என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » petta
நீங்கள் தேடியது "Petta"
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படம் நாளை திரைக்கு வரும் நிலையில், மலேசியாவிலும் பேட்ட படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. #Petta #Rajinikanth
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ‘பேட்ட’ படம் நாளை வெளியாக இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன், இந்தியாவை தவிர உலகமெங்கும் வெளியிடுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற ‘ட்ரிப்ட் சேலஞ்ச் 2018’ (DRIFT Challenge 2018) கார் ரேசில் பேட்ட படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட கார் ரசிகர்களை கவர்ந்தது.
மலேசியாவில் பல கார்கள், பேருந்துகளில் பேட்ட படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. தற்போது மலேசியாவின் முக்கிய வீதிகளிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வீடியோக்கள் ஒளிபரப்பட்டு வருகிறது. மலேசியாவில் இதுவரைக்கும் செய்யாதளவிற்கு ‘பேட்ட’ படத்திற்கு விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது.
பேட்ட அங்கு 3 கோடி வெள்ளிக்கு வசூல் சாதனை படைக்கும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ அப்துல் மாலிக் தெரிவித்துள்ளார். மலேசியாவில் நடைபெற்ற விழாவில் ‘பேட்ட’ படங்கள் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அறிமுகம் செய்யப்பட்டது.
மலேசியாவில் 140 திரையரங்குகளில் பேட்ட திரைப்படம் வெளியாக உள்ளது. #Petta #Rajinikanth
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி நடிப்பில் நாளை வெளியாகவிருக்கும் ‘பேட்ட’ படம் ரசிகர்களின் இதயங்களை வெல்லும் என நம்புவதாக கார்த்திக் சுப்புராஜ் கூறினார். #Petta #Rajinikanth
ரஜினியின் ‘பேட்ட’ படம் ஜனவரி 10-ந் தேதி வெளியீட்டுக்கு திரையரங்குகள் ஒப்பந்தம் செய்வது, விளம்பரப்படுத்துவது என படக்குழு தீவிரமாக பணிபுரிந்து வருகிறது. தெலுங்கிலும் ஜனவரி 10-ம் தேதியே வெளியிடப்படுகிறது. இதையடுத்து அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு.
அப்போது ‘பேட்ட’ படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசியதாவது:- ‘பேட்ட’ எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த குழுவுக்குமே ஒரு கனவுப் படம். ஏனென்றால் நாங்கள் அனைவருமே சூப்பர்ஸ்டாரின் ரசிகர்கள். தலைவரின் ரசிகர்கள், மற்றவர்கள் என அனைவருக்கும் இந்தப் படம் ஒரு விருந்தாக இருக்கும். குடும்பப் பின்னணியில் வலுவான கதை இருக்கும் படம் பேட்ட.
தலைவர் பாணியில் நிறைய ஆக்ஷன், படத்தில் இருக்கிறது. இது பண்டிக்கைக்கான படம். இந்தப் படத்தையும் பண்டிகை போல கொண்டாட வேண்டும் என நினைக்கிறேன். சங்கராந்தி பண்டிகைக்கு வெளியாவது இன்னும் அந்த மனநிலையை உற்சாகமாக்கும்.
அதே நாளில் இன்னும் இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் (வினய விதேய ராமா மற்றும் என் டி ஆர் பயோபிக்) வெளியாவது கடுமையான போட்டி என்பது எனக்குத் தெரியும். அவர்களுக்கு எனது வாழ்த்துகள். ரசிகர்கள் நல்ல படங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்பதை நம்புபவன் நான். அதனால், பேட்ட அதற்கான ரசிகர்களின் ஆதரவை பெற்று அவர்கள் இதயங்களை வெல்லும் என நான் நம்புகிறேன்’ இவ்வாறு கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். #Petta #Rajinikanth
பேட்ட படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்துள்ள சிம்ரன், பேட்ட படம் தனது சினிமா வாழ்க்கையை மீட்டு கொடுத்துவிட்டது என்று கூறினார். #Petta #Rajinikanth #Simran
பேட்ட படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக இன்னும் இளைமையாகவும், உற்சாகமாகவும் இருக்கிறார் சிம்ரன். அவர் அளித்துள்ள பேட்டி விவரம்:-
கேள்வி:- பேட்ட படத்தில் உங்கள் தோற்றத்துக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதே?
பதில்:- இது எனக்கு கிடைத்த மிக சிறந்த பரிசு. கடுமையான உணவு பழக்கம், உடற்பயிற்சி, யோகா மூலம் என்னுடைய உடலை கட்டுக் கோப்பாக வைத்துள்ளேன். ஒருவேளை ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை நான் பெறுவதற்கு இதுதான் முக்கிய காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
கே:- நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த நீங்கள் திடீர் என்று ரஜினி படத்தில் நடிப்பது பற்றி?
ப:- பேட்ட படம் என்னுடைய பாதையை மீட்டு கொடுத்துள்ளது. என்னுடைய சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்து இருந்தேன். இந்த படத்துக்கு பின்னர் நான் நடிக்கும் படங்களை பொறுப்புடன் தேர்ந்தெடுக்க வேண்டியதாகி உள்ளது.
கே:- ரஜினியுடன் நடித்த முதல் நாள் அனுபவம்?
ப:- நான் ரஜினியின் தீவிர விசிறி, அவரை போல நடக்கவும் கண்ணாடியை ஸ்டைலாக அணியவும் பலமுறை முயன்று இருக்கிறேன். முதல் நாள் நடித்தபோது பதட்டமாகி என் வசனத்தையே மறந்துவிட்டேன். ஆனால் அவர் என்னை அமைதியாக்கி சகஜமாக பேசினார். நாம் எல்லோருமே ரசிகர்களை மகிழ்விக்க தான் நடிக்கிறோம் என்று கூறி என்னை ஆசுவாசப்படுத்தினார்.
கே:- சந்திரமுகி படத்தில் நடிக்க வேண்டியது நின்று போனதில் வருத்தம் உண்டா?
ப:- ஆமாம். அந்த படத்தை இழந்ததில் எனக்கு நிறைய வருத்தம் உண்டு. ஆனால் ஒரு அழகான காரணத்தால் தான் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. 3 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் 4-வது நாள் நான் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. எனவே தான் நடிக்க முடியாமல் போனது.
கே:- கர்ப்பமானதால் ஒரு படத்தை இழந்தபோது ஒரு பெண்ணாக சினிமாவில் இருப்பதன் சிரமத்தை உணர்ந்தீர்களா?
ப:- இல்லை. நான் எப்போதுமே அப்படி நினைத்தது இல்லை. ஒரு பெண்ணாக இருப்பது ஆணாக இருப்பதைவிட உயர்ந்தது. என்னுடன் தொடக்க காலத்தில் நடித்த விஜய் இப்போது சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். இதில் எனக்கு மகிழ்ச்சியே. அதே நேரத்தில் அவர் வீட்டில் ஒரு தந்தையாக இருக்கிறார். அதேபோல் தான் சினிமா எனக்கு தொழில். வீட்டில் மனைவி. இரண்டையும் சமமாக பார்க்கிறேன்.
கே:- 1990-களில் நீங்களும் ஜோதிகாவும் தான் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தீர்கள். அந்த நினைவுகள் வருமா?
ப:- அந்த நாட்களை நினைத்து பார்த்தால் சந்தோஷமாக இருக்கும். இன்னமும் ரசிகர்கள் மனதில் எனக்கு தனி இடம் இருப்பது நான் எதிர்பார்க்காத ஒன்று.
கே:- சினிமாவுக்கு நிகராக டிவி, இணைய தொடர்கள் வந்துவிட்டதே?
ப:- பெண்கள் தொடர்பான படங்களுக்கு நிறைய தளங்கள் உருவாகிவிட்டன. நான் இதுபோன்ற தளங்களையும் கவனித்து வருகிறேன். எனக்கும் பெண்களை மையப்படுத்திய படங்களில் தொடர்களில் நடிக்க ஆசை தான்.
ஆனால் பேட்ட, துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் நடிப்பது எளிது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடித்தால் எல்லா சுமையையும் நம் தோளில் தான் விழும். நமது முழு கவனத்தையும் அந்த படைப்புக்கு தரவேண்டி இருக்கும்.
கே:- நீங்கள் நடித்த பழைய படங்களை பார்க்கும் போது என்ன தோன்றும்?
ப:- அப்போது நான் நிற்க கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருந்தேன். ஒருநாளில் பெரும்பாலான நேரம் படப்பிடிப்பு தளங்களிலேயே போகும். பண்டிகையோ விடுமுறை நாட்களோ எனக்கு கிடையாது. அதுபோல இன்று நடிக்க சொன்னால் நான் மறுத்து விடுவேன். எனக்கு குழந்தைகள் மிக முக்கியம்.
கே:- உங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான 3 படங்களை சொல்ல முடியுமா?
ப:- வாலி, பிரியமானவளே, கன்னத்தில் முத்தமிட்டால். யூத் படத்தில் நான் ஆடிய ஆல்தோட்ட பூபதி பாடல். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதவை.
இவ்வாறு அவர் கூறினார். #Petta #Rajinikanth #Simran
பொங்கல் பண்டிகையையொட்டி ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படங்களுக்கு திரையரங்குகளில் 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதி வழங்கி உள்ளது. #Petta #Viswasam
ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகின்றன. இரண்டு படங்களுமே நாளை மறுநாள் தமிழ்நாடு முழுவதும் வெளியாகிறது. வெளிநாடுகளிலும் அதிக திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. டிக்கெட் முன்பதிவுகள் நேற்று முன்தினமும், நேற்றும் விறுவிறுப்பாக நடந்தன.
நிறைய தியேட்டர்களில் 3 நாட்களுக்கு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. அடுத்த வாரம் பொங்கல் பண்டிகையிலும் அதிகமானோர் டிக்கெட் முன்பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு படங்களையும் தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கு மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடுகின்றனர்.
இந்த படங்களுடன் போட்டியிடாமல் ஏற்கனவே சில படங்கள் ரிலீசை தள்ளிவைத்துவிட்டன. பொங்கல் பண்டிகையையொட்டி அதிக காட்சிகள் திரையிட அரசு அனுமதி அளித்து உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணைசெயலாளர் ஸ்ரீதர் கூறும்போது, ‘‘வழக்கமாக தியேட்டர்களில் 4 காட்சிகள் திரையிடப்படும். பொங்கல் பண்டிகையையொட்டி 10-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தினமும் 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதி வழங்கி உள்ளது.
பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது. இரண்டு படங்களுக்கும் டிக்கெட் முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடக்கிறது. தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கு 2 படங்களும் லாபம் ஈட்டி தரும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றார். #Petta #Viswasam
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் பேட்ட படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கும் நிலையில், படத்தின் தெலுங்கு ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #Petta #Rajinikanth
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினியின் பேட்ட படமும், அஜித்தின் விஸ்வாசம் படமும் திரைக்கு வருகிறது. இந்த இரு படங்களுக்கும் தியேட்டர்கள் ஒதுக்குவதில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், சென்னையில் பேட்ட படத்திற்கு அதிக திரைகளும், மற்ற ஊர்களில் விஸ்வாசம் படத்திற்கு கூடுதல் திரைகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினிக்கு தமிழ் தவிர்த்து தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் படத்தை மற்ற மொழிகளிலும் ரிலீஸ் செய்ய படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தெலுங்கு சினிமாவில் பேட்ட படத்திற்கு திரையரங்கு ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பாலகிருஷ்ணா நடிப்பில் என்.டி.ஆர். வாழ்க்கைப்படம், ராம்சரணின் வினய விதய ராமா, வெங்கடேஷ், வருண் தேஜா நடிப்பில் எஃப் 2 உள்ளிட்ட படங்கள் சங்ராந்திக்கு ரிலீசாக இருப்பதால் இந்த மூன்று படங்களுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் பேட்ட படத்திற்கு திரைகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே பேட்ட படத்தின் தெலுங்கு பதிப்பை ஒரு வாரம் கழித்து ரிலீஸ் செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் படக்குழு அதனை உறுதிப்படுத்தவில்லை. எனினும் பாலிவுட்டில் பேட்ட 10-ஆம் தேதி ரிலீசாவது உறுதியாகி இருக்கிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ரஜினியுடன், விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிகுமார், பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #PettaPongalParaak #PettaPongal2019 #Petta #Rajinikanth
சிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் விஸ்வாசம் படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் வெளியாகி திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறதாம். #Viswasam #Petta
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படமும், ரஜினி நடித்துள்ள பேட்ட படமும் வருகிற ஜனவரி 10-ஆம் தேதி ரிலீசாவது உறுதியாகி இருக்கிறது. இந்த இரு படங்களுக்கும் திரையரங்குகளை ஒதுக்குவதில் கடும் போட்டி நிலவி வருகிறது.
எனினும் இரு படங்களுக்குமே சம அளவிலான திரையரங்குகளை ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், சமீபத்தில் வெளியான விஸ்வாசம் படத்தின் தணிக்கை சான்றிதழின் படி, படத்தின் நீளம் 2 மணி 32 நிமிடம் என்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் ஒரு நாளில் பல காட்சிகளை திரையிட முடியும் என்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்களாம்.
#Viswasam censor certificate is here! Get ready for 2 and half hours of #Thala dharisanam 😎😎 Area-wise theatre list coming out by the end of today 💪#ViswasamFromJan10th#Ajith#Nayanthara@directorsiva@SureshChandraa@AntonyLRuben@SathyaJyothi_pic.twitter.com/gvFmj4xqyD
— KJR Studios (@kjr_studios) January 4, 2019
அதேநேரத்தில் ரஜினியின் பேட்ட படத்தின் நீளம் (2 மணி 51 நிமிடம்) அதிகம் தான் என்றாலும், அது ரசிகர்களை தொய்வு செய்யாது என்றும் கூறப்படுகிறது. இந்த இரு படங்களின் டிரைலர்களும் சமீழுத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
பொங்கல் பண்டிகையில் இந்த இரு படங்களை தவிர்த்து வேறு எந்த படமும் ரிலீசாவது இன்னமும் உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Viswasam #AjithKumar #Petta #Rajinikanth
Viswasam Petta Rajinikanth Ajith Kumar Siva Vivekh Dileep Subbarayan Robo Shankar Thambi Ramaiah Yogi Babu Ajith Thala Ajith Nayanthara D Imman Ravi Awana Jagapati Babu விஸ்வாசம் அஜித் சிவா நயன்தாரா டி.இமான் யோகி பாபு தம்பி ராமையா ரோபோ சங்கர் திலீப் சுப்புராயன் விவேக் ரவி அவானா ஜெகபதி பாபு பேட்ட ரஜினிகாந்த்
ரஜினி நடித்திருக்கும் ‘பேட்ட’ படத்தில் அவருக்கு ஜோடியாகும் வாய்ப்பை பிரபல நடிகை தவறவிட்டதாக கூறியிருக்கிறார். #Petta #Rajini
சூர்யா - விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்தவர் மீரா மிதுன். அதற்கு முன்பே 8 தோட்டாக்கள் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த இவர், இந்த படத்தின் மூலம் இன்னும் அதிகம் கவனிக்கப்பட்டார்.
மிஸ் சௌத் இந்தியா அழகி பட்டத்தை வென்ற இவர் சென்னையைச் சேர்ந்த அக்மார்க் தமிழ் பொண்ணு. படிப்பு, நடனம் என்று மட்டுமே இருந்த இவரை அவரது உயரமும் நிறமும் ஒரு மாடல் அழகியாகவே பலருக்கும் தோன்றச் செய்தது.
மாடலிங் சினிமா இரண்டிலுமே சமமான கவனம் செலுத்தவே விரும்புகிறார் மீரா மிதுன். மாடலிங்கில் இருந்தபோதே இவரை ஊக்கப்படுத்தி அவ்வப்போது உற்சாகம் கொடுத்த நடிகர் விஷால், சினிமாவிற்கு வருமாறு முன்பே அழைப்பு விடுத்திருக்கிறார்.
ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் நடிப்பதற்காக ஆடிஷனுக்கு அழைக்கப்பட்ட மீரா மிதுன், லுக் டெஸ்ட், ஸ்கிரீன் டெஸ்ட் வரை சென்றுவிட்டார். ஆனால் ஏதோ சில காரணங்களால் அந்த வாய்ப்பு அவருக்கு கைகூடாமல் போய்விட்டது. அவருக்குப் பதிலாக பின்னர் அந்த கேரக்டரில் நடித்தவர் திரிஷா என சமீபத்தில் தான் மீராவுக்கு தெரியவந்திருக்கிறது.
அதேபோல கமல் தயாரிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் மீரா மிதுன். அதுவும் சில காரணங்களால் கடைசி நேரத்தில் இவரை விட்டு விலகிப்போனது. விலகிப்போன வாய்ப்புகள் மீண்டும் வேறு வடிவத்தில், வேறு படங்களில் தன்னைத் தேடிவரும் என திடமாக நம்புகிறார் மீரா மிதுன்.
`பேட்ட' படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் வேறொரு படத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Petta #Rajinikanth #KarthickSubbaraj
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் `பேட்ட' படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 10-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
`பேட்ட' படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், சமீபத்தில் வெளியாகிய டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் ரஜினி ரசிகர்களுக்கு இந்த படம் விருந்தாக அமையும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
`பேட்ட' படத்தை தொடர்ந்து, ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அந்த படம் அரசியல் படமாக இருக்காது என்றும், சூப்பர் ஸ்டார் படத்தில் இடம்பெறும் அம்சங்கள் அனைத்தும் இருக்கும் என்றும் முருகதாஸ் கூறியுள்ளார். ரஜினிகாந்த் தற்போது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளார். ரஜினி சென்னை திரும்பியவுடன் ரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படம் தொடங்கவிருக்கிறது.
இந்த நிலையில், இந்த படத்தை முடித்த பிறகு ரஜினி மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் கூறிய வேறொரு கதை ரஜினிக்கு பிடித்திருப்பதாகவும், முருகதாஸ் படத்தை முடித்த பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைய திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தை முடித்த பிறகு ரஜினி, எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும், அந்த படத்திற்கு பிறகு அவர் முழுநேர அரசியலில் கவனம் செலுத்தவிருப்பதாகவும் கூறப்படுகிறது. #Petta #Rajinikanth #KarthickSubbaraj #Rajinikanth167
பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நவாசுதீன் சித்திக், ரஜினியை காப்பியடிக்க முயற்சித்தேன் என்று கூறியிருக்கிறார். #Petta #NawazuddinSiddiqui
ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட’. இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி எனப் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 10ம் தேதி ‘பேட்ட’ படம் ரிலீசாக இருக்கிறது.
இந்நிலையில், தனியார் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த நவாசுதீன் சித்திக், ரஜினி பற்றிய தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். “ரஜினிகாந்தின் எளிமைதான் அவரை ரஜினிகாந்தாக வைத்துள்ளது. அவர் இன்று இருக்கும் நிலைக்கும் அவரது எளிமைதான் காரணம்.
நிஜவாழ்வில் அவர் எளிமையாக இருப்பதால்தான், திரையில் அவரால் ஒரு ஆளுமையாக இருக்க முடிகிறது. ரஜினியின் ஈர்ப்பு அற்புதம். ஒரு காட்சியில் அவர் எழுந்து நின்று ஸ்டைலாக நடப்பதைப் பார்த்தே சுற்றி இருப்பவர்கள் கைதட்ட தொடங்கி விட்டார்கள். சிறுவயதிலிருந்து நிறைய ரஜினி படங்களைப் பார்த்திருக்கிறேன். அவரது ஸ்டைல் என்னை மிகவும் பாதித்துள்ளது.
அதை நான் ‘கேங்ஸ் ஆப் வாசிபூர்’ படத்திலும் ஒரு காட்சியில் முயற்சித்து இருந்தேன். ரஜினி படப்பிடிப்பு தளத்துக்குள் நுழையும்போது, யாருக்குமே அவர் வருவது தெரியாது. அவர் வேலை முடித்துவிட்டுக் கிளம்பும்போதும் அப்படித்தான்” என்று கூறி இருக்கிறார்.
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின் விளம்பரம் மலேசியாவில் நடைபெறும் கார் ரேஸில் இடம் பெற்றிருக்கிறது. #Petta #Rajini #Rajinikanth
ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட’. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. உலகம் முழுவதும் இப்படத்தினை வெளியிட மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் உரிமம் (இந்தியாவை தவிர) பெற்றுள்ளது.
மலேசியாவில் டிசம்பர் 29 மற்றும் 30 ஆம் தேதியில் நடைபெறும் "DRIFT Challenge 2018" கார் ரேஸில் மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் சார்பாக இந்திய வீரர் தர்ஷன் ராஜ்(19) இந்த ரேசில் கலந்து கொள்ளவிருக்கிறார்.
மலேசியாவில் உள்ள டாப் 20 ரேஸ் வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்கிறார்கள். ரேஸ் காரில் ”பேட்ட” படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், மலேசியா முழுவதும் பல கார்களில் பேட்ட படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், ”இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லாமல், இது போன்ற விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு விளையாட்டு வீரர்களையும் மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் நிச்சயம் ஊக்குவிக்கும்.” என்று பெருமையோடு கூறுகிறார் மாலிக் ஸ்டிரீம் கார்ப்பரேஷன் நிறுவன இயக்குனர் மாலிக்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் பேட்ட படத்தின் டிரைலரை 24 மணிநேரத்தில் 1 கோடி பேர் பார்த்துள்ளனர். #PettaTrailer #PettatrailerHits10MViews #Rajinikanth
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் `பேட்ட'. ரஜினியுடன் விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிகுமார், பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் பொங்கலை முன்னிட்டு வருகிற 10-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
பேட்ட படத்தின் டிரைலர் நேற்று காலை வெளியானது. படத்தில் ரஜினிகாந்த் இளமையான தோற்றத்தில் ஸ்டைலாகவும், அதிரடியாகவும் தோன்றுவதால் பேட்ட டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பேட்ட டிரைலர் ரிலீசான சில நிமிடங்களிலேயே 10 லட்சம் பார்வையாளர்களை கடந்தது.
12 மணி நேரத்தில் 75 லட்சம் பேர் பார்த்தனர். இதுதவிர 5 லட்சத்து 56 ஆயிரம் பேர் டிரைலரை லைக் செய்துள்ளனர். இன்று காலை 24 மணிநேரம் கடந்த நிலையில், பார்வையாளர்கள் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது. நேற்று டுவிட்டரில் உலக அளவில் 6-வது இடத்திலும், இந்தியா அளவில் முதல் இடத்திலும் டிரெண்டாகியுள்ளது.
The #Rajinified#PettaTrailer crosses 11M+ real-time views in 24hrs!#PettaPongalParaakpic.twitter.com/QGzJvK5eMl
— Sun Pictures (@sunpictures) December 29, 2018
இது தவிர கெட்ரஜினிபைடு, சூப்பர் ஸ்டார்ரஜினி, பேட்ட பொங்கல் பராக் ஆகிய ஹேஷ்டேக்குகளும் இந்தியா அளவில் டிரெண்டாகி உள்ளன. #PettaPongalParaak #PettaPongal2019 #PettaTrailer #PettatrailerHits10MViews #GetRajinified
டிஜிட்டல் கேமரா வருகையால் ஆண்டுதோறும் ரிலீசாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டு மட்டும் 171 தமிழ் படங்கள் ரிலீசாகியுள்ளன. #TamilCinema #TFPC #ProducersCouncil
சினிமாவில் டிஜிட்டல் கேமரா வருகையால் ஆண்டுதோறும் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வருடத்திற்கு 200-க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசாகி வந்தன.
ஆனால் 2018-ல் இந்த எண்ணிக்கை 171 ஆக குறைந்துள்ளது. டிஜிட்டல் ஒளிபரப்பு கட்டணத்தை குறைப்பதற்காக தமிழ் சினிமா சங்கங்கள் ஒன்றிணைந்து நடத்திய வேலை நிறுத்தத்தால் ஏப்ரல், மே மாதங்களில் 48 நாட்கள் எந்த படமும் வெளியாகவில்லை.இதுவே பட எண்ணிக்கை குறைந்துபோக காரணம் என்கிறார்கள்.
இந்த வேலைநிறுத்தத்துக்கு பின்னர் எடுத்து முடிக்கப்பட்ட படங்களின் ரிலீசில் சிக்கல் உண்டானது. இந்த சிக்கல் இன்று வரை நீடிக்கிறது. இந்த வாரம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருந்த பூமராங், சர்வம் தாள மயம் உள்ளிட்ட 2 படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்காததால் பின்வாங்கிவிட்டன.
தமிழ்நாட்டில் சுமார் 1000 தியேட்டர்களே உள்ளன. கடந்த வாரம் வெளியான 7 படங்களும் கடந்த மாதம் வெளியான 2.0 படமும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருப்பதே தியேட்டர் கிடைக்காததன் காரணம். இந்த நிலை பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் என்ற 2 படங்கள் வெளியாகும் வரை நீடிக்கும் என்று சினிமா விமர்சகர்கள் கூறுகிறார்கள். #TamilCinema #TFPC #ProducersCouncil #Petta #Viswasam
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X