search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old tire"

    இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது

    கள்ளக்குறிச்சி:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 47) இவர் கள்ளக் குறிச்சி சுந்தர வினாயகர் கோவில் தெரு பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக பழைய இரும்பு கடை நடத்தி வருகின்றனர்.

    தீ விபத்து

    இந்த பழைய இரும்பு கடையில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியதால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.

    தகவல் அறிந்த கள்ளக் குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் மற்றும் தியாக துருகம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பழைய இரும்பு கடையில் இருந்த பழைய இன்ஜின், ஆயில், டயர் உள்ளிட்ட பழைய பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமடைந்தது.

    ரூ. 5 லட்சம் சேதம்

    இந்த தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

    செங்கல்பட்டில் பஸ் டெம்போவை சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பழைய டயர், பிளாஸ்டிக் கழிவு குவிந்து இருந்தை கண்ட அதிகாரிகள் பஸ் உரிமையாளருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.

    செங்கல்பட்டு:

    கொசுக்களால் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் உருவாவதை தடுக்க செங்கல்பட்டு நகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    செங்கல்பட்டு 33-வது வார்டு அண்ணாநகரில் 6-வது தெருவில் உள்ள தனியாருக்கு சொந்தமான பஸ் டெப்போவை சுகாதார துறை அதிகாரி சித்ரா சேனா தலைமையில் துப்புரவு ஆய்வாளர் கோபால கிருஷ்ணன், மேற்பார்வையாளர் ஜெயதேவி, கொசு ஒழிப்பதற்கான பெண்கள் சுயஉதவிக்குழு ஊழியர்கள் பார்வையிட்டனர்.

    அப்போது நீண்ட நாட்களாக பழுதடைந்து நிற்க வைக்கப்பட்டுள்ள பஸ், பிளாஸ்டிக் கேன்கள், பஸ் டயர்கள், பஸ் இருக்கை கள், நாற்காலி போன்ற பொருட்களை அப்புறப்படுத்தும்படி கேட்டுக் கொண்டனர்.

    எங்கள் பஸ் செட்டில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தும்படி உத்தர விடுவதற்கு நீங்கள் யார் என்று கேட்டு அவர்களை பஸ் முதலாளி மற்றும் அங்கிருந்த ஊழியர்கள் உள்பட 5 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது.

    உடனடியாக வருவாய் கோட்டாட்சியர் முத்து வடிவேலு, தாசில்தார் பாக்கியலட்சுமி, நகராட்சி கமி‌ஷனர் மாரிச்செல்வி மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து பஸ் செட்டை ஆய்வு செய்தனர்.

    அங்கு கொட்டிக்கிடந்த பிளாஸ்டிக் கேன்கள், டயர்கள், பஸ்சின் இருக்கைகள், ஒரு வருடத்துக்கும் மேலாக பழுதடைந்து கிடக்கும் பஸ் ஆகியவற்றை கண்டனர்.

    இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் தனியார் பஸ் டெப்போருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார். மற்றும் பஸ் டெப்போவுக்கு ‘சீல்’ வைக்கவும் உத்தரவிட்டார்.

    ஊழியர்களை தாக்கியவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து பஸ் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×