search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளாஸ்டிக் குப்பைகள்"

    • எ.ன்.சி.சி. மாணர்கள் சுத்தம் செய்தனர்
    • தினமும் 20 லட்சம் லிட்டர் குப்பை கழிவு நீர் கலக்கும் அவலம்

    வேலூர்:

    வேலூர் மாநகரில் இருந்து நாள்தோறும் 20 லட்சம் லிட்டர் குப்பை கலந்த கழிவுநீர் பாலாற்றில் கலக்கிறது. பாலாற்றுப் பகுதியில் தினந்தோறும் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.பிளாஸ்டிக் கழிவுகளும் அதிக அளவில் கொட்டப்படுகிறது.

    பல ஆண்டுகளுக்குப் பிறகு பாலாறு உயிர்த்தெழுந்து தண்ணீர் பாய்ந்து ஓடி வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீரிலும் அதிக அளவில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் அடித்து வரப்படுகின்றன.

    வேலூர் பாலாற்றில் இன்று காலை என்சிசி மாணவ மாணவிகளின் மூலம் குப்பை மற்றும் பிளாஸ்டிக் சுத்தம் செய்யும் பணி நடந்தது.

    பாலாற்றில் புனித் சாகர் அபியான் திட்டத்தின் கீழ் 10 வது பட்டாலியன் என்சிசி மாணவர்கள் மற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இணைந்து பாலாற்றில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.

    தேசிய மாணவர் படை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் உடன் இருந்தனர்.

    • பிளாஸ்டிக் கழிவை சாப்பிடும் விலங்குகளுக்கு ஆபத்து
    • தண்ணீர் வசதி அமைத்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கிரிவலப்பாதை வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை மான்கள் உண்பதால் சமூக ஆர்வலர்கள் வேதனையாக தெரிவித்தனர்.

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான மான்கள், குரங்குகள், காட்டு பன்றிகள், மயில்கள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    வன விலங்குகள் கிரிவலப்பாதையில் மக்கள் நடமாடும் பகுதிக்குள் வராத வகையில் கிரிவலப்பாதையில் வனப்பகுதியை சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த இரும்பு வேலியின் அருகில் மான்கள் கூட்டம், கூட்டமாக வந்து பகல் நேரங்களில் வந்து நிற்கின்றன.

    கிரிவலப்பாதையில் செல்பவர்களில் பெரும்பாலானோர் மான்கள் கூட்டத்தை கண்டதும் இயற்கைக்கு மாறாக அவற்றிற்கு உணவு வழங்குவதாக கையில் இருக்கும் பழங்கள், ரஸ்க், பன் உள்ளிட்ட தின்பண்ட பொருட்களை மான்களுக்கு வழங்கி வருகின்றனர்.

    இதனால் சுயமாக வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள், பழங்களை உண்டு வந்த மான்கள் தற்போது மக்கள் வழங்கும் உணவு பொருட்களுக்காக இரும்பு வேலியின் அருகில் வந்து நிற்கின்றன.

    மக்கள் உணவு அளித்து பழகியதால் மான்களும் மக்களை கண்டு எந்தவித அச்சமும் இல்லாமல் மக்கள் ஏதாவது வாங்கி போடுவார்களா என்று பார்க்கின்றன. பொதுமக்களும் தற்போது மான்களும் உணவு வழங்குதாக நினைத்து பிளாஸ்டிக் கவரில் உள்ள உணவு பொருட்கள், பாக்கு மாட்டை தட்டுகளில் வைத்து உணவு பொருட்களை போடுகின்றனர்.

    மேலும் சிலர் கிரிவலப்பாதையில் அன்னதானம் வழங்கிவிட்டு அங்குள்ள தேவையற்ற கழிவுகளை வனப்பகுதியில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் மான்கள் பிளாஸ்டிக் கழிவுகள், காகிதம் போன்றவற்றை சாப்பிடுகின்றன.

    வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பகல் நேரங்களில் கிரிவலப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டு மக்கள் வன விலங்குகளுக்கு தேவையற்ற உணவு பொருட்களை வழங்குவதை தடுக்க வேண்டும்.

    மான் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு தேவையான பழ வகை செடிகள் அதிகளவில் கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதியில் வளர்க்க வேண்டும். தண்ணீர் வசதி அமைத்து தர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏரியில் நீர் நிரம்பும் போது ஒட்டுமொத்த தண்ணீரும் நஞ்சாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • நிலத்தடி நீர் பாதிப்படைந்து நஞ்சாகும் அபாயம்.

    தொப்பூர், 

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள பாகலஹள்ளி ஊராட்சியில் 5க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. மழை காலங்களில் இந்த அனைத்து ஏரிகளும் நிரம்பி நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து இப்பகுதி சுற்றுவட்டாரத்தில் கிணற்றுப் பாசனம் ஆழ்துளை கிணறு மூலம் பாசனம் விவசாயம் செய்வதற்கு முக்கிய நீர் ஆதாரமாக இந்த ஏரிகள் அமைந்துள்ளன.

    இந்நிலையில் பாகல்பட்டி பகுதியில் அமைந்துள்ள சிக்கண்ண கவுண்டன் ஏரியில் இரு தினங்களுக்கு முன்பு தனியார் பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழிற்சாலையை சேர்ந்த நபர்கள் லாரி மூலம் மக்கும் தன்மை இல்லாத பிளாஸ்டிக் குப்பைகளை மூட்டை மூட்டையாக டன் கணக்கில் ஏரிக்கரை மற்றும் ஏரி பகுதிகளில் கொட்டி விட்டு சென்றுள்ளனர்.

    இதனால் அப்பகுதிக்கு மேச்சலுக்கு வரும் ஆடுகள் மற்றும் மாடுகள் பொருட்களோடு சேர்த்து பிளாஸ்டிக் கழிவுகளையும் உண்பதால் அவைகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த ஏரி பகுதியில் பிளாஸ்டிக் கொட்டப்பட்டது குறித்து அப்பகுதி மக்கள் கோபமடைந்த நிலையில் இரவோடு இரவாக ஏரிகரையில் இருந்த பிளாஸ்டிக் குப்பைகளை அருகில் இருந்த ஊராட்சிக்கு சொந்தமான பயன்பாடு இல்லாத பழைய கிணற்றில் கொட்டியுள்ளனர்.

    மேலும் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றவர் கண்களில் படாதவாறு இருப்பதற்காக குப்பைகளின் மீது களிமண்ணை கொட்டி மறைத்துள்ளனர்.

    இந்த கிணறு சுமார் 40 அடி ஆழம் வரை உள்ளது. வரும் மாதங்களில் மழை பெய்து ஏரி நிரம்பும் பட்சத்தில் அதனை ஒட்டி அமைந்துள்ள இந்த கிணறும் முழுமையாக நீர் நிரம்பும் அப்பொழுது மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் கிணற்றில் இருப்பதால் ஏரியில் நீர் நிரம்பும் போது ஒட்டுமொத்த தண்ணீரும் நஞ்சாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதோடு இந்த ஏரியை சுற்றியுள்ள நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. தமிழக அரசு ஏற்கனவே ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகளுக்கு தடை விதித்துள்ள நிலையில் இப்பகுதியில் டன் கணக்கில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை கண்டு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    அதனால் இந்த ஏரி பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்தி விட்டு நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். இதுபோன்ற நீர் நிலைகளை நஞ்சாக்கும் சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    ×