர்.

    2 பேரையும் போலீசார் தேடி வந்த நிலையில், இன்று அவர்களை கண்டுபிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.

    பின்னர் மைனர் பெண்ணுக்கு அரசு ஆஸ்பத்திரியில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வெங்கடேசன், மைனர் பெண்ணை பாலியில் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் வெங்கடேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    மைனர் பெண்ணை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    • செம்பனார்கோவில் பகுதியில் சென்றபோது மாணவியை திடீரென பிரபு வழிமறித்தார்.
    • அதிர்ச்சியடைந்த அந்த மாணவி நடந்த சம்பவம் குறித்து தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் கீழையூர்-உப்பு நகரைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் பிரபு(வயது 29). சரக்கு ஆட்டோ டிரைவரான இவர், 8-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று அந்த மாணவி பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். செம்பனார்கோவில் பகுதியில் சென்றபோது மாணவியை திடீரென பிரபு வழிமறித்தார். பின்னர் மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.

    மேலும் இதனை வெளியில் சொன்னால் சரக்கு ஆட்டோவை ஏற்றி கொலை செய்து விடுவேன் என்றும் அவர் மிரட்டியதாக தெரிகிறது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி நடந்த சம்பவம் குறித்து தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின்பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • செய்முறை தேர்வில் மதிப்பெண்களை குறைத்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
    • பொறுத்துக்கொள்ள முடியாத மாணவி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் பகுதியை சேர்ந்தவர் குமரன் (வயது 45). இவர் அப்பகுதியில் ஜெயபாலகோகுலம் வித்யாலயா மேல் நிலைப்பள்ளி என்ற பெயரில் பள்ளி நடத்தி வருகிறார்.

    இந்த பள்ளியில் தொண்டமாநத்தம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இரவு 8 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அப்பள்ளியில் பயிலும் பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு, சிறப்பு வகுப்பு என்ற பெயரில் பாலியல் ரீதியாக பள்ளி நிர்வாகி குமரன் தொடர்ந்து சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து பெற்றோரிடம் கூறினால் செய்முறை தேர்வில் மதிப்பெண்களை குறைத்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 12-ந் தேதி இரவு சிறப்பு வகுப்பின் போது பள்ளி நிறுவனர் குமரன், அம்மாணவிக்கு மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

    இதையடுத்து அவரது பெற்றோர் வில்லியனூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வேலய்யன் போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்து தலைமறைவான பள்ளி நிறுவனர் குமரனை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் பெற்றோர்கள், அந்த பள்ளியில் தங்கள் குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாக கூறி வேறு பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கிராமப்புறத்தில் பள்ளி நிறுவனரே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×