என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Plastic Waste"
- கடலூர் கலெக்டர் அலுவலக வளாகப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடந்தது.
- கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலு–வலக வளாகப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடந்தன. இந்த நிலையில் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வந்தன. அப்போது கடலூர் மாவட்டத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தபோது, அலுவலக வளாகத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் குவிந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் பொதுமக்கள் வசிக்கக்கூடிய இடங்களில் குப்பைகள் அகற்ற வேண்டுமானால் அந்தந்த பகுதியில் உள்ள துப்புரவு ஊழியர்கள் அகற்றி செல்வது வழக்கம். ஆனால் அந்தப் பகுதிகளில் குப்பைகள் அகற்றவில்லை என்றால் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிப்பதன் பேரில் குப்பைகள் அகற்றுவது அனைவரும் அறிந்ததாகும். ஆனால் மாவட்ட தலைநகரான கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை ஏன் சரியான முறையில் அகற்றவில்லை என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மேலும் மாவட்டத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய கலெக்டர் அலுவலக வளாகத்தில் குவிந்துள்ள குப்பைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அகற்றாதது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளனர். ஆகையால் சம்பந்த–ப்பட்ட அதிகாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை உடனடி–யாக அகற்றி சுகாதார–மாக பேணி காக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
- பிளாஸ்டிக் கழிவை சாப்பிடும் விலங்குகளுக்கு ஆபத்து
- தண்ணீர் வசதி அமைத்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கிரிவலப்பாதை வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை மான்கள் உண்பதால் சமூக ஆர்வலர்கள் வேதனையாக தெரிவித்தனர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான மான்கள், குரங்குகள், காட்டு பன்றிகள், மயில்கள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.
வன விலங்குகள் கிரிவலப்பாதையில் மக்கள் நடமாடும் பகுதிக்குள் வராத வகையில் கிரிவலப்பாதையில் வனப்பகுதியை சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த இரும்பு வேலியின் அருகில் மான்கள் கூட்டம், கூட்டமாக வந்து பகல் நேரங்களில் வந்து நிற்கின்றன.
கிரிவலப்பாதையில் செல்பவர்களில் பெரும்பாலானோர் மான்கள் கூட்டத்தை கண்டதும் இயற்கைக்கு மாறாக அவற்றிற்கு உணவு வழங்குவதாக கையில் இருக்கும் பழங்கள், ரஸ்க், பன் உள்ளிட்ட தின்பண்ட பொருட்களை மான்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இதனால் சுயமாக வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள், பழங்களை உண்டு வந்த மான்கள் தற்போது மக்கள் வழங்கும் உணவு பொருட்களுக்காக இரும்பு வேலியின் அருகில் வந்து நிற்கின்றன.
மக்கள் உணவு அளித்து பழகியதால் மான்களும் மக்களை கண்டு எந்தவித அச்சமும் இல்லாமல் மக்கள் ஏதாவது வாங்கி போடுவார்களா என்று பார்க்கின்றன. பொதுமக்களும் தற்போது மான்களும் உணவு வழங்குதாக நினைத்து பிளாஸ்டிக் கவரில் உள்ள உணவு பொருட்கள், பாக்கு மாட்டை தட்டுகளில் வைத்து உணவு பொருட்களை போடுகின்றனர்.
மேலும் சிலர் கிரிவலப்பாதையில் அன்னதானம் வழங்கிவிட்டு அங்குள்ள தேவையற்ற கழிவுகளை வனப்பகுதியில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் மான்கள் பிளாஸ்டிக் கழிவுகள், காகிதம் போன்றவற்றை சாப்பிடுகின்றன.
வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பகல் நேரங்களில் கிரிவலப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டு மக்கள் வன விலங்குகளுக்கு தேவையற்ற உணவு பொருட்களை வழங்குவதை தடுக்க வேண்டும்.
மான் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு தேவையான பழ வகை செடிகள் அதிகளவில் கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதியில் வளர்க்க வேண்டும். தண்ணீர் வசதி அமைத்து தர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பிளாஸ்டிக் தடை உத்தரவை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காற்றில் பறக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மேய்ச்சல் நிலங்களை முழுமையாக ஆக்கிரமித்து வருகின்றன.
பல்லடம் :
அதிகரிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகள் அவற்றை உணவாக எடுத்து கொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தடை உத்தரவை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும்என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பல்லடம் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- பிளாஸ்டிக் தடை என்பது பெயருக்குத்தான் உள்ளது. எங்கெங்கு காணினும் பிளாஸ்டிக் கழிவுகள் கிடக்கின்றன. இதனால் சுற்றுச்சூழல் கேடு, நீர் வளம், நிலவளம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காற்றில் பறக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மேய்ச்சல் நிலங்களை முழுமையாக ஆக்கிரமித்து வருகின்றன. விவசாயிகளின் உயிர்நாடியாகவும், குழந்தைகள், பெரியவர்களுக்கு பாலை வழங்கும் கால்நடைகள் பிளாஸ்டிக்கை உண்டு விடுகின்றன. இதனால் செரிமானமும் ஆகாமல், உணவு குழாயில் இருந்து வெளியே வர முடியாமலும் பிளாஸ்டிக் கழிவுகள் கால்நடைகளின் வயிற்றிலேயே தங்கி விடுகின்றன.
சிறிது சிறிதாக பிளாஸ்டிக் கழிவுகள் சேரும்போது மாடுகள் சாப்பிட முடியாமல் பட்டினி கிடந்து பரிதாபமாக உயிரை விடுகின்றன. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் வாயில்லா ஜீவன்களான கால்நடைகளின் ஆயுள் குறைந்து அது சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் வனச்சோதனை சாவடி முதல் கடம்பூர் வரை பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
- பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதியில் வீச வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் வனச்சரக மலைப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், சிறுத்தை, காட்டுப்பன்றி, உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
கடம்பூர் மலை குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் இரு சக்கர வாகனங்கள் பஸ் உள்பட பல்வேறு வாகனங்களில் செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவற்றை பயன்படுத்திய பிறகு வனப்பகுதிகளில் வீசி செல்கின்றனர்.
இதை வனப்பகுதியில் வாழும் வனவிலங்குகள் சாப்பிட்டு செரிக்காமல் உடல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பும் நிகழ்கிறது, இதனை கருத்தில் கொண்டு வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில், டி.என்.பாளையம் வனச்சரகம் சார்பில் பல்லுயிர் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் தமிழ் நாடு சிறப்பு இலக்குப் படை இணைந்து டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் வனச்சோதனை சாவடி முதல் கடம்பூர் வரை பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
டி.என்.பாளையம் வனச்சரக அலுவலர் கணேஷ் பாண்டியன், நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார், வனவர், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து கே.என்.பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும், வனச்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதியில் வீச வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
- வாய்க்காலில் வரக்கூடிய தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்காக மூழால்வாஞ்சேரி, கோட்டச்சேரி, சாலபோகம், வெங்காய களஞ்சேரி ஆகிய கிராமங்கள் காத்து க்கொண்டிருக்கிறது.
- பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்து தண்ணீரை தடை செய்யும் விதமாகவும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா உத்தமதானபுரம் கிராமத்தில் பாசனம் செய்யும் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் முழுவதுமாக நிரம்பி உள்ளன.
இந்த வாய்க்காலில் வரக்கூடிய தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்காக மூழால்வாஞ்சேரி, கோட்டச்சேரி, சாலபோகம், வெங்காய களஞ்சேரி ஆகிய கிராமங்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், இப்படி பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்து தண்ணீரை தடை செய்யும் விதமாகவும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது.
இதை உடனடியாக பாசனத்திற்கு ஏற்ற வகையில் அகற்றி தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகிலுள்ள பெருங்கடல்களில் ஆண்டுக்கு சுமார் 80 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதாகவும், இதே நிலை நீடித்தால் 2050-ல் கடலில் மீன்களைவிட பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக இருக்கும் எனவும் கடந்த ஆண்டு சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி கழகம் தெரிவித்தது.
குறிப்பாக சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய 5 ஆசிய நாடுகளில் பிளாஸ்டிக் கழிவுகள் பெரும் பிரச்சினையாக உள்ளது.
அப்போது அதன் வயிற்றுக்குள் சுமார் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியிருந்ததை கண்டு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ந்து போயினர். பிளாஸ்டிக் கழிவுகள் வயிற்றில் தேங்கியதால் முறையாக இரை உண்ண முடியாமல் தவித்துவந்த அந்த திமிங்கலம் நோய்வாய்பட்டு இறந்ததாக ஆராய்ச் சியாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் தாய்லாந்தில் இறந்த திமிங்கலத்தின் வயிற்றில் 80 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Whale #PlasticWaste
நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதனால் நாள்தோறும் 25,940 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. ஆனால் 40 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகள் ஆறுகள் மற்றும் கடலில் கலப்பதால் அவற்றை சேகரிக்க முடிவதில்லை.
இதன் காரணமாக கடலில் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படுகிறது. மண் மற்றும் நீரில் மாசு ஏற்படுகிறது. பிளாஸ்டிக்கை திண்பதால் கால்நடைகள் மற்றும் மிருகங்கள் உயிரிழக்கின்றன. திறந்தவெளியில் எரிக்கப்படுவதால் மனிதர்களின் உடல்நலத்துக்கு தீங்கு ஏற்படுகிறது. சுற்றுப்புற சூழலிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே ஒரு தடவைக்கு மேல் பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, மற்றும் பெங்களூர் உள்ளிட்ட 60 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் நாட்டில் பயன்படுத்தப்படும் மொத்த பிளாஸ்டிக் பயன்பாட்டில் 50 சதவீதம் மேற்கண்ட நகரங்களில் உபயோகப்படுத்தப்படுவது தெரிய வந்தது.
அதே நேரத்தில் இந்த 60 நகரங்களில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் நாள் ஒன்றுக்கு 4,059 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படுவது கண்டறியப்பட்டது.
அவற்றில் சென்னையில் மட்டும் 429 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இது மொத்தமாக சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளில் 9 சதவீதம் ஆகும். அதன்மூலம் சென்னை 2-வது இடம் பெறுகிறது. டெல்லி முதலிடம் வகிக்கிறது. இங்கு தினமும் 689 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. #PlasticWaste
செங்கல்பட்டு:
கொசுக்களால் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் உருவாவதை தடுக்க செங்கல்பட்டு நகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
செங்கல்பட்டு 33-வது வார்டு அண்ணாநகரில் 6-வது தெருவில் உள்ள தனியாருக்கு சொந்தமான பஸ் டெப்போவை சுகாதார துறை அதிகாரி சித்ரா சேனா தலைமையில் துப்புரவு ஆய்வாளர் கோபால கிருஷ்ணன், மேற்பார்வையாளர் ஜெயதேவி, கொசு ஒழிப்பதற்கான பெண்கள் சுயஉதவிக்குழு ஊழியர்கள் பார்வையிட்டனர்.
அப்போது நீண்ட நாட்களாக பழுதடைந்து நிற்க வைக்கப்பட்டுள்ள பஸ், பிளாஸ்டிக் கேன்கள், பஸ் டயர்கள், பஸ் இருக்கை கள், நாற்காலி போன்ற பொருட்களை அப்புறப்படுத்தும்படி கேட்டுக் கொண்டனர்.
எங்கள் பஸ் செட்டில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தும்படி உத்தர விடுவதற்கு நீங்கள் யார் என்று கேட்டு அவர்களை பஸ் முதலாளி மற்றும் அங்கிருந்த ஊழியர்கள் உள்பட 5 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது.
உடனடியாக வருவாய் கோட்டாட்சியர் முத்து வடிவேலு, தாசில்தார் பாக்கியலட்சுமி, நகராட்சி கமிஷனர் மாரிச்செல்வி மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து பஸ் செட்டை ஆய்வு செய்தனர்.
அங்கு கொட்டிக்கிடந்த பிளாஸ்டிக் கேன்கள், டயர்கள், பஸ்சின் இருக்கைகள், ஒரு வருடத்துக்கும் மேலாக பழுதடைந்து கிடக்கும் பஸ் ஆகியவற்றை கண்டனர்.
இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் தனியார் பஸ் டெப்போருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார். மற்றும் பஸ் டெப்போவுக்கு ‘சீல்’ வைக்கவும் உத்தரவிட்டார்.
ஊழியர்களை தாக்கியவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து பஸ் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டு முழுவதும் இதமான சீசன் நிலவி வருகிறது. எனவேதான் பல்வேறு பகுதியில் இருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
கொடைக்கானல் மலை முழுவதும் தற்போது குறிஞ்சிப்பூ பூத்துக்குலுங்குகிறது. எனவே இந்த ஆண்டு குறிஞ்சி விழா முதல் முறையாக நடத்தப்படுகிறது. இதையொட்டி பிளாஸ்டிக் மாசு இல்லாத தமிழ்நாடு எனும் விழா நடந்தது.
விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-
ஊட்டி போன்ற நகரங்களில் ஓட்டல்கள், பல மாடி கட்டிடங்களால் வர்த்தக மயமாகி விட்டது. இதனால் அங்கு பயணிகள் வரத்து குறைந்துள்ளது. எனவேதான் கொடைக்கானல் நகருக்கு ஏராளமானோர் வருகின்றனர். கொடைக்கானல் நகரில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகம் உள்ளது.
இதனால் கொடைக்கானல் நகருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளால் மலேரியா, டெங்கு போன்ற கொடிய நோய்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களினால் வன விலங்குகள் பலியாகும் அபாயமும், கேன்சர் போன்ற வியாதிகளும் உண்டாகும் வாய்ப்பு உள்ளது.
எனவே கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். கொடைக்கானல் நகரில் குறிஞ்சிப்பூ பூக்கும் காலங்களில் அரசு விழாவாக நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்