என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மகளை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபர்- போக்சோ சட்டத்தில் கைது
    X

    மகளை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபர்- போக்சோ சட்டத்தில் கைது

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • முகநூலில் பழகும்போது இது போன்று தவறான நபர்களின் அறிமுகம் கிடைக்கலாம் என்றும் எனவே பெண்கள் உஷாராக இருக்க வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் கணவரை இழந்து 2 மகன்கள், ஒரு மகளுடன் வசித்து வந்தார்.

    கணவர் மறைவுக்கு பிறகு அரக்கோணத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்த அவர் அங்கு ஒரு வாலிபருடன் பழகி ஏமாந்துள்ளார்.

    இதன் பின்னர் மீண்டும் காஞ்சிபுரத்துக்கே வந்து குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் பேஸ்புக் மூலமாக தினேஷ்குமார் என்ற வாலிபர் 3 குழந்தைகளின் தாயுடன் பழகி இருக்கிறார் அப்போது இருவரும் தனிமையில் சந்தித்து பேசி உள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் மிகவும் நெருக்கமானது. இதனால் இருவரும் திருமணம் செய்யாமலேயே கணவன் - மனைவி போல வாழ்ந்து வந்தனர். இந்த லிவ்விங் டொகதர் வாழ்க்கையில் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் பெண்ணின் மகளான 10-ம் வகுப்பு மாணவி மீதும் தினேஷ் குமார் காம பார்வையை வீசினார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மகளாக பார்க்க வேண்டிய மாணவியை பள்ளியில் இருந்து ஏதோ காரணம் கூறி அழைத்து வந்து வீட்டில் வைத்தே மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது போன்று தினேஷ்குமார் பல முறை நடந்து கொண்டு உள்ளார்.

    ஒரு கட்டத்தில் தினேஷ்குமாரின் தொல்லை அதிகமானதால் அதிர்ச்சி அடைந்த மாணவி என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். பின்னர் தனது தாயிடம் இது பற்றி சொல்லி அழுதார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் காஞ்சிபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தினேஷ் குமார் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. அவரை போலீசார் கைது செய்து செய்து சிறையில் அடைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் கூறும்போது முகநூலில் பழகும்போது இது போன்று தவறான நபர்களின் அறிமுகம் கிடைக்கலாம் என்றும் எனவே பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×