என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
திண்டுக்கல் அருகே 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது
- 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்தார்.
- போலீசார் 2 பேர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே அணைப்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் லோகேஸ்வரன்(21). இவர் அதேபகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அந்த பெண் 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வெங்கடாஜலம் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து ேலாகேஸ்வரனை கைது செய்தார்.
இதேபோல் நத்தம் கோமணம்பட்டியை சேர்ந்த மோகன்தாஸ் மகன் அஜித்(21). இவர் அதேபகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சாணார்பட்டி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் விக்ேடாரியா லூர்துமேரி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து அஜித்தை கைது செய்தார்.
Next Story






