search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "petition"

    • கவர்னர் மாளிகை முன்பு கடந்த 25-ந் தேதி பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் வீசப்பட்டது.
    • சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பது போல தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி

    கோவை,

    தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இன்று மனு அளிக்க வந்தார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கவர்னர் மாளிகை முன்பு கடந்த 25-ந் தேதி பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் வீசப்பட்டது. அப்போது அந்த பெட்ரோல் குண்டு போலீசார் வைத்திருந்த தடுப்பு கம்பியில் பட்டு கீழே விழுந்தது.

    அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கருக்கா வினோத் என்ற ரவுடியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 பெட்ரோல் குண்டு பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    ஆனால் கவர்னர் மாளிகை அதிகாரிகள் கவர்னர் மாளிகை வளா கத்துக்குள் 4 பேர் நுழைந்து பெட்ரோல் குண்டு வீசியதாக பொய்யான புகாரை போலீசில் அளித்துள்ளனர். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை போல் தோற்றத்தை ஏற்படுத்த தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.

    இதற்கு பா.ஜ.க.வும், கவர்னரும் துணை போகின்றனர். சென்னையில் பா.ஜ.க கொடிக்கம்பம் வைக்க அனுமதி அளிக்காத நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்பது போல பா.ஜ.க 5 பேர் கொண்ட விசாரணை குழுவை தமிழகத்திற்கு அனுப்பி உள்ளனர். இந்த வேகத்தை பா.ஜ.க அரசு மணிப்பூரில் கடந்த 6 மாதமாக நடந்து வரும் கலவரத்தில் ஏன் காட்டவில்லை.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று சமீப கால ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் பா.ஜ.க.வும்., கவர்னரும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பது போல தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.

    எனவே போலீசார் பொய்யான புகார் அளித்த கவர்னர் மாளிகை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • பா.ஜ.க. சார்பில் என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டார்.
    • சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து தெரிவித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரியில் பா.ஜ.க. சார்பில் என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டார்.

    அப்போது சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் கந்தசாமி தலைமையில் செயலாளர் மோகன்குமார், பொருளாளர் செங்கோட்டுவேல், இணைச் செயலாளர் முருகேசன் ஆகியோர் பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து தெரிவித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    பெட்ரோல், டீசலுக்கு ஒரே விலை

    இந்தியா முழுவதும் டீசல், பெட்ரோலுக்கு ஒரே விலை நிர்ணயம் செய்ய வேண்டும். சங்ககிரி வைகுந்தம் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு சிறப்பு கட்டணத்தில் அனுமதி வழங்க வேண்டும். சுங்க கட்டண செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மேலும் புதிய சுங்கச்சாவடிகள் அதிகரித்து வருகிறது. ஒப்பந்தம் முடிந்த பல சுங்கச்சாவடிகளில் இன்னும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவற்றை அகற்ற பலமுறை அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றி விட்டு ஆண்டுக்கு ஒரு முறை மொத்த சுங்க கட்டணத்தையும் லாரி உரிமையாளர்களாகிய நாங்கள் செலுத்த தயாராக உள்ளோம். ஆனால் இதுகுறித்து இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சங்ககிரியில் லாரிகளுக்கு என தனியாக தொழிற்பேட்டை அமைத்து தர வேண்டும். லாரி தொழிலுக்கு என சங்ககிரியில் தனி நல வாரியம் அமைத்து கொடுக்க வேண்டும். ஆன்லைன் அபராதம் விதிக்கும் பிரச்சனையிலிருந்து லாரி உரிமையாளர்களை காத்திட வேண்டும். லாரிகளுக்கு தேசிய நெடுஞ்சாலையில் 50 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் லாரி பார்க்கிங் அமைத்து கொடுத்தால் வாகனங்கள் சாலையோரம் நிற்காமலும், விபத்து ஏற்படாமலும் இருக்கும்.

    ஒரே நாடு ஒரே வரி திட்டத்தை நடைமுறைப்படுத்தி அனைத்து சோதனை சாவடிகளையும் அகற்ற வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

    • பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பங்கேற்று கலெக்டரிடம் நேரில் கோரிக்கை தொடர்பாக மனு அளித்தனர்.
    • கால்நடை துறை சார்பில் மாடு மேய்ச்சல் நிலங்களை மேம்படுத்த வேண்டும்.

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமை வகித்தார்.

    கூட்டத்தில், கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பங்கேற்று கலெக்டரிடம் நேரில் கோரிக்கை தொடர்பாக மனு அளித்தனர்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான பல ரோடுகள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் விரிவாக்கம் செய்யும் போது, மழைநீர் வடிகால் அமைத்து மழைநீரை அருகே உள்ள குளம், குட்டைகளில் சேமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    மேட்டுப்பாளையத்தில் இருந்து மைசூர் வழியாக பெங்களூருவுக்கு விவசாய உற்பத்தியாளர்கள் பயன்படும் வகையில் தொடர் ெரயில் வண்டி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கோவை மாவட்ட கிராம ஊராட்சிகளில் விவசாய மாடு மேய்ச்சல் நிலங்கள் உள்ளன. இதனை கண்டறிந்து கால்நடை துறை சார்பில் மாடு மேய்ச்சல் நிலங்களை மேம்படுத்த வேண்டும்.

    இந்த திட்டத்திற்கு தற்போது கால்நடை துறை சார்பில் அரசு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து கிராம ஊராட்சிகளில் உள்ள மேய்ச்சல் நிலங்களை கண்டறிந்து விவசாய கால்நடை தீவன வளர்ச்சி மற்றும் மேய்ச்சலுக்கு உதவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    சாதி மத கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த முப்பறிபாளையத்தை சேர்ந்த ஆறுச்சாமி என்பவரின் 8 ஏக்கர் நிலத்தை, சிலர் அவர் உயிருடன் இருக்கும் போதே இல்லை என தெரிவித்து போலி சான்றிதழ் பெற்று அபகரித்துள்ளனர். இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    • பெரம்பலூரில் போலீசார் சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது
    • பொதுமக்களிடம் இருந்து 16 மனுக்கள் பெறப்பட்டன

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம்கள் நேற்று நடந்தது. முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முகாமில் மொத்தம் 16 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது.

    • கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சாதாரண விசைத்தறிகள் உள்ளன.
    • ஏற்றுமதி தரம் வாய்ந்த துணிகளை உற்பத்தி செய்யவும், உற்பத்தியை அதிகரிக்கவும், சாதாரண விசைத்தறிகள் நவீனப்படுத்தப்பட வேண்டும்.

    திருப்பூர்,அக்.26-

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சாதாரண விசைத்தறிகள் உள்ளன. இங்கு மட்டும், தினசரி ஒரு கோடி மீட்டர் துணி உற்பத்தியும், 50 கோடி ரூபாய் அளவுக்கு வரவு, செலவு கணக்கும் நடைபெறுகிறது. இதில் 80 சதவீத துணிகள் மதிப்பு கூட்டப்பட்டு உள்நாட்டிலேயே குறைந்த விலையில் பயன்படுத்தப்படுகிறது.

    கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர், மத்திய இணையமைச்சர் முருகனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    விசைத்தறிகள் வாயிலாக கிராமப்புறங்களில் உள்ள பல லட்சம் ஏழை, எளிய குடும்பத்தினர் பயன் பெறுகின்றனர். இந்திய அளவில் 40 சதவீத கிரே காடா துணி, கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் உற்பத்தியாகிறது. சாதா விசைத்தறியாளர்கள், மூன்றாண்டுக்கு ஒரு முறை கூலி உயர்வுக்காகவும், மின் கட்டணம் உயர்வு ஏற்படும் போதெல்லாம் மின்கட்டண குறைப்புக்காகவும் போராடி வருகின்றனர்.

    வட மாநிலங்களில் மட்டுமே இங்கு தயாராகும் காடா துணிகள் மதிப்பு கூட்டப்படுகின்றன. சிறு, குறு விசைத்தறியாளர்கள், உற்பத்தி செய்யும் குறைந்தளவு துணிகளை, வட மாநிலங்களில் நேரடியாக கொண்டு சென்று விற்க முடியாது. இடைத்தரகர்கள் வாயிலாக விற்கும் போது, குறைந்த விலைக்கே விற்க வேண்டியுள்ளது.ஏற்றுமதி தரம் வாய்ந்த துணிகளை உற்பத்தி செய்யவும், உற்பத்தியை அதிகரிக்கவும், சாதாரண விசைத்தறிகள் நவீனப்படுத்தப்பட வேண்டும்.

    சோமனூர் கிளஸ்டர் பகுதியில் ஜவுளிச்சந்தை அமைக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு அனுமதியும், மானியமும் வழங்க வேண்டும். அதன் வாயிலாக சாதாரண விசைத்தறிகளை நவீனப்படுத்தி கொள்ள முடியும். வருமானம் பெருகும். வாழ்வாதாரம் உயரும்.

    • வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் மனுதாக்கல் மற்றும் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
    • மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும் வருகிற 17-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்தப்பட உள்ளது.

    சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் மனுதாக்கல் மற்றும் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்ட மனுதாக்கல் கடந்த 13-ந்தேதி நடந்தது. இந்நிலையில் இன்று அந்த மாநிலத்தில் 2-வது கட்ட 70 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது.

    அதுபோல மத்திய பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) மனுதாக்கல் தொடங்கியது. அந்த மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும் வருகிற 17-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்தப்பட உள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் இன்று வேட்புமனு தாக்கலுக்கு பிறகு பிரசாரம் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்த உள்ளது.

    • முத்தரையர் சமுதாய மக்கள் வாழும் பகுதியில் பெரும்பிடுகு முத்தரையரின் உருவ சிலை வேண்டும்.
    • நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் அலெக்ஸாண்டர், பொருளாளர் விஜயன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் தயாளலிங்க தலைமையில், திரேஸ்புரம் பகுதி செயலாளர் தங்கமுத்து முன்னிலையில் நிர்வாகிகள் தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமாரை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி பொதுமக்களின் சார்பில் வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளையும், திரேஸ்புரம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அப்பகுதியில் உள்ள சுடுகாடுட்டில் அனைத்து வசதிகளுடன் மறுசீரமைப்பு, தெருவிளக்கு, சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைத்தல், பெருவாரியான முத்தரையர் சமுதாய மக்கள் வாழும் பகுதியில் பெரும்பிடுகு முத்தரையரின் உருவ சிலை வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நிகழ்ச்சியில் மாவட்ட அவைதலைவர் அலெக்ஸாண்டர், பொருளாளர் விஜயன், மாவட்ட துணை செயலாளர்கள் வல்லரசு துரை, மாலதி, விஜயமுருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜபொம்மு, பொதுகுழு உறுப்பினர்கள் சின்னதுரை, செல்வம், பகுதி செயலாளர்கள் சின்னதுரை, நாராயணமூர்த்தி, அரசமுத்து, மகேந்திரன், மாவட்ட அணி நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், அக்பர், சக்திவேல். பகுதி, வட்ட நிர்வாகிகள் ஆனந்த கிருஷ்ணன், முனிசாமி, ராமர், கிருஷ்ணசாமி, முள்ளகாடு ஊராட்சி செயலாளர் சரவணக்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • சாத்தான்குளத்தில் 2 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த குடிநீர் தற்போது 3 நாட்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்படுகிறது.
    • மேலும் பேரூராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட அழகம்மன் கோவில் தெரு உள்ளிட்ட தெருக்களில் கடந்த 15 நாட்களாக முறையாக குடிநீர் கிடைக்கவில்லை என்று மனுவில் கூறியுள்ளனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பேரூராட்சி கவுன்சிலர் லிசா தலைமையில் பொதுமக்கள் இளநிலை உதவியாளர் ஆறுமுகத்திடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    சாத்தான்குளம் பேரூராட்சியில் போதிய மழையின்மையால் ஏற்பட்ட வறட்சி காரணமாகவும், ஸ்ரீவைகுண்டம் உறைகிணற்றில் ஏற்பட்ட நீர் இருப்பு குறைவினாலும் இங்கு குடிநீர் விநியோகிப்பது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 2 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த குடிநீர் தற்போது 3 நாட்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்படுகிறது. இதனால் பல தெருகளுக்கு போதுமான குடிநீர் கிடைக்கவில்லையென புகார் எழுந்துள்ளது.

    மேலும் பேரூராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட அழகம்மன் கோவில் தெரு, கரையாளர்தெரு, அருணாசலசெட்டியார் தெரு உள்ளிட்ட தெருகளில் கடந்த 15 நாட்களாக முறையாக குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் லாரி தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலையில் உள்ளனர். எனவே முன்புபோல் முறையாக குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அருணாசல செட்டியார் தெருவில் சேதமான சாலையை சீரமைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.   

    • மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்களை கலெக்டர் வழங்கினார்.
    • பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவா ரணம், மாற்றுத்திறனாளி கள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித் தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு சென்று, கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    மேலும் மாற்றுத்திற னாளிகள் நல அலுவலகம் மூலம் 6 பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்களையும், 2 பயனாளிகளுக்கு காதொலி கருவிகளையும் என மொத்தம் 8 பயனாளிகளுக்கு ரூ.54 ஆயிரத்து 200 மதிப்பி லான உபகர ணங்களை கலெக்டர் வழங்கினார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை கலெக்டர் அனிதா, கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக்கழுவன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரமநாயகம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவந்திபட்டி கிராமம் அம்பேத்கர் தெரு ஆதி திராவிடர் பறையர் குடியிருப்பில் மழை நீர் வடிகால் மற்றும் கழிவுநீர் செல்ல ஓடை கட்டப்படும் பணியை சிலர் தடுக்கின்றனர்.
    • எனவே பாதியில் நிறுத்தப்பட்ட கழிவு நீர் ஓடையை முழுமை யாக கட்டி தர வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

    ஓைட கட்டும் பணி

    பாளை தாலுகா சிவந்தி பட்டி அம்பேத்கர் தெரு பொதுமக்கள் ஊர் தலைவர் தலைமையில் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    சிவந்திபட்டி கிராமம் அம்பேத்கர் தெரு ஆதி திராவிடர் பறையர் குடியிரு ப்பில் மழை நீர் வடிகால் மற்றும் கழிவுநீர் செல்ல ஓடை கட்டப்படும் பணியை சிலர் தடுக்கின்றனர்.

    சமீபத்தில் இங்கு ஓடை கட்டுவதற்கான பணி தொடங்கப்பட்டு சுமார் 200 அடி நீளம் கட்டப்பட்டுள்ளது. அந்த பணியும் தற்போது கிடப்பில் போடப்பட்டு விட்டது.

    இதனால் எங்களது குடியிருப்பில் இருந்து வெளி யேறும் மழை நீர், கழிவு நீர் உள்ளிட்டவை வெளியேறு வதற்கு வழி இல்லாமல் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயமும் இருந்து வருகிறது. எனவே பாதியில் நிறுத்தப்பட்ட கழிவு நீர் ஓடையை முழுமை யாக கட்டி தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    குவாரி உரிமம்

    சங்கர் நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட தாதனூத்து 2-வது வார்டு பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தாதனூத்து கிராமத்தில் 350- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு குவாரி உரிமம் பெற்ற ஒருவர் அரசு விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக வெடிமருந்து பயன்படுத்தி அதிக ஒலி சத்தத்துடன் வெடி போடுகின்றனர்.

    தாதனூத்து ஊரின் விவசாய நிலம் அருகே 500 மீட்டர் தொலைவில் புதிதாக ஒரு குவாரி உரிமம் பெற்று செயல்பட தொடங்கியுள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கும் நிலை இருந்து வருகிறது. எனவே அதன் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கிராமத்தை சுற்றி 3 கிலோமீட்டர் அளவுக்கு புதிதாக எந்த குவாரிக்கும் உரிமம் வழங்கக் கூடாது என்று கூறியிருந்தனர்.

    தீபாவளி போனஸ்

    தமிழ்நாடு எச்.எம்.எஸ். கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளர் பேர வை மாவட்ட நல வாரிய கண்காணிப்பு குழு உறுப்பினர் பாக்கி யம் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எச்.எம்.எஸ். கட்டு மானம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கிட வேண்டும். தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு தனி தனி வாரியமாக 18 நல வாரியங்கள் அமைக்கப்பட்டு அதில் தொழிலாளர்கள் பதிவு செய்திட தொடங்கி தற்போது 40 லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.

    இவர்களுக்கு தீபாவளி போனசாக ரூ.7000 வழங்க வேண்டும். வீடு கட்டுவதற்கு எளிய முறையில் மானியம் பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி அவர்கள் மனு அளித்தனர்.

    தாசில்தார் மீது புகார்

    மாவீரன் சுந்தர லிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மானூர் வட்டம், மானூர் யூனியன் ஆகியவற்றின் அலுவலகத்தின் கட்டி டங்கள் எல்லாம் மானூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து வருகிறது. மானூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் 43 ஊராட்சிகளும், 80-க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன.

    இங்கு வசிக்கும் மக்கள் அரசின் சலுகைகள் உட்பட அனைத்தையும் பெறுவதற்கு மானூர் ஊராட்சி பகுதிக்கு தான் வரவேண்டிய நிலை இருக்கிறது.மானூரில் பொது கட்டிடங்கள் அமைக்க இடம் கேட்கும் போது யூனியன் அதிகாரிகள் இங்கு பொதுவான இடம் இல்லை என்று கூறி சான்று வழங்கி வருகின்றனர். இதனால் இப்பகுதிக்கு கோரிக்கையை ஏற்று அறிவிக்கப்பட்ட தீயணைப்பு நிலையம், நீதித்துறை நடுவர் நீதிமன்றம், சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்டவை கட்ட முடியாத நிலை இருக்கிறது.

    எனவே இது தொடர்பாக பட்டா குறைதீர்க்கும் முகாமில் சிலுவை முத்து என்பவர் கேள்வி எழுப்பிய போது மானூர் தாசில்தார் முருகன் அவரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. எனவே யூனியன் அதிகாரிகள் மீதும் தாசில்தார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    காங்கிரஸ் மனு

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே ஜெயக்குமார் தலைமையில் நெல்லை மாவட்ட தேசிய தோட்ட தொழிலாளர்கள் சங்கத்தினர் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    அம்பை தாலுகா மணிமுத்தாறு பேரூராட்சி க்குட்பட்ட மணிமுத்தாறு அருவியின் மேல் தலையணை யிலிருந்து மாஞ்சோலை, நாலு முக்கு, ஊத்து வரை தார் சாலை மிகவும் மோசமாகவும், பயணிப்பவருக்கு ஆபத்தான நிலையிலும் உள்ளது.

    பேரூராட்சியின் எஸ்டேட் பகுதியில் 5 வார்டுகள் உள்ளது. அதில் சுமார் 700 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 2000 தோட்ட தொழிலாளிகள் வேலை செய்கின்றனர். இந்த சாலை மோசமாக இருப்பதால் முதியோர், கர்ப்பிணி பெண்கள் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    நெல்லை மாவட்ட இளைஞர் மற்றும் பெண்க ளுக்கு போதிய வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்க ப்பட்ட கங்கை கொண்டான் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலங்களை நல்ல முறையில் செயல்படுத்தி உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழர் விடுதலை களம் மத்திய மாவட்ட செயலாளர் வண்ணை முருகன் தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர்.

    குழிப்பிறையில் துணை மின் நிலையம் அமைக்க கோரி9 ஊராட்சி மன்ற தலைவர்கள் மின்வாரியத்தில் மனு

    புதுக்கோட்டை,  

    புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 9 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கூழிபிறை டிரஸ்ட் தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் குழிபிறை மின்சார வாரியத்தில் உதவி மின் பொறியாளரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டம் குழிபிறை, ஆத்தூர், செவலூர், கொவனூர், வீரனாம்பட்டி, வாழைகுறிச்சி, ராங்கியம், மேலப்பனையூர் மற்றும் பனையப்பட்டி ஊர்களில் 30 வருடங்களாக தினந்தோறும் அதிகப்படியான மின்வெட்டு, அதிகமான மின்அழுத்த குறைபாடு இருந்து வருகிறது. போதிய அளவில் டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்படாததுதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் 15 லிருந்து 20 கிலோமீட்டர் தூரத்திற்கு துணை மின் நிலையம் இல்லை.

    சமீபத்தில் 12 முறைக்கு மேல் தினந்தோறும் எங்கள் மின்வெட்டு ஏற்படுகிறது. லோ வோல்எடேஜ் காரணமாக எந்த ஒரு வேலையும் செய்ய முடியாமல் மோட்டார்கள், பம்புகள், வீட்டு உபகரணங்கள் எல்லாம் அடிக்கடி பழுதடைக்கின்றன.

    துணைமின் நிலையத்திற்கான மனுவை ஏப்ரல் 2022ல் கொடுத்து, அதற்கான 2 ஏக்கர் நிலத்தையும் குழிபிறை ஊராட்சி ஒதுக்கி உள்ளது. ஆனால் இதுவரை ஒதுக்கப்பட்ட இடத்தில் எந்தவிதமான வேலைகளும் ஆரம்பிக்கப்பட வில்லை. புதிய மின்மாற்றிகளை அமைக்க 16.2.2022 ல் கொடுத்த மனுவிற்கு இன்று வரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எனவே விரைவில் துணைமின் நிலையம் அமைப்பதோடு, அப்பகுதியில் 6 புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க சார்பில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
    • 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமையில் சங்கத்தினர் மாவட்ட வருவாய் அலுவலர் பேபியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில் கூறியிப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு 11 வாரங்கள் வழங்கப்படாமல் உள்ள கூலியை உடனே வழங்க வேண்டும்.

    100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    சில ஊராட்சிகளில் வாரம் விட்டு வாரம் வேலை வழங்குவதை நிறுத்திவிட்டு, முறையாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இதில் மாவட்டத் தலைவர் நாகராஜ், மாநில குழு உறுப்பினர் செல்வம், விவசாய சங்க மாவட்ட தலைவர் சரபோஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×