search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    14 வயது சிறுமிக்கு குழந்தை: போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
    X

    14 வயது சிறுமிக்கு குழந்தை: போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

    • வயநாடு மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறினா
    • சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், வயிற்று வலி அல்ல என்றும் அது பிரசவ வலி என்று கூறினர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் வயநாடு மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறினார். இதனைத்தொடர்ந்து அவரை ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் அழைத்துச்சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுமிக்கு வயிற்று வலி அல்ல என்றும் அது பிரசவ வலி என்றும் கூறினர். இதனை கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

    தொடர்ந்து சிறுமியிடம் விசாரித்தபோது, அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 56 வயது தொழிலாளி தான் இதற்கு காரணம் என தெரியவந்தது. அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×