கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகள்

கடலூர் கலெக்டர் அலுவலக வளாகப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடந்தது.கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் குவிந்து கிடக்கும்  பிளாஸ்டிக் கழிவுகளை படத்தில் காணலாம்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் குவிந்து கிடக்கும்  பிளாஸ்டிக் கழிவுகளை படத்தில் காணலாம்.
Published on

கடலூர்:

கடலூர் கலெக்டர் அலு–வலக வளாகப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடந்தன. இந்த நிலையில் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வந்தன. அப்போது கடலூர் மாவட்டத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தபோது, அலுவலக வளாகத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் குவிந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் பொதுமக்கள் வசிக்கக்கூடிய இடங்களில் குப்பைகள் அகற்ற வேண்டுமானால் அந்தந்த பகுதியில் உள்ள துப்புரவு ஊழியர்கள் அகற்றி செல்வது வழக்கம். ஆனால் அந்தப் பகுதிகளில் குப்பைகள் அகற்றவில்லை என்றால் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிப்பதன் பேரில் குப்பைகள் அகற்றுவது அனைவரும் அறிந்ததாகும். ஆனால் மாவட்ட தலைநகரான கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை ஏன் சரியான முறையில் அகற்றவில்லை என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மேலும் மாவட்டத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய கலெக்டர் அலுவலக வளாகத்தில் குவிந்துள்ள குப்பைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அகற்றாதது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளனர். ஆகையால் சம்பந்த–ப்பட்ட அதிகாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை உடனடி–யாக அகற்றி சுகாதார–மாக பேணி காக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com