search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TFPC"

    இளையராஜா இசை நிகழ்ச்சி ஏற்பாட்டில் விஷாலுக்கு நெருக்கமான நடிகர்கள் நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள், என்று நடிகர் பார்த்திபன் பரபரப்பாக தெரிவித்துள்ளார். #Parthiban #Vishal #TFPC
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷாலுக்கு ஆதரவாக இருந்தவர் நடிகர் பார்த்திபன். சமீபத்தில் சங்கத்தின் துணை தலைவராக நியமிக்கப்பட்டார். இளையராஜாவுக்கு நடந்த பாராட்டு விழாவின் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டார்.

    ஆனால் நிகழ்ச்சிக்கு முன்பாக பதவியை ராஜினாமா செய்த அவர் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. இது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. புறக்கணித்ததற்கான காரணம் குறித்து பார்த்திபன் கூறியதாவது:-

    நான் இளையராஜாவின் தீவிர பக்தன் என்பது விஷாலுக்கு நன்றாக தெரியும் என்பதால் இந்த நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். ரஹ்மானிடம் தான் முதன்முறையாக ராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று கூறினேன். அவரும் சம்மதித்தார்.

    ‘பலூன் பறக்க காற்று எப்படி காரணமோ அதை போல தான் தமிழர்களுக்கு இளையராஜா இசையும்’ என்று நிகழ்ச்சிக்கான ஸ்கிரிப்ட் எழுதி வைத்து இருந்தேன்.



    ஆனால் திடீர் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரில் ஒருவரான சரவணன் எனக்கு போனில் ‘நடிகர் ரமணா ஸ்கிரிப்ட் தயார் செய்து எடுத்து வருவார். நீங்கள் ஒன்றும் செய்யவேண்டாம் என்று கூறினார். எனக்கு அதிர்ச்சியானது.

    நிகழ்ச்சி நடந்த அன்று காலை வரை நிகழ்ச்சி தொகுப்பாளரை முடிவு செய்யவில்லை. நான் நந்தாவிடம் சொன்னபிறகு என்னையே தொகுப்பாளரை நியமிக்க சொன்னார்.

    நான் ஒரு பெண் நிகழ்ச்சி தொகுப்பாளரை அவசரம் அவசரமாக ஏற்பாடு செய்தபிறகு நந்தா ‘வேண்டாம். நானே சொல்லிவிட்டேன்’ என்று திடீர் என்று கூறினார்.

    நந்தாவிடம் இதை முன்பே சொல்லி இருக்கலாமே என்று கேட்டேன். அவர் மழுப்பினார். இதன்மூலம் நான் நிகழ்ச்சியில் தலையிடுவதை அவர்கள் விரும்பவில்லை என்பதை புரிந்துகொண்டேன்.

    அந்த நிகழ்ச்சியில் மேடை ஒருங்கிணைப்பு ஏனோ தானோ என்று இருந்தது. இளையராஜாவை மேடையில் அமரவைத்து அவமானப்படுத்தினார்கள். எனவே அன்று இரவே நான் இந்த நிகழ்ச்சியின் இயக்குனராக இருக்க முடியாது என்று தெளிவாக கூறிவிட்டேன்.



    டிரம்ஸ் சிவமணி ஒப்புக்கொண்டு இருந்த ஒரு நிகழ்ச்சியை கேன்சல் செய்ய சொல்லி இந்த விழாவில் கலந்துகொள்ள கேட்டேன். ஆர்க்கெஸ்ட்ராவுக்கு பதிலாக மற்ற இசை அமைப்பாளர்களை வைத்து இளையராஜாவின் பாடலை இசைக்க திட்டமிட்டேன். இந்த இரண்டையுமே அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் என்ன நினைத்தார்களோ அதை மட்டுமே செய்தார்கள்.

    விஷாலுக்காக களத்தில் இறங்கி பணிபுரிவது நந்தாவும், ரமணாவும் தான். விஷாலின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் அவர்கள் தான் நடத்துகிறார்கள். விஷால் ஒரு வார்த்தை அவர்களிடம் ‘நிகழ்ச்சியை நீங்கள் நடத்துங்கள். கிரியேட்டிவ் வி‌ஷயங்களை பார்த்திபனிடம் விட்டு விடுங்கள்’ என்று கூறி இருக்கலாம். அதை சொல்லவில்லை என்பது எனக்கு வருத்தம்.

    நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு என்னை ஓரமாக உட்கார வைத்தார்கள்.

    இப்படி மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டேன். ஆனால் எது நடந்தாலும் இளையராஜாவையும், ஏ.ஆர்.ரஹ்மானையும் இணைத்தே தீருவது என்பதில் உறுதியாக இருந்தேன்.



    இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக இளையராஜாவிடம் 3-ந்தேதி நிகழ்ச்சி நிரல் பற்றி ஆலோசிக்கும்போது என் பெயரை சொல்லும்போது ரமணா அவர் வேண்டாம் என்று கூறி இருக்கிறார். அப்போது அந்த சந்திப்பில் விஷாலும் உடன் இருந்து இருக்கிறார். இதை கேள்விபட்ட உடனே ராஜினாமா கடிதம் எழுதி கொடுத்துவிட்டேன்.

    இப்போதும் விஷாலுக்கு ஆதரவு தருகிறேன். ஆனால் எனக்கு நேர்ந்த அவமானங்களை பொறுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

    ரஹ்மானிடம் நான் இந்த நிகழ்ச்சியின் டைரக்டர் என்றுதான் சம்மதிக்க வைத்தேன். அதனால் தான் என் ராஜினாமா வி‌ஷயத்தை சொல்லாமல் ரஹ்மானை கலந்துகொள்ள வீட்டிற்கு சென்று வழி அனுப்பி வைத்தேன்.

    விஷாலை நான் ஆதரிப்பதற்கு இதுவே ஒரு உதாரணம். விஷால் நந்தாவையும் ரமணாவையும் முழுமையாக நம்புவது தவறு இல்லை. ஆனால் விஷாலை போல எல்லோரையும் அவர்கள் அனுசரித்து செல்ல வேண்டும் என்பதே என் கோரிக்கை’.

    இவ்வாறு அவர் கூறினார். #Parthiban #Ilayaraja75 #ARRahman #TFPC #Vishal #Nanda #Ramana

    புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிட்டால் 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் வசூலிக்கும் புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. #Piracy #PiracyBill
    புதுடெல்லி:

    இந்திய சினிமாவை பொறுத்த வரை பைரசி எனப்படும் திரைப்படங்களை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிடுவது வழக்கமாக நடந்து வரும் ஒன்று. இத்தகைய பைரசி இணையதளங்களை முடக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கோரி வரும் நிலையில், அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

    இருந்தாலும், இணையதளங்களில் புதுப் படங்கள் வெளியாவது மட்டும் நின்றபாடில்லை. தொடர்ந்து புதிய படங்கள் வெளியான முதல் நாளே இணையதளங்களிலும் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. பட அதிபர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

     

    இதை தடுக்க திரைப்பட சட்டம்-1952-ன் 7-வது பிரிவு, அபராதம் விதிக்க வகை செய்கிறது. இந்நிலையில், தண்டனையை கடுமையாக்குவதற்காக, இச்சட்டத்தில் புதிய உட்பிரிவை சேர்க்க மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், திரைப்பட சட்ட திருத்த வரைவு மசோதாவை உருவாக்கி உள்ளது.

    இதன்படி, எழுத்து மூலமான அனுமதியின்றி திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது ரூ.10 லட்சம் வரை அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும். இந்த வரைவு மசோதா குறித்து 14-ந் தேதிக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. #Piracy #PiracyBill

    டிஜிட்டல் கேமரா வருகையால் ஆண்டுதோறும் ரிலீசாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டு மட்டும் 171 தமிழ் படங்கள் ரிலீசாகியுள்ளன. #TamilCinema #TFPC #ProducersCouncil
    சினிமாவில் டிஜிட்டல் கேமரா வருகையால் ஆண்டுதோறும் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வருடத்திற்கு 200-க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசாகி வந்தன.

    ஆனால் 2018-ல் இந்த எண்ணிக்கை 171 ஆக குறைந்துள்ளது. டிஜிட்டல் ஒளிபரப்பு கட்டணத்தை குறைப்பதற்காக தமிழ் சினிமா சங்கங்கள் ஒன்றிணைந்து நடத்திய வேலை நிறுத்தத்தால் ஏப்ரல், மே மாதங்களில் 48 நாட்கள் எந்த படமும் வெளியாகவில்லை.இதுவே பட எண்ணிக்கை குறைந்துபோக காரணம் என்கிறார்கள்.

    இந்த வேலைநிறுத்தத்துக்கு பின்னர் எடுத்து முடிக்கப்பட்ட படங்களின் ரிலீசில் சிக்கல் உண்டானது. இந்த சிக்கல் இன்று வரை நீடிக்கிறது. இந்த வாரம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருந்த பூமராங், சர்வம் தாள மயம் உள்ளிட்ட 2 படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்காததால் பின்வாங்கிவிட்டன.



    தமிழ்நாட்டில் சுமார் 1000 தியேட்டர்களே உள்ளன. கடந்த வாரம் வெளியான 7 படங்களும் கடந்த மாதம் வெளியான 2.0 படமும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருப்பதே தியேட்டர் கிடைக்காததன் காரணம். இந்த நிலை பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் என்ற 2 படங்கள் வெளியாகும் வரை நீடிக்கும் என்று சினிமா விமர்சகர்கள் கூறுகிறார்கள். #TamilCinema #TFPC #ProducersCouncil #Petta #Viswasam

    தயாரிப்பாளர் சங்க செயற்குழு இன்று கூடவிருக்கும் நிலையில், சமீபத்தில் சங்கத்தை பூட்டியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது குறித்து செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. #ProducersCouncil #TFPC #Vishal
    தயாரிப்பாளர் சங்க அலுவலகம் சென்னை அண்ணாசாலையில் இயங்கி வருகிறது. நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக பொறுப்பேற்ற பிறகு, தியாகராய நகரில் உள்ள யோகாம்பாள் தெருவில் வாடகைக்கு இடம்பார்த்து அங்கு அலுவலகத்தை மாற்றினார். 

    இந்த நிலையில் விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தயாரிப்பாளர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு இரண்டு அலுவலகங்களையும் பூட்டினார்கள். அலுவலக பூட்டை உடைக்க முயன்ற விஷால் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டார். கோர்ட்டு உத்தரவின் பேரில் தற்போது இந்த அலுவலகங்கள் திறக்கப்பட்டு உள்ளன. 

    இந்த பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் அண்ணா சாலையில் உள்ள சங்க அலுவகத்தில் விஷால் தலைமையில் இன்று மாலை நடக்கிறது.



    இதில் துணைத்தலைவர்கள் பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன், செயலாளர்கள் கதிரேசன், எஸ்.எஸ்.துரைராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் ஆர்.வி.உதயகுமார், ஆர்யா, பார்த்திபன், எஸ்.எஸ்.குமரன், பாண்டிராஜ், சுந்தர்.சி, மன்சூர் அலிகான், ராமச்சந்திரன், மனோஜ்குமார், ஜெமினி ராகவா, பிரவீன்காந்த், எ.வி.தங்கராஜ், கே.பாலு, அன்புதுரை உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்ட பிரச்சினை குறித்து விவாதிக்கப்படுகிறது. பூட்டு போட்டு போராட்டம் நடத்திய 15-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களை அடையாளம் கண்டு பட்டியல் தயாரித்து உள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்புவது குறித்து செயற்குழுவில் முடிவு செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    சங்கத்துக்கு நிதி திரட்ட நடத்தப்படும் இளையராஜா இசைநிகழ்ச்சி குறித்தும் ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. #ProducersCouncil #TFPC #Vishal

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தயாரிப்பாளர் சங்கத்துக்கு போடப்பட்ட சீலை தாசில்தார் இன்று அகற்றினார். #TFPC #Vishal #ProducersCouncil
    சென்னை:

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பதவி விலக கோரியும், சங்கத்தில் ரூ.7 கோடி முறைகேடு நடந்து இருப்பதாக குற்றம்சாட்டியும் எதிர்தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தி.நகரில் உள்ள சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர்.

    இதையடுத்து சங்க அலுவலகத்தில் போடப்பட்ட பூட்டை உடைத்து விஷால் உள்ளே நுழைய முயன்றார். அப்போது எதிர்தரப்பினர் அங்கு குவிந்ததால் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

    இதையடுத்து விஷாலை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

    இதற்கிடையே விஷாலின் எதிர்தரப்பினர் அளித்த புகாரின் பேரில் சங்கங்களின் பதிவுத்துறை அதிகாரிகள் 2 பேர் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்துக்கு போடப்பட்ட பூட்டை திறந்து ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

    பின்னர் சங்க அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். அலுவலக சாவியை கிண்டி தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

    இதனால் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு போடப்பட்ட ‘சீலை’ அகற்றக்கோரி தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் எம்.அன்புத்துரை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.



    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த வெங்கடேஷ், “தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு வைத்துள்ள சீலை உடனடியாக அகற்ற வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

    சங்கங்களுக்கான துணை பதிவாளர் இன்று அலுவலகத்துக்கு சென்று முக்கிய ஆவணங்களை அங்குள்ள ஒரு அறையில் வைக்க வேண்டும். அந்த அறையை பூட்டி சாவியை தன்னிடம் வைத்துக் கொள்ள வேண்டும். சங்கத்தின் அன்றாட பணி சுமூகமாக நடைபெறும் விதமாக தேவைப்படும் ஆவணங்களை சங்க நிர்வாகிகள் நகல் எடுத்துக் கொள்ளலாம்.

    சங்க நிர்வாகிகள் அலுவலகத்துக்குள் செல்வதை யாரும் தடுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.

    கோர்ட்டு உத்தரவுப்படி இன்று தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை கிண்டி தாசில்தார் ராம்குமார் அகற்றினார். அப்போது சங்கத்தின் கவுரவ செயலாளர்கள் எஸ்.எஸ்.துரைராஜ், கதிரேசன் மற்றும் விஷாலின் எதிர் தரப்பைச் சேர்ந்த டி.ராதாகிருஷ்ணன், சுரேஷ் காமாட்சி ஆகியோர் உடன் இருந்தனர்.



    அலுவலகத்துக்கு சென்ற அதிகாரிகள் அங்கிருந்த முக்கிய ஆவணங்களை எடுத்து ஒரு அறையில் வைத்து பூட்டினார்கள்.

    விஷாலின் எதிர் தரப்பினர் முக்கிய ஆவணங்களை நகல் எடுத்து அதில் முறைகேடு நடந்து இருந்தால் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.

    தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு வருகிற பிப்ரவரி மாதம் கூட்டப்படும் என்று விஷால் அறிவித்து இருந்தார். தற்போது சங்கத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பொதுக்குழுவை முன்கூட்டியே கூட்ட திட்டமிட்டுள்ளனர்.

    அதன்படி ஜனவரி 20-ந் தேதி பொதுக்குழு கூடும் என்று தெரிகிறது.

    இதுதொடர்பாக அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் 21 நாட்களுக்கு முன்பு கடிதம் அனுப்ப வேண்டும். எனவே இன்னும் சில தினங்களில் பொதுக்குழு கூடுவது தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு கடிதம் அனுப்பப்படுகிறது. #TFPC #Vishal #ProducersCouncil

    தயாரிப்பாளர் சங்கம் சார்பில் விஷால் தரப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டது. #TFPC #Vishal #ProducersCouncil
    நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அவருக்கு எதிராக தயாரிப்பாளர்கள் சிலர் போர்க்கொடி தூக்கினார்கள்.

    நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என்று சங்க வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதோடு சங்க அலுவலகத்தைப் பூட்டினார்கள். விஷால் நேற்று காலையில் தயாரிப்பாளர் சங்கத்துக்குப் போடப்பட்ட பூட்டை உடைத்து, உள்ளே செல்ல முற்பட்டார்.

    அப்போது அவருக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து விஷால் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டார்.

    இந்த விவகாரம் சங்கம் தொடர்புடையது என்பதால் இதுபற்றி உரிய முறையில் விசாரிக்க வருவாய் துறையினருக்கு போலீசார் பரிந்துரை செய்தனர். இதன் காரணமாக சங்க விதிகளுக்கு உட்பட்டு தயாரிப்பாளர் சங்கம் செயல்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய பதிவுதுறை அதிகாரிகள் அண்ணாசாலை அலுவலகத்திலும் விசாரணை நடத்தினர். பின்னர் அண்ணாசாலை அலுவலகத்துக்கும் சீல் வைக்கபபட்டது.



    இதுகுறித்து விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்ததாவது, ‘’சட்ட விரோதமான 8 மணி நேர காவலுக்குப் பிறகு, வெளியே வந்துவிட்டேன். நான் செய்யாத தவறுக்குப் பாதிக்கப்பட்டேன். எங்கள் சொந்த அலுவலகத்திற்குள் நுழையவிடவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

    சட்ட விரோதமாக கதவுகளைப் பூட்டியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. நிச்சயம் இது நியாயமற்றது. நீதித்துறையின் மிது நம்பிக்கை இருக்கிறது. இன்று நடந்ததற்கு எனக்கு நீதி கிடைக்குமென நம்புகிறேன்.’’ என்று பதிவிட்டிருந்தார்.

    அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீல் வைக்கப்பட்டது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் விஷால் தரப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், சங்கத்துக்கு போடப்பட்ட சீலை அகற்றுமாறு வருவாய் கோட்டாட்சியர், பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். #TFPC #Vishal #ProducersCouncil #ChennaiHighCourt

    தயாரிப்பாளர் சங்கத்துக்கு போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்றததால் கைது செய்யப்பட்ட விஷால், திருட்டு பூட்டுக்கு காவல் காக்கிறார்கள், அவர்களை ஏன் இவ்வளவு போலீசார் பாதுகாக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். #TFPC #ProducersCouncil #Vishal
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நடிகர் விஷால் தலைவராக இருக்கிறார்.

    துணைத் தலைவர்களாக நடிகர் பிரகாஷ்ராஜ், டைரக்டர் கவுதம்மேனன் உள்ளனர். செயலாளர்களாக எஸ்.எஸ்.துரைராஜ், கதிரேசன் உள்ளனர்.

    திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் திடீரென பிளவு ஏற்பட்டு உள்ளது. நடிகர் விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

    சிறு பட்ஜெட் படத் தயாரிப்பாளர்களின் நலனுக்கு எதிராக நடிகர் விஷால் செயல்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விதிமுறைகளுக்கு எதிராக விஷால் செயல்பட்டு தன்னிச்சையாக முடிவு எடுப்பதாகவும் புகார்கள் கூறப்படுகின்றன.

    இதற்கிடையே தயாரிப்பாளர்கள் சங்க நிதியில் ரூ.7.80 கோடியை நடிகர் விஷால் முறைகேடு செய்துவிட்டார் என்றும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து நடிகர் விஷால் விலக வேண்டும் என்று ஒரு பிரிவினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

    நேற்று காலை தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன், ரித்தீஷ், ராதாகிருஷ்ணன், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட எதிர்தரப்பினர் சென்னை அண்ணாசாலையில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு அமர்ந்து விஷாலுக்கு எதிராக ஆலோசனை நடத்தினார்கள்.

    கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்க அலுவலகங்களுக்கு பூட்டு போட்டு பூட்டுவதற்கு முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி அண்ணாசாலையில் உள்ள தயாரிப்பாளர் சங்க தலைமை அலுவலகத்துக்கு பூட்டு போடப்பட்டது. பின்னர் தி.நகர் ராகவைய்யா சாலையில் லோகாம்பாள் தெருவில் இருக்கும் தற்காலிக அலுவலகத்துக்கும் பூட்டு போட்டு மூடப்பட்டது.



    அதன்பிறகு இரு பூட்டுகளின் சாவிகளையும் தேனாம்பேட்டையில் உள்ள மாவட்ட பதிவாளரிடம் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து ஏ.எல்.அழகப்பன், ரித்தீஸ் ஆகியோர் கூறுகையில், “ஓரு ஆண்டுக்குள் சொன்னதை செய்யாவிட்டால் சங்கத்துக்கு பூட்டு போடுங்கள் என்று விஷால்தான் சொல்லி இருந்தார். அதனால்தான் பூட்டு போட்டு இருக்கிறோம்” என்றனர்.

    மேலும் விஷால் கர்நாடகாவில் தமிழ் படங்கள் வெளியிட அனுமதிப்பதில்லை. ஆனால் கர்நாடக படங்களை தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட அனுமதிக்கிறார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

    இந்த குற்றச்சாட்டுகளை நடிகர் விஷால் மறுத்தார். தயாரிப்பாளர் சங்க அலுவலகங்களுக்கு பூட்டு போட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். தயாரிப்பாளர் சங்கத்தின் கணக்குகளை பொதுக்குழுவில் தாக்கல் செய்வேன் என்றும் கூறினார்.

    மேலும் சங்கத்துக்கு போடப்பட்ட பூட்டை திறந்து உள்ளே செல்லப் போவதாகவும் அறிவித்தார். இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர்கள் எஸ்.எஸ்.துரைராஜ், கதிரேசன் இருவரும் இன்று காலை பாண்டிபஜார் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.



    தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்துக்கு போடப்பட்டுள்ள பூட்டை உடைத்து திறக்கப்போகிறோம். அதற்கு நீங்கள் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று அவர்கள் போலீசாரிடம் கேட்டுக்கொண்டனர்.

    இதையடுத்து அண்ணா சாலை, தி.நகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகங்கள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். காலை 10 மணி அளவில் அண்ணாசாலை தயாரிப்பாளர் சங்க தலைமை அலுவலகத்துக்கு மாவட்ட பதிவாளர் அலுவலக ஊழியர்கள் வந்தனர்.

    அவர்கள் மூலம் அண்ணா சாலை தயாரிப்பாளர் சங்க அலுவலகம் திறக்கப்பட்டது. அதன்பிறகு விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் தி.நகர் லோகம்பாள் தெருவில் இருக்கும் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு புறப்பட்டு வந்தனர்.

    அங்கு தேனாம்பேட்டை போலீஸ் உதவி கமி‌ஷனர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். அங்கு வந்த நடிகர் விஷால் போலீசாரிடம், “வழிவிடுங்கள். நான் பூட்டை உடைத்து திறந்து உள்ளே செல்ல வேண்டும்” என்று கூறினார். ஆனால் போலீசார் அதை ஏற்கவில்லை.

    “மாவட்ட பதிவாளர் வந்து கொண்டு இருக்கிறார். அவர் வந்ததும் பூட்டை திறந்து விடுகிறோம்” என்று போலீசார் தெரிவித்தனர். இதை விஷாலும் அவர்களுடன் வந்த தயாரிப்பாளர்களும் ஏற்கவில்லை. பூட்டை உடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.



    இதையடுத்து போலீசாருக்கும், நடிகர் விஷால் தலைமையில் வந்த தயாரிப்பாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. விஷால் கூறுகையில், “இது எங்களது அலுவலகம். எங்கள் அலுவலகத்துக்கு செல்ல நாங்கள் யாரிடம் அனுமதி பெற வேண்டும். பதிவாளர் வரும்வரை நாங்கள் ஏன் காத்திருக்க வேண்டும். காத்திருக்க முடியாது” என்று வாதிட்டார்.

    அதற்கு போலீசார், “பூட்டு போடப்பட்டு இருக்கிறது. அதிகாரி வரட்டும். பொறுமையாக இருங்கள்” என்று தெரிவித்தனர். உடனே விஷால், “சட்ட விரோதமாக போடப்படும் பூட்டுக்கு போலீசாரே எப்படி துணை போகலாம்” என்று தெரிவித்தhர். இதனால் சுமார் 20 நிமிடம் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நீடித்தது.

    இந்த நிலையில் தி.நகர் துணை கமி‌ஷனர் அரவிந்தன் போலீஸ் படையுடன் அங்கு வந்தார். அவர் விஷாலுடன் பேச்சு நடத்தினார். அப்போதும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    துணை கமி‌ஷனர் அரவிந்தன் கூறுகையில், “எதுவாக இருந்தாலும் என் அலுவலகத்துக்கு வாருங்கள் பேசி கொள்ளலாம். தெருவில் இப்படி திரண்டு நின்று பேசுவது தவறு” என்றார். இதை விஷாலும், தயாரிப்பாளர்களும் ஏற்கவில்லை. இதனால் வாக்குவாதம் அதிகரித்தது.

    இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்படாத நிலையில் ஒரு கட்டத்தில் தொடர்ந்து சட்ட விரோதமாக செயல்பட்டால் கைது செய்ய நேரிடும் என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரித்தனர். இதனால் நடிகர் விஷால் ஆவேசம் ஆனார். அவராகவே தாமாகவே முன் சென்று கதவை திறந்து விடுங்கள் என்று சொல்லி போலீஸ் வேனில் ஏறி அமர்ந்தார்.

    அவரை கைது செய்வதாக போலீஸ் அதிகாரிகள் அறிவித்தனர். இதையடுத்து தயாரிப்பததளர் சங்க செயலாளர்கள் எஸ்.எஸ்.துரைராஜ், கதிரேசன், செயற்குழு உறுப்பினர்கள் சங்கர், பிரவீண்காந்த், ஜெ.எஸ்.செந்தில், ராமச்சந்திரன், அன்பு, ஆகிய 7 தயாரிப்பாளர்களும் வேனில் ஏறி அமர்ந்தனர். அவர்கள் தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் தேவர் கல்யாண மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.



    நடிகர் விஷாலும், 7 தயாரிப்பாளர்களும் வேனில் அழைத்து செல்லப்பட்ட போது அந்த பகுதியில் நின்ற நடிகர் மன்சூர்அலிகான் தொடர்ந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசார் அவரிடம் கலைந்து செல்லுமாறு கூறினார்கள். ஆனால் மன்சூர் அலிகான் ஆவேசமாக பேசினார்.

    “திருடனுக்கு பாதுகாப்பு கொடுக்கிறீர்களே” என்று சத்தமிட்ட அவர் சில தரக்குறைவான வார்த்தைகளையும் பேசியதாக தெரிகிறது. இதை கேட்டதும் போலீசார் அவரையும் கைது செய்தனர். அவரை போலீசார் வலுக் கட்டாயமாக தள்ளி சென்று போலீஸ் ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்றனர்.

    தயாரிப்பாளர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “விஷால் அளித்த புகார் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் விஷால் அந்த பூட்டை உடைத்து திறக்க முயற்சி செய்தார். இதனால் விஷாலும், தயாரிப்பாளர்களும் கைது செய்யப்பட்டனர்” என்றனர்.

    முன்னதாக போலீசார் கைது செய்ததும் வேனில் அமர்ந்து இருந்த நடிகர் விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ஒரு திருட்டு பூட்டுக்கு காவல் காக்கிறார்கள். சம்பந்தமில்லாதவர்கள் பூட்டு போட்டு இருக்கிறார்கள். அவர்களை ஏன் இவ்வளவு போலீசார் பாதுகாக்கிறீர்கள். எங்கள் பூட்டு, எங்கள் அலுவலகம், நான் எந்த தப்பும் செய்யவில்லை. அந்த பூட்டை உடைத்து உள்ளே போகணும் என்றேன். முடியாது என்றார்கள்.

    கேள்வி கேட்டதற்கு நாங்கள் அரசு ஊழியர்கள். எங்கள் வேலையை செய்ய விடுங்கள் என்று கைது செய்கிறார்கள். இந்த செயல்பாடுகள் நம்ப முடியாத அளவுக்கு உள்ளது.

    இவ்வாறு விஷால் கூறினார்.

    விஷால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ள தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் இது தொடர்பாக கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க முடிவு செய்தனர். அதன்பேரில் தயாரிப்பாளர்கள் எஸ்.எஸ்.துரைராஜ், கதிரேசன் இருவரும் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றனர். #TFPC #ProducersCouncil #Vishal

    விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர்களில் ஒரு குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்துக்கு நேற்று பூட்டு போட்ட நிலையில், அதனை உடைத்த விஷால் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். #TFPC #ProducersCouncil #Vishal
    நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொது செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

    விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர்களில் ஒரு பகுதியினர் போர்க்கொடி தூக்க தொடங்கினார்கள். பொதுக்குழுவை கூட்டவில்லை, வைப்பு நிதியில் முறைகேடு, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, பட வெளியீட்டில் பாரபட்சம், இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு சங்க பொதுக்குழு கூட்டாமல் தன்னிச்சையாக முடிவெடுக்கப்பட்டது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள்.

    ஏ.எல். அழகப்பன், டி.சிவா, எஸ்.ராதாகிருஷ்ணன், எஸ்.வி.சேகர், நந்தகோபால், மைக்கேல் ராயப்பன், தனஞ்செயன் உள்பட சுமார் 50 பேர் திரண்டனர். அவர்கள் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர்.

    மூத்த இயக்குனர் பாரதிராஜா தலைமையில் முதல்அமைச்சரை சந்தித்து விஷால் மீதான குற்றச்சாட்டுகளை கூற நேற்று முயற்சி செய்தனர். அவர்களுக்கு இன்று காலை அனுமதி கிடைத்துள்ளது என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.



    பாரதிராஜா தலைமையிலான தயாரிப்பாளர்கள் முதல்வரிடம் சினிமா சங்கங்களில் நிலவும் பிரச்சினைகளை சமாளிக்க ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்க கோரிக்கை விடுக்கப்போவதாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில் விஷால் மற்றும் அவருக்கு ஆதரவான தயாரிப்பாளர்கள் இன்று தி.நகர் காவல் நிலையம் அருகே திரண்டார்கள். மேலும் விஷால் மற்றும் அவரது ஆதரவு தயாரிப்பாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்துக்கு நேற்று போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்ற விஷால் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர். #TFPC #ProducersCouncil #Vishal

    பொதுக்குழுவை கூட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடிய தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #ProducersCouncil #Vishal #TFPC
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக நடிகர் விஷால் இருந்து வருகிறார். தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு குழு அவருக்கு எதிராக இன்று சங்க வளாகத்தில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது.

    நண்பகல் 12 மணியளவில் தயாரிப்பாளர்கள் டி.சிவா, கே.ராஜன், ஏ.எல்.அழகப்பன், ஜே.கே.ரித்திஷ், எஸ்.வி.சேகர், உதயா, விடியல் சேகர் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க வளாகத்துக்கு வந்தனர்.

    அங்கே கோ‌ஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். அவர்கள் வந்தபோது சங்கத் தலைவர் விஷால் அங்கு இல்லை. செயலாளர் கதிரேசன் இருந்தார். அவர் வெளியே வந்து போராடிய தயாரிப்பாளர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.

    விஷாலுக்கு எதிராக திரண்டுள்ள தயாரிப்பாளர்கள் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் வருமாறு:-

    சங்கத் தலைவர் விஷால் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சுய லாபத்துடன் செயல்படுகிறார். இந்த ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டத்தை இன்னும் கூட்டவில்லை. பட வெளியீட்டை ஒழுங்குபடுத்துவதற்காக விஷால் அமைத்த குழு பாரபட்சமாக நடந்துகொள்வதால் பட வெளியீட்டில் சிக்கல் நிலவுகிறது.



    கடந்த நிர்வாகம் சங்கத்துக்கு வைத்து சென்ற வைப்புத்தொகையில் மோசடி நடந்துள்ளது. பைரசியை ஒழிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்காக செலவு செய்யப்பட்ட தொகை என்ன ஆனது? கியூப் கட்டணத்தை குறைப்பதற்காக வேலைநிறுத்தம் நடத்தப்பட்டதில் எந்த பயனும் ஏற்படவில்லை. பதிலாக முன்பைவிட கட்டணம் அதிகமாகி உள்ளது.

    காலியான பதவிகள் நிரப்பப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-ந் தேதிக்குள் பொதுக்குழு கூட்டப்பட வேண்டும். ஆனால் டிசம்பர் மாதம் ஆகியும் பொதுக்குழு கூட்டப்படுவதற்கான அறிகுறியே தெரியவில்லை. உடனடியாக பொதுக்குழு கூட்டப்பட வேண்டும். இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவே இல்லை’.

    மேற்கண்ட பல கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்க அறைகளுக்கு பூட்டு போட்டனர். விஷால் உடனடியாக வரவேண்டும் என்று தொடர்ந்து போராடினார்கள். சங்கத்துக்கு பூட்டு போட்டு சாவியை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் கொடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. #ProducersCouncil #Vishal #TFPC

    அடுத்தடுத்து பண்டிகை நெருங்குவதால், அடுத்தடுத்த இரண்டு வாரங்களில் 20 படங்கள் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், அந்த படங்களுக்கு திரையரங்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #TFPC #ProducersCouncil
    படங்களின் வெளியீட்டை ஒழுங்குபடுத்த தயாரிப்பாளர் சங்கம் ஒரு கமிட்டி அமைத்து தேதிகளை ஒதுக்கி கொடுத்து வருகிறது. 

    வாரம் தோறும், தணிக்கை செய்யப்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படங்களை மட்டும் வெளியிட அனுமதி கொடுத்தது. சங்கத்தில் அனுமதி பெறாத படங்களை திரையிட தடையும் விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையையொட்டி 52 புதிய படங்களை திரையிட அனுமதி கேட்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தை பட அதிபர்கள் வற்புறுத்தினர். இதைத்தொடர்ந்து 2 பண்டிகைகளிலும் எவ்வளவு படங்களை வேண்டுமானாலும் திரையிட்டுக் கொள்ளலாம் என்று சங்கம் அனுமதி வழங்கியது.

    இதனால் அதிக எண்ணிக்கையில் படங்கள் திரைக்கு வருகின்றன. வருகிற 14-ந் தேதி விக்ரம் பிரபு நடித்த துப்பாக்கி முனை, பிரசாந்தின் ஜானி, நுங்கம்பாக்கம், தேவகோட்டை காதல், பயங்கரமான ஆளு, துலாம், பிரபு, திரு, ஒடியன், சமுத்திர புத்திரன், ஸ்பைடர்மேன் புதிய பிரபஞ்சம் ஆகிய 11 படங்களை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.



    வருகிற 20-ந் தேதி விஜய் சேதுபதியின் சீதக்காதி, 21-ந் தேதி ஜெயம் ரவியின் அடங்க மறு, தனுசின் மாரி-2, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா, சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜீரோ, கேஜிஎப், அந்தரிக்‌ஷம், படி படி லெச்சே மனசு ஆகிய 9 படங்கள் திரைக்கு வருகின்றன. தியேட்டர்கள் பிடிப்பதில் இந்த படங்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. 

    பொங்கல் பண்டிகையையொட்டி பேட்ட, விஸ்வாசம் உள்ளிட்ட 22 படங்கள் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. #TFPC #ProducersCouncil

    படங்களை ரிலீஸ் செய்வதில் பிரச்சனை நீடித்து வரும் நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் நடப்பதாக விஷ்ணு விஷால் குற்றம்சாட்டியுள்ளார். #VishnuVishal #SilukkuvarpattiSingam #TFPC #Vishal
    படங்களின் வெளியீட்டை ஒழுங்குபடுத்த தயாரிப்பாளர் சங்கம் ஒரு கமிட்டி அமைத்து தேதிகளை ஒதுக்கி கொடுத்து வருகிறது. சில தயாரிப்பாளர்கள் இந்த கமிட்டியை மதிக்காதது தமிழ் சினிமாவில் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. 

    டிசம்பர் 21-ம் தேதி வெளியீடாக வரும் ஜெயம் ரவி நடித்துள்ள ‘அடங்க மறு’, விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’, விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய படங்களை உறுதிப்படுத்தியது தயாரிப்பாளர் சங்கம். அதனைத் தொடர்ந்து தனுஷ் நடித்து தயாரித்துள்ள ‘மாரி 2’ மற்றும் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’ ஆகியவை இப்போட்டியில் இணைந்தன. 

    இதனால் மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தார்கள். தொடர்ச்சியாகக் குழப்பம் நீடித்ததால் டிசம்பர் 21-ம் தேதி யார் வேண்டுமானாலும் படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து விலகிக் கொண்டது. டிசம்பர் 21-ம் தேதி வெளியீட்டு சர்ச்சையில் தயாரிப்பாளர் சங்கத்தில் நிலவும் உள்குத்து அரசியலே காரணம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார் விஷ்ணு விஷால். 

    இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: விதிமுறைகள்... விதிகள் இன்மை... விதிமுறைகளை சரியாக கடைப்பிடிப்பவர்களுக்கு இப்படித்தான் நீதி வழங்கப்படுமா? இது முதன்முறையல்ல. இரண்டாவது முறையாக இது எனக்கு நடக்கிறது. அப்புறம் எதற்கு விதிகள்? சிஸ்டம் தோற்றுவிட்டது. உள்குத்து அரசியல். இருக்கட்டும்... வெளிப்படையான அறிக்கை என்றால் என்னவென்று பிறருக்குத் தெரிவிக்கவே இதை சொல்கிறேன். 



    டிசம்பர் 21-ல் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்‘ வெளியாகிறது. கடந்த ஒரு மாதத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கவுன்சிலின் அனைத்துக் கூட்டங்களிலும் கலந்து கொண்ட வகையில் சொல்கிறேன். இத்தகைய நிலைமைக்கெல்லாம் நிச்சயமாக விஷால் காரணமல்ல. நான் ஏற்கனவே சொன்னதுபோல் எல்லாம் உள்குத்து அரசியல். விதிமுறைகள் எல்லாம் அதைப் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே’. இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். #VishnuVishal #SilukkuvarpattiSingam #TFPC #Vishal #ProducerCouncil

    ×